Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 12 மே, 2015

வாழ்த்தும் முறை

தவம் செய்யும்போது நுண்ணிய நிலையில் இருந்து நாம்  வாழ்த்தக்கூடிய 'வாழ்த்துக்கு' - சொல்லக்கூடிய 'சொல்லுக்கு'எண்ணக்கூடிய 'எண்ணத்திற்கு' வலுவு ' அதிகம்.

 ."மனதின் நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (interaction) ஏற்படுகின்றது; ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம். இரண்டு தடவை, நாலு தடவை வாழ்த்த, வாழ்த்த நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடரியக்கம் வந்து விட்டதானால் அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக் கொண்டிருக்கும். அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும்; அந்தத் தொடர் அறுபடாது இருக்கும்.

.
அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது, நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்ப்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும்; அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும் எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும்; நல்லவர்களாக மாற்றிவிட முடியும். நாம் அந்த அளவு உறுதி பெற்று விட்டால், வாழ்த்துவது பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த மனநிலையிலே, அந்த எல்லையிலே, அந்த மையத்திலே நிற்கக்கூடிய அளவிற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால், நாம் நினைக்கும்போதெல்லாம் அது வாழ்த்தாக முடியும்.

.
ஓர் 'வில்' இருக்கிறது, 'அம்பு' இருக்கிறது, அம்பு எய்வதற்கு ஓரளவு நாணைப் பின்னுக்கு இழுத்துவிடுவது ஒன்று, கடைசிவரைக்கும் இழுத்து அம்பு விடுவது என்பது ஒன்று. எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்; அதே போன்று நாம் தியானத்தின் மூலம் எவ்வளவு "அமைதிக்கு" அறிவை, மனதை' கொண்டு வருகிறோமோ அங்கேயிருந்து கொடுக்கக்கூடிய "வாழ்க வளமுடன்" என்ற அந்த வாழ்த்துக்கு எண்ணத்திற்கு வலுவு அதிகம், செயல்படும் வேகம் அதிகம். ஆகவே நாம் தவம் செய்யும்போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த நேரத்தில் நாம் வாழ்த்தக்கூடிய வாழ்த்துக்கு, சொல்லக்கூடிய சொல்லுக்கு, எண்ணக்கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம்; சீக்கிரமாய் செயலுக்கு வந்து விடும். ஆகையினாலே வாழ்த்து வீண் ஆகாது. 'வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்' என்று சொல்லச் சொல்ல உடல் நன்றாக இருக்கும் மனம் நன்றாக இருக்கும். நம்மைச் சுற்றிலும் ஒரு நல்ல அலை இயக்கம் (Vibration) இருக்கும். நாம் போகுமிடமெல்லாம் நன்றாக இருக்கும்.

.
.- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக