Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 13 ஜூலை, 2016

சிற்றறிவு பேரறிவுடன் இணைந்து செயலாற்றப்படவேண்டும் என்பதை விளக்க வேண்டுகிறேன்.




மகரிஷி: புலன் இன்பத்தில் மட்டும் மனம் நிலைத்து இருக்கின்றபோது, மனம் அதில் எல்லை கட்டி உணர்ச்சி நிலையில்தான் இயங்கும். அதுதான் சிற்றறிவு; சிற்றின்பம் என்று சொல்வது.
பேரறிவு எனபது “நான் யார்” என்று தெரிந்து கொண்ட பிறகு வந்த அறிவு. எல்லாம் வல்ல இறைநிலையே இங்கு அறிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே போல எல்லாப் பொருளிலேயும் அறிவாக இருப்பது அதுவே தான் என்றபோது மனம் விரிந்து அந்தப் பெருள்நிலையோடு, ஆதி நிலையோடு, பிடிப்புகொள்கிறது. அந்தப் பிடிப்பிலிருந்து பார்க்கிறபோது, எல்லாப் பொருளும் ஒரே இடத்திலிருந்துதான் உற்பத்தியாகி இயங்கிக் கொண்டிருக்கின்றன. எந்த இடத்திலும் உணர்ச்சி ஒன்றுதான். அதனால்தான் அந்த உணர்ச்சிக்கு ஒத்தும், உதவியும் வாழவேண்டும் என்கிற தெளிவு வருகின்றபோது, இது பேரறிவு.
அப்படி இல்லாமல் எனக்கு இன்பம் வேண்டும். யார் என்ன ஆனாலும் சரி. யார் என்ன சொன்னாலும் சரி என்று குறுகியிருக்கின்றபோது இது சிற்றறிவு. நாம் இப்போது பெரும்பாலும் சிற்றறிவு நிலையிலிருந்து பழகி விட்டோம்.
அப்படியின்றி அடுத்து அடுத்து எந்த காரியம் செய்தாலும் மற்றவருக்கு முரண்பட்டு இல்லாமல், பிற்காலத்தில் முரண்பாடு ஏற்படாதவாறு, இறை நிலையினுடைய ஒழுங்கு அமைப்புக்கு கேடில்லாமல் நான் வாழவேண்டும் என்ற மன விரிவோடு செய்கிறபோது, பேரறிவோடு இணைந்து செயல்படுகிறோம்.
அது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் அடுத்தடுத்து தியானம் செய்கிறபோது மனம், பதிவு செய்யக்கூடிய புலனறிவைக் கடந்து நல்லறிவிலே நிலைபெறுகிறது.
புலனறிவில் நிற்கும்போது மனம் இறைநிலையை நெருங்க முடியாதவாறு உணர்ச்சி நிலையிலிருக்கும். அது இறைநிலையை நெருங்க நெருங்க சிக்கலுக்கு விடை கிடைக்கும். இதுதான் பேரறிவோடு இணைவது.
அப்படி கிடைக்கக்கூடிய விடையை சிந்தித்துப் பார்த்தால் அடுத்து இறைநிலையிலேயே நின்று விளக்கங்களை பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். பழகப் பழக இதில் வெற்றி கிடைக்கும்.
வாழ்க வளமுடன்

செவ்வாய், 12 ஜூலை, 2016

சுவாமிஜி, மைய ஈர்ப்பு சக்தி (Gravitational Force) பற்றி தங்கள் கருத்தென்ன?...



பதில்: இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் எனும் இறுக்கும் ஆற்றலால் அணு முதற்கொண்டு அண்டம் ஈராக சுழற்சி வேகம் கொண்டு அவைகளின் மையப்பகுதி நெருக்கமுறுவதை ஈர்ப்பு ஆற்றல் (Gravitational Force) என்கிறோம். ஆனால் அது ஈர்க்கும் ஆற்றல் அல்ல. இறுக்கும் ஆற்றல் தான். சுழற்சியின் போது தோன்றும் தள்ளுவேகத்தை இறைவெளியின் சுற்றி அழுத்தக் கூடிய ஆற்றல் குறைக்கிறது. சுற்றியிருக்கக் கூடிய இறுக்க ஆற்றல் தள்ளும் ஆற்றலையும் மையத்தில் கொண்டு வந்து ஈர்ப்பு ஆற்றலாகச் சேர்த்து விடுகிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, “வேதான் துகள்” எனும் பரமாணுவின் தன்மைகள் யாவை?



பதில்: சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தும் தன்மையால் வேதான்கள் கணக்கிலடங்காத வேகத்தில் தம்மைத்தாமே சுற்றிக் கொள்கின்றன. அதனால் அவை கோள வடிவமைப்பை பெறுகின்றன. வேதான் சுழற்சியால் ஏற்படும் விரிவலை விலக்கும் ஆற்றலாக எதனையும் வெளித்தள்ளிக் கொண்டேயிருக்கிறது. இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தால் அது தன் மையப்பகுதியை நோக்கி நெருக்கமுறுகிறது. அங்கு தள்ளும், கொள்ளும் ஆற்றலாகிய காந்தம் மலர்கிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

திங்கள், 11 ஜூலை, 2016

மூலாதாரச் சக்கரம் உடலில் எங்கு அமைந்துள்ளது? உடலின் முன்புறமா? பின்புறமா?



பதில்:
மலத்துவாரத்திற்கு ஒரு அங்குலம் மேலே பால் சுரப்பியில் அமைந்துள்ளது. தவம் செய்யும்போது மூலாதாரம் அமைந்துள்ள உடலின் மையப்பகுதியில் மனம் செலுத்த வேண்டும். முன்புறமோ,பின்புறமோ அல்ல.
“அஸ்வினி முத்திரை” பயிற்சி செய்யும்போது மூலாதாரத்தின் மையம் இயல்பாக உணரப்படும். குதிரை சானமிடும்போது தன ஆசனவாயை அசைக்கும் விதமே அஸ்வினி முத்திரை.
இந்த முத்திரையை செய்வதன் மூலம் ஆற்றல் இயல்பாக மூலதார சக்கரத்திற்கு செல்லும்

“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?

சந்தேகங்களுக்கு விளக்கம். – யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி – ANBOLI JAN. 1987
கேள்வி:
“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?
...
பதில்:
இதற்கு விளக்கம் “குரு, தன்னை பின்பற்றுகிறவர்கள் ஆன்மிகத்தில் உயர வகுத்து கொடுத்துள்ள பாதை” என்பதாகும்.
மணலில் நடக்கும் மனிதன் தன பாதச்சுவடுகளை விட்டுவிட்டுசெல்லும்போது அதை பின்பற்றி வருகிறவர்களுக்கு அது பெரிதும் உதவும்.
“குருவின் பாதங்கள்” எனபது “குரு வகுத்து கொடுத்த ஆன்மிக பயிற்சிகள், தத்துவங்கள்” என்று கருதவேண்டும்.
குறிப்பு:
இந்த குருவின் பதிலை ஏற்று குரு பாதங்களை படமாக போட்டு அதற்க்கு பூ அலங்காரம் செய்வதை விடுத்து, பயிற்சிகளை செய்வதிலும் மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்தி குருவுக்கு உண்மையான சேவை செய்வோம்.

ஞாயிறு, 10 ஜூலை, 2016

சுவாமிஜி! உலகில் நான்கில் மூன்று பகுதி கடலாக இருந்தும் மழை அடிக்கடி பொய்ப்பது ஏன்?


பதில்: உலகில் 72 சதவீதம் நீரால் சூழப்படுள்ளது. மீதம் 28 சதவீதம் தான் நிலம். உலகிற்கு மழை எவ்வளவு உண்டாகிறது என்றால் சூரிய வெளிச்சம் கடல் மீது எந்த அளவிற்குப்படுகிறதோ அந்த அளவிற்கே நீர் ஆவியாகி மேலே செல்கிறது. ஆவியான கடலைத்தான் வானத்தில் மேகம் என்கிறோம்.
ஆவியாகி மேலே சென்ற நீர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இறங்கித்தானே ஆகவேண்டும்! மழையும் பெய்துதானே ஆக வேண்டும். பெய்கிறது; ஆனால் தேவையில்லாத இடத்தில் பெய்கிறது. அதாவது கடலிலேயே பெய்து விடுகிறது. அப்படியானால் இயற்கைகுப் பாரபட்சமா? இல்லை; மனிதனைத் தண்டிக்க வேண்டும் என்று அது அவ்வாறு செய்வதில்லை.
இயற்கை பொய்ப்பதற்கு மனிதனுடைய எண்ணம் தான் காரணமாக இருக்கிறது. எண்ணமே இயற்கையின் சிகரமாகும். மனித மனம் ஒருவருக்கொருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது கிடைக்க வேண்டிய தெல்லாம் கிடைக்கும். ஆனால் ஒருவர் மற்றவருக்கு அது கிடைத்துவிடக்கூடாது, அவன் நம்மை விட நன்றாக இருந்து விடக்கூடாது என்று சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இயற்கை என்ன செய்யும்?
சில நூறு பேர்களை ஒரு சேர நேசிக்கிறவர்கள், உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அப்படி யாரேனும் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவரால், சிறிது லாபம் அடைகின்றவர்கள் தவிர வேறுயாருமில்லை.
இப்படி ஒருவருக்கொருவர் சபித்துக் கொள்ளும் போது, அதற்கு இயற்கையில் ஒரு விளைவு வரவேண்டும் அல்லவா? இயற்கையின் கருணைச் செயல் அங்கு தடைப்படுகிறது. அதனால் மனிதன் வாழாத இடத்தில், மழை பெய்துவிட்டுச் செல்கிறது. மனிதமனம், தானே இறையாற்றலாக உள்ளதை உணர்ந்து, தன்னால் இயற்கைக்குக் களங்கம் வராது இருக்க நல்லதையே எண்ணிப் பழக வேண்டும்.
முழுமையின் பின்னமாக மனிதமனம் முழுமையாலே இணைக்கப் பட்டுள்ளது. அங்கு முனைப்புத் தோன்றி அன்பு வரண்டுவிடும் பொழுது, இயற்கையின் சீர்மையும், ஒழுங்கும் கெடுகிறது. அவ்வாறு கெடாமல் இருக்க மனிதன் உயிர்களிடம் வற்றாத அன்பு செய்தல் வேண்டும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி அவர்களே! “வடக்கில் தலை வைத்து வாழ்ந்தவர்கள் இல்லை” என்கிறார்களே, அது ஏன்?


பதில்: பூமியை சரிபாதியாகப் பிரித்தால் அதன் பூமத்திய ரேகையில் (Equator) இருந்து வடக்குப் பகுதியில் கெட்டிப் பொருள் அதிகமாக இருக்கும். தெற்குப் பகுதியில் கெட்டிப் பொருளைவிட லேசான நீர் பகுதி அதிகம். அதனால் காந்த ஈர்ப்பு சக்தியின் திணிவு (Intensity) வடக்குப் பகுதியில் அதிகமாக இருக்கும்.
வடக்கில் தலை வைத்துப் படுப்பதால் ஈர்ப்பு சக்தி காரணமாக உடல் முழுவதும் உள்ள சீவகாந்த சக்தி தலைப் பக்கமாக ஈர்க்கப்படும். அது நுண்மையான மூளைப்பகுதிக்கு நலனளிக்காது என்பதால் வடக்கில் தலைவைத்துப் படுக்கலாகாது என்கிறார்கள்.
நிற்கும் பொழுதும், நடக்கும் பொழுதும் நம் எடையை கால் பகுதி தாங்கிக் கொண்டுள்ளது. சீவகாந்த சக்தியின் ஈர்ப்பு உடலில் கால்பகுதி வழியாக பழகிவிட்ட ஒன்றானதால் அதனால் பாதிப்பு இல்லை. அதனால் கால் பகுதியை வடக்கிலும், மூளைப் பகுதியைத் தெற்கிலும் வைத்துப் படுப்பது நலமளிக்கும் என்பதை விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, ஒரு செயலின் பதிவு எவ்வளவு காலம் தொடரும் ஒரு செயலுக்கும், அதன் விளைவுக்கும் இடையே கால நீளம் உண்டா?


பதில்: காலம் என்பது தனியாக எங்கும் இல்லை. பூமியின் சுழற்சியை வைத்து காலம் எனச் சொல்கிறோம். செயல் என்பது இயக்கம், ஒரு இயக்கத்தின் தொடர் நீட்டத்தைக் கணிக்கும் அளவு காலமாகும். இயக்கமும் காலமும் தனித்து இல்லை, பரமாணுவின் இயக்கம் தொடரும் வரை அதன் காந்தப் புலத்தில் பதிவான பதிவுகளும் தொடரும்.
வினை விளைவாகும் காலத்தைக் கணிக்க இயலாது. அது வினை ஆற்றுபவர் நோக்கம், இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருளுக்கேற்ப இன்ப, துன்ப, அமைதி பேரின்ப உணர்வுகளாக வருகின்றன.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜீ, நீதிபதி குற்றவாளிக்குத் தண்டனை தருகிறார். அத் தண்டனையைப் பெறும் கைதி நீதிபதிக்குச் சாபமிடுகிறான். அது நீதியைப் பாதிக்காதா?


பதில்: அங்கு பாதிப்பு இல்லை. நீதிபதி தண்டனை தருவது தவறு செய்தவரைத் திருத்த வேண்டும் என்பதற்காகத் தான். அவரைத் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. கைதி சாபமிடுவது அவன் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சினத்தால் வருவதுதானே தவிர, மனம் நுணுகி இறைநிலைத் தெளிவு பெற்ற குணத்தால் வருவதல்ல. அந்நிலையில் சாப அலை பாதிக்காது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, சுத்தவெளி என்பது அமைதி நிலையில் உள்ளதா? அதில் சூழ்ந்தழுத்தும் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது. அது இயக்கமின்றி அமைதி நிலையிலேயே எப்பொழுதும் இருந்து இருக்கலாமே?


பதில்: சுத்தவெளி அமைதியாய் இருக்கிறது என்றால் அசைவற்றது (Static) என்று பொருளல்ல. அதில் ஆற்றல் நுண்ணியக்க நிலையில் (Kinematic Quivering State) இருக்கிறது. அது தன்னையே இறுக்கிக் கொள்ளக்கூடிய (Self Compressive Surrounding Force) ஆற்றலாகவும் உள்ளது. அந்த ஆற்றலானது எப்போதும் அதிகரித்துக் கொண்டே (Ever increasing) இருந்து கொண்டு இருக்கிறது. இந்தப் பண்பினால் சுத்தவெளி அமைதி நிலையில் இருக்க முடியாது.
அதனுடைய துண்டுபட்ட பகுதியாகிய நாம் அமைதியாக இருக்கிறோமா? ஒரு சில நேரங்களில் அமைதியாக இருப்பதாகக் கூறுகிறோம். ஆனால் அப்பொழுதும் உடலியக்கம் அல்லது மன இயக்கம் நடந்து கொண்டு தான் உள்ளது. சுத்த வெளி அமைதி நிலையிலேயே இருந்திருக்குமானால் பரிணாமமும் இல்லை. இந்த பிரபஞ்சமும் தோன்றியிருக்காது. நாமும் இருந்திடுக்க மாட்டோம்.