• "வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது யார்"?

    தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறை இருக்கத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களேதான் தேடிக் கொண்டீர்கள்... அது எப்படி 

    எத்தகு தகப்பனுக்கும் தாய்க்கும் கருவாக அமைத்து தனது வாழ்க்கையில் எவ்விதமான இன்பத் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற கருவமைப்பு இருக்கிறதோ, அத்தகு உடலைத்தான் தாய் வயிற்றில் உயிரானது அடிமன நிலையில் இருந்து கட்டிக் கொண்டுள்ளது....

    அதுபோல ,

    கருவமைப்புக் கொண்டு, பிறந்த பின்னர் இதுவரை அவரவர் அமைத்துக்கொண்டுள்ள மனதின் தரத்தைக் கொண்டும், வாழ்நாளில் இன்ப துன்பம் வர வேண்டுமோ அதனை அவரவர் வாழ்க்கையில் சரி பங்கேற்று ஒரே ஒருவரால் தான் கொடுக்க முடியும். அந்த ஒருவரை அவரவர் உயிரே (அடி மனமே) தெரிந்து , அது பலபேர் மனதில் பிரதிபலித்து, அவர்கள் முயற்சி செய்து உங்களுக்கேற்ற வாழ்க்கை துணைவரை தேர்ந்தெடுத்து ,அந்த ஒரு உங்கள் நபர்தான் உங்கள் வாழ்க்கை துணைவராக வருகிறார். எனவே உங்கள் வாழ்க்கைத் துணைவர் மீது குறைபட்டுக் கொள்ளத் தேவை இல்லை. வாழ்க்கை துணைவரிடம் உள்ளக் குற்றங்களுக்காக நீங்கள் யார் மீதாவது குறைபட்டுக் கொள்ள வேண்டுமானால் அது உங்கள் மீதே தான் . இந்தத் தத்துவத்தை நீங்கள் தெரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கைத் துணைக்கு தகுந்த மதிப்பளித்து வாழ வண்டும். 



    அதை விடுத்து, கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் குணமும் ஊனமுற்று அவர்கள் வாழ்க்கையில் பல குறைகள் தோன்ற ஏதுவாகும்.

    பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

    தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் ஞானமேயானாலும் சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது அது ஞானமேயாயினும் அதனால் ஒரு பயனும் வராது.
    - வேதாத்திரி மகரிஷி