Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

மனிதப் பிறவியின் மூன்று நோக்கங்கள்


மனிதப் பிறவியின் மூன்று நோக்கங்கள்

1. தன்னை உருவாக்கி வளர்த்த இயற்கை, பெற்றோர், சுற்றம், ஊர், உலகம் இவற்றிற்கு ஒருவன் பட்ட கடனைத் தன் உழைப்பால் ஈடு செய்ய வேண்டும்.

2. வினைப்பதிவுகளில் தீயவைகளை ஒழிக்க அறவழியில் செயலாற்றி வாழ்வை நடத்தி மாற்றியமைத்து தூய்மை செய்து கொள்வது.
...

3. அறிவை அறிந்து அதுவே பூரணப் பொருளான தெய்வம் என்றுணர்ந்து அப்பொருளின் இருப்பு, இயக்கம், விளைவுகள் அனைத்தும் உணர்ந்து எல்லா உயிர்களோடும், பொருட்களோடும், இனிமை காத்து வாழ்வில் பேரின்பம் காண்பது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

செவ்வாய், 20 நவம்பர், 2012

மனிதன் முழுமை பெற ஏழு விதிகள்




1. வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும் வாய்ப்புக்களையும் கணித்துக் கொள்ள வேண்டும்.
  3. இயற்கையின் ஒழுங்கமைப்பையும், அதன் ஆற்றலின் விளைவு நியதியையும் உணர்ந்து கொண்டும், மதித்தும் நடக்க வேண்டும்.

4. வாழ வேண்டிய முறைகளையும், ஆற்ற வேண்டிய செயல்களையும் ஒழுங்காகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.

5. இத்தகைய வாழ்விற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள உடல்வலிமையையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவற்றிற்கு முறையான உடற்பயிற்சியையும், உள்ளப்பயிற்சியையும், சிந்தனை ஆற்றலையும் பழகிக் கொள்ள வேண்டும்.

6. விழிப்போடும் விடாமுயற்சியோடும் எண்ணம், சொல், செயல் இவற்றைப் பயன் படுத்த வேண்டும்.

7. அவ்வப்போது ஏற்படும் தவறுகளை, தற்சோதனை, செயல்திருத்தம் என இரண்டு வழிகளிலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வியாழன், 8 நவம்பர், 2012

மனிதனுக்கு மட்டும் பாவ - புண்ணியம் ஏன்?

வினா: சுவாமிஜி, ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்கள் ஒன்றை ஒன்று கொன்று தின்கிறது. அதற்கு பாவ, புண்ணியம் இல்லை என்கிறீர்கள், ஆனால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு மட்டும் பாவ - புண்ணியம் ஏன்?

மகரிஷியின் விடை: உலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. சீவன்களில் கருணைமிக்க எந்த உயிர்களுக்கும் நன்மையே செய்கின்ற ஓர் அற்புதமான சீவன் ஓரறிவான தாவரங்களே.

இறைவனின் பரங்கருனையே பஞ்சபூதக் கூட்டான வித்தாகி, ஓரறிவுத் தாரவங்களாக உயிர்த்துள்ளது. அத்தாவரங்களே இரண்டறிவு முதல் ஆறறிவு வரையுள்ள சீவன்களுக்கு உணவாக வந்துள்ளது. தாவரங்கள் பிறவற்றிடம் இருந்து பறித்து உண்ணவேண்டிய அவசியமில்லை. பூமியில் இருந்து தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்கிறது.
...

இரண்டறிவில் இருந்து ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்களில் தாவர பட்சியான ஆடு, மாடு, மான், யானை போன்ற சில ஜீவன்களைத் தவிர மற்றவைகள் ஒன்றையொன்று கொன்று உணவாக்கிக் கொள்கிறது. அங்கு அதற்கு உணவு உற்பத்தி செய்யவோ, நாளைக்கு என்று சேமித்து வைக்கவோ தெரியாது. கிடைப்பதை அப்படியே உணவாக (Readymade Food) எடுத்துக் கொள்கிறது.

விலங்கினங்களிடையே பறித்து உண்ணல் என்பது அதன் இயற்கை சுபாவம். அவற்றிற்கு தனக்கு வேண்டிய உணவை தானே உற்பத்தி செய்து கொள்ள தெரியாது. அங்கு அதில் மனிதன் குற்றம் காண முடியாது. அதனால் ஐந்தறிவு வரை பாவ-புண்ணியம் என்பதில்லை.

உதாரணமாக கொசு நம்மைக் கடிக்கிறது. அதற்கு நாம் ஆறறிவு பெற்ற மனிதன் என்று தெரியாது. உணர்ந்து கொள்ளவும் முடியாது. "இரத்தமும், சதையும் நிறைந்த தன்பசிக்கான உணவு மலையே மனிதன்" என்று நினைத்துத் தனக்கு வேண்டியதைக் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் என்றே கடிக்கிறது.

ஐந்தறிவு விலங்கினங்களில் இருந்து வித்து எடுத்து வந்த மனிதன், தன் முழுமையை உணரும் ஆறாவது அறிவைப் பெற்ற பின்னும் பரிமாணத்தில் பெற்று வந்த விலங்கினப் பதிவாகிய 'பறித்து உண்ணல்' என்பதை விட முடியவில்லை. அங்கு தான் மூன்று விதமான குற்றங்களைச் செய்கிறான். அதுவே உலகின் அனைத்துக் குற்றங்களுக்கும் அடிப்படையாகிறது.

1 . உயிர்க்கொலை,
2 . உணவுக்காக அதன் உடலைத் திருடிக் கொள்ளுதல்,
3 . அதன் வாழும் உரிமையைப் பறித்தல்.

இந்த மூன்றிணைப்புக் குற்றமே இன்றும் மனித வாழ்வில் தொடர்கிறது.

ஒருவன் சிறிது பொருள் வைத்திருந்தால் மற்றவன் அதைப் பறிக்க நினைக்கின்றான். தன் சொல்லை மற்றவன் கேட்க வேண்டும் என்கிறான். இது வாழும் உரிமையைப் பறித்தலின் பரிமாண மாற்றமே. பொருள் பறிப்பது, அதிகார மோகம், புகழ் வேட்பு, பொறுக்க முடியாமை இவைகளால் மனிதர்களிடையே பஞ்சமகா பாவங்களும் ஏற்படுகிறது.

மனிதன் அறநெறியும் இறையுணர்வும் பெற்றாலே பாவம் போக்கி உயிர்களிடம் அன்பும் கருனையுமாக வாழ முடியும். இவ்விலங்கினப் பதிவுகளை மாற்றி மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம், கடமை, ஈகை என்ற அறநெறியும், அறிவை உயர்த்தி வாழ்வின் நோக்கம் அறிந்து வாழ இறையுணர்வும் வேண்டும்.