Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற உடலை உடையவர்கள் தான் அமைதியாக மன மகிழ்ச்சியாக வாழ முடியும். அவர்களுக்கு அறிவு திறம்பட இயங்கும். ஆன்மீக உயர்வு பெற்று இயற்கை இன்பங்களையும் துயித்து மகிழ முடியும். எனவே ஒவ்வொருவரும் நோயற்று வாழ வழி கண்டு ஒழுக வேண்டும்.

எந்த விதத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதைச் சரிபடுத்தி உடலைச சரி செய்து கொள்வதற்குரிய ஆற்றல் ஒவ்வொருவருக்கும் இயற்கையிலேயே ஓரள...வு உள்ளது. இந்த அளவை மீறும் போது தான் அது உடல்நலத்தைப் பாதிக்கிறது.

அவ்வாறு பாதிப்பு ஏற்படுகின்ற போது மனிதன் தன்னுடைய முயற்சியால் ---உடல் பயிற்சி , உளப்பயிற்சி , மனத்தூய்மை , ஒழுங்கான உணவு முறை , அளவான உழைப்பு ,ஒய்வு இவற்றுடன் கூடிய வாழ்க்கையானது நோய்கள் இல்லாமல் உடல் நலத்துடன் வாழ உதவும் .


--அருள் தந்தை

சனி, 30 ஆகஸ்ட், 2014

மனதை அறிய

மனிதனின் அறிவாட்சித் தரம் என்பது அவனிடம் உள்ள மனதின் தன்மையையும் , குணத்தையும் பொறுத்தது மனமே தன்னிடம் உள்ள அனுபவங்களைத் தீர்மானித்து, அதன் குணத்தைப் பெறுகிறது. மனதை அறியவும் , மனம் என்ற கருவி மூலம் தான் முடியும் .

வேறு எந்தக் கருவியின் மூலமும் அதை அளவிட முடியாது .மனதை அளவிட மனதை உள்நோக்கிச் செலுத்தி கவனித்தால் மனதில் தோன்றும் எண்ணங்களையும் , அவை செயல்படும் விதத்தையும், அதன் மூலத்தையும் அறியலாம். மனதின் உள்நோக்கிய பயணமே அகத்தவமாகும்.

--அருள் தந்தை

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

ஒரு மனிதனின் எண்ணம் உலகையே மாற்றும்

தீய எண்ணங்களின் வெளிப்பாடு தான் இன்று நாம் காணும் இயற்கைப் பேரழிவுகள். அதாவது புயல், வெள்ளம் என உருவெடுத்து எல்லாருக்கும் துன்பமாக மலர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இயற்கை தான் எண்ணமாக வந்திருக்கிறது. எண்ணமும் இயற்கையின் ஒரு கூறு தான்.

நமது எண்ணத்தை ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும். மனிதனாகவே இருந்து எண்ண வேண்டும், மனிதத்தன்மை என்பதே தெய்வத்தன்மை. அந்த நில...ையில் இருந்து எண்ணத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும் என்று எண்ணிக் கொண்டால் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களில் இருந்து வரும் அலை நல்ல குணங்களையும், நல்ல எண்ணங்களையும் , நல்ல பதிவுகளையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் . எனவே எண்ணங்களை இயற்கைக்கு ஒத்ததாக இருக்குமாறு எண்ண பழகிக் கொள்ள வேண்டும்

நல்ல எண்ணத்தால் உலகையே மாற்றியமைத்து விடலாம்.

"இயற்கை அறிந்து ஒத்து எண்ணுபவர் எண்ணம்
எப்போதும் எவ்விடத்தும் கவலையாய் மாறாது."

--அருள் தந்தை

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

"Fraction demands and Totality Supplies".



 "மனிதன் நல்ல எண்ணத்தோடு, முயற்சியோடு, ஒரு அடி எடுத்து வைத்தாய் இறைவன் பத்து அடி எடுத்து வைப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் மனதை நாடினால் போதும். "Fraction demands and Totality Supplies".

ஏனென்றால் அங்கு தான் இருப்பு இருக்கிறது. நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டேன் என்ற நிலைக்கு வந்தவர் நல்ல எண்ணம், மனத்தூய்மை, கொண்ட ஒருவர் எல்லா...ம் வல்ல இறைவன் என்னைக் கவனித்துக் கொள்வான் என்றிருந்தால் அவரது தேவையை நிறைவற்ற உதவிகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வந்து சேரும்."

--அருள் தந்தை

புதன், 27 ஆகஸ்ட், 2014

தீமை செய்தவரையும் மனதார வாழ்த்துவோம் :

நாம் வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில் இருந்து கொண்டு வாழ்த்தவேண்டும். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்து விடலாம்.
...
நமக்கு தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டும் என்றால் "அவர் அறியாமையினாலே தான் அவ்வாறு செய்தார், நம்முடைய கர்மச் சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது. எனவே அவர் செய்தார் , அவருக்கு உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பதும் எல்லாம்வல்ல முழு முதற் பொருளே" .

எனவே அவரை மானதார வாழ்த்தி "எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்" என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து இயல்பாகி விட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்

--அருள் தந்தை

வாழ்க வளமுடன்

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மனநிறைவுக்கு இறையுணர்வும் ,அறநெறியும் துணை

பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும் , பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கான வழிகளாகும். பிறரிடம் குறைபாட்டையே எடுத்து அலசிப்பார்ப்பதை விடுத்து, நிறைவையே காணக் கூடிய பயிற்சியைக் கொள்ள வேண்டும்.

எல்லாம்வல்ல இறைவன் அருளால் அமைத்தது எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆயிரம் நலன்கள் . இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மகிழலாமே! "ஏதேனும் ஒரு குறைபாட்டைக் கற்பித்துக் கொண்டு,... துன்பப்படுவதை விட்டு விட வேண்டும்."

இந்த முறையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும் குறைகளைக் களைந்து மனநிறைவு கொண்டு வாழலாம். இதற்கு இறையுணர்வும் , அறநெறியும் துணை நிற்கின்றன.

ஆன்மீக வாழ்வே தன்னையும் தூய்மை செய்து கொண்டு, பிறர்க்கும் தூய்மை அளிக்கவல்லது. இயற்கையின் பேராற்றல் எங்கும் நிறைந்த தன்மை எல்லாவற்றயும் அறியும் பேருணர்வு, அழிவில்லாத் தன்மை, நியதி வழுவாத் தன்மை, பெருங்கருணையை உணர்ந்து கொள்ளலாம்.

எல்லாமாகி நிற்பது இறைநிலையே என்ற உணர்வு எட்டும் . அந்த உணர்வு நீங்காத நிலையில் காணும் காட்சிகளெல்லாம் பரம்பொருள் . சொரூபம் அன்றி வேறில்லை என்ற உண்மை அறிவுக்கு எட்டும்.

எப்போது யார்யாரிடம் குறை காண முடியும்? குறை காண்பதற்கு ஏதுமில்லை என்பது விளங்கும். வானறிந்து உயிர் விளங்கி வரைகடந்து நிற்கும் நிலையில் வாழ்வாங்கு வாழவும் ,பிறரையும் வாழவைக்கவும் தக்க அறிவும் ஆற்றலும் உண்டாகிவிடும். இத்தகைய நிலை தானாக மலர்ந்து மன அமைதி கிடைத்து விடும்.

--அருள் தந்தை

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

குறை காணாதிருப்போம்

" மனிதப்பிறவியின் நோக்கமும் ,கடமையும் உயர்ந்தவை. இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் . குறைகூறுவோரையும் வாழ்த்தி வர வர அவர் தானே உணர்ந்து திருந்த வழி காணலாம். இதற்குப் பொறுமையும் தன்னம்பிக்கையும் தாம் வேண்டும். பிறரை குறை கூறி தான் உயர வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றவர்களது உள்ளத்தில் இது வரை அவர்கள் பெற்றிருந்த உயர்ந்த நிலையிலிருந்து கீழே தள்ளப்படுகிறார்கள் .

பிறரிடம் குறை காணும் பழக்கத்தை விட்டு விட்டு பிறரிடம் உள்ள நிறைகளைக் காண வேண்டும்.மனிதனுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கைக் காலமோ மிகவும் குறுகியது. இக்குறுகிய கால வாழ்வில், பிறந்தோர் எல்லாம் வாழ வேண்டும். அதுவும் குறைகளைப் போக்கி நிறைவோடு வாழ வேண்டும்" .

"குற்றமே காணும் குறையுடையோர் வாழ்வினிலே
பெரபயன், சினம்வஞ்சம் பொறாமை வருத்தம் இவற்றால் முற்றும் இழந்தார் வாழ்வின் இன்பமும்; பிறவிப் பயன்
நற்றவத்தோர் வழிநின்று நல்லனவெலாம் ரசிப்போம் ".

--அருள் தந்தை

வாழ்க வளமுடன்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

இன்ப ஊற்று

என்னிடம் ஒரு முழுமையான ஆற்றலோடு எல்லாம் வல்ல இறைவன் என்னைப் படைத்திருக்கிறான் . பக்திமானாக இருந்தாலும், ஞானவானாக இருந்தாலும் அவனுடைய பிரதியாகவே , அவனுடைய பகுதியாகவே தான் இருக்கிறேன் . பேராற்றல் என்னிடம் அடங்கி இருக்கிறது . இதைக் கொண்டு என்னென்ன நலம் செய்து கொள்ள வேண்டுமோ அதை நானே விளைவித்துக் கொள்வேன் என்று எண்ணிப் பாருங்கள் .

பிறருக்கு உதவி தேவையான இடத்திலே அவர்களுக்கு உத...வி செய்து கடமை உணர்வோடு நின்று பாருங்கள் பெரிய சக்தி வாய்ந்த ஒரு ஆற்றல் உங்களிடம் பெருகி விடும். தினந்தோறும் அதைப் பயன் படுத்துங்கள் .

உங்கள் அதிகாரத்தின் கீழ் ஆயிரமாயிரம் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கக் கூடும். நீங்கள் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று எண்ணிவிட்டீர்களேயானால் , அவர்களின் தேவைகள் உங்களுக்கு தெரிய தொடங்கிவிடும். அதைச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால் செய்யச்செய்ய இன்ப ஊற்றுத் தான் மனதிலே வளரும். உங்களை அவர்கள் தெய்வத்தோடு தெய்வமாகவே நினைக்கும் ஒரு நல்ல காட்சி மனதில் ஏற்படும் .
உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்
நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்".
.

"நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம், இந்த உடல்
சமுதாயத்தின் சொத்து, அதனைக் கெடுப்பதற்கு
நமக்கு அதிகாரம் இல்லை".
.

இறையுணர்வில் எழும் பேரின்பம்:

"இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே
ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன்;
நன்மை தரும் நவ கோள்கள் நட்சத்திரக் கூட்டம்
நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்;
உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்;
தன்மயமாய்த் தான் அதுவாய்த் தவறிடாதியக்கும் உன்
தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே".


-அருள் தந்தை

சனி, 23 ஆகஸ்ட், 2014

பொருள்துறை அவசியமா ?

மகரிஷி பதில் :

மனிதனாகப் பிறந்த பயனை அடைவதற்குப் பொருள்வளமும் அதற்கேற்ற முயற்சியும் செயல்களும் அவசியமே . அருள்துறைக்காக பொருள் துறையில் காலத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லையென்று பலர் நினைக்கின்றார்கள் ....

வேறு சிலர் அருள் துறையில் தான் இறைவன் அருள் கிடைக்கும். பேரானந்த வாழ்வு கிட்டும். அதனால் பொருள் துறையை ஒதுக்கிவிட்டு அருட்துறையிலேயே முழு நேரமும் முயற்சி செய்ய வேண்டும்.

அருள் வேண்டுபவர்கள் அதற்காக தவம் அறம் முதலியவற்றில் முழுமையாக ஈடுபடுவதற்கு பொருள் துறையில் இருந்து ஒதுங்கிவிடல் வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பது தவறு.

இன்பம் , துன்பம் , அமைதி, பேரின்பம் எனும் அனுபவங்களைத் துய்த்து வாழும் மனிதனுக்குப் பொருளும் வேண்டும் ,அருளும் வேண்டும் .
ஒன்றிலிருந்து மற்றொன்று இல்லாவிட்டால் வாழ்வு நிறைவு பெறாது .

அறவழியில் பொருளீட்டுவதே பொருள் செழிப்புக்கு வழியாகும்.ஈட்டும் போதே , செலவாகின்ற போதே, செலவு போக மீதமுள்ள பொருளில், பிறர் நலனுக்காக ஒரு சதவீதம் ஒதுக்கி செலவு செய்து பழகிக் கொள்ள வேண்டும்.

எஞ்சிய பொருளை நல்ல முறையில் தேவையுள்ளவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் .இதனால் எப்போதும் மனம் பளுவற்றதாகவும் ,இனிமையாகவும் , அமைதியாகவும் இருக்கும்.

அறவழியில் பொருளீட்டுபவர்களுடைய பொருள் விட்டுச் சென்றாலும் அப்பொருட்கள் பலருக்கும் நலமாளிக்கும் வகையில் செலவாகும்.
நிரந்தரமாகக் கிடைப்பதோ இன்பம் மட்டுமே அறவழியில் ஈட்டி பொருள் சேர்த்து வைப்பவரிடம் அவர் சேர்த்து வைத்து இருக்கின்ற பொருள் தனக்குப் பின்னால் நல்ல வழியில் சமுதாயத்திற்கு பயன்பட வழி வகுத்து விடுகிறார் .

பொருள் பற்று என்ற நிலையில் இருந்து தன்னைத் தானே அவர் விடுவித்துக் கொள்கிறார் . அந்த அளவுக்கு அருள் பற்று மலர்ந்து விடும்.
மனம் இனிமையான அமைதியில் திளைக்கிறது . மரணம் நெருங்க நெருங்க அந்த இன்ப வெள்ளத்திலேயே மிதந்து கொண்டு இறைநிலையோடு கலந்து விடுகிறார்.

அறநெறி மறந்து பொருள் சேர்த்தவர் மரணம் நெருங்குகின்ற போது அப்பொருளை எண்ணி வருந்துகின்றனர் . அறிவில் இருள் சூழ்கிறது மரணம் நெருங்க நெருங்க நிமிடந்தோறும் அச்சப்படுவர். இந்த அச்சத்தில் அமைதியற்ற மரணம் அடைவர் .


-----அருள் தந்தை

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

விளைவிலே தோற்றமாக வருவது இறைநிலையே

இறைநிலையே எல்லா இடத்திலேயும் , எந்தச் செயகளிலேயும் அடங்கி மறைமுகமாக இருந்து கொண்டு , செயலுக்குப் பிறகு விளைவு, செயலிலிருந்து விளைவாக வருகிறது என்பதை தெரிந்து கொள்ளும் போது . இறைநிலையை எந்த நேரத்திலும் மறக்க முடியாது.

 "மறைபொருளாக " புலன்களுக்கு எட்டாமல் எங்கும் எதிலும் ஊடுருவி நிறைந்திருக்கும் இறைநிலை, மனிதன் செய்யும் செயல்களின் செயலின் விளைவாகப் புலன்களுக்கு எட்டக் கூடிய நிலையில் வெளிப்பட்டு "விளைவாகக் " காட்சியளிக்கிறது.


மனிதன் ஆற்றும் செயல்கள் அவனது எல்லை கட்டிய அறிவின் ஆட்சிக்கு உட்பட்டவை. ஆனால் செயலுக்கு விளைவை தரக்கூடிய இறைநிலையோ எல்லையற்ற ஆற்றலுடையது. எந்தச் செயலும் இன்ப துன்ப விளைவுகளைத்தரும் என்ற இயற்கை நியதியை மறுக்க முடியாது . மறக்கவும் கூடாது .


இறைநிலையும் தானும் ஒன்றாக இருக்கக் கூடிய உண்மை நிலையை அறியாத முன்னம் செய்த தவறுகள் துன்பங்களை கொடுத்தன . ஆனால் இப்போது செயல் விளைவு நீதியை உணர்ந்த நிலையில் இறைநிலையே தானாகவும் இருக்கிறது என்ற விரிந்த நிலையிலே இனித் தவறுக்கு இடமில்லை. தவறுகளும் எழா .

-----அருள்தந்தை

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

மனிதன்

இறைநிலையின் பின்ன வடிவமே மனிதன். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை உடலாலோ, மனதாலோ வருந்தச் செய்வது இறைநிளைக்கே செய்கின்ற பழிச்செயலாகும்.
ஒருவர் எத்தகைய துன்பத்தைப் பிறருக்கு செய்தாலும் இறையாற்றலின் இருக்க ஆற்றலால் அத்துன்பம் தன்னிடமே திரும்பி வரும் என்பதை உணர்ந்து பிறர் உடலுக்கும் , மனதுக்கும் துன்பம் கொடுக்காமலும் . துன்பப்படும் போது உதவியும் வாழ்வோம் .

---அருள் தந்தை

புதன், 20 ஆகஸ்ட், 2014

மனம், ஆன்மா, பரம்

"அறநெறியில் பிறழாது வாழ்ந்து கொண்டே அறிவறிந்த பெரியோர்கள் மூலம் தனது அறிவின் நிலையையும், தோற்றமாகக் காணும் பிரபஞ்ச இயக்க விதிகளை பற்றி அறியவும், அவற்றிற்கு மூலமான மெய்ப்பொருள் நிலையை உணர்ந்து விளங்கிக் கொள்ளவும் ஏற்ற அ...கநோக்குப் ( Kundalini Yoga) பயிற்சியில் ஈடுபட்டுத் தன்னைப் பற்றியும், இயற்கை விதியைப் பற்றியும், சமுதாய அமைப்பைப் பற்றியும் அறிந்து கொள்வது "தவம்" அல்லது "யோகம்" எனப்படும். யோகம் (Meditation) என்பது அகநோக்குப் பயிற்சியாகும். இது இரண்டு கட்டங்களையுடையது.

1) மனதைப் புலன்களிலிருந்து விடுவித்து ஆன்மாவில் லயப்படுத்தல் முதற்கட்டம்,

2) ஆன்மாவைப் பரத்தில் லயப்படுத்தல் இரண்டாவது கட்டம்.

இந்தப் (Kundalini Yoga) பயிற்சியினால் மனம், ஆன்மா, பரம் என்னும் மூன்று மறை பொருட்களின் நிலைகளும் அவற்றின் சிறப்புகளும் குருவின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பயிலும் குண்டலினி யோக சாதகனுக்கு உள்ளுணர்வாக விளக்கமாகும்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மனிதன் நான்கு விதக் குறைபாடுகளால் அமைதியிழந்து அல்லலுருகிறான், துன்பமடைகின்றான்

அவையாவன:-
1) கடவுளைத் தேடிகொண்டேயிருந்தும் காண முடியாத குறை.
2) வறுமை என்னும் ப...ற்றாக்குறை.
3) விளைவை அறியாமலோ, விளைவை அறிந்தும் அதை அலட்சியம் செய்தோ அவமதித்தோ செயலாற்றி அதன் பயனாகத் துன்பம் அனுபவிக்கும் குறை.
4) மனிதன் சிறப்பறியாமல் பிறர்மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், தான் துன்புற்றும் அல்லலுறும் குறை.

இந்த நான்கு குறைபாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்துவிட்டன. வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்களாகி அவற்றை எளிதில் தீர்த்து விடுதலை பெறமுடியாமல் - வழி காணாமல் மனிதன் தவிக்கிறான். வாழ்வின் நலமிழந்து தான் வருந்தியும் - பிறரை வருத்தியும் வாழ்கிறான். தெரிந்தோ தெரியாமலோ இக்குறைகளிலிருந்து விடுதலை பெற மனிதன் முயல்கிறான். குறை நீங்கி முழுமை பெற வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவரிடத்தும் ததும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப சிந்திக்கிறான்; முயற்சி செய்கிறான்; உணர்ந்த அளவிலே செயல்களில் இறங்கி அதன்படி விளைவுகளைக் காண்கின்றான்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

Understanding the universe


Understanding the universe is a must for all the researchers . To understand it as a whole in a single visualization can be done through the realisation of the below points .
1. Space the unexplainable primordial state , eternal , all pervasive . This is the first state...
2. The space due it's own self compressive force (due to its enormous gravity ) forms the primary energy particle . This is the second state
3. The same space due to its omnipresence and gravity it compresses the primary energy particle to generate secondary shadow waves called magnetism . This is third state
4. Magnetism functions and transforms in the five elements ( primary energy particle, air, fire, water, solids) as pressure, sound, light , tastes, smell and mind

On viewing all these in one elevates our own understanding of this entire universe


- Vethathiri Maharishi

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

செயல்விளைவு தத்துவம்



 வாழ்க வையகம். உலகம் முழுவதும் பக்தி வழியில் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களிடம் உள்ள ஆழமான தெய்வ நம்பிக்கை சில சமயம் முரண்பாடான விளைவுகளைத் தருவதை அறிகிறோம். அது என்னவெனில், எல்லாம் வல்ல தெய்வத்தை நான் வணங்குகிறேன், ஆண்டவனே! எனக்கு இன்னது வேண்டும், அ...தை நீ கொடு என்று வேண்டிக் கொள்வது பழக்கமாக உள்ளது. அனைவரும் அவ்வாறு வேண்டி அவற்றை பெற்றார்களா? அத்தகைய வேண்டுதல் மூலம் தேவையான பொருட்கள் கிடைத்து மனிதகுலம் நிறைவு பெற முடியுமா? இறைநீதி என்பது மனிதன் கேட்டு இறைநிலை வழங்குவதில்லை. மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் அதற்குத் தக்க விளைவுகளைத் தவறாமல் பெற ஏற்ற அமைப்புதான் ”செயல் விளைவு தத்துவம்.”

கடவுளை வேண்டிக் கொண்டு, விளைவுகளுக்குக் காத்துக் கொண்டிருப்பதை விட, என்ன செயல் செய்தால் அந்த விளைவு எனக்குக் கிடைக்கும் என்று சிந்திக்கவும், பயனடையவும் தக்க ஒரு வழியே செயல் விளைவு நீதியாகும். எந்தச் செயல் செய்தாலும் அதற்குத் தக்க விளைவு உண்டாகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை அனுபவமாக உள்ளது. இந்த அனுபவங்களைக் கொண்டும், முன்னோர்கள் எழுதியுள்ள நூல்களைக் கொண்டும் செயல் விளைவு தத்துவத்தை நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். ஏமாற்றமில்லாமல் பயன் தரக் கூடியதுதான் செயல் விளைவு நீதி.

“ஈசனே தானாக உணர்ந்த போதும்
எழும் பசியை உணவால்தான் போக்க வேண்டும்”

மனிதன் இன்பத்தை நாடுகிறான். வாழ்க்கையில் இலாபத்தை நாடுகிறான். இவற்றிற்காக கடவுளை வேண்டுவதை விட அதற்குரிய செயல்களைக் கண்டுபிடித்து முறைப்படி செய்து பயனடைவதுதான் ஏமாற்றமில்லாத உறுதியான வழிமுறையாகும்.

பொதுவாக பாவம், புண்ணியம் என்ற இரண்டு வார்த்தைகளை மனதில் கொண்டு புண்ணியத்தைத் தேடிக் கொண்டால் எல்லா வளங்களும் கிட்டுமென்பது, அது உண்மையே ஆனாலும், பாவம் எது, புண்ணியம் எது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைப் பற்றியும் சிறிது சிந்திப்போம்.

பாப புண்ணியம்

“எண்ணம், சொல், செயல் என்ற மூன்றினாலும்
எவர்க்கெனினும் தனக்கெனினும் இன்றோ பின்னோ
மண்ணுலகில் உணர்ச்சிக்கோ கற்பனைக்கோ
மாசுஎனும் துன்பம் எழா வகையினோடும்
உண்மையிலே இன்பத்தை விளைத்துக் கொண்டே
உலக இயல்போடு ஒட்டிவாழும் செய்கை
புண்ணியமாம், இதற்கு முரணான வெல்லாம்
புத்தி மிக்கோர் பாபமென விளங்கிக்கொள்வார்.”

எண்ணம், சொல், செயல் இவை மூன்றாலும் எவருக்கோ தனக்கோ, இன்றோ பின்னோ, உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தருமானால் அது, அந்தச் செயல், பாவம் என்றும், இருக்கும் துன்பத்தை நீக்கி இன்பம் அளிக்குமானால் அது புண்ணியம் என்றும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல விளைவுகளைத் தரும் செயல்களை நமது வாழ்வில் தேர்ந்தெடுத்துக் கொள்வது சிரமமில்லை.

இதுவரையில் நாம் வாழ்ந்துகண்ட அனுபவங்களை வைத்துக் கொண்டே, விளைவுகளைக் கொண்டே, எந்த எந்தச் செயல் நல்லது, செய்யத்தக்கது, எந்தச் செயல் தீயது, தவிர்க்க வேண்டியது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இந்த அளவுக்குச் சிந்தனை ஆற்றல் வளராதவர்களுக்கு மன உறுதியும், செயலில் பிடிப்பும் ஏற்படுவற்காக நம்பிக்கை வழியில் தெய்வத்தை வேண்டுதல் என்ற பயிற்சியும், பழக்கமும் ஏற்பட்டது.

பழக்கம்தான் உறுதி பெறும்பொழுது பண்பாடாக மாறுகிறது. பண்பாடுதான் மனிதனை தவறாது வழிநடக்கச் செய்யும் ஒரு பாதுகாப்பு. எனவே, இக்காலத்தில் விஞ்ஞான அறிவு மிகுந்து வரும்பொழுது, கல்வியின் வளர்ச்சிக்குப் பலப் பல வாய்ப்புகள் அமைந்திருக்கும்பொழுது, அறிஞர்கள் முயன்று செயல் விளைவு தத்துவத்தை மக்களிடம் பரவ விட்டு, வாழ்க்கைப் பண்பாட்டையே உயர்த்திவிடலாம். கடவுளை வேண்டுதல் என்ற பழக்கத்தில் நின்று அதனால் பயன்காணாது சோர்வடையும் மக்களுக்கு விஞ்ஞான பூர்வமான செயல் விளைவு தத்துவத்தை இன்று விரிவாக போதித்து, மனித இனப் பண்பாட்டை உயர்த்த வேண்டியது இன்றுள்ள பேரறிஞர்கள் கடமையாகும்.

செயல் விளைவு தத்துவத்துக்குச் சான்றுகளை எடுத்துக் கூறுவதற்கு அதிக சிரமமே இல்லை. ஒவ்வொருவர் வாழ்விலும்,சமுதாயத்திலும், உலக அரங்கிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டே துல்லியமாக செயல்விளைவு தத்துவத்தை நாமும் நன்கு உணரலாம்; மக்களுக்கும் உணர்த்தலாம்; செயல் படுத்தி நலம் காணச் செய்யலாம்.

வாழ்க்கை நல போதகர்கள் இக்காலத்தில் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் கல்வி திட்டத்தில் செயல் விளைவு தத்துவத்தை விளக்கும் ஒரு முறையை அமுல்படுத்த வேண்டியது இக்காலத்தில் ஒரு இன்றியமையாத தேவை. சிந்தனையாற்றல் மிகுந்தவர்களுக்கும், சமுதாய நல நாட்டமுள்ள தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கும், பணிவோடு எனது கருத்தை அளிக்கிறேன். அறிஞர் பெருமக்கள் சிந்தனை செய்து, இக்கருத்துக்குப் படிகட்டியும், வடிகட்டியும் மக்கள் குல மேன்மைக்கு வழிவகுக்க வேண்டுமென்று உலக நலம் வேண்டி அறிவுத் தொண்டாற்றி வரும் அறிஞர் பெருமக்களை வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வையகம்!


நிறைவுரை
...
நண்பர்களே! அறிஞர் பெருமக்களே! இறைநிலையின் தன்மாற்ற சிறப்புகளை ஒரு சரித்திரமாக்கி, சுருக்கமாக எழுதி இந்த நூலை மனித குலத்துக்கு அர்பணித்திருக்கிறேன். இந்த நூலில் கண்ட உண்மைகளைப் பற்றி சிந்திக்கும் போது சில அறிஞர்களுக்கு என்னைச் சந்தித்து, சிலபல சந்தேகங்களுக்கு விடை காண வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

அத்தகைய வரிகளை எனக்குத் தெரிவித்துவிட்டு, நாளும், நேரமும் ஒதுக்கிக் கொண்டு, என்னைச் சந்தித்து உரையாடி நிறைவு பெறலாம். மிகப் பொறுமையோடு இந்த ஆழ்ந்த கருத்துடைய ஒரு தத்துவத்தை நீங்கள் படித்திருப்பதற்கு எனது மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும் உரியவை ஆகும்.இந்த நூலைத் தொடர்ந்து உங்கள் தொண்டு உலகுக்கு ஞான ஒளிபரப்புவதாக அமையட்டும். உங்கள் சிறப்பான கருத்தையும்,முடிவையும் எனக்குத் தெரிவித்து உங்கள் கடமையைச் செய்தால் களங்கங்கள் கரைந்த உண்மைகள் உலகுக்கு எளிதில் பரவும்
.
(1) இறைநிலை விளக்கம், (2) காந்த ஆற்றலின் விளக்கம், (3) அவ்வாற்றல் பாய்மப் பொருளாகி பிரபஞ்சக் களத்தில் நிறைந்து உருவாகும் விந்தைகள் அனைத்தும் மனித மனத்துக்கு மிகவும் உற்சாகம் தருவனவாகும். மனிதன் எப்பொழுதுமே வாழ்க்கைப் பொருட்கள், அதனால் ஏற்படும் இன்ப துன்ப உணர்வுகள் என்ற வரையில் அறிவை எல்லைக் கட்டிக் கொண்டு ஒரு மேலான உண்மையை, இறைநிலையின் திருவிளையாடல்களை மனம் விரித்து காண முடியாமல், மயக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கிறான். அத்தகைய மயக்கம் இந்த நூலின் மூலம் எளிதாகத் தெளிந்து விடும் என்பது உண்மை. “எனக்கு என்ன மயக்கம் இருக்கிறது?” என்று எண்ணலாம்; ஒரு குறிப்பு கொடுக்கிறேன்; அதன் மூலம் அந்த மயக்கம் நீங்கி, அதற்குரிய தெளிவும் யாருக்கு என்றாலும் வந்துவிடும்.

நாம் எங்கே வாழ்கிறோம்? உலகின் மீது, இந்த உலகமோ மணிக்கு 1000 மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல. சூரியனை 9 கோடி மைலுக்கு அப்பால் விலகி நின்று, ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சுற்று முடித்துக் கொண்டிருக்கிறது. என்ன விரைவிலே இந்த உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது? சூரியனைக் கொண்டு, அதன் சுற்றளைவைக் கொண்டு நிலவுலகின் ஓட்ட விரைவைக் கணக்குத் தெரிந்தவர்கள் சுலபமாக கணித்துக் கொண்டு மகிழலாம்.

அத்தகைய கணிப்பில் நாம் காண்பதென்ன? நாம் இருந்து கொண்டு வாழும் உலகம், தன்னைத் தானே மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டே, சூரியனை ஒரு நாளைக்கு பதினைந்து லட்சத்து ஐம்பதாயிரம் மைல் விரவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. நாம் அதை விட்டு விலகியா நிற்கிறோம்? இந்த பூமியின் சுழல் வேகத்தில் நாமும் பற்றிக் கொண்டுதான் சுழலுகிறோம், ஓடுகிறோம். என்றாகிலும் இந்த உண்மையை நினைத்துப் பார்த்ததுண்டா?

இதுபோன்று நம் உடலில் நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கின்றனவே, அது எவ்வாறும் யாரால் நடைபெறுகிறது என்று சிந்தித்து பார்த்தோமா? ஆனால், உண்மையை அறியும்பொழுது எல்லையில்லா மகிழ்ச்சியால் உள்ளம் பூரித்து, இறைநிலையின் பேராற்றலை உணர்ந்து மகிழ்கிறோம். அது மட்டுமல்ல அந்தப் பேராற்றலின் நுண்துகள்கள்தானே பிரபஞ்சப் பேராற்றலின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அடிப்படையாகும்.

இத்தகைய உண்மைகளை உணர்ந்து அறிவின் தெளிவு பெறும்பொழுது, அடையும் அனுபவம்தான் “பேரின்பம்” என்ற பெரும்பயனாகும். இந்த இன்பம் எல்லோர் உள்ளத்திலும் பொங்கட்டும். அதிலிருந்து எழும் மகிழ்ச்சி அலைகள் உலக மக்கள் அனைவரையும், உள்ளத் தூய்மையும் செயலில் நேர்மையும் பெற வைக்கட்டும். எல்லோரும் இனிது வாழ்க. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

- வேதாத்திரி

சனி, 16 ஆகஸ்ட், 2014

மனிதர்களைப் பிரிக்கும் குழு உணர்வுகள்


வாழ்க்கையில் அனுபோக அனுபவங்களால் அறிவிலும், உடல் இயக்கத்திலும், செயல்களிலும் அறிவால் உயர்ந்து வரும் மனிதன் அவ்வப்பொழுது காலத்திற்கேற்ப வாழ்க்கையில் சிறப்பான பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தான் செழிப்பாகவும், அமைதியாகவும...் வாழமுடியும். முதலில் மனிதனின் தவிர்க்கமுடியாத தேவைகளை வரிசைப்படுத்தி ஆராய்ந்து தெளிந்து கொள்வோம்.

மனிதனுக்குத் தேவையானவை

“மனிதனுக்கு உணவு, உடை, வீடு வேண்டும்
மற்றவர்கள் கருத்தறிய மொழியும் வேண்டும்
இனியும் ஒருவர் உற்ற வயதடைந்தால்
ஏற்றபடி வாழ்க்கைக்கோர் துணையும் வேண்டும்
தனிமனிதன் சக்திகளை ஒழுங்கு செய்து
சகலவிதமாம் வாழ்க்கை வசதி எல்லாம்
புனித முறையில் பகிர்ந்து துய்த்து வாழ
பொதுவான கூட்டாட்சி முறையும் வேண்டும்.”

இத்தகைய இன்றியமையாத தேவைகளை அடைவதற்கு ஏற்றபடி மனித முயற்சியும், அவ்வப்பொழுது சமுதாயப் பண்பாட்டில் தகுந்த சீர்திருத்தங்களும் ஏற்பட்டு வருகின்றன. சீர்திருத்தமில்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கையை மனிதனால் அனுபவிக்க முடியாது. மன நிறைவும் கிட்டாது. எனவே, ஐந்தொழுக்கப் பண்பாட்டில் வரும் கவியைப் பார்ப்போம்.

கவி

“புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்
போதை, போர், பொய், புகைஒழித்து அமுல்செய்வோம்.
அதிகசுமை ஏதுமில்லை (1) அவரவர்தம் அறிவின்
ஆற்றலினால், உடல்உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்;
(2) மதிபிறழ்ந்து மற்றவர்கள் மனம், உடல்வருந்தா
மாநெறியும்; (3) உணவுக்கு உயிர் கொல்லா நோன்பும்; (4) பொதுவிதியாய் பிறர்பொருளை, வாழ்க்கைச்சுதந்திரத்தை போற்றிக்காத்தும் (5) பிறர்துன்பம் போக்கும் அன்பும்வேண்டும்.”

நமது வாழ்வில் அரசியல் தேவை. இறையுணர்வும், அறநெறியும் கற்றுக் கொள்ளவும், பழகவும் மதங்கள் தேவை. இந்த தேவைகள் அனைவருக்கும் பொதுவாகத் தானே இருக்கின்றன. ஏன் மனிதன் அரசியல், மதம், பண்பாடு இவைகளில் ஒருவருக்கொருவர் வேறுபடுத்திக் கொண்டு, பகை, பிணக்கு, போர் இவற்றால் துன்புற வேண்டும்? எனவே இக்காலச் சமுதாயத்துக்கு ஒரு முறையான சீர்திருத்தமும் தேவை. அந்தத் தேவைகளில், ஆட்சிமுறை உலகுக்கு ஒன்று போதும். மதம் என்ற போதனை முறை ஒன்று போதும், ஒருவரைப் பிறர் மதித்து வாழ, ஒத்தும், உதவியும் வாழ்வதற்கு ஏற்றபடி பண்பாடும் தேவை.

தேவையில்லாத பழக்க வழக்கங்களால், அவை தொடர்ந்து வருவதால் மனித சமுதாயத்தில் ஆங்காங்கே குழப்பங்களும், பகை, போர், இவைகளும் நிகழ்கின்றன. போர் அவசியம் தேவைதானா? யாருக்குப் போர் தேவை? இந்த வினாவுக்கு விடை காணும்பொழுது போரில்லா உலக சமுதாயம் அமைய வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் முடிவு கொள்ள வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான் பதினான்கு திட்டங்கள் அடங்கிய உலக சமுதாய சீர்திருத்த நெறிகளில் போரில்லா நல்லுலகம் என்ற கருத்தை முதல் திட்டமாக வலியுறுத்தியிருக்கிறேன். இந்த இடத்தில் கீழே சொல்லியுள்ள பதினான்கு திட்டங்களையும் பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

கவி

போரில்லாநல்லுலகம், பொருள்துறையில் சமநீதி
நேர்மையான நீதி முறை, நிலவுலக்கோர் ஆட்சி,
சீர்செய்த பண்பாடு, சிந்தனையோர்வழி வாழ்வு,
சிறப்புணர்ந்த பெண்மதிப்பு, தெய்வநீதிவழி வாழ்தல்,
தேர்த் திருவிழா தவிர்த்தல், சிறுவர்கட்கே விளையாட்டு,
செயல் விளைவு உணர்கல்வி, சீர்காந்த நிலை விளக்கம்,
பார்முழுதும் உணவுநீர்பொதுவாக்கல், பலமதங்கள்
பலகடவுள்பழக்கம் ஒழித்து உண்மை ஒன்றை வழிபடுதல்.

இந்தப் பதினான்கு திட்டங்களும் வாழ்க்கைப் பண்பாடாக மாறவேண்டுமென்றால் முதலில் உலகப் பொதுவான ஆட்சிமுறையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக மதம் என்ற தலைப்பில் நிலவி வரும் கற்பனையான உருவக் கடவுள்களையும், அததற்குரிய கட்டுக் கதைகளையும் மாற்றி அமைக்க வேண்டும்.

முதலில் ஓராட்சி உலகுக்கு எப்படிக் கொண்டு வரலாம் என்று சிந்திப்போம். இந்தச் சிந்தனைக்கு உலகிலுள்ள அறிஞர் பெருமக்களெல்லாம் ஒருங்கிணைந்து கூடிப் பேசி முடிவு எடுத்துதான் கொண்டு வரவேண்டும். இதற்கு உலகப் பொதுவான, அதிகார பூர்வமான மையம் ஒன்று வேண்டும். இதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை. அதிர்ஷ்டவசமாக நமது முன்னோர்கள் உலக நாடுகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து “ஐக்கிய நாடுகள் சபை” என்ற உலகப் பொது வாழ்க்கை நல மேம்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளார்கள். அந்த மையத்தில் தேவையற்ற சில முறைகளை நீக்கித் தூய்மை செய்து கொண்டால் ஐக்கிய நாடு சபை ஒன்றே உலகப் பொது நலமையம் என்ற சிறப்பு பெற்றுவிடும்.

அந்த உலகப் பொது மையத்தில் இரண்டு தீர்மானங்கள் முதலில் அமுல்படுத்த வேண்டும். 180 நாடுகளும் சேர்ந்து U.N.O. என்னும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சபையில் நிர்வாகப் பிரிவாக இரண்டு அமைப்புகள் உள்ளன. ஒன்று பொதுச்சபை (Genaral Assembly), மற்றொன்று பாதுகாப்பு சபை (Security Council). இந்தப் பாதுகாப்புச் சபையில் யுத்த தளவாடங்கள் விற்று அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சேர்த்துக் கொள்ள ஐந்து நாடுகளுக்கு ரத்துரிமை (Veto Power) அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அநீதியான முறையால், உலகப் பொதுவான போர் ஒழித்தல் முதலான தேவைகளை முறையாகச் சீர்திருத்தம் செய்து உலக நாடுகள் நிரந்தர அமைதியின் மூலம் பயன் பெற முடியவில்லை.

இந்த ரத்துரிமை நீக்குவதற்கு உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதன் மூலம் அநீதியான ரத்துரிமையை ஒழித்து, போரில்லா நல்லுலகத்தை அமைத்துக் கொள்ளலாம். அதற்காகவே, மற்றுமொரு தீர்மானமும் தேவை. உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்ள இராணுவம் என்ற போர் நிர்வாகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பாதுகாப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியம்தான். எனினும் ஒவ்வொரு நாட்டாலும் ஏற்படுத்திக் கொள்வது என்றைக்கும், எந்தக் காலத்துக்கும் பிணக்கு, பகை, போர் இவற்றை உண்டு பண்ணிக் கொண்டேயிருக்கும். இந்த அடிப்படையை மனதில் ஆராய்ந்து கொண்டு இதற்கு ஒரு தீர்மானம், பாதுகாப்புச் சபையின் சார்பில் கொண்டு வர வேண்டும். அது மிக சுருக்கமான தீர்மானம்தான்


எந்த நாடும் தனித்தனியே போரமைப்பை உருவாக்கிக் கொண்டு தங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியமில்லை. உலகில் உள்ள எல்லா நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் பணியை ஏற்று, ஒற்றுமையாக நடைபெற ஐக்கிய நாடு சபையில் பாதுகாப்பு பிரிவின் ஒரு தீர்மானம் அவசியம். ஐக்கிய நாடு சபை என்பது உலகில் உள்ள எ...ல்லா நாடுகளின் நலன்களையும் பாதுகாத்துக் கொள்ளவேயாகும்.

ஆகவே, “எல்லா நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு பொறுப்பை உலகப் பொதுவான ஐக்கிய நாடு சபையின் பாதுகாப்பு பிரிவே பொறுப்போடு ஏற்று நிர்வகித்து வர வேண்டும்.” இதற்கென ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். எந்த நாடும் தனித்தனியே போர் அமைப்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமில்லை. இந்தத் தீர்மானத்தின் மீது உலகப் பொதுவான அறிஞர் பெருமக்கள் ஆழச்சிந்தித்து, உலக மக்கள் நலத்துக்கு ஏற்ற முறையில் நல்ல வாசகங்களை அமைத்து, இந்த உலகப் பொது பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி அமுல் நடத்த வேண்டும்.

இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றி, அவற்றை அமுலாக்கி உலக மக்கள் வாழ்வில் எவ்வளவு அமைதியும், செல்வப்பெருக்கும், ஒருவரோடு ஒருவர் ஒத்தும் உதவியும் வாழக்கூடிய பண்பாடும் உருவாகும் என்பதைச் சிந்தனை ஆற்றலால் கணித்துப் பாருங்கள். மற்றொரு அவசியமான தவிர்க்க முடியாத மாற்றம், மதங்கள் ஒன்றாக வேண்டும். இறையுணர்வும், அறநெறியும் தெரிந்து கொண்டு வாழ்வதற்கே மதங்கள் ஏற்பட்டன. இங்கு இறைநிலை உணர்வில் எண்ணிறந்த கடவுள் பெயர்களை உருவாக்கிக் கொண்டு ஒவ்வொரு கடவுள் பெயராலும் மக்கள் பிரிந்துபட்டு துன்பம் அடைகிறார்கள். இந்த நிலைமையைத் திருத்தியமைக்க ஒரு தீர்மானம் அவசியம்.

ஒரு உலகப் பொது மகாநாடு கூட்டி, மதத் தலைவர்கள் அனைவரையும் மதிப்போடு வரவேற்று, அவர்களிடம் இரண்டு வினாக்களை முன் வைக்க வேண்டும்.

1. கடவுள் என்பது ஒன்றா? பலவா?

2. ஒன்றுதான் என்றால் பிரபஞ்சத்தில் உள்ள எந்த மகாசக்தியை கடவுளாக ஏற்றுக் கொள்ளலாம்? ஏன் உலகில் பல கடவுள் பெயர்களை வைத்துக் கொண்டு நாம் துன்புற வேண்டும்?

இந்த இரண்டு வினாக்களுக்கும் ஆராய்ந்து பதில் கூறுமாறு அங்கு கூடியிருக்கும் மதிப்புமிக்க மதத் தலைவர்களை வேண்டிக் கொள்வோம். இதற்கு முடிவாக என்ன விடை கிடைக்கும்? கடவுள் என்பது ஒன்றுதான் என்பார்கள். உலகிலுள்ள மக்களெல்லாம் முற்காலத்தில் சிறுசிறு பிரிவுகளாகக் கூடி வாழ்ந்தார்கள். அவர்கள் பேசிய மொழிகளும் வேறுபட்டிருந்தன. கடவுள் என்ற ஒரே சொல்லுக்கு அந்தந்த மொழியில் உச்சரிப்புகள் வேறுபட்டன. அந்த உச்சரிப்புகள் பேதத்தைக் கொண்டு கடவுள்கள் தனித்தனியாகவும், எண்ணிலடங்காத கடவுள்களாகவும் வழக்கத்தில் வந்து விட்டன.

இவற்றையெல்லாம் மக்களிடம் உணர்த்தி நல்ல முறையில் உண்மையான தெய்வ நிலையை உணர்வதற்கு நாம் முதன் முதலில் விளக்கியுள்ள கருத்துக்களை நல்ல முறையில் சீராக்கி அமைத்து, எல்லா மதத் தலைவர்களும் உண்மையான கடவுள் நிலையை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். இந்த முயற்சி மிகவும் அவசியமானது. செயல் முறைக்கும் எளிதானது. இந்தத் தீர்மானத்தின் மூலம் மக்களிடம் ஒரே கடவுள்தான் என்ற விளக்க அறிவு மலர்ந்து விட்டால் மதங்கள் ஒன்றைவிட அதிகமான அளவில் தேவை இருக்காது. இதன் மூலமே வாழ்க்கையின் தேவைகளை முறையாகப் பெறவும், அனுபவிக்கவும் மக்களிடம் ஒரே ஒரு பண்பாடு உருவாகிவிடும். இதன் மூலம் பல மதங்களையும் ஒன்றுபடுத்தி ஒரே மதமாக்கி உண்மையான தெய்வநிலையை வழிபடும் திருத்தத்தை உண்டாக்கலாம்.

உலகப் பொது ஆட்சியும், மதங்கள் ஒன்றுபட்டு ஒரே கடவுள் என்ற கருத்தும் மக்களிடம் உருவாகிவிட்டால் மற்ற தேவையற்றச் சடங்குகளும், கற்பனைகளும், மக்கள் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பிணக்கு, பகை இவைகளும், அவ்வப்பொழுது உலகில் நிகழ்ந்து வரும் போர்களும் அடியோடு நின்றுவிடும். அறிஞர் பெருமக்கள் தக்க முயற்சி எடுத்து மனித சமுதாயத்தில் மக்களுடைய அறிவைக் கல்வியின் மூலமும், வாழ்க்கைத் திருத்த பண்பாட்டின் மூலமும் திருத்தி அமைத்து விடலாம். அதைச் செய்வோம்.

உலக நலம், உலக அமைதி, மனித குல ஒற்றுமை இவைகளையெல்லாம் அமுலுக்குக் கொண்டு வரலாம். அறிஞர் பெருமக்களை வணங்கி நான் கேட்டுக் கொள்கிறேன். உலக ஆட்சியும், உலக மதமும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும். உங்கள் முயற்சியினால் உலகம் மேன்மை அடையட்டும். உலக மக்கள் வாழ்வில் அமைதியும், மனநிறைவும் உண்டாகட்டும். வாழ்க வையகம்.

- வேதாத்திரி

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

வானியல்

வானியல்

இதுவரையில், பிரபஞ்ச தன்மாற்றத்தில் உயிரின உற்பத்தி செயல்பாடு வரையில் சிந்தித்தோம். இவ்வளவும் உலகம் என்ற மண் உருண்டை மீது நடந்த நிகழ்ச்சிகளே ஆகும். நிலவுலகத்தைச் சுற்றியும், அப்பாலும் பல வியத்தகு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளை வானியல் (Cosmology) என்ற சொல்லால் வழங்கி வருகிறோம்.

முதலில் விண்கோள்கள் (Planets) எவ்வாறு தோன்றுகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். பல அற்புதமான இயக்கங்கள் நம்மைச் சுற்றி, உலகைச் சுற்றி பிரபஞ்சத்தில் நிகழ்ந்து வருகின்றன. அவற்றைப் பற்றி நாம் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஒரு உதாரணம் கூறுகிறேன். நாமெங்கே வாழ்கிறோம்? நில உலகின் மீது. நில உலகம் எங்கே இருக்கின்றது? ஆகாயத்தில் மிதந்து உருண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் அதை விட்டுவிட்டுத் தனியாகவா இருக்கிறோம்? உலகம் சுற்றும் வேகத்திலும், மிதக்கும் தன்மையிலும், உருளும் நிகழ்ச்சியிலும் நாமும் இணைந்துதான் இருக்கிறோம்.

இந்த உலகமோ சூரியனைச் சுற்றி வரும் வேகத்தில், ஒரு நாளைக்கு நாம் பூமியின் மேல் அமர்ந்து கொண்டு சூரியனை பதினைந்து லட்சத்து ஐம்பதாயிரம் மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டு பிரயாணம் செய்து கொண்டு இருக்கிறோம். இந்த அற்புத நிகழ்ச்சியை நாம் என்றாகிலும் நினைந்து பார்த்து வியந்திருக்கிறோமா? இல்லை. ஏனெனில், இதுவரையிலே நமது மனதைத் தினசரி உடல் தேவை பொருட்கள், அவற்றை அனுபவிப்பதில் கிடைக்கும் இன்பம், துன்பம் போன்றவற்றால் கட்டுப்படுத்திக் கொண்டோம்.

இப்பொழுது நாம் அந்த குறுகிய எல்லையைக் கடந்து இயற்கையில் நடைபெறும் வியத்தகு நிகழ்ச்சிகளை உணர்ந்து அந்த அளவுக்கு மனவிரிவு பெற்று வியப்பும், மகிழ்ச்சியும் அடைகிறோம். ஆகையால் மனித மனம் விரிவுபட இறைநிலை ஆற்றலை ஓரளவு அனுமானம் கொள்வதற்கு வானியல் என்ற தலைப்பில் சில உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

கோள்களின் தோற்றம்

விண் என்ற இறைத்துகள்களின் தொகுப்பு ஆகாயத்தில் எங்கும் நிறைந்திருக்கின்றன. அவைகளில் சில இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தினால் ஒன்றுகூடி தொகுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது. இதே முறையில்தான் எந்த தோற்றப் பொருளும் உற்பத்தியாகின்றன. ஒரு கோளுக்கும், மற்றொரு கோளுக்கும் இடையே துல்லியமான இடைவெளி உண்டு. அது எவ்வாறு அமைகிறது என்று சிந்திப்போம்.

ஒவ்வொரு அணுவிலிருந்தும் இறைதுகள்கள் தற்சுழற்சி விரைவால் எப்பொழுதும் பிரிந்து ஓடிக் கொண்டே இருக்கின்றன என்பதை முன்னமே உணர்ந்தோம். அந்தத் துகள்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அளவு விலக்கு வேகம் கொண்டவையாகும். ஒரு கோளில் இவ்வாறு எத்தனை இறைத்துகள்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனவோ அவற்றின் மொத்த ஆற்றலின் தள்ளுவேகம் ஒவ்வொரு கோளுக்கும் உண்டு. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே கூட இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு கோள்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருக்கும் இறைத்துகளின் அலையாற்றல் ஒன்றை ஒன்று தள்ளிக் கொண்டே இருக்கும். சூரியன், பூமி இரண்டிலிருந்தும் வெளியாகும் தள்ளு ஆற்றலை ஒன்று கூட்டினால் வரும் விடையே இரண்டு கோள்களுக்கும் இடையே அமையும் தொலைவு ஆகும்.

இதுபோன்று வான்வெளியில் உலவும் எல்லா கோள்களுக்கும் இடையே அமையும் தொலைவு ஆகும். வான்வெளியே இறைத்துகள்களால் ஆன காந்த ஆற்றல் நிரம்பிய ஒரு களம்தான். ஆகவே பிரபஞ்சக்களம் காந்த ஆற்றலால் ஆக்கப்பட்டதனால் எப்பொழுதும் முழுவதுமாக தற்சுழற்சி இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த பிரபஞ்சக்கள தற்சுழற்சியினால் இயற்கை விதிப்படி ஒரு முழுமையான துல்லிய சமதளச் சீர்மை
(Specific Gravity) அமைகிறது.

இதனால் பிரபஞ்சத்தின் மையப் புள்ளியிலிருந்து ஒவ்வொரு விண்கோளும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றதோ, அதன் எடை எவ்வளவோ, அதற்கேற்றவாறு ஒவ்வொன்றும் பிரபஞ்சக் களத்தில் இடம் பெற்று மிதந்து, உருண்டு, ஓடி இயங்கிக் கொண்டிருக்கின்றது. இவை ஒருபோதும் மாறுவதில்லை. மாற்றம் இருந்தால் பிரபஞ்சத்திலுள்ள விண்கோள்கள் அளவிலும், எடையிலும், ஓட்டத்திலும் அமையும் வேறுபாடுகளே அத்தகைய மாற்றங்களுக்கு காரணமாகும்.

இவையனைத்தும் வானியலில் அடங்கிய இறைநிலையால் செயல்படுத்தப்படும் வியப்புறும் நிகழ்ச்சிகளே. இத்தகைய வானியல் விந்தைகளை, மண்ணுலக நிகழ்ச்சிகளில் நடைபெறும் விந்தைகளை, உடலில் நடைபெறும் உண்ணும் உணவே ஏழு தாதுக்களாக மாறும் உண்மைகளை, இறையாற்றலின் அற்புதமான விளையாட்டாக நாம் உணர்ந்தால் நமது அறிவு எவ்வளவு விரிவாக செயல்படத்தொடங்கும்!

ஆகையால், மேலே விளக்கிய இறைநிலையின் அற்புதமான விந்தைகளை அறியும் அளவுக்கே மனிதனுடைய நன்மைகளும், அறிவின் சிறப்புகளும் அமையும். அதனால் இத்தகைய இயற்கைவளக் கல்வி மனித இனத்துக்கு எவ்வளவு உயர்வானது, சிறப்பானது என்று கண்டு மன நிறைவு பெறுவோம்.


வேதாத்திரி மகரிஷி,

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

புவியியல்

 அண்டங்களின் உற்பத்தி

இறைநிலை விளக்கத்தில், இறைநிலையின் தன்மாற்றமே இறைத்துகளின் தொகுப்பான விண் என்ற அணுவரையில் தோற்றமாகி இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்தோம். அவ்வாறு தோன்றிய அணுக்கள் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கின்றன? இறைநிலை என்ற பெருவெளியை விட்டு வேறெங்கும் செல்ல முடிய...ாது.

ஆகவே, இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினாலே அணுக்கள் பல தொகுப்பாகக் கூடிக்கூடி இயங்குகின்றன, அவை இயங்கும்போது அத்தொகுப்புக்களுக்கு ஏற்படும் திணிவுநிலையையொட்டி, அவற்றை விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து வகையாக முன்னோர்கள் விளக்கியிருக்கின்றார்கள். இந்த ஐந்து நிலைகளைப் பௌதீகப் பிரிவுகள் என்ற கருத்தில் பஞ்ச பூதங்கள் என்று விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் இவற்றைக் கூறியுள்ளார்கள்.

அணுக்கள் கூட்டு இயக்கத்தை விஞ்ஞானிகள் பேரணு என்ற கருத்தில் “Element” என்று கூறி, அவ்வாறு உருவான கூட்டத்தில் எத்தனை அணுக்கள் அடங்கி இருக்கின்றனவோ அதற்குத் தக்கவாறு பெயரிட்டு மொத்தம் 92 பேரணுக்கள் (Elements) உள்ளன என்று கூறியுள்ளார்கள். நாம் பார்க்கும் எந்தத் தோற்றப் பொருளும், Elements என்னும் பேரணுக்கள் கூட்டமாகவோ, பஞ்ச பூதங்களின் இணைப்பு இயக்க நிலையாகவோ தான் இருக்கும். அணு எந்த நிலை அடந்தாலும் இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினால் அது தற்சுழற்சியோடு தான் இருக்கும். தற்சுழற்சி விரைவு உடைய இறைத்துகள்கள் கூடிய அணுவென்ற தொகுப்பு நிலையின் தற்சுழற்சி விரைவால், மேலும் மேலும் இறைத்துகள்களுக்கு விலக்கும் வேகம் கூடுகிறது.

அதனால் இறைத்துகள்கள் எப்பொழுதும் ஒரு அணுவை விட்டு வெளியேறிக் கொண்டே இருக்கும். அதே போன்று, தற்சுழற்சி விரைவில் மந்தம் ஏற்படும்போது மேலும்,மேலும் துகள்கள் கூடிக்கொண்டும் இருக்கும். இவ்வாறு எந்த அணுவும் தனது நிலையில் ஒரே மாதிரியாக தொடர்ந்து இருக்க முடியாது. இந்த நிகழ்ச்சி அணுக்களின் தொகுப்பான எல்லாத் தோற்றங்களுக்கும் பொதுவாகும்.

அணுக்களிலிருந்து வெளியேறும் இறைத்துகள் என்பது என்ன? காந்தம் தானே. ஆகவே எந்தப் பொருளிலும் காந்தம் என்பது பாய்மப் பொருளாக நிறைந்திருக்கிறது. இறுக்க ஆற்றலும், விலக்கும் ஆற்றலும் செயல்படும் நிலையில்தான் எந்தப் பொருளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆகவே சிறிய தோற்றப் பொருட்களிலும், பெரிய பெரிய அண்டங்களிலும் எப்பொழுதுமே காந்தமென்ற பேராற்றல் சுழன்று இயங்கிக் கொண்டே இருக்கும்.

இத்தகைய சிறப்பு ஆற்றல் சிறிய பொருளிலும் கூட, அது எந்த அளவில் நுண்மையானதாக இருந்தாலும், பொதுவான நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இறையாற்றலின் பெருமையால் காந்த ஆற்றல் எங்கிருந்தாலும் அதற்குத் துல்லிய சமதளச் சீர்மை (Specific Gravity) என்று வழங்கக்கூடிய ஒரு இயக்க நியதி ஏற்படுகின்றது. இதனால் காந்த ஆற்றல் எங்குச் சுழன்று கொண்டிருந்தாலும் Specific Gravity என்ற இறைநிலையின் இயக்க நியதியால் அந்தக் காந்த அலையின் மையத்தில் ஒரு திணிவு நிலை ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு ஒரு சிற்றுருவத்தில் எற்படும் காந்த ஆற்றலின் திணிவு நிலை “கருமையம்” என்ற ஒரு சிறப்பு நிலையாக உருவாகி, அதிலுள்ள எல்லா அணுக்களையும் சேர்த்துக் கொண்டு இயங்கும்போது இந்தக் கருமையமே ஐயுணர்வுகளுக்கும் மையப் பொருளாக இருந்து கொண்டு சிறப்படைகிறது. அது இயங்கும் தோற்ற உருவத்தை “சீவன்” என்ற சிறப்பு நிலைக்கு கொண்டு வருகிறது. எத்தகைய சிற்றுருவமானாலும் அதற்குக் கருமையம் அமைந்து விட்டால், அதற்கு முன்னம் சடப்பொருளாக இருந்த அந்த உருவம் சிறப்பு இயக்கம் பெற்றுச் சீவன் என்ற நிலைக்கு வருகிறது.

இவ்வாறான சிற்றுருவங்கள் கிருமிகள் என்றும், நுண்ணுயிர்கள் என்றும் பேசப்படுகின்றன. இத்தகைய உருவங்கள் சீவன் என்ற சிறப்புப் பெற்று ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் பெருகி இருக்கின்றன. எவ்வாறு இருந்தாலும், அனைத்துக் கிருமிகளும் காந்த ஆற்றலின் தன்மாற்றம் தானே! இந்தச் சீவகாந்த ஆற்றல் கலப்புறும்போது ஒவ்வொரு சிற்றுயிரும் தன்மையில் மாற்றம் அடைகிறது.

அம்மாற்றம் வித்தின் வழியே சந்ததி தொடர்பாக வளர்ச்சி அடைந்தும், பெருகியும் வரும்போது சிற்றுயிர்கள் எண்ணிறந்த கோடியாக பெருகிவிட்டன. இந்த நிலையில் ஒரு தாவரத்தின் பழத்தில், அதன் விதையில் உருவாகும் சிற்றுயிர்கள்தான் புழுக்கள் இன்ற பெயரோடு பெருகி உள்ளன.


எந்த தாவரத்திலிருந்து ஒரு புழு தோன்றினாலும், அது தனது முழு ஆற்றலான திரவ நிலையைக் கொண்டு ஒரு கூடு போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது.

இத்தகைய கூடுகள், பல புழுக்கள் மீது அமைந்து இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாகக் கூறினால், பட்டுப் புழுக்கள் மீது அமையும் கூடுகளைப் (Cocoons) பார்க...்கிறோம். அந்தக் கூட்டுக்குள்ளாக குடியிருக்கும் புழு ஒரு தியானம் போன்ற முறையின் மூலம் மேலும் மேலும் வலுப் பெற்று, அதற்குப் பறக்கும் திறமையை அளிக்கும் இறக்கைகள் முளைத்துவிடும். இந்தப் பருவநிலையில் தனது கூட்டையே தன் வாயினால் கடித்துப் பொத்தல் செய்து கொண்டு அந்த உயிரினம் வெளியேறிவிடும்.

இப்பொழுது அதற்கு பறக்கும் திறமை வந்துவிட்டாலும், அதன் இறக்கைகள் போதிய வலுப்பெற்றவை அல்ல. இதனால் பெரும்பாலான சீவ இனங்கள் சிறிது காலம் பறந்து இறக்கைகளை இழந்துவிட்டு, பூமியில் விழுந்து ஊர்வனவாக வாழத் தொடங்கும்.

இந்த நிலையில் அதற்கு கால்கள் ஏற்பட்டு, எண்ணிக்கையில் பெருகி அந்த சீவ இனம் ஒன்றொடு மற்றது இன உறவு கொண்டு, வேறு உருவம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கும். இவ்வாறு எண்ணிக்கையில் பெருகி உள்ளவைதான் அனைத்து ஊர்வன சீவன்கள் ஆகும். சில சீவன்கள் இறக்கைகள் வலுப்பெற்று மேலும் மேலும் தொடர்ந்தியங்கி, அவை இனக்கலப்பால் பெருகி, வளர்ச்சி பெற்று, பல்வேறுபட்ட பறவை இனங்களாக விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதே போன்று நீரில் வாழும் உயிரினங்களும் பல எண்ணிக்கையில் பெருகிச் சிறப்புற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஊர்வன பிராணிகள் தங்கள் பெருக்கத்தினால் பலவகையான நடப்பனவாகி, கால்களின் எண்ணிக்கை குறையக் குறைய இனங்கள் பலவாகி, கடைசியில் மனிதன் என்ற உருவத்திற்கு வந்துவிட்டன.

ஒரு சிற்றுயிரிலிருந்து மனிதன் வரையில் பெற்ற மாற்றங்கள் உடல் வரையில்தான் பேதப்படுகின்றன. ஆனால் சிற்றுயிரில் அமைந்த கருமையம் காந்தக் களம் ஆகையால், அந்த சீவன் எத்தனை உருவங்கள் மாறினாலும் அவற்றின் அனுபவங்கள் அனைத்தும் அலைவடிவில் சுருங்கிக் கருமையத்தில் தரமேன்மையாக அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு சிற்றுயிரிலிருந்துதான் ஆயிரக்கணக்கான உருவ மாற்றங்கள் பெற்று வாழ்ந்து வருகின்றன.

அதற்கு ஏற்றமாதிரி கருமையம் அதன் அமைப்பில் தக்கபடி மாற்றம் பெற்று, கடைசியில் மனிதன் என்ற சிறப்பாக அமைந்து விளங்குகிறது. இதனால் ஒரு மனிதனிடம் அமைந்துள்ள கருமையத்தில் உலகில் தோன்றி வாழுகின்ற அனைத்து சீவராசிகளின் தன்மைகளும் குணங்களாக அமைந்துள்ளன. எனவே இறைநிலையானது சிற்றுயிரிலிருந்து தன்மாற்றமடைந்த கோடிக்கணக்கான சிறப்புகளில் ஏற்பட்ட இயக்கச் சிறப்புகள், மனத்தால் உணர்ந்த அறிவின் சிறப்புகள், அனைத்தும் மனிதனுடைய கருமையத்தில் சுருக்கமாக அமைந்துள்ளன.

எனவே மனிதனின் கருமையத்தில் பல்லாயிரம் சீவராசிகளின் குணங்களும் சுருக்கமாக அமைந்திருக்கின்றன. காந்த ஆற்றலுக்கு அது இயங்கும்போது ஏற்படும் சிறப்புநிலையை சுழல்விரைவு (Frequency) என்று கூறுகிறோம். மனித மனத்தின் சுழல் விரைவுகள் வேறுபடும்போது சிலசமயத்தில் கருமையத்தில் அமைந்துள்ள எந்த சீவ இனத்தின் குணங்களும் வெளிப்படலாம். மனிதனுடைய வாழ்க்கைத் தரமே மற்ற சீவன்களைவிடச் சிறப்பில் வேறுபட்டு இருப்பதால் அனைத்து சீவராசிகளின் குணங்களும் அடிக்கடி வெளிப்பட முடியாது. சில உயிர்களின் குணங்கள் மனித இன மனதுக்கு அதன் சூழ்நிலைகள் ஒத்து வரும்போது அந்தந்த சீவராசிகளின் குணங்களும், எண்ணங்களும் செயல்களாக வெளிப்பட்டுவிடும்.

மனிதன் இருப்பான்; சிலசமயம் பாம்பைப் போல் சீறுவான், சில சமயம் புலியைப் போல் பாய்ந்து பிறரைத் தாக்குவான். இவ்வாறு பல்வேறு மனநிலைகளிலும், செயல் முறைகளிலும் ஒவ்வொரு மனிதனும் அமைந்து, சுழ்நிலைகளுக்கு ஏற்ப மன, உடல் இயக்கங்கள் நடைபெறக் காண்கிறோம். இந்த இடத்தில் மீண்டும் சிந்திப்போம்.

மனிதன் திடீரென்று இயற்கையில் தோன்றிவிடவில்லை. இறைநிலையில் அமைந்திருக்கும் தவறில்லாத இயக்க முறையால் ஒரு சீவனிலிருந்து இன்னொரு சீவனாக மாற்றம் பெற எண்ணிறந்த ஆண்டுகள் சென்று விடுகின்றன. இவ்வாறு உலகில் உயிரினம் சிற்றுயிர்களாகத் தோன்றிப் பெருத்த உடலும், அதற்கு ஏற்ற செயல்களும் அமையும் பல்வேறு வியப்புறத் தக்க சீவ இனங்கள் உருவாகி அத்தனையும் இயற்கை வளத் தோடு, முறையாக இயங்கிக் கொண்டிருக்கும் உண்மையினை அறிவதே இறையுணர்வும், பிரபஞ்ச சரித்திரமும் ஆகும்.

எனவே, ஏதோ ஒரு ஆற்றல் உலகைப் படைத்து பாதுகாப்பும், பராமரிப்பும் அளித்து வருகிறது என்ற தெளிவை விட, இறைநிலையே தன்மாற்றம் பெற்று, பிரபஞ்சத்தில் காணும் பொருட்களாகவும், அண்டங்களாகவும், கோடி கோடியான உருவங்களாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மையை விளக்குவதே இந்தப் பரிணாமச் சரித்திரம்.

- வேதாத்திரி

 

புதன், 13 ஆகஸ்ட், 2014

விஞ்ஞானம்

விஞ்ஞானம்

அறிஞர் பெருமக்களே! உங்கள் அனைவரையும் வணங்கியும், வாழ்த்தியும் மனநிறைவு பெறுகிறேன். நாம் ஒரு பெரிய சமுதாய சேவையை இந்த நூல் மூலம் எழுதி முடித்து, உலக மக்களுக்கு அளிப்பதற்காக, நாம் முழுமுயற்சியும் எடுத்துக் கொண்டு இந்த புனிதமான செயலிலே ஈடுபட்டு இருக்கிறோம்.

இது...வரையில் நமது ஆராய்ச்சி மூலமாக இறைநிலையின் விளக்கம் அளித்திருக்கிறோம். இப்பொழுது அதே இறைநிலை தன்மாற்றம் அடைந்த வரிசையில் உலகம், மற்ற கோள்களின் தோற்றங்கள், உலகில் உயிரினங்களின் தோற்றங்கள் தொடங்கி மனித இனம் வரையில் எவ்வாறு வந்தன என்று இப்பொழுது சிந்திக்க இருக்கிறோம்.

இந்த இடத்தில் மீண்டும் ஒருமுறை இறைநிலையின் முறையான தன்மாற்ற விதிமுறைகளையும், அவற்றின் விளைவுகளையும் பற்றிச் சிறிது நேரம் சிந்தனைக்குக் கொண்டு வருவோம்.

வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற நால்வகைச் சிறப்புகளும் உடையதுதான் இறைநிலை என்று உணர்ந்து கொண்டோம். இறைநிலை என்பது சுத்தவெளிதான் என்றும், அதுவே பேராதாரப் பெருவெளியாக விளங்கும் சிறப்பையும் உணர்ந்தோம். ஆயினும், அது புலன்களுக்கு எட்டாத மறைபொருளாகையால் அதைப்பற்றி மொழியில் விளக்கமாக கூறவோ, மற்றவர்களுக்கு தெளிவாக அறிவிக்கவோ மிகவும் சிரமமாக இருக்கிறது.

இதனால்தான் லட்சக்கணக்கான ஆண்டுகள் மனித இனம் வாழ்ந்து பல வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றுள்ள போதிலும் இறைநிலையைப் பற்றி தெளிவாக உணரமுடியவில்லை. ஆறாவது அறிவின் உச்ச கட்டத்தில் அதற்கு நுண்மாண் நுழைபுலன் என்ற சிறப்பு உண்டாகிறது. நுண்ணிய பொருளாகவும், மதிப்புக்குறிய பொருளாகவும், புலன்களுக்கு எட்டாத மறைபொருளாகவும் இறைநிலை இருப்பதால், மனிதன் சிந்தனை ஆற்றல் உயர்ந்த நிலையில் அவனிடம் அமையும் நுண்மாண் நுழைபுலன் என்ற ஆறாவது அறிவின் சிறப்பால் மட்டுமே தெய்வநிலையைத் தெளிவாக உணரவும் முடியும், மற்றவர்களுக்கும் உணர்த்தவும் முடியும்.

இக்காரணங்களால் தான் தெய்வநிலை பற்றிய அறிவு மனித இனத்துக்கு இதுவரையில் தெளிவாகக் கிட்டவில்லை. இந்த இயலாமை காரணமாக ஒரு சில காலங்களில், இடங்களில் சில அறிஞர்கள் அவர்களுடைய கற்பனைத் திறனால் இறைநிலைக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் சில உண்மைக்குப் புறம்பானச் செய்திகளாக அமைந்து விட்டன. நம்பிக்கை வழியே ஒருவரிடம் மற்றவர் அறிவின் விளக்கத்தைக் கேட்டு வாழ்ந்த காலத்தில் உண்மைக்கு முரணான செய்திகள் பல வாழ்வில் மனித சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பிற்காலத்தில் அத்தகைய கற்பனையான கடவுள் நிலைகளுக்கு உண்மையான காரணங்களைச் சிலர் கண்டுபிடித்து, பக்தி வழியில் ஈடுபட்டிருக்கும் மக்களை, ஓரளவு திருத்தம் செய்திருக்கிறார்கள். பண்பாட்டையே உயர்த்தும் பண்பாட்டுச் சீர்திருத்தமாக அமைந்த போதிலும், பெரும்பாலோர் நம்பிக்கை வழியே கற்ற சிலை வழிபாடுகளை வாழ்வில் தொடர்ந்து பயின்று வருகிறார்கள். இதனால் மக்கள் குலத்திற்கு முழுமையான உண்மைநிலை விளக்கும் பேரறிவு மூலம், இறையுணர்வு இன்னமும் வந்து சேரவில்லை.

இத்தகைய சிக்கலான நிலையில்தான் இறைநிலையின் ஆராய்ச்சியை நாம் தொடங்கியிருக்கிறோம். இந்த ஆராய்ச்சியில், நான் கண்ட இவ்வுண்மைகளை, தற்காலத்தில் நிலவும் பேச்சு மொழியில் நாம் விளக்கி வந்தாலும், அதே நேரத்தில் நமது கருத்துக்கள் தொலைநோக்கு கொண்ட முற்கால தத்துவ ஞானிகள் கருத்துக்கும், தற்காலத்தில் சிறந்து உயர்ந்து கொண்டே வரும் அறிவியல் துறையான விஞ்ஞானத்திற்கும், எந்த விதத்தும் முரண்படாத அளவில் நமது சிந்தனையை முடிவான கருத்துக்களாக உருவாக்கி, மக்களுக்கு அளித்து வருவதின் தொடக்கம்தான் இந்த நூல்.

இந்த நூலைப் படிக்கும் பேரறிஞர்கள், அவர்கள் அறிவில் காணும் தெளிவான விளக்கங்களையும், இறைநிலை பற்றிய உண்மைகளைக் கூறும் வழிமுறைகளைப் பற்றியும் எனக்கு அன்போடு அறிவிக்கலாம். என்னோடு கலந்துரையாடி சிறந்த முடிவுகள் மனித இனப் பண்பாட்டின் சிறப்புக்கும், உயர்வுக்கும் அளித்து மகிழலாம்.

அறிஞர் பெருமக்களே! முதலில் இறைநிலையைப் பற்றி நாம் இதுவரையில் உணர்ந்த தெளிவுகளை மீண்டும் ஒரு முறை நினைவுக்கு கொண்டு வருவோம்.

1. வெட்டவெளியென்ற பேராதாரப் பெருவெளியே எல்லாம் வல்ல தெய்வநிலை.

2. அதற்கு இயல்பாக உள்ள ஆற்றல் தன்னிறுக்கமாகும். வேறு எவ்விதத்தும் செயல்பட முடியாதவாறு தன்னையே அது இறுக்கிக் கொள்ளுகிறது.

3. அவ்வாறான தன்னிறுக்கம் அதிகரித்து நுண்மையான துகள்நிலையாக, இறைநிலை தன்மாற்றம் அடைகிறது.

4. இவ்வாறு துகள்களான பிறகு அவை எங்கு போகும்? இறைவெளியைத் தவிர பிரபஞ்சத்தில் வேறு இடம் ஏது? அப்படி இறைநிலையிலேயே ஆழ்ந்துவிட்ட இறைதுகள்களைச் சுற்றி அமைந்திருப்பது இறைவெளிதானே? தன்னிறுக்கமாக இருந்த ஒரு பேராற்றல் இப்பொழுது தன்னிலே தோன்றிய இறைத்துகள்களைச் சுற்றி அழுத்திக் கொண்டிருக்கிறது. எல்லையற்ற இறைவெளியின் இறுக்க அழுத்தத்தால் ஒவ்வொரு இறைத்துகளும் விரைவாக சுழல ஆரம்பித்தது, இதனால் இறைத்துகள்கள் நுண்துகள் நிலையிலிருந்து அலைநிலையாக தன்மாற்றம் பெற்றுவிட்டது.

இறுக்க ஆற்றலால் நுண்ணிய துகளாக மாறிய இறைநிலை இப்பொழுது தன்மாற்றத்தில் இரண்டாவது வரிசையான இறைத்துகளாகி விட்டது. இதனால் இறைத்துகள் ஒவ்வொன்றும் அளக்க முடியாத விரைவில் தற்சுழற்சி பெற்றன. முன்னமே ஒரே தொடராக இருந்த இறைநிலை இப்பொழுது துகள் வடிவம் பெற்று தற்சுழல் விரைவு பெற்று விட்டதனால், அது தனது உருவநிலை இழந்து அலை நிலைக்கு தன்மாற்றம் பெற்றுவிட்டது.


இறைத்துகள் என்பது இப்பொழுது என்னவென்று நினைந்து கொள்வோம்? இறைநிலையின் நுண்பகுதியே தான்! அவை இருக்கும் இடமோ இறைநிலையே. அதன் இயக்க விரைவு என்ற பேராற்றல் இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினாலேயே ஆகும். இதனால் இடமாக இருப்பதும், பொருளாக இருப்பதும், இயக்கமாக இருப்பதும் மூன்றும் நமது மனதுக்கு ...தனித்தனியாக இருந்தாலும், அது ஒரே ஆற்றல்தான், இவ்வாறு மூன்று வழிகளிலும் சிறப்புபெற்ற இறைத்துகள்கள் பிரபஞ்சத்திலேயே எல்லாம் வல்ல பேராற்றலாகத் திகழ்கிறது. இதனைத்தான் “காந்தம்” என்ற சொல்லால் வழங்கி வருகிறோம். இதுவே காந்தம் என்ற பேராற்றலின் பிறப்பிடமாகும்.

ஆங்கிலத்தில் இந்த காந்த நிலையை “Magnet” என்று சொல்லுகிறார்கள். “Mag” என்றால் மகா என்னும் கருத்தை விளக்கும். “Net” என்றால் பிரபஞ்சம் முழுவதும் உள்ள எல்லாப் பொருட்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு, வலை போல் பின்னி ஒரே பொருளாக இறைத்துகளையும், அது தன்மாற்றம் பெற்ற எல்லாப் பொருட்களையும் இணைத்துக் கொண்டிருப்பதால் வலை என்று கூறப்படுகின்றது. Magnet என்பது பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தையும் வலைபோல் பின்னி, ஒன்றுபடுத்தி இயக்கிக் கொண்டிருப்பது என்பதுதான் பொருள். காந்தம் என்பது எங்கு உற்பத்தியாகிறது என்று விளங்கிக் கொண்டோம்.

அது தற்சுழல் விரைவுநிலையில் தனது நுண்ணுருவத்தை இழந்துவிட்டு பேராற்றல் பெற்ற அலைவடிவத்தில் பாய்மப் பொருளாகி எங்கும், எப்பொருளிலும் ஊடுருவி நிறைந்து சிறந்து விளங்குவதால் காந்தமில்லா இடமோ, பொருளோ பிரபஞ்சத்தில் இல்லவேயில்லை! எந்தப் பொருளை எடுத்தாலும் அணுக்களின் கூட்டாகக் காண்கிறோம். அணுவோ இறைத்துகளின் தொகுப்பு நிலையாகும். இறைத்துகளோ இறைநிலையின் நுண்பகுதி தானே.

இதனால் இறைநிலையின் இயக்க ஆற்றலான காந்தம் என்ற சிறப்பு நிலையில் அலைவடிவத்தில் இருந்தாலும், பிறப்பு நிலையில் இறைநிலையே ஆகும். இந்தக் காந்தத்தின் வியத்தகு சிறப்பியக்கம்தான் பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்து உருவங்களும், சிறப்பு இயக்கங்களும் ஆகும்.

இறைநிலை இடமாக அமைந்து, அதன் துகள்கள் இறைநிலையின் ஆற்றல்கள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினாலேயே தொடர்ந்து இயங்கக் கூடிய தற்சுழற்சி விரைவாக மாறியது. இப்பொழுது நாம் எந்தப் பொருளிலும், இடத்திலும் இறைநிலை, இறைத்துகள், காந்தமென்ற அலைநிலையான பாய்மப்பொருள் இவற்றைத் தனிதனியே உணர முடியாது. ஒரு நிலையை உணரும்போது மற்ற சிறப்புகள் அனைத்துமே அதில் அடங்கியிருக்கும்.

- வேதாத்திரி

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

இறைநிலையின் விளக்கம்


 இவ்விளக்கம் உலகில் வாழும் மக்களில் சிந்திக்கும் ஆற்றல் உடைய அனைவருக்கும் தேவையானது. இந்த உண்மையை அறியாத குறைதான் மனிதருள் வாழ்வில் ஆங்காங்கு, அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் துன்பநிகழ்ச்சிகளாகும்.

மனித இனம் தோன்றி பல தலைமுறைகள் சென்றன. வாழ்க்கையில் ஏற்பட்ட புலனுணர்ச்சி அனுபவங்களால் திறன்பெற்ற அறிவின் சிறப்பு நிலையில் தோன்றியதே இறைநிலை பற்றிய வினாவும், தேடலும், ஆராய்ச்சியும், பற்பல கற்பனையான முடிவுகளும் ஆ...கும். இறைநிலையானது புலன்களுக்கு எட்டாத மறைபொருள் ஆகும்.

ஆனால், இந்த இறைநிலையின் உண்மை அறியாமல் சிந்தனையாற்றல் மிக்க அறிஞர்பெருமக்கள் மிகவும் சோர்ந்து போயினர். இருப்பினும் அவர்களுடைய தேடுதல் விரைவு குறைந்தபாடில்லை. இத்தகைய உயர்ந்த, சிக்கலான மனநிலையில் அவ்வப்பொழுது சில அறிஞர்கள் கற்பனையாகக் கடவுள் நிலையைக் கருதினார்கள். அவையெல்லாம் மக்களிடையே பரவின.

இத்தகைய கற்பனையான தெய்வநிலை அறிவு பல சிந்தனையாளர்களைத் தூண்டி, அந்தக் கற்பனைக்கு மேலும் மேலும் கற்பனைகளை வளர்த்தன. இதனால் உண்மையான தெய்வநிலை மனிதனுக்கு எட்டாமல் சிதறுண்டு போயிற்று. ஒரே அருட்பேராற்றலாக உள்ள தெய்வத்திற்குப் பல பெயர்களும், பல கதைகளும் உண்டாயின.

எனினும், மனிதனுடைய தேடுதல் நிற்கவில்லை. அறிவின் உயர்நிலையில் உள்ளவர்கள் மனமும் இவ்வாறு வந்த விளக்கங்களைக் கொண்டு நிறைவு பெறவில்லை. அதே தொடரில்தான் நாமும் இறைநிலையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக நாம் பெற்றுள்ள விளக்கங்கள் ஓரளவு மனித மனத்துக்கு நிறைவு தரக்கூடியதாகவும், உடல், மனம், வாழ்க்கை வளம் இவற்றிறுக்கு ஏற்ற பாதுகாப்பும், பராமரிப்பும் அளிப்பதாகவும் இருக்கிறது.

எவரொருவர் உலகில் மனிதருடைய தேடுதலில் ஒரு விளக்கம் கண்டாலும் அவ்விளக்கம் உலகில் உள்ள அனைவருக்குமே போய்ச் சேர வேண்டும். இது ஒரு மாற்றமுடியாத, தவிற்க முடியாத இறைநீதியாகும். அந்த நீதியின் அடிப்படையில் நமது மனமும் ஆழ்ந்து எடுத்த முடிவுகளை இங்கு அனைவருக்கும் முதலில் விளக்குவோம்.

பிறகு எவருக்கு என்ன ஐயம் ஏற்பட்டாலும் நான் உணர்ந்த நிலையில் அதற்கேற்ற பதிலளித்து உலகுக்கு அறிவின் மூலம் நமது கடமை ஆற்றுவோம். இங்கு நாம் கொடுக்கக்கூடிய விளக்கங்கள் எவரொருவரையும் குறைகூறவோ, அவர்களுடைய தத்துவங்களை அலட்சியப்படுத்தவோ அல்ல என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

நாம் உலகத்தைப் பார்க்கிறோம். அதிலுள்ள பொருட்களையும், உயிரினங்களையும் அறிகிறோம். ஒவ்வொரு தோற்றமும், இயக்கமும் தனிச்சிறப்பாகவும், வியப்பளிக்கத் தக்கதாகவும் உள்ளது. இந்த உண்மையை உணரும்போது ஏதோ ஒரு மகாசக்தி உலகையும், மற்ற உயிரினங்களையும் அறிவின் திறன் மிகுதியால் உற்பத்தி செய்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற கருத்து உருவாகிறது.

இந்த நிலையில்தான், மனிதனிடம் தோன்றிய இறைநிலைக் கருத்து படைப்புத் தத்துவமாக உருவானது. சிந்தனையாற்றல் மிகும்போது இந்தப் படைப்புத் தத்துவமே தவறு என்று புரிந்து கொள்கிறோம். ஏனெனில், பேராற்றலாக உள்ள தெய்வம் ஏதோ ஒன்றைப் படைக்கிறது என்று சொன்னால் அது, அதற்குத் தேவையென்று விளங்குகிறது. அதே இடத்தில் ஒரு மதிப்புக்குரிய வினாவும் எழுகிறது.

இறைநிலை என்ற பேராற்றலுக்கு ஏதேனும் தேவை இருக்குமா? அதற்கான படைக்கும் பொருள் எதைக் கொண்டு படைத்திருப்பார்? அந்தப் பேராற்றலான இறைநிலைக்கு அப்பால், எடுத்துப் படைப்பதற்கு பொருள் ஏது? இந்த வினாக்கள் எழுந்த பின் படைப்பு என்ற தத்துவம் நம்ப முடியாததாக ஆகிவிட்டது. மேலும், எத்தனையோ தத்துவங்கள் உலக தோற்றத்துக்காக வெளியாகி இருந்தாலும், அனைத்துமே கூர்ந்த அறிவின் ஆராய்ச்சிக்கு ஒத்துவரவில்லை.

ஒவ்வொரு பொருளின் அமைப்பும், அதன் இயக்கச்சிறப்புகளையும் கூர்ந்து அறியும்போது இதை யாரோ ஒருவர் படைத்திருப்பார் என்று எண்ணுவதற்கு இல்லை. இதனால் நான் கண்ட முடிவு, எல்லாம் வல்ல முழுமுதற்பொருளானது (1) வற்றாயிருப்பு (2) பேராற்றல் (3) பேரறிவு
(4) காலம் என்ற நான்கு வளங்களைக் கொண்டு பெருவெளியாக நிறைந்து, விரிந்து திகழ்கிறது என்பதாகும்.

இந்த நான்கு தன்மைகளும் கொண்டு இறைநிலையின் இயல்பூக்க விரைவு என்னும் அறிவாற்றலால் ஒவ்வொரு பொருளும் தோன்றியும், சிறப்பாகவும் ஒழுங்குமுறை தவறாமலும் இயங்கி, விளைவுகளை அளித்துக் கொண்டு இருக்கின்றது என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது. முதலில் நம் ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்ள வேண்டியது இறைநிலையின் சிறப்புத் தன்மைகள், அவை வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற நான்கு வளங்களும் ஒன்றிணைந்த ஒரு தத்துவமே இறைநிலையாகும்.


இந்த உண்மைகளை வைத்துக் கொண்டு நாம் ஆராய்ந்தால் எங்கும் நிறைந்து மறைபொருளாகவும், இயக்க மூலமாகவும் உள்ள ஒரு ...பேராற்றல் சுத்தவெளியே என்று உணர்கிறோம். சுத்தவெளியானது எல்லையற்றது. மறைபொருளாக உள்ளது. எல்லாப் பொருளுக்கும் அடிப்படை ஆற்றலாகவும், இயக்கச் சிறப்பான அறிவாகவும் அமைந்து விளங்குகிறது. இந்தப் பேராற்றலைவிட அதிகமான சக்தி உடைய மற்றொரு ஆற்றல் பிரபஞ்சத்தில் உலகில் இருக்க முடியுமா? நமது ஆராய்ச்சியில்,

(1) வற்றாயிருப்பு : எப்பொழுதேனும் சுத்தவெளி அளவில் குறையுமா?

(2) பேராற்றல் : உலகிலும், பிரபஞ்சத்திலும் காணும் பொருட்கள் அனைத்துமே சுத்தவெளியின் நுண்பகுதிதான். ஆகவே அதில் தோன்றிய விண் முதற்கொண்டு அண்டங்கள் அனைத்தும் லேசாக தன்னில் மிதக்க விட்டுக் கொண்டு இருக்கிறது. இக்கருத்துத்தான் பேராற்றலாகும்.

(3) பேரறிவு : எந்தப் பொருளும் அமைப்பு, இயக்கச் சிறப்பு, விளைவு இவற்றில் எப்பொழுதும் மாற்றம் பெறாமல் சிறப்பு அடைந்து கொண்டே இருப்பதும், அவை அனைத்தையும் தன்னிலே லேசாக மிதக்க விட்டுக் கொண்டிருப்பதும் சுத்தவெளியைவிட வேறொன்றுமில்லை. பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருட்களும் முறை தவறாமல் இயக்கப்படுகின்றன.

(4) காலம் : இறைநிலைக்குத் தன்னிறுக்கமென்பதுதான் இயல்பான ஆற்றலாகும். இதனால் அது தன்னை இறுக்கிக் கொள்ளும்போது தானே உடைந்து நுண்துகளாகி அலை வடிவத்தில் அவை பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. அதே நேரத்தில் அத்தனைப் பொருட்களையும் லேசாகத் தன்னில் மிதக்க விட்டுக் கொண்டிருக்கிறது. தனது இறுக்க ஆற்றலாலும் அதுவே அதிகமான இடத்தில் விரிவடையும் போது விலக்கும் ஆற்றலாகவும் இருப்பதால் இறுக்கமும், விலக்கமும் சேர்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு நாம் கொடுத்திருக்கும் ஒரு பெயர்தான் காலம் என்பதாகும்.

ஆகவே இறைநிலையானது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற நான்கும் உடைய பெருவெளியே என்று உறுதியாக மதிக்கலாம். முற்காலத்தில் புகழ்வாய்ந்த ஒரு பேரறிஞர் விளக்குகிறார்.

“அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக்கிச்சை வைத்து உயிர்க்குயிராய்
தழைத்ததெது மன வாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோடிகளெல்லாம்
தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றதெது
எங்கெனும் பெருவழக்காய்
யாதினும் வல்லஒரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளதெது மேல்
கங்குல் பகல் அறநின்ற எல்லை உளதெது அது
கருத்திற் கிசைந் ததுவே
கண்டனவெலா மோனவுரு வெளியதாகவே
கருதி யஞ்சலி செய்குவாம்.

அதுவேதான் பிரபஞ்ச பேராற்றலான தெய்வம் என்று கூறுகிறார்.

இவ்வாறு சுத்தவெளிதான் தெய்வம் என்று பல அறிஞர்கள் முன்னமே கூறியுள்ளார்கள். காலத்தால் இக் கருத்து மங்கிப் போய் இறைநிலை தேடுவதில் மேலும் மேலும் மக்களிடம் ஆர்வம் அதிகரித்தது. இந்த நிலைமைக்கு காரணம் இறைநிலையானது புலன்களுக்கு எட்டாத மறைபொருள். அதோடு சுத்தவெளியான அப்பரம்பொருள் ஒரு வல்லமை பொருந்திய பேராற்றல் என்பதை ஒப்புக்கொள்வதில் குழப்பம் இருந்தது. இப்பொழுது நமது ஆராய்ச்சியில் சுத்தவெளி ஒரு பேராற்றல் என்பதைத் தெளிவாக விளக்குகிறோம்.

நாம் எங்கே வாழ்கிறோம்? பூமி உருண்டை என்ற உலகின் மீது, இந்த பூவுலகின் எடை என்ன இருக்கும்? பல கோடி டன்கள் இருக்கலாம் அல்லவா? இதே உலகம் ஆண்டுக்கு ஒரு முறை சூரியனை வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூரியனின் எடை எவ்வளவு இருக்கும்? பூமியைவிட சூரியன் 33.3 லட்சம் தடவை எடை அதிகமாக உள்ளது. இப்பொழுது யூகிப்போம். சூரியனும், பூமியும் சேர்ந்தால் மொத்த எடை எவ்வளவு இருக்கும்? நம்மால் சாதாரணமாக கணக்கிடவே முடியாது. எனினும், நமது யூகத்தால் ஓரளவு அனுமானம் கொள்ளலாம். சூரியனும், பூமியும் சேர்ந்து கணக்கிலடங்காத கோடி கோடி டன்கள் எடை இருக்கும் என்று நம்பலாம்.

அடுத்தபடியாக, சூரியனும் பூமியும் எங்கே இருக்கின்றன? இரண்டு கோள்களுமே சுத்தவெளியில்தான் லேசாக மிதந்து, உருண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. இது மறுக்க முடியாத உண்மை. இப்பொழுது சிந்திப்போம். ஒரு பொருள் மீது இன்னொரு பொருள் மிதக்கிறது என்று சொன்னால் எந்தப் பொருள் வலிதாக இருக்கும்? மிதக்கும் பொருளா அல்லது அதை தாங்கும் பொருளா? இந்த சிந்தனைக்கு எவரும் எளிதாகப் பதில் தரலாம். மிதக்கும் பொருளைவிட தாங்கும் பொருள்தான் வல்லமை உடையதாக இருக்க வேண்டும்.

இந்தக் கருத்தை மனதால் கணித்துப் பார்த்தோமானால் சூரியன், பூமி இரண்டையும் விட சுத்தவெளி அதிக வல்லமை உடையதுதான் என்று ஐயமின்றி விளங்கிக் கொள்வோம். இதனால், சுத்தவெளி எந்த ஆற்றலுமில்லாத ஒரு வெற்றிடம் அல்லது சூன்யம் என்ற கருத்து மாறிவிடுகிறது. நமக்குத் தெரிந்த சூரியக் குடும்பத்தையும் மேலும் ஆகாய வெளியில் உலவும் கோடிக்கணக்கான சூரியக் குடும்பங்களையும் லேசாகத் தாங்கிக் கொண்டிருக்கும் சுத்தவெளியின் பேராற்றலும் அதன் வல்லமையும் இணையற்றது என்று விளங்கிக் கொள்கிறோம்.

உண்மை இவ்வாறு இருக்க, ஏன் மனிதகுலம் சுத்தவெளி எந்த சக்தியுமற்றது என்று எண்ணவேண்டும்?


பேராற்றலான சுத்தவெளி இயல்பாகத் தன்னிறுக்க ஆற்றல் உடையது. தன்னிறுக்கத்தால் தானே பொடிப்பொடியாகி நுண்துகளான அலைவடிவம் பெற்றுவிட்டது. ஒவ்வொரு துகளும் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தால் விரைவாகச் சுழன்று கொண்டிருக்கிறது. நிலையாக இருந்த எல்லாம் வல்ல பரம்பொருள், நுண்துகளாகி அவற்றின் அதிவேக த...ற்சுழற்சியினால் அலைநிலை அடைந்த போது அது ஒரு மாபெரும் ஆற்றலாக விளங்குகிறது.

இந்த ஆற்றலில் பொருளாக உள்ளது இறைநிலை. துகளாகி அலைநிலை பெற்றதும் அதே இறைநிலைதான். தற்சுழற்சி விரைவால் அலைநிலை பெற்றதும் அதே இறைநிலைதான். எனவே இடமாகவும், பொருளாகவும், இயக்கமாகவும் மூன்று நிலைகளும் ஒன்று சேர்ந்த நுண்நிலை பெற்ற பாய்மப் பொருளான இறைநிலையானது ஆங்கிலத்தில் “Fluid” என்ற பெயர் பெற்றது. இந்த நிலையைத் தமிழில் “பாய்மப் பொருள்” என்று கூறுகிறோம்.

இறைநிலை ஆதிநிலையில் அசைவற்று இருந்து அதன் அழுத்தத்தால் ஏற்பட்ட இயக்க நிலைகளில் அலைநிலையாகி இந்தப் பேரியக்க மண்டலமான பிரபஞ்சம் அனைத்திலும் ஊடுருவி நிறைந்து இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது. இடமாகவும், பொருளாகவும், இயக்கமாகவும் உள்ள இந்தப் பாய்மப் பொருள் பிரபஞ்சம் முழுவதும் இல்லாத இடமே இல்லை. அதன் நுண்பகுதியான இறைத்துகள் ஒவ்வொன்றிலும் இறைநிலையின் ஆற்றல் அனைத்தும் அடங்கியுள்ளன. இப்பொழுது இறைநிலை தனியாக இல்லை. பொருளாகவும், இயக்கமாகவும் பிரிக்க முடியாதபடி ஒரே ஆற்றலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சர்வ வல்லமையுடைய பேராற்றலைக் ”காந்தம்” என்று அழைக்கிறோம்.

இப்பொழுது காந்தத்தின் தன்மையைத் தெரிந்து கொள்வோம். அது ஆதிநிலையில் இயக்கமற்ற மறைபொருளாகவும், அதற்கு இயக்கம் வந்தபோது தன்னிறுக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் இயக்கநிலைக்கும் வந்திருப்பதால், பேரியக்க மண்டலத்தில் காந்தம்தான் இணையற்ற பேராற்றலாக எங்கும் நிறைந்து ஊடுருவி இறைநிலையின் தன்மைகளையெல்லாம் வெளிப்படுத்துவதாக உள்ளது.

இத்தகைய புதிர் போன்ற பெரும் மாற்றத்தை, இறைநிலையின் சரித்திரப் பெருமையை, மனித மனத்தால் உணர முடியவில்லை. ஆயினும் அதே மனதை இறைநிலையின் ஆற்றலால் உருவாகிய காந்த ஆற்றலின் அழுத்தத்தின் மீது செலுத்திப் பழகிவரும் ஒரு பெருமையான நிகழ்ச்சியை அகத்தவம் என்றும், குண்டலினியோகம் என்றும் கூறுகிறோம். இயற்கையின் இயல்பான தன்மைகளில் ஒன்று பேரறிவு
(Omniscient Consciousness).

எல்லா இடங்களிலும், பொருட்களிலும் ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தெய்வீகப் பாய்மப்பொருள் காந்த நிலையாக இருந்தாலும் அது இடத்திற்கு ஏற்ப, காலத்திற்கு ஏற்ப பல வடிவங்களும், குணங்களும் பெற்று, எதுவுமாகும் ஆற்றல் பெற்றதாக இருக்கிறது. இறைநிலையானது பிரபஞ்ச பொருட்கள் அனைத்துக்கும் மூல ஆற்றலாக இருப்பதால் அதனை ஒரு தெய்வீகத் தத்துவமாக மதிப்பு கொண்டு வணங்குகிறோம். இருப்பு நிலை ஆக இருந்த இறையாற்றல், சுத்தவெளி என்ற பெயரோடு இருந்தது.

அதே ஆற்றல் தன்னிறுக்கத்தால் துகள்களாகி தனது சூழ்ந்தழுத்தத்தினாலேயே அலைநிலை பெற்றுப் பாய்மப் பொருளாகிச் சுத்தவெளியாக உள்ள இறைநிலையோடு நீக்கமற நிறைந்து ஒரு இணையற்ற பேராற்றலாக இருக்கிறது. இந்த ஆற்றலைத்தான் தெய்வமென்று கூறுகிறோம். கடவுள் என்றும் இறைநிலை என்றும் வழங்குகிறோம். ஆதியும், அனாதியுமான முழுமுதற்பொருள் என மதிக்கிறோம். இந்தப் பேரறிவு “இறைநிலை விளக்கம்” எனப்படுகிறது. நாம் ஊணர்ந்தவற்றை வரிசைப்படுத்திப் பார்த்தால்,
1. இறைநிலை
2. இறைத்துகள்
3. காந்தம்
4. அணு.

இறைத்துகள்கள் இறைநிலையின் சூழ்ந்தழுதத்தினால் கூட்டம் கூட்டமாக சேர்ந்து இயங்கும்போது அந்தக் கூட்டு இயக்கம்தான் அணுவென்று கூறப்படுகிறது.

இறைநிலையிலிருந்து அணுநிலை வரைக்கும் புலன்களுக்கு எட்டாத தத்துவங்களாகும். இவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், தெளிவதும், பிறர்க்கு விளக்குவதும் “தத்துவ ஞானம்” ஆகும். அணுநிலைக்கு மேலாக, அதன் பின்னர் நடக்கும் இயக்கங்களையெல்லாம் புலன்களால் உணரமுடியும். அவற்றின் நிகழ்ச்சிகளை மொழியில் விளக்கமுடியும்.

இத்தகைய ஆற்றலைத்தான், விண்முதற்கொண்டு உள்ள இவ்வாற்றல் ஆன, விண் + ஞானம் = விஞ்ஞானம் என்று வழங்குகிறோம். எனவே மறைபொருளான இறைநிலை முதற்கொண்டு அணுநிலை வரைக்கும் “மெய்ஞ்ஞானம்” என்றும், அணுநிலைக்கு மேலாக நடைபெறும் இயக்கங்களை “விஞ்ஞானம் என்றும், கூர்ந்த அறிவின் ஆற்றலை இரண்டு விதமாக வழங்கி வருகிறோம். அடுத்தபடியாக இறைநிலையின் தன்மாற்ற விளைவுகளில் அணுமுதலாக உண்டாகும் இயக்கங்களைப் பற்றி ஆராய்வோம்.

- வேதாத்திரி


 

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கொடுப்பதே திரும்பி வரும் :

"எதை கொடுக்கிறோமோ , அது தான் நமக்கு திரும்பி வருகிறது . துன்பத்தைக் கொடுத்தால் துன்பம் தான் வரும்.அன்பைக் கொடுத்தால் அன்பு வரும்.இந்த இறைநீதியை உணர்ந்து அதன் வழியே அறநெறி வாழ்க்கை வாழ்ந்தால் நாம் அமைதி, இன்பம் , ...பேரின்பம் அடையலாம்.

ஒருவர் மேல் குறையைச் சொல்வதை விட , அவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் செயல்களையும் சுட்டிக் காட்டி அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறும் பொழுது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மன அமைதி வருகிறது . சந்தோஷமாகவும் இருக்கலாம்."

--அருள் தந்தை

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஐயா, நல்லவர் செத்துப் போகிறார்கள். தீயவர் வாழ்கிறார்கள் ஏன் ?

இது என்ன? தீயவர்கள் மட்டும் சாவதில்லையா? நல்லவர்களாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் மரணம் உண்டு. பிறந்து விட்டால் செத்து தான் ஆக வேண்டும். எப்படி வாழ்கிறோம் என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. வாழும் காலத்தில் என்ன செயல் செய்கிறோமோ அதற்குத் தகுந்தவாறு விளைவு உடனோ பின்னோ வருகிறது.

சனி, 9 ஆகஸ்ட், 2014

வினா: சுவாமிஜி, தர்மம் செய்வதும், தர்மம் வாங்குவதும், மற்றவருக்காக இறங்குவதும் மனிதனின் பலவீனத்தைத் தானே காட்டுகிறது ?

 
மகரிஷியின் விடை:
...
தர்மம் செய்வதும், பிறர் துன்பம் கண்டு இறங்குவதும் தான் மனிதன் இயல்பாகும். இது பலவீனம் அல்ல. ஆன்மாவின் பலமாகும். வாங்குவதை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும். தேவையுள்ள போது வாங்குவதில் தவறில்லை. கொடுப்பவரின் மனத்திருப்திக்காகவும் வாங்கலாம்.
ஒருவர் பிச்சை எடுக்கிறான் என்றால் அங்கு தான் ஏழ்மை மற்றும் பலவீனம்(Poverty and Weakness) வருகிறது. பட்டினி கிடப்பவனுக்கு உணவு அளிக்க வேண்டியது தான். ஆனால் நன்றாகச் சாப்பிட்டு விட்டு இருப்பவனுக்கும், வீட்டில் சென்று அறுசுவை உணவு உண்பவருக்கும் சாப்பாடு போடுவது தர்மம் ஆகாது.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென்றால், அதற்கு என்ன வழி..?

மூன்று பண்புகள்

1. விட்டுக்கொடுப்பது

2. அனுசரித்துப்போவது...

3. பொறுத்துப்போவது

இவை மூன்றும் இல்லையென்றால் இல்லறம் இன்பமாக இருக்காது

இந்த இடத்தில் ஒரு பேராசிரியைக்கு ஒரு சந்தேகம்...., எழுந்து கேட்டார் அவர்...

“விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...யார் விட்டுக்கொடுப்பது ? கணவனா ? மனைவியா ? பிரச்சினையே அங்குதான் ஆரம்பம்..!!”

அதற்கு மகரிஷி...

“யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ,அறிவாளியோ.. அவர்கள்தான் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்துப்போவார்கள்”

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சுத்தவெளி சுத்தவெளியாகவே இருந்திருக்கலாம் அல்லவா? அது ஏன் இயக்கம் பெற்று, பரிணாமம் பெற்று வளர்ந்தது? அதன் ரகசியம் என்ன?


மகரிஷி..
...
படுத்திருக்கிறீர்கள்..! நல்ல ஓய்வு அப்படியே படுத்திருக்க வேண்டியதுதானே ? ஏன் எழுந்தீர்கள்..?
உங்கள் உடலாற்றல் வேகம் தானாகவே எழச்செய்கிறது.
அதேபோல் சுத்தவெளி தன்னிறுக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றல் பெற்றது., அது எப்போதுமே தானாகவே விரிந்துகொண்டே இருக்கக்கூடியது. அதனால் அதிலிருந்து மற்றவை தோன்றித்தான் ஆகும்..!!

 

புதன், 6 ஆகஸ்ட், 2014

ஒருவர் இறைநிலையை அடைந்துவிட்டார் என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது ? பிறரால் அதை அறிய முடியுமா..?


“மனதில் களங்கம் இருக்காது; இன்னொருவர் பொருளை பறிக்கவேண்டுமென்ற எண்ணம் இருக்காது; இன்னொருவருக்குத் துன்பம் கொடுக்க விருப்பம் இருக்காது; “
இதைக்கொண்டு அவர் ”இறைநிலையை உணர்ந்து விட்டார்” என்று அறிந்துகொள்ளலாம்
இரண்டாவதாக இறைநிலையை உணர்ந்துவிட்டால் அவர் ரொம்பநாள் வாழவும் மாட்டார்...!
ஏன் வாழமாட்டார்...? என்றால் ஆசை இல்லை ஆசை இருக்கிற வரைக்கும் தான் வாழ்கிறார்
-வேதாத்திரி மகரிஷி
 

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

வெறுப்பின்மை :


வெறுப்பு என்பது சினம் என்னும் மனநிலையின் மறைமுகக் குறிப்பு ஆகும். வெறுப்புணர்ச்சியென்பது, பிறரை, பிறபொருளை நம் வாழ்விலிருந்து குறிப்பிட்ட காலத்துக்கு அல்லது வாழ்நாள் முழுவதும் ஒதுக்கிவிடும். இது வெறுப்புணர்ச்சியின் இளநிலையென்று கூறலாம். அதன் முதுநிலையானது பிறரை அல்லது பிறபொருளை துன்புறுத்தல் அல்லது அழித்தல் ஆகும்.
...
இவ்விரண்டு நிலைகளுமே மனித வாழ்வின் நலத்தையும், வளத்தையும் அளிக்க வல்லவை. இதனால் வெறுப்புணர்ச்சியற்ற மனநிலையை அடையவும், காக்கவும் பயிற்சி வேண்டும். வெறுப்பு ஒழிந்தால் மிச்சமிருப்பது என்ன நட்பு, அன்பு, கருணை இவைதானே.
வெறுப்பு ஒவ்வொரு நண்பரையும், குடும்ப உறுப்பினரையும் மற்றும் பொருட்களையும் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு நாம் ஒதுங்கி விடுகிறோம். நாம் வாழ்வதற்கு உலகம், சமுதாயம், உறவினர்கள், நண்பர்கள் குறைந்துவிடும். வாழ்வின் இன்பம் இழந்து, அமைதியிழந்து தனித்து நின்று துன்புற வேண்டியதே, மாக்கோல மதிவிருந்தில் ஒரு கவி இருக்கிறது. அது விருப்பத்தை ஒழித்துவிட முயலவேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே இனிமை நல்கும் என்பதாகும்.
ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்களுக்கு எந்த மனிதர் பேரில் எந்தப் பொருள் பேரில் வெறுப்பு இருக்கிறது என்று கண்டு அதைப் போக்கிக் கொள்ளுங்கள். துன்பம் தருவனவற்றை விட்டு ஒதுங்கியிருக்கலாம். உணர்ந்து தெளிவோடு வெறுப்புக் கொள்ளத் தேவையே இல்லை. நீங்கள் சிந்திக்க சிந்திக்க இக்கருத்து உங்கள் மன ஆழத்திற்குப் போய் ஒரு மதிப்புடைய நல் விளைவை வாழ்வில் உண்டாக்கும்.
வெறுப்பின்மைதான் சிரித்த முகத்தைக் கொடுக்கும். அந்த முகவே அன்பு ஒளிர் விளக்காகும்.
–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

சுவாமிஜி, மொழிவெறி கூடாதா ?

மகரிஷியின் விடை:
மொழிவெறி மட்டுமல்ல. எதன் மீதும் வெறி கூடாது. அது உணர்ச்சிவயப்பட்ட நிலை. அது தனக்கும் சமுதாயத்திற்கும் துன்பத்தையே விளைவிக்கும்.
மதுவெறி ஜீரணமாகும் வரை இருக்கும். காமவெறி விந்து உற்பத்தி குறையும் வரை இருக்கும். மதவெறி அறிவின் விளக்கம் கிடைத்தால் தணிந்து விடும். புகழ் மற்றும் பணவெறி உடல் வலிவு உள்ளவரை நீடிக்கும். நாட்டுவெறி, மொழிவெறி அந்த நாடோ அல்லது மொழியோ அழியும் வரை இருக்கும்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

திருத்தமும் வருத்தமும்




பிறரிடம் உள்ள குறைகளுக்கு முழுக்க முழுக்க அவர்களே தான் காரணம் என்றாலும் கூட, அந்தக் குறைதான் நம் சினத்திற்கும் காரணம் என்றாலும் கூட, சி
னத்தினால் அவர்களை இதுவரை எவ்வளவு திருத்தியிருக்கிறோம் என்று பார்த்தால் ஓர் அங்குலம் கூட இருக்காது. அல்லது ஒரு வேளை அவர்கள் நமக்குப் பயந்து கொண்டிருக்கலாம். ஆனால், திருந்தி இருக்க மாட்டார்கள்.

"நானும் முதலில் கோபம் கொண்டதில்லை. தவறு செய்யும் போது நல்லவிதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆனால், அந்த முறை சரிப்பட்டு வரவில்லையே! இனி, கோபமும் கூடாதென்றால் அவர்களை எப்படித் தான் திருத்துவது?" என்று ஒருவர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அவருக்குச் சொல்வதெல்லாம் சினத்தினால் திருத்தம் வரவே வராது. சினத்தினால் ஏதாவது வரும் என்றால் அது வருத்தமாகத் தான் இருக்கும். மாறாக, அன்பாய் முறையோடு பலமுறை கனிவாகக் கூறினோம் என்றால் அவர்கள் திருந்தவும் வழியிருக்கிறது.

முக்கியமாக, அவர்கள் மனம் புன்படும்படியாகக் கூறக்கூடாது. தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல் அறிவுரை இருக்கக் கூடாது. என், தவறைச் சுட்டிக் காட்டுவது போலவும் கூட இருக்கக் கூடாது. "அப்படிச் செய்ததை இப்படிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்; இனிமேல் இந்தக் காரியத்தை இந்த விதமாகவே செய்து நன்மை அனுபவிப்போம்" என்ற விதமாகத் தான் அறிவுரை இருக்க வேண்டும். கூடவே, உங்கள் தவங்களில் அவர்கள் திருத்தத்திற்கான வாழ்த்தையும், சங்கர்பத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த முறையில் சிறிது கால நீடிப்பு ஏற்பட்டாலும் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். பலர் ஏற்கனவே இம்முறையால் வெற்றி கண்டாயிற்று. எனவே, பிறரைத் திருத்துவது எப்படி என்பது இங்கு முக்கியமில்லை. நமது திருத்தந்தான் முக்கியம்.


-* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
விழிப்பு நிலை சீவன்முக்தி:
"செயல்களால் சிந்தனையும் அதன் உயர்வும்
சிந்தனையால் செயல் பலவும் ஒன்றால் ஒன்றாம்
செயல் எண்ணப் பதிவுகளே மனிதன் தன்மை
சிந்திப்பீர் ! இதனைவிட வேறு நீயார்?
செயல் எண்ணம் பழக்கவழி ஓடும் மட்டும்
சிற்றறிவாய் துன்புற்று வருந்தும் சீவன்
செயல் எண்ணம் இரண்டினிலும் விழிப்பு கொண்டால்
சிவத்தன்மை சீவனில் பேரறிவாய் ஓங்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வினா: சுவாமிஜி, நேரில் போய் ஒருவரை வாழ்த்தினால் அதைக் கேட்பவர்கள் நமது நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ள வாய்ப்பாகுமல்லவா ?


மகரிஷியின் விடை:

உண்மை தான். எனினும் நம் வாழ்த்தினை அவர்கள் செவிமடுக்க வேண்டுமே! ஏற்பு நிலை இல்லாவிட்டால் நமது எண்ணத்துக்குள்ளாக வாழ்த்துவதே சிறந்தது. நேரில் வாழ்த்துவதைச் சிலர் விரும்பமாட்டார்கள். மனதால் நாம் வாழ்த்துவதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள். உயிரற்ற பொருட்கள், செடிகளிடம் கூட வாழ்த்து பயனளிக்கிறது.

சனி, 2 ஆகஸ்ட், 2014

There is nothing can be wrong in the nature

 

There is nothing can be wrong in the nature. Our previous karma only determines and stands in front of our present karma. So lets change our present.

"Fraction demands, totality supplies"

-Vethathiri Maharishi

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

How to know the secrets of nature?

 

If we want to know the secrets of Nature, we need not go anywhere - neither to the forests, nor to the deserts; neither to the gleaming mountain-tops nor to the coral sea-beds. All the secrets of nature are locked up within us; they could be discovered within our own minds. If only we dive within ourselves, Nature will unveil its secrets without restraint or reserve. The more we understand the wonders of the Mind, the greater will be our happiness, satisfaction and peace.

-Vethathiri Maharishi