Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 9 மே, 2015

புகை, யோகம் - இரு துருவங்கள்

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு  மனவளக்கலை கற்றுக் கொடுக்கவே கூடாது. மனவளக்கலையானது ஒரு அற்புதமான பயிற்சி, வித்து சக்தியின் அளவை அது அதிகரித்து தரும்....
.
.
உடல் செல்களையும், உயிர்சக்தியையும்,மனதையும் ஒருங்கிணைக்கக் கூடியது மனவளக்கலை. அந்த மூன்றையும் எரிவு நிலை எனும் வேக இயக்கத்தில் இருந்து சாதாரண நிலைக்கு மனவளக்கலை கொண்டு வந்துவிடும்.
..
.
புகையிலையில் உள்ல நிகோட்டின் என்ற நச்சுப் பொருள் ஜீவ வித்துக்குழம்பின் சுரப்பினை வரட்சியுறச் செய்துவிடும். அது மனித உடலின் மொத்த இயக்கத்தையும் பழுதுறச் செய்துவிடுகிறது.
.
.
எனவே மனவளக்கலையை பயில்வது, புகைப்பிடிப்பது என்பது எப்படிப்பட்டது
என்றால்.. “ஓட்டை உள்ள ஒரு பாத்திரத்தில் நீர் சேமிப்பது போலாகும்”.
.
.
எல்லா வகையிலும் மனிதனின் ஆளுமைப் பேற்றை அதன் முழுமை அளவுக்கு வளர்த்துக் கொள்வது என்பது மனவளக்கலையின் நோக்கம். மன வளத்திலும், ஆன்மீகத்திலும், உடல் நலத்திலும், சமுதாய இணைப்பிலும், பொருளாதார மேம்பாட்டிலும் மனிதன் உயர்வடைந்து வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் அடைய உதவுவது மனவளக்கலை.
.
.
இவ்வளவு மேம்பாட்டையும் அடைவதற்கு புகைப் பிடித்தலை விடமாட்டேன்
என்றால் என்ன பொருள்?
புகைப்பிடித்தலை விடுதல், வேண்டாத
பேர்களின் சிநேகத்தை விடுதல், வேண்டாத பொருட்களை விடுதல், வேண்டாத அனுபவங்களை விடுதல் இதெல்லாம் ஆன்ம தூய்மைக்கும், அறிவு மேம்பாட்டிற்கும் உரிய முன் நிபந்தனைகள் ஆகும்
.
ஒருவரால் புகைப்பிடிப்பதை எளிதில் விட முடியும். ஆகவே தான் புகைப்பிடித்தல் விசயத்தில் அவ்வளவு கண்டிப்பாக இருக்கிறேன்.அதுவும் அவர்களது நன்மைக்காக என்பதால் மனவளக்கலை கலைஞர்கள்
மனவளக்கலையின் உயர்வைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தங்களுடைய எண்ணம், சொல்,செயல்களின் தரத்தை மாற்றிக்கொள்ளவும் , உயர்த்திக்கொள்ளவும்  தயாராக இருக்கவேண்டும்.
..
.
புகைப் பிடிப்பதை விடுங்கள் ; அல்லது மனவளக்கலையை விட்டுவிடுங்கள். புகை, யோகம் இந்த இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
.
.
ஏனெனில், புகைக்கும், யோகத்திற்கும் ஒத்துக்கொள்வதில்லை. அவை இரு
துருவங்கள் மாதிரி. ஒன்று இருக்கும்  இடத்தில் இன்னொன்றால் இருக்க
முடியாது.
.
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக