Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 14 மே, 2015

"யதாஷ்டானம் பிரதிஷ்டாப்யயாமி" - இதன் பொருள் என்ன?

 "தினந்தோறும் நாம் நம்முடைய வாழ்க்கையிலே மனதை அலைய விட்டுக் கொண்டு, அதனாலே உடலையும் இன்னும் வாழ்க்கையிலே உள்ள நலன்களையும் குழப்பம் செய்து கொள்கிறோம் கலக்கம் செய்து கொள்கிறோம். அந்தக் கலக்கத்தைத் தினந்தோறும் மாற்றி, அதன் நட்டத்தை ஈடு செய்து, நாம் திரும்பவும் மனதைச் சரியான நிலைக்குக் கொண்டு வந்து வைப்பதற்கு குண்டலினியோக தவம் (Meditation) அவசியம். எப்பொழுது அவசியம்? எவ்வளவு அவசியம்? என்றால், மனிதனுக்குச் சிந்தனையாற்றல் பெற்றவுடனேயே அவசியம். நாள்தோறும் அவசியம்.

.
தினந்தோறும் சமையலறையில் பாத்திரத்தை உபயோகிக்கின்றோம்; அதைச் சுத்தம் செய்து வைத்தால் தானே மறு நாளைக்கு நன்றாக இருக்கும் ? இதேபோல மனதையும் கூட நாம் தினந்தோறும் வலுப்படுத்திக் கொள்வதற்கு, தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, அலையும் மனதை அதன் நிலைக்குக் கொண்டு வந்து விட ஒரு பயிற்சி வேண்டும். அதைப் பெரியவர்கள் வேதகாலத்தையொட்டி வந்த சொல்வழக்கிலே "யதாஷ்டானம் பிரதிஷ்டாப்யயாமி" என்று சொல்லுவார்கள். மனதை முன்னர் இருந்த நிலைக்குக் கொண்டு வந்து விடுவதற்காகச் செய்யக் கூடிய முக்கியமான உளப்பயற்சி தான் இந்த குண்டலினி தவம் (Simplified Kundalini Yoga).

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக