Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 22 மே, 2015

தற்சோதனை

"தற்சோதனை மனித சமுதாயத்திற்கு, மனித இனத்துக்கு மிக மிக அவசியமானது. இதுவரையில் நாம் பழக்கத்தின் வழியில் சென்று வருகின்றோம். இந்தப் பழக்கத்திலிருந்து ஒரு மாற்றம் பெற வேண்டுமானால் ஒரு சிறந்த வாழ்க்கை நலம் தரும் விளக்கம் வேண்டும்.
.
"நாம் எதற்காக வாழ்ந்து வருகின்றோம்? எங்கிருந்து வந்திருக்கிறோம்? எங்கே போகிறோம் ? நம்முடைய வாழ்வின் நோக்கம்தான் என்ன?" என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு பார்த்தோமானால் இன்று இல்லாவிட்டாலும்கூட, வரவர சிறுகச் சிறுக நம் அறிவுக்குள்ளாகவே இயற்கை ரகசியங்க...ள் எல்லாம் புதைந்து இருப்பதனால் வாழ்வுக்கான விளக்கங்கள் தெளிவாகத் தெரிந்துவிடும். ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனித வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும். எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி, வந்து, இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை உணர்ந்து அதோடு லயமாகி இணைந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும்.
.
இதுதான் பிறவியின் நோக்கம் (This and this alone is the purpose of life). அதற்குத் தடையான போக்கு நம்மிடத்திலே என்னென்ன உண்டு என்பதைக் கண்டுபிடித்து, படிப்படியாக அதையெல்லாம் எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகத்தை (Simplified Kundalini Yoga) பயின்று அதன் மூலம் மாற்றி நம்மைத் திருத்திக்கொண்டு, உயர்ந்து, அந்த நிலையை அடைய வேண்டும். இந்த உணர்தலும் அப்படி உணர்ந்த வழியே திரும்பி உயர்ந்து அதுவாகவே மாறுவதும் தான் ஆன்மீக வாழ்வு.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக