Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 7 மே, 2015

புரிந்து கொள்ளவேண்டியது - "உடல், உயிர், அறிவு, பரம்" :


 "ஆன்ம லயம் ஏற்பட்டு நிலை பெற்றதும் ஆன்மாவைப் பரத்தில் லயமடையச் செய்ய வேண்டும். இப்படி அலையும் மனதை அடங்கும்படி செய்யும் எளிதான தவமுறையே நமது "குண்டலினியோக" முறையாகும். 'அறிவு'தான் புலன் வழிவிரிந்து செயல்படும் போது மனமாகிறது. 'அறிவு'தான் ஆன்மாவில் ஒடுங்க...ும்போது பரமாத்மாவாகிறது. அந்தந்த நிலையிலுள்ள அதிர்வலைக்கேற்ப அது வெவ்வேறு பெயர் பெறுகிறது. அவ்வளவுதான். எங்கும் நிறைந்து இருப்பது ஒரே உயிராற்றல் தான். அதன் வியாபக எல்லைக்கேற்றவாறு அது 'பரம்' என்றோ, 'மனம்' என்றோ 'அறிவு' என்றோ பெயர் பெறுகிறது.
.

ஆகவே ஒருவர் அமைதியோடும், இன்பத்தோடும் வாழ்க்கை நடத்த வேண்டுமென்றால் "உடல், உயிர், அறிவு, பரம்" ஆகிய நிலைகளையும் அவற்றிடையே உள்ள சம்மந்தங்களையும் நன்கு புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். இந்த நிலைகளைப் புரிந்து கொள்ள உதவுவதைத்தான் "உலக சமுதாய சேவா சங்கம்" 'குண்டலினியோக தவப்' ( Simplified Kundalini Yoga) பயிற்சியின் மூலம் தனது பெருநோக்கப் பணியாகக் கொண்டிருக்கிறது".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக