Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 31 அக்டோபர், 2019

உடற்பயிற்ச்சி



புதன், 30 அக்டோபர், 2019

Spiritual Education

Suddenly the water flow increases in the river. No rains in the distance of many miles. Then how the water comes? If you know the reason for this, you can know how suddenly war comes in any nation? There is good rain at a place miles far away. That’s on high place. Rain water flows towards sea. Same water, is seen as flood in the dry river. Similarly innumerable hardships exists in the life of people across the world.
Cause for all miseries are the errors committed by people without knowing the value of people. How? To lead the virtual life, there is not a formal ‘spiritual education’; no training too. Hence, majority of people over indulge in Object, Fame, Power & Sensory pleasure; and go on increasing their desires. In reality, Objects and Sensory-pleasure are essential for humans.
Even then, to get that one need to gave sincere effort and labour. The desire to get the things and pleasure without work, is only in fame and power. Due to this, mankind in entire world have unending desire to have more and more, gets stuck in quadruple Objects, Fame, Power & Sensory pleasure, without getting fulfillment in anything. Once attain the wisdom (Brahma Gyan - Divine knowledge), the aforesaid four greed would vanish; mind would be fulfilled.
- Vethathiri Maharishi

செவ்வாய், 29 அக்டோபர், 2019

ஆசை! ஆசை! ஆசை! - ஆசையைப்பற்றி அருள்தந்தை!!


"தேவையைக் காரணமாகக் கொண்டு எழுந்த ஆசை தேவை நிறைவோடு நின்றுவிட வேண்டும்.
பசி தாகம் முதலிய இயற்கைத் துன்பத்தைப் போக்கிக்கொள்ள எழுந்த ஆசை துன்பத்தைப் போக்குவதோடு நின்றாக வேண்டும்.
உயிராற்றல் செலவைச் சரி செய்ய எழுந்த ஆசை அப்படிச் சரி செய்வதோடு நின்றாக வேண்டும்.
ஆனால் பொதுவாக அப்படி நிற்பதில்லை. தேவை நிறைவின்போது ஏற்பட்ட திருப்தியின் மீது அல்லது இன்பத்தின் மீது உயிர் மயங்கிவிடுகிறது.
.
எந்தக் காரியம் இன்பத்தைத் தந்ததோ, அந்தக் காரியத்தைத் தேவையில்லாமலே செய்ய விழைகிறது !.
அதாவது உண்மையான தேவை இல்லாமலேயே ஆசை எழுகிறது.
எழுகிற துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆசை தோன்றியதுபோக, இன்பத்தைச் செயற்கையாகத் தேடும் முயற்சியிலே இப்போது ஆசை எழுகிறது.
இந்த ஆசையைத் தான் கட்டுப்படுத்த வேண்டும்.
எழாமலேயே காக்கவும் வேண்டும்.
உண்மையான உயர்வான தேவையின் காரணமாக அல்லாமல் ஏற்படும் ஆசைகளெல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுவன.
அவை துன்பத்தைத்தான் தரும்.
.
தகுந்த காரணத்தாலேயே ஏற்பட்ட இச்சைகளானாலும், அவ்வாசைகளை நிறைவு செய்யும் முயற்சியில் தனக்கோ பிறர்க்கோ எதிர்கால விளைவாக துன்பம் தோன்றுமானால், அவ்வாசைகளும் தடுக்கப்பட வேண்டியவையே.
ஆசையை அடக்கினால் அடங்காது.
உணர்ந்து ஆராய்ந்து அதனைப் பிறந்த இடத்திலேயே ஒடுங்கச் செய்ய வேண்டும்.
தேவையா? வசதி இருக்கிறதா? பின் விளைவு என்ன? என்று ஆராயும்போது நிறைவு செய்யக்கூடாத தீய ஆசைகள் அப்போதே அமைதிபெறும்.
பிறந்த இடத்திலேயே அதாவது மனதிலேயே தானாகவே மாய்ந்துவிடும்.
.
எழுந்த ஆசை செயலானால் அதன் காரணமாக விளையும் நன்மை, தீமை பற்றிய சிந்தனையின்றி, ஆராய்ச்சி, தெளிவு, திடசங்கற்பமின்றி, ஆசையை அதன் இயக்கத்திற்கு விட்டுவிட்டால், அனுபோகத்தைப் பெறாதவரை அதற்கும் மனதிற்கும் அமைதி இல்லை.
எனவே நமது "மனவளக்கலை" ஆகிய குண்டலினியோக (Simplified Kundalini Yoga) பயிற்சியின் முக்கிய அம்சம் "தற்சோதனை" (Introspection) .
தற்சோதனை பயிற்சியில் உள்ள கோட்பாடுகளுக்கு உட்பட்ட பிறகும் மிச்சப்படும் ஆசை ஒன்றுக்கு மேல் இருக்குமேயானால், அதை ஒவ்வொன்றாக எடுத்து செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்".
.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

வியாழன், 24 அக்டோபர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! ஒருவர் சமுதாயத்தை முன்னேற்றுவதற்காகப் பாடுபடுகிறார். அதற்காகத் தனி ஆசிரமத்தில் தங்கி அதற்கான பணிகளைச் செய்து வருகிறார். அவருடைய இறப்பிற்குப் பின் அவருடைய உயிரின் நிலை என்ன?


 பதில்: எந்தச் சேவையைச் செய்தாலும் ஒருவர் எல்லை கட்டிய நிலையிலேயே தன் மனதைப் பழக்கியிருந்தால், உயிர்விட்ட பிறகும் அது இந்த உலகத்தையொட்டியே (Earth bound) இருக்கும். அது வாழும் மனிதரோடு இணைந்து செயல்படும்.
பூவுலகத்தின் புவியீர்ப்பு களத்தைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால் மனம் பரந்து விரிந்து பிரபஞ்ச நிலையிலிருக்கப் பழகியிருக்க வேண்டும். உயிரிலுள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற முக்களங்கங்களும் நீங்கும் வரை அது இறைநிலையை அடைய முடியாது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

நிருவிகற்ப நிலை

நிருவிகற்ப நிலை என்றால் என்ன?
யோகத்தின் இறுதி நிலையாகிய சமாதி நிலையில் பல்வேறு நிலைகள் இருப்பதாக மகான்கள் கூறுகின்றனர். அதில் ஒரு நிலை நிருவிகற்ப சமாதி நிலை. இதனை, 
“நேசநிருவிகற்ப நிஷ்டையல்லால் உன்னடிமைக்கு ஆசை உண்டோ நீ அறியாதது
அன்றே பராபரமே”என்கிறார் தாயுமானவர்.
இதனை உறக்கமற்ற உறக்கநிலை என்பர்.
இந்த நிலையில் உறக்கத்தில் தான் என்ற உணர்வும், தன்னைச் சூழ்ந்துள்ள உலகைப்
பற்றிய நினைவுகளும் இல்லாமல் இருக்கும். இந்த நிலையை அடைந்தவன் அனைத்து
சுக போகங்களிலிருந்து விடுபட்டு பூரணப் பொலிவுடன் விளங்குவான்.
ஆசையும் துன்பமும் அவனை அணுகாது. இந்த நிலையையே வேதாத்திரி மகரிஷி அவர்கள்
“நிருவகற்ப நிலை” என்கிறார்.
வாழ்க வளமுடன் !

வழக்க பழக்கங்கள் விளக்கம்

வேதாத்திரிய மெய்விளக்கம் 20-10-2019 உலக அமைதி நாள் 20-10-0034
வழக்க பழக்கங்கள் விளக்கம்
'Image may contain: 1 person, beard
எந்தெந்தப் புலன்கள் மூலமாக செயல்கள் செய்து அனுபோகம், அனுபவம் பெறுகிறோமோ அவையெல்லாம் அந்தந்த உறுப்புகளில் பதிவாகி திரும்பத் திரும்ப மீண்டும் அந்த எண்ணம்; நினைவு வரும் பொழுது அதே நினைவு, அதே காட்சி இவை மூலமாக எண்ணம் வந்து விடுகிறது.
எண்ணமும் செயலும் தேவையாக, பழக்கமாக, சூழ்நிலைக் கவர்ச்சியாக மாறி அடிக்கடி மனிதனிடம் செயல்படுகின்றது. இது போன்றே நாம் பேசும் பேச்சுக்களும் பதிவாகின்றன.
நாவில் இயக்கப் பதிவாக, உடல் முழுவதும் ஒலியலை அதிர்வுப் பதிவாக, மூளையில் நினைவுப் பதிவாக, வித்தில் தரப்பதிவாக, பிரபஞ்ச உயிரிலும், பிற உயிர்களிலும் பிரதிபலிப்புப் பதிவாக அமைகின்றன.
இந்த விளக்கத்தைக் கொண்டு ஓர் எண்ணம், ஒரு செயல் எவ்வாறு பதிவு, பிரதிபலிப்பு, செயலால் இன்ப துன்ப விளைவுகள் என்ற நான்காக மாற்றம் பெறுகிறது என்பதை உணரலாம்.
இந்த உண்மையை உணர வேண்டும். இதற்குப் படிப்பு ஒன்றும் பயன்படாது. எந்த விஞ்ஞான கருவியும் கூட பயன்படாது.
நம்முடைய மனம், நம்முடைய வாழ்க்கை முறை, நம்முடைய இன்ப துன்ப உணர்வுகள், நம் சிந்தனை இதனைக் கொண்டு உட்கார்ந்து அதற்கு உரிய முறையில் ஆராய்ச்சி செய்து அவரவர்களே தெரிந்து கொள்ள வேண்டியது தான்.
நற்பழக்கம்
பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே
பாருலகில் மனிதரெல்லாம் போராடு கின்றார்.
பழக்கத்தில் வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்
பாலர்களின் நற்பழக்கம் பலன்விளைக்கும் எளிது.
(ஞானக்களஞ்சியம் கவி: 634)
நல்லோர் தந்த பரிசு :
வாழ்வை வளப்படுத்தும்
வழக்க பழக்கங்கள் எனும்
ஒழுக்கங்கள் எல்லாம்
ஆழ்ந்த சிந்தனையாளர்
அன்பினால் உலகுக்கு
அளித்த பரிசு ஆகும்.
(ஞானக்களஞ்சியம் கவி: 638)
சிறந்த பண்பாடு
பழக்கமென்றும், பழமையென்றும், பகுத்தறிவுக்கு ஒவ்வா
பல செயல்களையே மாற்றிப் பண்பாட்டை வளர்ப்போம்.
ஒழுக்கமது துன்பம்எழா அளவு முறையோடு
உணர்ச்சிகளைச் சீர்செய்து வாழும் முறையே யாகும்;
அழுக்காறு அவாவெகுளி ஆகாது போக்கி,
அன்பிரக்கம், தொண்டு தவம், அறிவின் விழிப்பேற்போம்.
பழுத்தறிவு முழுமைபெறும்! பரஉணர்வு கிட்டும்!
பற்றறிந்து பலனுணர்ந்து பண்புடனே வாழ்வோம்.
(ஞானக்களஞ்சியம் கவி: 1595)
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

புதன், 16 அக்டோபர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! பகவதி கோவில்களில் பேய் பிடித்தவர்களை அடக்குகிறார்கள் என்று சொல்கிறார்கள். அது எப்படிச் சாத்தியமாகும்?


பதில்: அத்தகைய கோவில்களில் மகான் ஒருவருடைய உயிர் அடக்கமாகி இருக்கலாம் அல்லது அங்கே ஒர் எந்திரத்தை நிறுவி, அதற்கு மந்திரங்களைச் செபித்து, அங்கு ஓர் ஆற்றல் களத்தை (Energy Field) ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.
அந்த ஆற்றல் களத்திற்குச் சென்றால் இணைந்த ஆவிக்கு ஒரு வேகமான உணர்ச்சி மிக்க இயக்கம் உண்டாகும். தானாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சொந்த ஆன்மா மயக்கநிலையில் (Trance State) இருக்கும். அந்தச் சமயம் இணைந்த ஆவி தானாகவே ஆடி ஆடி வெளியேறக் கூடிய அளவுக்கு வந்துவிடலாம்.
ஆனால், அது வெளியேறுவது என்பது இல்லை. தான் அடைக்கலமாக எந்த உயிருடன் சேர்ந்திருக்கிறதோ அந்த உயிருடனேயே கலந்து ஒன்றுபட்டுவிடும். இதுவரை பொருந்தாது தொல்லைகள் செய்து வந்த ஆவி இப்பொழுது அமைதி பெற்று விடும்.
சில பூசாரிகள் அவற்றிற்கு ஒவ்வொரு அம்மன் பெயர்களை வைத்து , அந்த அம்மன் மலையேறிவிட்டது என்பார்கள். பின் நன்மையே வரும்.
எவ்வாறென்றால், நம்மிடமுள்ள அந்த உயிரை வணங்குந்தோறும் நன்மையே அளிக்கும். எதிர்க்கும்தோறும் தீமையே தரும்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 8 அக்டோபர், 2019

Reason for spoiling friendship with Society?


War is not at all required now as people’s contemplating skills have risen. Any nation can live without fearing or antagonising other nation, by handing over the management of border security to the security council of United Nations (UN).
War can destroy all wealth of the society. War is a rough action, formed when the early generation of human beings, without thinking capabilities, were living like animals troubling other species. When we compare those generation with the current one, man’s thinking skills have grown manifold.
Man’s intelligence level has grown to travel to even moon, and to even apply computer equipments to daily life. Even now, war occurs in the human society. It’s a grave mistake that even now the war destroys the people. Everybody can easily understand, ‘ how many lifes are harmed on war? How many are destroyed? ‘ It’s a high time now to streamline the mankind’s life by constituting and managing the laws on economic rights, the social laws to prevent the strong to harm the weak.
Presently how many religious are found and functioning to make to realise the Almighty, educate the virtues, to protect the morality and culture? Then, where is the mistake if many lives are being harmed, killed and their properties are destroyed on war is continuing, even now. Is it not the cause, the irresponsibility in governance and lack of knowledge on Almighty?
- Vethathiri Maharishi

திங்கள், 7 அக்டோபர், 2019

ஆன்மீகத்தில் மூன்று ஓட்டைகள்

வேதாத்திரிய இரகசியங்கள்: அக்டோபர் - 07
ஆன்மீகத்தில் மூன்று ஓட்டைகள்
நமது நாட்டிலும் பிறநாட்டிலும் ஆன்மீகத் துறையில் ஒரு குறைபாட்டைக் காணலாம். ஒரு மகானுக்கும், இன்னொரு மகானுக்கும் கால இடைவெளியிருக்கும். ஒரு மகானைக் தொடர்ந்து அவர் கருத்தைப் பரப்ப இன்னொரு மகான் உடனடியாகத் தோன்றினார் என்று கிடையாது. கடைசியாக நாம் அறிந்த அத்தகு மகான் வள்ளலாராவார். அவர் மறைவுக்குப் பின் ஓரளவு இடைவெளிக்குப் பிறகே நம் வேதாத்திரி மகான் தோன்றியுள்ளார்.
இவருக்குப் பிறகும் மேற்கண்ட விதி குறுக்கிடுமா? மகரிஷியைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு நிகரான மகான் தோன்றுவாரா? தோன்றி தொண்டினைத் தொடர்வாரா? இரு அன்பர்களுக்கிடையில் ஏற்பட்டது இந்தச் சர்ச்சை. மகரிஷிக்குப் பின் ஒருகால இடைவெளிக்கு பின்புதான் இன்னொரு மகான் தோன்றி இவரது பணியைத் தொடர்வார் என்று ஒருவர் கூறினார். மற்றவர் மறுத்தார். இதற்கான விடை மறுப்புத் தெரிவித்தவருக்கு மகரிஷியிடமிருந்து கிடைத்தது.
1977 ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரி சிறப்புப் பயிற்சியில் கலந்துகொண்ட அந்த அன்பர், ஓய்வு நேரத்தில் மகரிஷியிடம் இவ்வினாவை எழுப்பினார். “அதான் இருந்த ஓட்டைகள் மூன்றையும் நான் அடைத்துவிட்டேனே. அந்த மூன்று ஓட்டைகளால் தானே அப்படிக் கால இடைவெளி மகான்களுக்கிடையில் ஏற்பட்டது. அந்த மூன்று ஓட்டைகள் அடைபட்டுப் போகவே மகான்கள் என்றென்றும் ஒருவர் பின் ஒருவராகக் கால இடைவெளியின்றியும் ஒருவர் இருக்கும்போதே ஒருவராகவும் தோன்ற வேண்டியதுதானே” என்று பளிச்சென பதில் கூறினார்.
அந்த மூன்று ஓட்டைகள்:
1. இறைநிலையைப் பற்றிய தெளிவான விளக்கம் சொல்லப்பட்டு அது வெட்டவெளிதான் என்பது நிறுவப்படவில்லை. (மகரிஷி உறுதி செய்தார்.)
2. உயிரைப் பற்றி அறியாமலே மனதைக் கொண்டு இறைவனை அறிந்துவிடலாம் என்றிருந்த குறை. (மனதையும் இறைநிலையையும் இணைக்கும் உயிர் பற்றிய தெளிவை மகரிஷி அளித்துவிட்டார்.)
3. பிரம்மச்சர்யம் தான் ஆன்மீகத்திற்கு ஏற்றதென்ற தவறான கருத்து. இல்லறத்திலிருந்து கொண்டே குண்டலினி தவம் பயில மகரிஷி வழி வகுத்துள்ளார்.
அகத்தவத்தின் பொருள்கண்டு அதன்பெருமை யுணர்ந்திடுவீர்;
அகத்தவமோ உயிரினிலே அறிவை ஒடுக்கும் பயிற்சி;
அகத்தவத்தால் மேலும்உயிர் அம்மாகி மெய்ப்பொருளாம்;
அகத்தவத்தால் வீடுணர்ந்து அமைதி பெற்று இன்புறலாம்.
அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம்;
அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்;
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம்;
அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அரும்நட்பைப் பெற்றிடலாம்.
அகத்தவம் தீவினையகற்றும்; அருள் நெறியை இயல்பாக்கும்;
அகத்தவமே இறை வழிபாடனைத்திலும் ஓர் சிறந்த முறை;
அகத்தவமே உயிர் வழிபாடதனை விளக்கும் ஒளியாம்;
அகத்தவமே மதங்கள் எல்லாம் அடைய விரும்பும் முடிவு.
📚 ஞானக்களஞ்சியம் கவி: 1496 📚

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

உடல் நலம் பேணும் வழிமுறைகள்

Image may contain: 1 personஉடல் நலம் பேணும் வழிமுறைகள் உங்களுக்காக அருட்தந்தை அருளியது!
1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.
அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி.
உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது.
அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது.
அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும்.
உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும்.
இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.
2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை.
இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.
3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும்.
உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.
4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன.
இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும்.
விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும்.
இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது.
எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.
5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும்.
நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.
6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.
7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும்.
பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும்.
தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.
8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulser) நோயாக வழங்கப் பெறுகின்றது.
9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்தநீரிலோ, தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.
10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது.
தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது.
மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன.
அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

புதன், 2 அக்டோபர், 2019

ஒன்பதுமைய தவம்


❓ கேள்வி: சுவாமிஜி! முற்காலப் பெண்கள் குடும்பத்தில் பணம் தனியாகச் சேமிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை. ஆனால் தற்காலப் பெண்கள் தனியாகச் சேமிக்கிறார்களே ஏன்?


பதில்: வரவுக்கு அதிகமாகச் செலவு செய்யும் குடும்பத்தில் குடும்பத்தலைவன் பொறுப்பில்லாமல் செலவு செய்து கொண்டே வந்தால் “பின்பு குழந்தைகளின் நலன், படிப்பு, பிற்கால வாழ்க்கை என்னாவது என்பதை மனதில் கொண்டு, நமக்குப் பொருள் வேண்டுமே” என்ற அக்கறையில் பெண்களுக்குப் பொருள் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி வருகிறது.
அது தவறில்லை.
அந்தப் பொறுப்பு கணவனுக்கும் இருந்தால் இருவரும் சேர்ந்தே சேமிக்கலாம். இருவரும் தனித்தனியாக ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் சேமிப்பதும், செலவு செய்வதும் குடும்ப அமைதியைக் கெடுக்கும்.
வாழ்க வளமுடன்!