Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 22 அக்டோபர், 2012

காணிக்கை




மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆன்மாவுக்குத் தேவைகளும், உணர்ச்சிகளும் இருப்பதாகக் கற்பித்து, இங்கே உலகில் கடவுளுக்கென்று கொடுக்கும் பொருட்களெல்லாம் சொர்க்கத்திற்குப் போன ஆன்மாக்களுக்குப் போய் கிடைப்பதாக பல காலம் பலராலும் கூறப்பட்டு, இந்நம்பிக்கையில் கடவுளுக்கு என்று உணவு அளிக்கத் திருவிழாக்களும், கடவுளுக்கென்று பலவகையான பொருட்காணிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

மனிதன் உழைத்து சம்பாதிக்கும் எப்பொருளும் அவனைப் போன்று மனித உருவில் உள்ளவர்களுக்குத் தக்க முறையில் உதவி வாழ்வுக்கு வளமளிப்பது அவசியம். மனிதன் கடவுளுக்கு என்று கொடுக்கின்ற எந்தப் பொருளானாலும் எங்கே போய்ச் சேருகிறது என்று கண்டுபிடித்துக் கொள்வது ஒன்றும் சிரமமல்ல. கடவுளுக்கு மனிதன் அதைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இடைத்தரகர்களாக உள்ளவர்களின் ஏமாற்றுச் செயல்கள் தாம்.
...

மனிதகுலத்தின் வளத்தை அழிக்கின்ற பல விசயங்களில் முக்கியமானவை கடவுளுக்கென்று கொடுக்கின்ற பொருட்களும், செய்கின்ற செயல்களுமாகும். இந்தப் பெரிய பொத்தல், இந்த விஞ்ஞான காலத்தில் சிந்தனை மிக்க அறிஞர்களால்தான் அடைக்கப் பட வேண்டும். இப்பொத்தல் அடைக்கப்பட்டு விடும் என்று உறுதியாகவும் நம்பலாம். ஏனெனில், அந்த அளவுக்கு அறிவு கல்வியினாலும், ஆராய்ச்சியினாலும், விஞ்ஞானத்தினாலும், இயற்கையாகவே உயர்ந்து கொண்டு வருகிறது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தம்பதியர் பயிற்சி

குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே குண்டலினி யோகப் பயிற்சியை ஏற்றுப் பழகுவதனால் வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம். பால் உணர்ச்சி வேட்பு இவற்றில் சமநிலை, அறுகுணச் சீரமைப்பு, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒத்தும் உதவியும் வாழ்தல் இவை அனைத்தையும் குண்டலினி யோகத்தால் பெறவும் காக்கவும் முடியும்.

பிறக்கும் குழந்தைகள் தரமுடையனவாக இருக்கும். பிறந்த குழந்தைகளை வளர்ப்பின் முறையறிந்து வளர்ப்பதால் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நலமளிப்பவர்களாக அவர்கள் சிறப்படைவார்கள். சுருங்கச்சொன்னால் குண்டலினி யோகம் பயிலும் ஒவ்வொருவரும் குடும்பத்திற்கும், ஊருக்கும், நாட்டிற்கும், உலக சமுதாயத்திற்கும் அறிவின் நலமளிக்கும் சுடராக, ஆன்மீக ஒளியைப் பரப்பும் நல்விளக்காகத் திகழ்வார்கள். யோகப் பயிற்சியின் மூலம் உடலையும் உயிரையும் அறிவையும் மேலான நிலையில் வைத்துக் கணவன் மனைவி மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ முடியும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

புதன், 10 அக்டோபர், 2012

மனதை செம்மை படுத்த வேதாத்திரி மகரிஷி கூறிய இரத்தின கருத்துக்கள் ...




வாழ்க வையகம்                                                                     வாழ்க வளமுடன்

 
* மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம். அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.

* அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது. குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.

* வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.

* கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும்.

* தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது. தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம். திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை. அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.

-அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி