Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 31 ஜூலை, 2014

Only the spiritual development is lacking and is sorely needed by mankind

 

The sciences have been developed to impressive proportions and material prosperity is more than enough. Only the spiritual development is lacking and is sorely needed by mankind. I hope this suggestion of mine for spiritual education will touch the conscience of all brothers and sisters of the world who are social-minded and spiritually developed.

-Vethathiri Maharishi

புதன், 30 ஜூலை, 2014

Outcome of Karmas

 

One's life partner, one's child, one's friend and one's master – all are the outcome of one's Karmas, both inherited and added after birth.

-Vethathiri Maharishi

செவ்வாய், 29 ஜூலை, 2014

Anger has to be neutralized at the source itself

 

Anger harms you long before it hurts the other person and Anger has to be pre-empted. You must train yourself not to get Angry at all.

It would now be clear to you that Anger has to be neutralized at the source itself. When you succeed in this, see how the mind comes to tranquility and how well your Meditation progresses.

-Vethathiri Maharishi

திங்கள், 28 ஜூலை, 2014

Three virtues for the welfare of one and all in the society

 

For the welfare of one and all in the society, these three Virtues - Morality, Duty and Charity - are absolutely essential. An understanding of the values of these three Virtues and a due observance of the same in practice will result in the development and maintenance of the prosperity and peace of the society.

-Vethathiri Maharishi

ஞாயிறு, 27 ஜூலை, 2014

Man, society and nature all are interlinked with one another

 

Man, society and nature all are interlinked with one another. Man cannot be separated from this.

A living being is a joint function of life force and physical body. The life energy in a living being is the bio-magnetism which gets physical transformation and maintain the metabolic routine of the body and psychic functions.

Good thoughts, divine thoughts are even in the atmosphere, criss-crossing as waves: and when our mind become receptive, these thoughts are registered there.

-Vethathiri Maharishi

சனி, 26 ஜூலை, 2014

How bio-magnetism works?

 

Induced conversion and exhaustion of life current may be felt as a pleasurable sensation in the beginning. But when it exceeds the tolerance-limit of the senses or when the expenditure goes beyond a minimum critical level of stock of the life-force, the sensation becomes painful.

-Vethathiri Maharishi

வெள்ளி, 25 ஜூலை, 2014

What is pleasure and pain?

 

When the level of the conversion of the bio-magnetism does not adversely affect the molecular structure of the sense-organs and when the expenditure of the bio-magnetism is limited to exhausting the surplus, then the experience is harmonious and is felt as pleasure. When the conversion of the bio-magnetism increases more than the tolerance-limit of the sense-organs, or when the exhaustion of the bio-magnetism goes beyond the minimum critical level required for the maintenance of the body, such experience are uncomfortable felt as pain.

-Vethathiri Maharishi

வியாழன், 24 ஜூலை, 2014

The pain or pleasure is just a experience

 

The pain or pleasure is the experience of sensing the conversion-level and expending the force of life-current.
Fluctuation in the stock and the method and the level of conversion is the cause and source of pain and pleasure  sensations. The more one knows the secret, the more will be his responsibility in the maintenance of bio-current. The result will be harmony and peace in life through conscientious restriction of activities.

-Vethathiri Maharishi

புதன், 23 ஜூலை, 2014

நல்லன பயத்தல்

எந்த செயல் செய்தால் என்ன விளைவு உண்டாகும் என்று சிந்தித்து செயல் படுத்தல் அவசியம். எந்த செயல் செய்தாலும் நல்லதாக இருக்க முடியுமா என்றால் இருக்காது. அந்த செயலின் அளவு, முறை இரண்டையும் சரியாகக் கடைப்பிடித்தால் தான் அந்த செயல்... நல்ல விளைவைத் தரும்.

அளவு முறை மட்டுமல்லாது காலம், இடம், தொடர்பு கொள்ளும் பொருள் இவற்றுக் கேற்ப செய்கின்ற செயலில் என்ன விளையும் என்பதைக் கணித்துச் செய்யும் பொது நல்லது விளையும். இதுவே "நல்லன பயத்தல்" .

நல்லது விளையும் போது இன்பமும், அமைதியும் பெறுகிறோம் . இந்த அமைதி தான் படிப்படியாக மனிதனை நாளடைவில் இறை உணர்வுக்கு இட்டுச் செல்லும்."

--வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 22 ஜூலை, 2014

வாழ்த்து :



தியானத்தின் பலனாக உங்களுடைய மனதில் அமைதி நிறைந்து விளங்கும். மனதில் ததும்பும் அமைதி உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சியையும், புதுபலத்தையும் அளிக்கிறது.

அந்த சமயத்தில் நாம் பின்வருமாறு எண்ண வேண்டும். "ஆண்டவன் அருளால் எனது உடலில் புதுஉணர்வும், புதியபலமும் தோன்றி இருக்கின்றன. மனதில் அமைதி தவழ்கிறது. வாழ்வும் அமைதி நிறைந்ததாகக் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து இறைவன் அருளால் எனக்கு அமைதியான வாழ்க்கையும், நல்ல உடல்நலமும், நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும்.'' என்று நீங்களே உங்களுக்கு ஆசி அளித்துக் கொள்ள வேண்டும்.

நல்ல உள்ளத்துடனும் ஆரோக்கியமான உடல் நிலையுடனும் நீங்கள் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியவராக இருக்கவேண்டும் என்றால் உங்களுக்குள் நீங்களே நல்ல சிந்தனைகளை சிந்திப்பது அவசியமாகும். இப்பயிற்சி உங்கள் மனப்பதிவிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளை உண்டாக்கும்.

முதலில் தனக்குத் தானே ஆசி அளித்துவிட்டு, பின்னர் மனைவி,குழந்தைகள், குடும்பம், சமுதாயம் என்று நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களின் நன்மைக்காகவும் தியானிக்க வேண்டும். இப்படி சிந்திப்பதன் மூலம் நல்ல குடும்பமும் சமுதாயமும் உருவாக வழிஉண்டாகிறது.

---அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி,

திங்கள், 21 ஜூலை, 2014

The span of life of man

 

The span of life of man is limited. If he spends most of the time in undergoing pains and miseries created by Will, the purpose of birth would not be fulfilled. So as to make life purposeful in order to enable him to enjoy happiness and success and to experience harmony and peace, man should maintain his thoughts and deeds in tune with three aspects concurrently and simultaneously.

The three aspects are :
  1. The creation of problems by Will should be reduced and stopped;
  2. the ability to solve the problems arising out of the Law of Nature should be developed;
  3. the opportunity for one and all in the society, to enjoy the birthright and freed of life,
Which will enable the man to reach the goal of perfection should be developed and maintained.

-Vethathiri Maharishi

ஞாயிறு, 20 ஜூலை, 2014

தவப்பயன் காப்பீர்


ஆன்மீகம் என்றாலே உயிர்ச்சக்தி, தவத்தைச் செய்து அமைதி நிலைக்கு வந்து பேரின்பம் எனும்
Ecstasy–ஐ அடைகிறோம். இந்தநிலை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் உணர்ச்சிவயப்பட்டோமேயானால் உயிர்ச்சக்தியானது அளவிலும் அழுத்தத்திலும் குறையும் உடலில் உள்ள அணு அடுக்கு அதிகமாகச் சீர்குலையும், அதேபோல் மூளையில் உள்ள அணு அடுக்கும் வெகுவாகச் சீர்குலையும். தவநிலையில் மனம் ஒன்றிப் பேரின்ப நிலையை அடைகின்றபோது சினம் கொள்ளாமலும், உணர்ச்சிவயப்படாமலும் பேராசை கொள்ளாமலும் இருக்க வேண்டியது அவச...ியம்.
சினம் கொள்ளாமல் இருப்பதற்கு எங்கேயோ செல்ல வேண்டியது இல்லை. நம்முடைய குடும்பத்திலேயே தாய், தந்தை, சகோதரி, சகோதரன் ஆகியவர்களிடையே சினம் கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டால் போதும். எப்போதும் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய தன்மைகளை ஏற்றிருக்க வேண்டும்.
பிறருடைய தவறைத் தவறு செய்தவுடனேயே சுட்டிக்காட்டாமல் நேரம் வரும்போது பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். தவறு செய்த உடனேயே சுட்டிக்காட்டுவது என்பது வெந்த புண்ணில் ஊசியைச் செலுத்துவதுபோன்றது. ஏனென்றால் தவறு செய்தவர்களுக்கே தெரியும். நாம் இப்போது தவறு செய்து விட்டோம், என்று அப்போதே நாமும் தவறைச் சுட்டிக் காட்டினால் அவர்களுக்கு தவறைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பினும்கூட அந்த நேரத்திலே பொறுமையுடன் அமைதிகாத்துப் பின்னர் ஆக்கரீதியாகச் செயல்பட வேண்டும்.
–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 19 ஜூலை, 2014

மனித மனம் அமைதி பெற :



மனித மனம் விலங்கினப் பதிவின் காரணமாக புலன்கள் வழியே செயலாற்றும் போது தனது உண்மை நிலையை மறந்து மயங்கி விடுகிறது .

இதனால் தன்முனைப்பு கொண்டு உணர்ச்சிவயப்பட்டு , மனத்தின் அலைச்சுழல் அதிகமாகி விளைவறியாது செயலாற்றி அதன் விளைவாக வாழ்வில் சிக்கல்களும் , துன்பங்களும் பெருக்கிக் கொள்கின்றன....

உணர்ச்சிவயப்பட்ட நிலையில் செயலாற்றும் போது அச்சிக்கலில் இருந்து உடனடியாக விடுபட முடியாமல் , உணர்ச்சிவயமாகி தனக்கும் மற்றவர்களுக்கும் தீமை தரும் செயல்களை ஆற்றுகின்றன .இதனால் தீமை தரும் எண்ணங்களும் செயல்களுமான சினம், வெறுப்பு, பகை , வஞ்சம் என்ற அலைகளையே பரப்புகின்றன .

இயற்கையை அறியாத மன நிலையில் மனம் குறுகி நிற்கிறது. இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டுமானால் இயற்கையோடு அறிவை இணைந்து விரிந்து செயல்படும் போது மனித மனம் அமைதி அடைகிறது .

---அருள்தந்தை

வெள்ளி, 18 ஜூலை, 2014

பேரானந்தம் :



மனிதன் முதல் அனைத்து உயிர்களும் இன்பத்தையே தேடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் நிலைத்த இன்பம் கிடைப்பதில்லை. இன்பம், துன்பம் என்கிற சூழ்நிலையிலேயே மனித சமுதாயம் அல்லலுறுகிறது. இன்பம் துன்பம் என்கின்ற நிலையைத் தாண்டினால் தான் மனித சமுதாயம் அமைதிக்கு வர முடியும்.

அமைதிக்கு வந்து விட்டால் அமைதிக்கு அடுத்த நிலையான நான்காவது படியான பேரானந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் . அவ்வ...ாறு அடையும் போது முழுமைப்பேறு என்ற பேரானந்தத்தை உணர முடியும்.

--அருள் தந்தை

வியாழன், 17 ஜூலை, 2014

மனிதன் துன்பத்திற்கு காரணம் இயற்கைக்கு மாறாக பழக்கமே:



இந்த இயற்கையின் ஒரு பின்னம் தான் மனிதன் . இயற்கை எல்லா உயிர்களிடத்தும் பொருள்களிடத்தும் அமைந்துள்ளது.
இயற்கையாக எல்லாம் வல்ல இறைநிலையே உள்ளது.
...
இறைநிலையே எல்லா பொருளிலும், உயிரிலும் ஊடுருவி அமைந்துள்ளது . அதுவே மனிதனிடம் மனமாகவும் வந்துள்ளது. இறைநிலையின் மறுமுனையே மனித மனமாக செயல்படுகிறது.

மனிதன் ஆறாவது அறிவை பெற்றிருந்த போதிலும் விலங்கினப் பழக்கத்தின் வழியாக செயல்படும் போது ஆறு தீயகுணங்களும் ஐந்து பழிச்செயல்களும் உருவாகின்றன.

எண்ணம் , சொல், செயலால் எவருக்கும் எப்பொழுதும் துன்பம் தராத முறையில் செயலாற்றும் பொழுது வாழ்வு இன்பமயமானதாக இருக்கும் .

மனிதன் பழக்கப் பதிவின் காரணமாக இயற்கைக்கு மாறாகச் செயல்பட்டு துன்பங்களைப் பெருக்கிக் கொள்கிறான் .
இன்பம் மட்டுமே வேண்டுமெனில் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டியது அவசியம் .

----அருள் தந்தை

செவ்வாய், 15 ஜூலை, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மகரிஷியின் கருத்துக்கள் :



1. பிரதிபலன் எதிர்பார்க்காமல் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவுங்கள்.

2. முடிந்த அளவு பிறரை புகழுங்கள் . பிறரை குறை கூறுவதை விட்டு விடுங்கள்....

3. பிறர் குறைகளை மன்னியுங்கள் . நீங்கள் பிறருக்கு செய்த நன்மைகளை மறந்து விடுங்கள்.

4. யாரைக் கண்டும் பயப்படாதீர்கள். நீங்கள் பிறர் பயப்படும்படி இருக்காதீர்கள்.

5.குறைவாக பேசுங்கள். நிறைய கேளுங்கள் .

6. உங்கள் கடமைகளைப் பற்றி நிறைய சிந்தியுங்கள் , உங்கள் உரிமைகளைப் பற்றி குறைவாக எண்ணுங்கள்.

7.உங்களுக்கு கொடுத்திருக்கும் ஆசிர்வாதங்களை எண்ணுங்கள் , உங்கள் பிரச்சனைகளை தூக்கி எறியுங்கள்.

8. பிறரிடம் இருந்து அன்பை எதிர்பார்க்காதீர்கள், நீங்கள் பிறரின் அன்பிற்குரியவர்களாக இருங்கள்.

9. ஒரு சிறந்த அறிவுடையவர் போல் நடந்து கொள்ளாமல் , பிறர் சிறப்பை அறியும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் `.

---அருள் தந்தை

திங்கள், 14 ஜூலை, 2014

விழிப்புநிலையால் உண்டாகும் பயன்கள் : ...

விழிப்பு நிலை :

மயக்கத்திலேயே வாழ்ந்து பழகிய மனித மனத்திற்கு முறையான பயிற்சினால் தான் விழிப்புநிலை கிட்டும் . பயிற்சியினாலன்றி கிட்டாது . அதற்கு உயிரை உணர்ந்து , உயிரின் இருப்புநிலை உணர்ந்து கொள்ள வேண்டும். அகத்தவமே எண்ணம், சொல், செயல் மூன்றிலும் விழிப்பு நிலையை அளிக்கவல்லது .

விழிப்புநிலையால் உண்டாகும் பயன்கள் : ...

1. விழிப்பு நிலையால் தனக்கும் பிற உயிர்களுக்கும் எவ்வகையிலும் ஊரு ஏற்படுத்தாத வகையில் செயலாற்ற வேண்டுமென்ற அருளுணர்வு ஏற்படுகிறது .

2. அறம் இயல்பாக மலர்கின்றது. அறப்பண்புகள் உயர் பண்புகளாகின்றன.

3. விழிப்பு நிலையால் உயிராற்றலின் வீண் செலவு குறையும் .

4. தன்முனைப்பு நீங்கி, ஆறுகுண எழுச்சிகள் அடங்கி சீர்மை பெரும். பழிச்செயல்கள் விளையா . மனதிற்கு அமைதி கிட்டும். அறிவு நாளுக்கு நாள் தெளிவடையும்.

5. தன்னையே ஆய்வு செய்வதும், தெளிவு பெறுவதும், நல்வினை ஆற்றுவதும் இயல்பாகிறது. இதுவே விழிப்புநிலையின் முழுமை .

6. விழிப்பு நிலையோடிருக்கும் போது மனிதன் பேரறிவாக இருக்கவும், இயங்கவும்,வாழ்க்கையில் சிக்கல்கள் துன்பங்கள் விளையாமல் காக்கவும், வந்தபின் முறையாகப் போக்கி கொள்ளவும் முடியும்.

7. மனதையும் வாழ்வையும் கேடுறாமல் காத்துத் தன்னை உயர்த்திக் கொள்ளலாம் . தெய்வநிலையை உணர்ந்தும் கொள்ளலாம்.

----அருள் தந்தை

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஆன்மீக வாழ்வே நலம் தரும் வாழ்வு :



ஆன்மீக வாழ்வே தன்னையும் துய்மை செய்து கொண்டு பிறருக்கும் தூய்மை அளிக்கவல்லது . இயற்கையின் பேராற்றல் எங்கும் நிறைந்த தன்மை எல்லாவற்றையும் அறியும் பேருணர்வு, அழிவில்லாத தன்மை , நீயதிவழுவாதத் தன்மை, பெருங்கருணையை உணர்ந்து கொள்ளலாம்.

எல்லாமாகி நிற்பது இறைநிலையே . எல்லாருக்குள்ளும் இல்லமாக உள்ளமாக நிறைந்திருப்பதுவும் இறைநிலையே என்ற உணர்வு எட்டும் . அந்த உணர்வு நீங...்காத நிலையில் காணும் காட்சிகளெல்லாம் பரம்பொருள் சொரூபம் அன்றி வேறில்லை என்ற உண்மை அறிவிற்கு எட்டும்.

இப்போது யார் யாரிடம் குறைகாண முடியும்? குறை காண்பதற்கு ஏதுமில்லை என்பது விளங்கும் . வானறிந்து உயிர் விளங்கி வரை கடந்து நிற்கும் நிலையில் வாழ்வாங்கு வாழவும் , பிறரையும் வாழ வைக்கவும் தக்க அறிவும் ஆற்றலும் உண்டாகிவிடும். இத்தகைய நிலை தானாக மலர்ந்து விடும் .

---அருள் தந்தை

சனி, 12 ஜூலை, 2014

குறைகளை போக்கி நிறைவோடு வாழ்வோம் :



தற்சோதனையின் மூலம் முதலில் தனது குறைகளை உணர்ந்து கொள்ளலாம். பிறரிடம் குறைகாணும் பழக்கத்தை விட்டு விட்டு பிறரிடம் உள்ள நிறைகளைக் காண வேண்டும். அந்த நிறைகளைத் தானும் கைகொள்ள, கடைபிடிக்க என்னென்ன வழிகள் என்பதில் கவனம் செலுத்தி தனது குறைகளைக் களைவதனால் பிறரிடம் நட்பு ஓங்கும். நம்மீது பிறரும் பெரு மதிப்பு கொள்வர்.

இன்பம், துன்பம் , விருப்பு, வெறுப்பு, உயர்வு தாழ்...வு குறைவு , நிறைவு என்ற இவை அனைத்தையும் ஒருங்கே நிறைந்த ஒரு கலவை தான் மனிதன் . மனிதனுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை காலமோ மிகவும் குறுகியது . இக்குறுகிய காலவாழ்வில் பிறந்தோர் எல்லாம் நிறைவோடு வாழ வேண்டும். அதுவும் குறைகளைப் போக்கி நிறைவோடு வாழ வேண்டும் .

---அருள்தந்தை

வெள்ளி, 11 ஜூலை, 2014

இறையோடு இணைந்த செயல் :


நாம் வாழ்த்தும் போது முதலாவது நமது மனம் இறை உணர்வோடு அதாவது அறிவின் இயக்கத்தில் நுண்ணிய பகுதியை அடைகிறது. "வாழ்க" என்று சொல்லும்போதே, குளிர்ச்சியாக நல்ல எண்ணத்தோடு சொல்லும்போது, நாமே முதலில் நம்மை வாழ்த்திக் கொள்ள வேண்டும்.

அந்த அலை எழும் போதும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இப்படி வாழ்த்தி வாழ்த்திச் சிறிது காலத்தில் நீங்கள் தானாகவே இறை உணர்வில் கலந்திருக்கும் நிலை உரு...வாகும். இவ்வாறு வாழ்த்திப் பழகிக் கொண்டவர்களுக்கு எல்லாச் செயலும் அந்த இறையோடு இணைந்த செயலாக, நற்செயலாக இருக்க முடியும்.

அதே போல நீங்கள் ஒரு வாழ்த்துச் சொல்கிறீர்கள், பல தடவை சொல்கிறீர்கள். ஆயிரம் தடவை சொல்லும் போது ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு நினைவுக்கும் அந்த வாழ்த்துக்கும், ஆயிரம் தடவை வாழ்த்திவிட்ட பிறகு ஆயிரத்தோராவது தடவை வாழ்த்தினால் என்ன பலன் என்றால் ஆயிரத்தோரு தடவை வாழ்த்தினால் என்ன பலனோ அந்த அளவுக்கு அழுத்தம், பயன்பெறும். ஆகவே ஓய்வு இருக்கும் நேரத்தில் எல்லாம் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

தவம் செய்த பிறகு இருக்கும் நேரத்தில் என்ன செய்வது, அதற்கு எதாவது மந்திரங்கள் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்பார்கள். அதற்குத் தேவையே இல்லை, வாழ்த்து என்கிற மந்திரம் எப்பொழுதும் இருக்கிறது. உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? ஐம்பது பேர், நூறுபேர், என்று சொல்கிறீர்கள் அல்லவா? அதிலே ஒருவரை எடுத்துக் கொண்டு நூறு தடவை வாழ்த்துங்கள்.

பிறகு இன்னொருவரை நூறு தடவை வாழ்த்துங்கள். தீமை செய்தவரை முதலில் வாழ்த்துங்கள். நன்மை செய்தவரை பின்னால் வாழ்த்துங்கள். அதன் பிறகு நேரம் இருக்கிறதா என்று பார்த்தால் நேரமே இருக்காது. நீங்கள் வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க, உயிர்க் கலப்பு வர வர தீமை செய்யக் கூடியவர்கள், தீமையான எண்ணம் உடையவர்கள் எல்லாம் நாம் நினைக்கும் போது அவர்களுக்கும் ஒரு திருப்பம் வந்து விடும். இவரோடு போராட்டம் செய்தேனே இவருக்குப் போய் தீமை செய்தோமே, தவறாக நினைத்தோமே என்ற எண்ணம் வரும். இந்த உயிரோட்டம் (interaction) அவர்கள் உள்ளத்திலே தானாகவே அவர்களுடைய நிலைமையை மாற்றி, குணத்தை மாற்றி நன்மையே செய்வதற்குப் பலன் கொடுக்கும்.

ஆகவே நல்லவர்களை வாழ்த்துவதனால் நன்றி தெரிவித்துக் கொள்கின்றீர்கள். பொல்லாதவர்களை வாழ்த்துவதனால் இரண்டு பலன் கிடைக்கிறது: தீமையை முதலில் விலக்கிக் கொள்கிறோம், அது மாத்திரம் இல்லை, அவனை வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க அந்தத் தீமை செய்தது போக நன்மை செய்கிறான்.

---அருள் தந்தை


 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"வாழ்க வளமுடம்" என்ற வாழ்த்து -
எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும்".

.
"வாழ்க்கை என்பதே சிக்கல் நிறைந்த மனப்போராட்டம் ஆகும்.
உடலும், உயிரும் சேர்ந்ததே ஒரு சிக்கல் தான்".

.
"பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு எழும்
ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும்".

.
"வாழ்த்து வீண் ஆகாது. வாழ்க வளமுடன், வாழக் வளமுடன் -
என்று சொல்லச் சொல்ல உடல், மனம் நன்றாக இருக்கும்".

.
"வாழ்த்தும் பழக்கத்தினால் சினம் அடிக்கடி வருவதைத்
தவிர்க்கலாம்; பகையைக் கூட தவிர்க்கலாம்".

.
மனித மாண்பு :

"மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்
மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான
மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும் மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை
மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துரைந்து
மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்
மனவளகலையிதனைப் பரப்பி நலம் காண்போம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 10 ஜூலை, 2014

எண்ணம் பதியும் இடங்கள் :



நாம் எண்ணுகின்ற எண்ணம் நமது உடல் செல்களில், மூளை செல்களில் , சீவகாந்த களத்தில், உயிர் துகள்களில், கருமையத்தில், வான்காந்தத்தில் ஆகிய ஆறு இடங்களில் பதிகிறது .

எந்த ஒரு எண்ணம் எண்ணினாலும் அது நல்ல எண்ணமா என்ற ஆராய்ச்சி வேண்டும். இந்த பிரபஞ்ச நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் காரணம் அவரவர் எண்ணங்களே....

---அருள் தந்தை

புதன், 9 ஜூலை, 2014

தவறுகளும் திருத்தமும் :


நான் தவறுகள் செய்கிறோம் . செய்த தவறுகளே துன்பமாக முளைக்கின்றன. இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவு வந்த பின் இனித் துன்பம் வராமல் இருக்க வேண்டுமாளால் இனியேனும் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வர வேண்டும். பொதுவாக நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன.

சூழ்நிலை நிப்பந்தத்தால்ச...ெய்யப்படும் தவறுகளும் மிகுதியே. புலன் கவர்ச்சியிலே இருக்கும் போதும் சூழ்நிலைக் கவர்ச்சியிலே நிற்கும் போதும் , பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும்போதும், தவறுகள் தெரிவதில்லை. அதனால் மேலும் மேலும் புலன் கவர்ச்சியில் சிக்கிக் கொள்கிறோம் . மேலும் மேலும் சூழ்நிலைக் கவர்ச்சிக்கு ஆளாகிறோம். மேலும் மேலும் தவறிழைத்து , மேலும் மேலும் துன்பத்தையே சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இதனால் வந்த வேலை பிறவியின் நோக்கம் மறந்து போகிறது. காமம், குரோதம் முதலான ஆறு தீய குணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. விளைவாக ஐந்து பெரும் பழிச்செயல்கள் நாளுக்கு நாள் பெருகிவருவதைப் பார்க்கிறோம். இறைவனைப் பற்றிய எண்ணம் மறைத்து வருகிறது. இந்நிலை மாற வேண்டுமானால்.தகுந்த மனோ பயிற்சியின்றி முடியவே முடியாது .

ஏனெனில் தவறிழைப்பதும் மனம் .இனித் தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே. மனதைப் பழைய நிலையிலே வைத்துக் கொண்டு புதிய வழியில் செல்ல எப்படி முடியும் .

--அருள்தந்தை

செவ்வாய், 8 ஜூலை, 2014

பதிந்த ஒவ்வொரு பதிவுக்கும் அது செயல்பட காலம் உண்டு

இயற்கையிலே எந்தத் தவறும் இருக்கமுடியாது. ஏற்கனவே ஒருவர் ஒரு தவறு செய்ய எண்ணியிருப்பார். அதைச் செயலிலே கொண்டுவர முடியவில்லை. அது அப்படியே பதிவாகி இருக்கிறது. காலத்தால் எண்ணிய எண்ணம் எப்படியும் செயல்பட வேண்டும். அவ்வாறு அவர் ஒருவருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணிவிட்டால், அந்த எண்ணத்தை உணர்ந்து அழிக்கவில்லையென்றால் அதற்குரிய காலத...்திலே அந்தத் தீமை செய்தே ஆகவேண்டும். ஆகவே அவரது எண்ணம் செயலாக வேண்டும். அதே சமயம் இங்கே நம்மிடத்தே செயல் பதிவு நீங்கவும் வேண்டும். இரண்டையும் இணைத்து இயற்கை ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அவர் மூலமாக நமக்கு ஒரு வருத்தத்தைத் தந்தது. இதை உணரும்போது நாம் அவரை வாழ்த்தவே வேண்டும். நாம் மகிழ்ச்சியடையவும் வேண்டும். ஏனென்றால் நம்மிடம் உள்ள பதிவு ஒன்று வெளியாகிவிட்டது, அது செயலாகி அப்பதிவு கழிந்துவிட்டது என்று.

ஒரு மனிதனிடத்திலே நூற்றுக்கணக்கான பதிவுகள் இருக்கலாம்.. ஒரு விதையிலே மரம் இருப்பதுபோன்று, அந்த விதையை நட்டவுடனேயே - பூ, காய், பழம் எல்லாம் உடனே வந்துவிடுவது இல்லை. விதையானது முதலிலே சிறு செடியாக வருகிறது. காலத்தாலே, பல வாரங்கள் கழித்தோ, மாதங்கள் கழித்தோ, ஆண்டுகள் கழித்தோ மரமாகிய பின் பூ, காய், பழம் வரலாம். அதுபோன்று பதிந்த ஒவ்வொரு பதிவுக்கும் செயலாக மலர அதற்கு தகுந்த காலம் என்று ஒன்று உண்டு. அந்த அந்தக் காலத்தால் முறையாக அது எழுச்சி அடைந்து இயங்கிச் செயல்படும். ஆகவே "இடுக்கண் வருங்கால் நகுக" என்றுதான் திருவள்ளுவர் கூறினாரே தவிர, அந்தத் துன்பத்தை ஏற்படுத்தியவரை வருத்தவேண்டும் என்று கூறவில்லை. எனவே எவ்வாறு நாம் துன்பம் வரும்போது நகை புரிய வேண்டும்? சிரிக்கவேண்டும்? என்றால்.. உண்மையிலேயே ஏற்கனவே இருந்த நம்முடைய சுமை அல்லது பாவப் பதிவு (sins and imprints) ஒன்று இன்று நம்மிடம் அப்பதிவு செயலாகி கழிந்துவிட்டது என்று எண்ணும்போது, அத் துன்பத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய இன்பமான உணர்ச்சிதான் அகத்தவப் பயிற்சியினால் பக்குவப்பட்ட குண்டலினியோக சாதகனுக்கு ஏற்படவேண்டுமே அன்றி.. சினம் கொள்ளக் கூடாது..! சினத்திற்குப் பதிலாக அத்தகைய ஞானம் கொண்ட கர்மயோக நெறி தான் அகத்தவப் பயிற்சி (Kundalini Yoga Meditation) மேற்கொள்ளும் குண்டலினியோகிக்கு மலர வேண்டும்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 7 ஜூலை, 2014

தெய்வ நீதி வழிவாழ்தல்



மனிதன் உடற்கருவிகளைக் கொண்டும், ஐம்புலன்களைக் கொண்டும், மனஆற்றலின் தன்மைகளாக விறுப்பு வெறுப்புகளைக் கொண்டும், செய்யும் செயல்களெல்லாம் இயற்கை நியதிக்கு ஒத்திருக்க வேண்டும். ஏதேனும் முரணாகச் செயல் புரிந்தால், அதன் விளைவாக வருவதே வலி, நோய்கள் முதலான வாழ்க்கைச் சிக்கல்கள் ஆகும்.  இந்த இயற்கை நியதிகளை உணர்ந்து அதன் வழி வாழ்தலே தெய்வ நீதி வாழ்தல்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி - 

 
 

ஞாயிறு, 6 ஜூலை, 2014

மனதின் பழக்கத்தை முறையாக மாற்ற

மனத்திற்கு இரண்டடுக்குப் பதிவுகள் உள்ளன. ஒன்று கருவமைப்பினால் பெற்றோர்களை அடிப்படையாகக் கொண்டு வந்தது. மற்றது பிறந்தது முதல் என்னென்ன நினைத்தோமோ, என்னென்ன செய்தோமோ அவை அனைத்தும் பதிவாகியுள்ளது. இந்த இரண்டும் சேர்ந்து தான் ஒரு மனிதனுடைய தன்மையாக உருவாகிறது. முன்பு மனதை இயக்கிப் பதிவுகளைப் பெற்று ஒரு தன்மையை நாம் கொண்டுள்ளோம். அதை மாற்றி மனத்தை நம்முடைய விருப்பப்படி நடத்தி நாம் அடைய வேண்டிய எல்லா ...இலட்சியங்களையும் அடைய அதற்கென ஒரு பயிற்சி வேண்டும். பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கக்கூடிய மனதின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொண்டு விளக்கத்தை நல் விளக்கமாக பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உள்ள முறையான பயிற்சியே 'உலக சமுதாய சேவா' சங்கத்தின் "மனவளக்கலை" பயிற்சியாகும்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 5 ஜூலை, 2014

கேள்வி : நம்மை சுவாமிஜி பிரம்மஞானி என்று அழைத்த போதிலும் நாம் அடக்கம் காரணமாக அதை நாம் நம் பெயர்களுக்கு முன்னே உபயோகிப்பதில்லை. உண்மையில் சுவாமிஜி பிரம்மஞானி என்ற பெயர் வழங்கிய காரணம் என்ன?


பதில் : ஒரு இரயில் பெட்டியில் ஏறுகின்றீர்கள், முதல் வகுப்புப் பயணியிடம் கேட்கின்றீர்கள். எங்க போறீங்க? என்று. அவர் போகுமிடத்தின் பெயர் சொல்லுகின்றார். எங்கே இருந்து போறீங்க? அவர் கிளம்பிய இடத்தைச் சொல்கின்றார...். கடைசி வகுப்புப் பயணியிடம் போகின்றீர்கள். அவரிடமும் அதே கேள்வி, அவர் விடை சொல்ல வரும் போது, அவரிடம் போய், கடைசி வகுப்புல தான போற, உனக்கு கிளம்புமிடம், போகுமிடம் தெரிஞ்சா என்ன? தெரியாட்டி என்ன? என்று சொன்னால்? நமது சமுதாயத்தின் பெரும் பகுதி 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இப்படித்தான் இருந்தது. ஒரு பிராமணரிடம் போய், தங்கள் பிறவி எங்கு செல்கின்றது? என்று கேட்டால், அவர் சொல்வார் பிரம்மம் நோக்கி என்று. உங்கள் பிறவி எங்கே துவங்கியது என்று கேட்டால் மிகச் சரியாய்ச் சொல்வார். பிரம்மத்திலிருந்து என்று. கடைசி வகுப்புப் பயணியாம், ஒரு 19ஆம் நூற்றாண்டு சூத்திரரை எடுத்துக் கொள்ளுங்கள். அவரிடம் போய்க் கேட்டுப் பாருங்கள், உங்கள் பிறவி துவங்கியது எங்கு என்று? அவர் சொல்வார், அது தெரிஞ்சி என்ன செய்யப் போறேன் என்று. எங்கு போகின்றது உங்கள் பிறவி என்று கேட்டால், அது மட்டும் தெரிஞ்சி என்ன பண்ணப் போறேன் என்று தான் விடை வரும். பிரம்ம ஞானம் என்பது புனிதம் எனும் பெயரில் பஜனை பாடி, மந்திரம் ஓதி, மூச்சை விட்டு விட்டு வயமாய் இழுக்கும் ஒரு குழுவினருக்கு மட்டுமே சொந்தமாய்ப் போனது, சமுதாயத்தின் இழிவு.

Revolution என்று சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். வேதாத்திரியம் எனும் ஓர் Revolution அதை அனைவருக்கும் எளிமைப்படுத்தி பொதுவுடமையாக்கல் முறைக்கு உட்படுத்தியது. பொதுவுடமை ஆக்கி விட்டோம், எப்படி அச்செய்தியை வெளிக் கொணர்வது? மஹான் கண்டு பிடித்தார் ஒரு எளிய முறையை. யாரை எல்லாம், தாழ்ந்தோரில்லை என்று அழைக்க விரும்பினோமோ அவர்களை எல்லாம் காந்தி 'ஹரி சனம்' அழைத்தது போன்று, எவர்க்கெல்லாம் பிரம்ம ஞானம் மறுக்கப் பட்டிருந்ததோ, மறைக்கப் பட்டிருந்ததோ, அவர்களுக்கு பிரம்மத்தின் சுவை தந்து, அவர்களை 'பிரம்ம ஞானி' என்று வழங்கினார். பிரம்ம ஞானம் பொதுவுடமை என்று உணர்த்தவே நாம் எல்லாம் பிரம்ம ஞானி என்று அழைக்கப் படலானோம்.

புதன், 2 ஜூலை, 2014

அன்புரைகள்


நீங்கள் உயிரறிவைப் பெற்று உண்மை விளக்க ஒளியில் விழிப்போடு வாழ வாழ்விலே ஒரு நல்லதோர் திருப்பத்தை ஏற்றிருக்கிறீர்கள். நீங்கள் மேன்மையுற வேண்டும். உங்களால், உங்கள் வாழ்வின் ஒழுக்கம் பின்பற்றி, மனிதகுலம் மேன்மையுற வேண்டும். உலகம் அமைதி பெற வேண்டும். [1] நுண்மாண் நுழைபுலன் [2] ஏற்பும் இணக்கமும் [3] தன்மை நலப்பேறு [4] தகைமை [5] ஆக்கம் எனும் ஐவகை குணநல உயர்வில் நீங்கள் அபார விழிப்புடன் வாழ வேண்டும்.

[1] ஆக்கினை [2] மூலாதாரம் [3] சகஸ்ராதாரம் [4] சக்தி களம் [5] சிவ களம் எனும் ஐவகைத் தவத்தாலும் அறிவை நுண்மை மிக்க தாயும் ஆற்றல் மிக்கதாயும் வளப்படுத்திக் கொள்ளுங்கள். [1] எண்ணங்களை ஆராய்தல் [2] ஆசை சீரமைப்பு [3] சினம் தவிர்த்தல் [4] கவலையொழித்தல் [5] மெய்ப்பொருள் உணர்தல் என்னும் ஐவகையான தற்சோதனைப் பயிற்சியினால் மனிதப் பிறவியின் மாண்பைச் சிறப்பித்துக் கொள்ளுங்கள். உங்களைப் பார்த்து இத்தகைய சீரிய வாழ்க்கை நெறியினை மற்றவர்களுக்கும் பின்பற்றும்படியாக உங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு உயர்வு பெறுங்கள். இது நமக்கு மட்டுமன்று, மனிதகுலம் முழுமைக்கும் வாழ்க்கை நலத் தொண்டாக அமையும்.
உலகில்மனிதகுல வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள் இது வரையில் ஏற்பட்டன. மனவளம், உடல்நலமும், அமைதி வாழ்வும் அளிக்கக்கூடிய நமது குண்டலினியோக வாழ்வே மனித குலத்துக்கு எல்லா வகையிலும் நலம் பயக்கவல்லது. நீங்கள் ஒவ்வொருவரும் அமைதிப்படையின் உறுப்பினாராகத் திகழ வேண்டும்.


- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

"அறிவின் இருப்பிடம் இயல்பு இயக்கம்
அறிந்து ஒழுகுவோர் அறிஞர்கள் ஆவர்".
.
"மனம், மொழி, சொல், மூன்றின் ஆற்றலுக்கும் விளைவுண்டு;
இதை, மறைக்கவோ - மறுக்கவோ - மறப்பதோ முடியாது".
.
"அன்பிரக்கம் தொண்டு தவம் ஈகை இன்சொல்
ஆன்மிக நெறியாகும் போற்றிக்காக்க
துன்பங்கள் குறைந்துவரும் மேலும் தெய்வத்
துணைகிட்டும் வாழ்வில் புகழ் நிறைவு ஓங்கும்;
நன்முறையில் தனிமனிதன் வாழக்கற்றால்
நாட்டினிலும் வீட்டினிலும் அமைதி ஓங்கும்,
இன்பமயமே எங்கும், இந்த உண்மை
எளிதன்றோ கற்பதற்கும் வாழ்வதற்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்