Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 30 செப்டம்பர், 2019

வேதாத்திரிய மெய்விளக்கம் - 30-09-2019 உலக அமைதி நாள் 30-09-0034

வேதாத்திரிய மெய்விளக்கம் - 30-09-2019 உலக அமைதி நாள் 30-09-0034
அமைதியும் நிறைவும் பெற்றவன் தான் உண்மையான அமைதிக்கு*
வழிகாட்ட முடியும்.
மனிதனாக வந்த பிறகும் பேரமைதிக்கு உரிய ஆறாவது அறிவு
முதலிலேயே வளர்ச்சி பெறுவது இல்லை.
புலன் உணர்ச்சிகளிலேயே இச் சிறந்த நிலையான ஆறாவது அறிவு
முடக்கப் பெற்று இயற்கை வளங்களை உருமாற்றியும் நிலைமாற்றியும் அழகுபடுத்தியும் துய்க்கும் ஆற்றலாகச் செயல்படுகிறது.
மனித உருவின் நோக்கம் அறிவிற்கு எட்டாததாலும், புதிய புதிய பொருட்களை உற்பத்தி செய்தல் அனுபவித்தல் என்பதில் பெறும் உணர்ச்சி மயக்கத்தாலும், விளைவறியாது பல செயல்களைப் புரிந்து, அவை பழக்கப் பதிவுகளாகவும் எண்ணப் பதிவுகளாகவும் பரம்பரைக் குண அமைப்பாகவும், களங்கங்களை மனிதன் ஏற்படுத்திக் கொள்கிறான்.
மேலும் எந்த உணர்ச்சியையும் துய்க்கும்போது விழிப்பு நிலையின்றி
புலன் மயக்கில் இருப்பதால் அதே வித துய்ப்பில் ஆசை பெருகிக்கொண்டேயிருக்கும். இதனால் நிறைவு ஏற்படுவதில்லை.
இவ்வாறு, நிறைவுபெறாமை, பாவப் பதிவுகள், மனிதனாக வந்த நோக்கம் அறியாத மயக்கநிலை, இம்மூன்றும் மனித அறிவின் முதற்பகுதியில் உயிர்க் களங்கங்களாக அமைகின்றன.
துன்பங்களும் வாழ்க்கை சிக்கல்களும், சோர்வும் பெருகுகின்றன.
இங்குதான் மனிதன் சிந்திக்கிறான்.
இங்குதான் இயற்கைக்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பு சிறிது சிறிதாக விளங்குகிறது. விழிப்புணர்வு பெற்று உடலுக்கும் உயிருக்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பை உணர்கிறான்.
உடலை நன்கு நோயுராது பாதுகாக்கவும் மனதின் வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மன அமைதியினை பாதுக்காக்கவும் அக்கறை உண்டாகிறது. ஆற்றலும் பெருகுகிறது.
விழிப்பு நிலையில் உலக இன்பங்களைத் துய்த்து அறிவைப் பெருக்கி நிறைவு பெறுகிறான். பொருள் மயக்கத்திலிருந்து விடுபடுகிறான்.
இயற்கையோடு ஒத்து "தனக்கும் பிறர்க்கும் தற்காலத்துக்கும் பிற்காலத்துக்கும், உடலுக்கும், அறிவிற்கும் துன்பம் விளையாத
முறையிலும் அளவிலும் செயலாற்றி", பழிச் செயல்களை விளங்கிக் கொள்வதோடு மட்டுமின்றி முன்னம் அறியாமையால் அமைந்த
பழிச்செயல் பதிவுகளையும் மாற்றிக் கொள்கிறான்.
பொருள் மயக்கமும், பாவப் பதிவுகளும் போன பின் உயிரின் நிலையென்ன? தூய்மையடைந்து விட்டது என்பதுதான். பேரறிவு, ஒளிவிடத் தொடங்குகின்றது. இந்த அறிவின் ஒளியிலே தனது மூலமாகிய மெய்ப்பொருள் நிலையை உணர்ந்து கொள்கிறான்.
உணர உணர, உணர்ந்ததில் நிலைக்க நிலைக்க, அவனும் மெய்ப்பொருளாகவே விளங்குகிறான்.
"ஐயப்படாது அகத்தது உணர்வானைத் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற வள்ளுவப் பேரறிஞரின் விளக்கம் இத்தகைய பேரறிவின் அமைதி நிலையினைத்தான் விளக்குகிறது. அமைதியும் நிறைவும் பெற்றவன் தான் உண்மையான அமைதிக்கு வழிகாட்ட முடியும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

கர்மநோய்

நாள்பட்ட கர்மநோய்  என்று ஒன்று சொல்வார்கள்.

அதாவது இதுதான் வியாதி என்று தீர்மானமாகத் தெரிந்துகொண்டாலும், அதற்கு நிச்சயமாக இதுதான் மருந்து என்று கண்டுபிடித்துக்கொடுத்தாலும், அந்த வியாதி தீராது. அதுதான் கர்மநோய்.

நீண்டகாலமாக இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட , எவ்வளவு நாளாக இருந்து கொண்டு இருக்கக் கூடிய கர்ம நோயாக இருந்தாலும்கூட,  நீண்டகாலம், ஒருமாதம், இரண்டுமாதம், பலமாதங்கள், என்று தினந்தோறும் பல வேளை சாந்தியோகம் மட்டுமே செய்து வந்தால், மற்ற பத்திய நிமித்தங்களையும் கடைப் பிடித்துவரும் பட்சத்தில், அந்த நோய் மெல்லத் தீர்ந்து விடும்.

பைத்தியம் முதலிய மனநோய்கள் கூட சாந்தியோகமே செய்துவரும் அளவில் குறையும்.  காலத்தால் நீங்கும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

(இதை மனதில் வைத்து தேவையான இடத்தில் தேவையான அன்பர்களுக்கு பயன்பட வைப்போம். வாழ்க வளமுடன்)

வியாழன், 26 செப்டம்பர், 2019

வேதாத்திரிய மெய்விளக்கம் -நாள் 26-09-0034

Image may contain: one or more people, beard, outdoor and nature
மனிதன் எல்லாம் வல்லவன் எல்லாம் உள்ளவன் என்பதை உணர இயற்கையை உணர வேண்டும்!
நிலையாமையை நினைவிற்கொள் - பிறப்பு இறப்பு
நடுவே பூவுலக வாழ்வு; இதை மறக்கும்
நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை.
இந்த உலகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவர்களெல்லாம் இன்று இல்லை. இன்றைக்கு இருக்கக் கூடியவர்களெல்லாம் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் இருக்க மாட்டார்கள்.
அப்படி எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பின்னர்தான், இன்றைக்கு இருக்கக் கூடிய மக்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு மனதை விரித்துப் பார்த்தால் பிரிவினை என்பது இருக்காது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்; வாழ்கிறான்; முடிந்து போகிறான். முடிந்து போகும் நாள் அவனுக்குத் தெரியவில்லை.
ஜீவகாந்த சக்தியில் பதிந்து இருக்கிறது. அது எந்த முடிச்சில் (Code) இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் எவ்வளவோ காலம் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறான். அப்படிப் பார்த்தோமேயானால் கொண்டு வந்ததும் இல்லை. கொண்டு போகப் போவதும் இல்லை.
இப்போது உலகம் முழுவதும் ஒன்றுகூடி விட்டது. ஒவ்வொரு நாட்டிலேயும் உள்ள மக்களில் பலர் பிற நாடுகளிலேயும் வாழ்கிறார்கள்.
இந்தக் காலத்தில் நான் அந்த ஜாதி, இந்த ஜாதி, அந்த நாடு, இந்த நாடு என்று வேறுபடுத்திக் கொண்டு, பிணக்கு வைத்துக் கொண்டு மனிதன் வாழும்போது துன்பத்தைத் தவிர இன்பத்தை அடைய முடியாது.
மனித இனம் தன்னுடைய மூலம், முடிவு இவற்றின் பெருமையை உணர்ந்து கொண்டால், இவ்வளவு பெருமைக்கு உரிய உலகத்தில் பிறந்து விட்டதனால் "நானும் ஓர் உரிமையாளன். எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. எல்லா வசதிகளும் இருக்கின்றன" என்பது புரியும்.
நான் எப்படி வாழ வேண்டும்? என்று எண்ணிப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் இன்பங்களை அனுபவிக்க வேண்டிய அமைப்பு தான் இருக்கிறது. அதற்கு முரணில்லாமல், நான் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்குத் துன்பம் தராமல் வாழ வேண்டும்.
ஆனால், அதற்கு முரணாகச் செயல்பட்டு நாம் கெடுத்துக் கொள்கிறோம். ஒருவருக்கொருவர் தீங்கு செய்துதான் மனிதனாக வாழ வேண்டுமா?
இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் உலகத்தில் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் என்ற உணர்ச்சிகளோடு வாழக்கூடிய மனிதன் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி செம்மையாகத் தானும் வாழலாம். பிறரையும் வாழ வைக்கலாம்.
உண்மையில் என்னிடத்தில், சமுதாயத்தில், இயற்கையில் எவ்வளவு உயர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பயப்பட வேண்டியதே இல்லை. கவலைப்பட வேண்டியதே இல்லை. அது மாத்திரமன்று.
இன்னொருவரிடம் கையேந்த வேண்டியதில்லை. மனிதனிடம் மனிதன் கேட்டு வாங்குவதற்கோ, கையேந்துவதற்கோ தேவை இல்லை.
இயற்கையினுடைய அமைப்பு மனிதனை எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் உள்ளவனாகவும் வைத்து இருக்கிறது.
அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உள்ளதை உணர வேண்டும். இயற்கையை உணர வேண்டும்.
உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக இருக்கிறது
என்று விளக்கிக் காட்டுவது தான் அகத்தவப்பயிற்சி.
துன்பங்கட்கு மூலம்
பிறந்து வாழ்ந்து பின் இறந்துபோகும் மனிதர்க்குப்
பேருலக இன்பங்கள் அனைத்துமே பொது உடைமை.
மறந்து மதிகுறுகி, மண்மீது எல்லைகட்டி,
மனிதர்கள் போராடும் மயக்கமே துன்பங்கள்!
(ஞானக்களஞ்சியம் கவி: 1258)
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

புதன், 25 செப்டம்பர், 2019

வேதாத்திரிய மெய்விளக்கம் 25-09-0034

வேதாத்திரிய மெய்விளக்கம் 25-09-2019 உலக அமைதி நாள் 25-09-0034
Image may contain: 1 person, sitting


வாழ்த்து - "வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்"

மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தாலன்றி வாழ்த்தவே முடியாது,
அந்த அளவு நுண்ணிய இயக்கத்திற்கு மாறும்போது ஒரு வலுவு, ஒரு தெளிவு, அந்த அமைதி நிலை, அதை ஒட்டி நம்முடைய வியாபகம் விரிந்து பலரோடு ஊடுருவி நிறைந்து அந்த உயிர்க்கலப்பு ஏற்படக்கூடிய நிலை, இவை எல்லாம் அதிகமாகும்.
அந்த நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (interaction) ஏற்படுகின்றது; ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம்.
இரண்டு தடவை, நாலு தடவை செய்யச் செய்ய நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர் இயக்கம் வந்து விட்டதானால், அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக்கொண்டிருக்கும்,
அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும்; அந்த தொடர் அறுபடாது இருக்கும்.
அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும்.
அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் கூட நண்பர்களாக மாற்றிவிட முடியும்; அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்; எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி விட முடியும்; நல்லவர்களாக மாற்றிவிட முடியும்.
தவம் முடித்த பிறகு வாழ்த்துகிறோம். தவத்தில் இருக்கும்போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் Alpha Wave க்கு வந்து விடுகிறோம். அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (Subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்துவிடும். அந்த இடத்தோடு அங்கேயிருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம். "வாழ்க வளமுடன்" என்ற அந்த எண்ணத்திற்கு வலுவு அதிகம்.
உதாரணமாக ஒரு வில் இருக்கிறது அம்பு இருக்கிறது. அம்பு எய்வதற்கு ஓரளவு நாணைப் பின்னுக்கு இழுத்துவிடுவது ஒன்று, கடைசிவரைக்கும் இழுத்து அம்பு விடுவது என்பது ஒன்று.
எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்;
அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதைக் கொண்டு வருகிறோமோ அங்கேயிருந்து கொடுக்கக்கூடிய வாழ்த்துக்கு கூட வேகம் அதிகம், செயல்படும் வேகம் அதிகம்.
ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த நேரத்தில் நாம் சொல்லக்கூடிய சொல்லுக்கு, எண்ணக் கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம்; சீக்கிரமாகச் செயலுக்கும் வந்துவிடும்.
நமக்காக என்னென்ன வேண்டுமோ அதைச் செயல்படுத்துவதற்குச் சில நாட்களானாலும் சரி, பிறருக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதிக பயன் விளைவிக்கும்.
வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நலதொரு இனிய
நட்புறவை வளர்க்கிறது.
வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய நிலைக்கு
அமைதி நிலைக்கு வருகிறது. அதனால் மனதிற்கு
வலுவும் தெளிவும் ஏற்படுகிறது.
வாழ்த்து வீண் ஆகாது. "வாழ்க வளமுடன்"-
"வாழ்க வளமுடன்" என்று சொல்லச் சொல்ல
உடல், மனம் நன்றாக இருக்கும்.
வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான
திருமந்திரமாகும்.
தவமுறை அகவல் - வாழ்த்து
வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்!
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்!
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்!
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்!
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்!
வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி!
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்!
வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க!
வாழ்க அறநெறி! வாழ்க மெய்ஞானம்!
(ஞானக்களஞ்சியம் கவி: 1500 -(8) )
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

சனி, 21 செப்டம்பர், 2019

கரு தவம்!!

*நிலத்திலிருந்து முளை எழுந்தபோது முரசொன்றும் முழங்கவில்லை*

 *பழம் பழுத்து பக்குவமடைந்த போது ஊதுகொம்பின் ஒலியில்லையே....!!!*

 *ஒளிதரும் ஞாயிறும், நிலவும்  எழுந்தபோது வீரமுழக்கமில்லையே.......!!!*

 *ஆனால், மனிதன் மட்டும் எச்செயலை செய்தாலும்......!!!*

 *ஒன்று முழக்கமிடுகிறான்*

 *அல்லது முழக்கதை மற்றவரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான்.......!!!*

 *தான் என்னவோ உலகில் யாருமே, எதுவுமே  செய்யாததை செய்துவிட்டோம் என்றும்*

 *சாதித்து விட்டோம் என்றும் கூக்குரலிட்டு வீர முழக்கமிடுகிறான்*

 *அல்லது சித்து வேலை செய்வோரிடம் தஞ்சம் புகுகிறான்*

 *அன்றாடம் அவன் கண் முன்னே தாவரங்களும், இயற்கையும்*

 *இதைத் தானே மௌன நிலையில் செய்து கொண்டு என்பதையும் மறந்தே மயக்கமுற்று இருக்கிறான்*

 **என்று விலகுமோ இந்த மாயத் திரை........?!?*

 *கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று கடமை தவறாது பயன் ஆற்றும் போது சொல்லும், கருத்தும் உடைய மனிதன் மட்டும் ஏனோ...சுகங்கெட்டு சமூகத்தை மறக்க வேண்டும்.....???அல்லும் பகலும் ஆசையை அழிக்கவென்றே ஆசைதனை பேராசை ஆக்கிக் கொண்டு அல்லல்படும் அன்பர்களே சுருங்கச் சொல்வேன் சுய நிலையை அறிய கரு தவமே போதும்"*

 *தத்துவ ஞானி  வேதாத்திரி மகரிஷி*