Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

அகத்தாய்வு பயிற்சிகள் :

1.எண்ணம் ஆராய்தல்:
------------------------------
எண்ணம் தோன்றும் விதம் , அதற்கான அடிப்படைக் காரணங்கள், எண்ணம் செயல் படும் விதம் இவற்றை தெரிந்து கொண்டு எண்ணத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான பயிற்சி "எண்ணம் ஆராய்தல்" .

2. ஆசை சீரமைத்தல் :...
-----------------------------
ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள , எத்தகைய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என எண்ணிப் பார்த்து, ஆசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்குரிய முறையான பயிற்சியே "ஆசை சீரமைத்தல்".

3.சினம் தவிர்த்தல் :
---------------------------
சினத்தை ஒழிக்க முடியாது .சினத்தை தவிர்க்கத்தான் முடியும். சினத்தை எவ்வாறு தவிர்ப்பது? அதனால் வரும் கேடுகள் என்னென்னென்ன என்பதற்கான முறையான பயிற்சியே "சினம் தவிர்த்தல் ".

4.கவலை ஒழித்தல்:
---------------------------
கவலை என்பது என்ன ? எவ்வாறு அதை வகைப்படுத்திப் போக்கிக் கொள்வது ? இவற்றுக்கான வகுக்கப் பட்ட பயிற்சியே "கவலை ஒழித்தல்".

5. நான் யார்?:
-----------------
நான் யார்? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப் வேண்டும்? என்பனவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்குத் தன்னிலை விளக்கம் அல்லது தெய்வநிலை விளக்கம் என்ற பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே "நான் யார்?" என்ற பயிற்சி .

 

1 கருத்து: