Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 31 மே, 2013

அறிஞர் போதனைகள் :



சின்ன வயது குழந்தைகளுக்கு உடைகளைத் தைக்கும் பொது அவர்களின் வளர்ச்சியை ஞாபகத்தில் கொண்டு தாராளமாக தைத்துக் கொள்ளுகிறோம். துணியின் உறுதி அதிகமாக இருந்தால் இந்த தாராளம் சற்று அதிகமாக இருக்கும். இதனால் சில உடைகள் தைக்கும் பொது பொருத்தமில்லாமலும் தோன்றலாம். எனினும், போகப்போக அதன் உபயோகம் நீண்ட காலத்திற்குப் பொருத்தமானதாகவே இருக்கும்.

இதுபோன்றே அறிஞர்கள் உலக மக்களுக்குத் தரும் அறநெறிப் போதனைகளும், நல் வாழ்விற்கேற்ற திட்டங்...களும் அக்காலத்திற்குச் சிறிது பொருத்தமில்லாமலும், அவசியமற்றவை என என்னும் படியாகவும் இருக்கலாம்.

கடந்த கால அனுபவங்கள், எதிர் கால விளைவுகள், தற்கால சூழ்நிலைகள் என்ற மூன்றையும் இணைத்து யூகிக்கும் திறனான 'முக்கால ஞானம்' என்ற அகன்ற நோக்கில் அவர்கள் திட்டங்களும், போதனைகளும் உருவாவதால் குறுகிய நோக்கமுள்ள மயக்கவாதிகளும், பாமரர்களும் அக்கருத்துக்களில் அடங்கியிருக்கும் நன்மைகளை உடனே எளிதில் புரிந்து கொள்ள முடியாது. சிறந்த சிந்தனையாளர்களும், நீண்ட எதிர்காலமுமே அத்தகைய அறிஞர்கள் கருத்துக்களைத் தெளிவாக விளக்கம் செய்ய முடியும்.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"அறிவை அறிவால் அறிவதே அறிவு.
அப்படி அறிவதற்கான அறிவைத்
தருவது தான் அறக்கல்வி".

.
"சமரசம், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம்
இவையே மனித சமுதாயத்தில் இணக்கத்தை ஏற்படுத்த முடியும்".

.
அறிஞனின் வாழ்வு :

"ஓவியங்கள் வரைகின்ற கலைஞன் எண்ணி
ஒரு உருவம் வரைந்து அதன் உளபாவத்தில்
காவியங்கள் வர்ணிக்கும் முறைக்கு ஒத்த
கருத்தொளிரக் கோடுகளைத் தேவைக் கேற்ப
மேவியங்கே பலஜாலம் காட்டுதல் போல்;
மேல்நிலையில் வாழ் ஞானி உலகோர் வாழ்வில்
நாவியங்கி ஒலிக்கும் சொல், நன் நடத்தை
நட்பொழுக்கம், இவற்றால் பன்னலம் விளைப்பார்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

அருள்துறையின் கருப்பொருள் :



அறத்தைக் காக்க வல்ல சிந்தனையாளர்கள், ஆட்சிப் பொறுப்பு உடையோர், செல்வந்தர்கள், தொழில் நிபுணர்கள், மக்கள் தலைவர்கள் யாவரும் இறையுணர்வில் முழுமை பெற வேண்டும். அப்போது தான் மக்...
களை சீரிய முறையில் வழி நடத்தவும் வாழ வைக்கவும் முடியும்.

இறையுணர்வில் முழுமை பெறுவதற்குச் சிறந்த முறை தன்னிலை விளக்கமாகும். இதனை ஆங்கிலத்தில் Self Realisation என்று சொல்வார்கள். இதுவே அருள் துறையின் கருப்பொருள். இறை வழிபாட்டின் உச்சம். உயிர் வழிபாட்டின் உறைவிடம். அமைதியைக் காக்கும் அரண். தன்னிலை விளக்கத்தால் அறிவும் உயிரும் உணரப் பெறும். முடிவில் தெய்வ நிலையும் அகக் காட்சியாகும், தன்னை உணர்ந்தால் உயிர்கள், உலகம், தெய்வம் யாவும் அகக் காட்சியில் இணைந்து காணும் முறையான அக நோக்குப் பயிற்சி மூலம் ஒரு மனிதன் எளிதில் இந்நிலை பெறலாம். இத்துறையில் தேர்ந்த வழிகாட்டிகள் இந்நாட்டில் பலர் உள்ளனர்.

உடலாக, அறிவாக, உயிராக உள்ள தன்னிலே தலைவனாக உள்ள மெய்ப் பொருளை உணர்வதே தன்னிலை விளக்கம். இந்தத் தெளிவிலே ஒவ்வொரு உயிரினிடத்தும் தெய்வத்தின் இருப்புநிலை, ஆட்சி நிலை விளங்குமல்லவா? இவ்வுயர்ந்த நோக்கிலே எல்லா உயிர்களும் ஓடே மூலத்தை அடிப்படையாகக் கொண்டே தோன்றி இயங்கி வாழ்கின்றன, என்ற பேருண்மை அகக் காட்சியாகின்றது. இத்தகைய அறிவின் தெளிவிலே, ஒழுக்கமும், ஈகையும் இயல்பாக மலரும் கடமையும் பொறுப்பும் சிறப்பாக அமையும். தனி மனிதன் வாழ்விலே அமைதியுண்டாகும். இவ்வமைதி அன்பாகவும், கருணையாகவும் விரிந்து சமுதாயத்தில் அமைதியைப் பரப்பும். மேலும் அது உலக விரிவாகச் செயல்படும் போது உலக நாடுகளிடையேயும் அமைதியை நிலை நாட்டும். எனவே தன்னிலை விளக்கமும், அவ்விளக்கத்தின் வழியே வாழும் அருள் நெறியும் உலக அமைதிக்குச் சிறந்த வழிகள்.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"நம்மில் தெய்வீகம் மேலோங்கும் போது, இருப்பதை
மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
நமக்கு ஓர் அழகைக் கொடுக்கிறது."
.
"இறைநிலையே அனைத்துமாகி இருப்பதால்
நமது சுயம் தெய்வீகமானது".
.
"உடல் உறையும் உயிரும், உயிரின் - உணர்வுகளின்
பிறப்பிடமான மனமும், அந்த இறைநிலையின் அம்சங்களே".
.
சீரமைப்பே சிறந்தது:
"அறிவு நிலை, இயங்குமுறை, விளைவு எல்லாம்
அறியாமல் ஆசைதனை அடக்கிவிட்டால்
அறிவி லெழும் விரைவு திசை மாற்றம் பெற்று
அதன் விளைவாய் அமைதியின்மை உடல் நோயுண்டாம்;
அறிவது தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
அமைப்புகள் ஒக்க அறுகுணங்களாகும்
அறிவின் நிலை மாற்றம் உணர்ந்தவ் வப்போது
அவற்றை நற்குணமாக்கும் பயிற்சி வேண்டும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

இறைநீதி :



இறைநிலை எங்குமே உள்ளது. அதை உணர்ந்தால், அது செய்யக் கூடிய காரியமெல்லாம் நீதியானது என விளங்கும். எந்த இடத்திலும் தவறு இருக்கவே முடியாது. இதை நல்ல முறையிலே தெரிந்து கொண்டால், "ஐயோ ! நான் கடவு...ளுக்கு ஐந்து தேங்காய் உடைத்தேனே ! இன்னும் என் குழந்தைகள் சரியாகவில்லையே' என்று வருந்த மாட்டோம். தேங்காய் உடைக்கும் முன், நாம் செய்த தவறுகள் எத்தனை? அதெல்லாம் அல்லவா இப்போது துன்ப விளைவாக வருகின்றன !

அதனால், 'அந்த இறைவனுக்குக் கண்ணில்லையே !" என்று சொல்லும் அளவுக்கு போகக் கூடாது. இறைவன் செய்வதில் தவறு ஏற்படாது என்ற உண்மையை உணர்ந்து உணர்ந்து, இறைவனுடைய செயல் எல்லா இடத்திலும் நீதியாகவே இருப்பதைக் கண்டு கொள்ளுங்கள். அந்த இடத்திலே பிறப்பது தான் அமைதி.

இன்றைக்கு நம்மிடம் ஒரு பொருள் இருக்கிறது. அதை கொடுத்தவன் இறைவன். உடல்நலம், அறிவு, செல்வம், பதவி இவ்வளவையும் கொடுத்தவன் இறைவன். ஆனால் 'இன்னும் எனக்கு வர வேண்டிய பதவி உயர்வு வரவில்லையே ! எப்போதோ வர வேண்டுமே ! இன்னும் வரவில்லையே !' என்று குறைபடுகிறோம்.

அதனால் என்ன ஆனது ? நமக்கு இருக்கின்ற ஆனந்தம், இன்பம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம். கற்பனையினால் எல்லைகட்டி ஒரு வரையறை செய்து கொள்கிறோம். இருந்த இன்பமும் போய் விடுகிறது.

இவ்வளவையும் கொடுத்தவன், இறைவனேதான்:

எல்லை கட்டிய மனநிலையில் நாம் 'இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித் தான் இருக்க வேண்டும். இது தான் நல்லது, அது கெட்டது' என்று நினைக்கிறோம். இது உண்மையில் நல்லதா? நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால் கற்பனையில் நாம் வரையறை செய்து கொள்கிறோம். கற்பனையான நிலையில் இருக்கும் வரையில், நாம் இது வரை பெற்றதைப் பாராட்டாமல், அதை அனுபவிக்கத் தெரியாமல், 'அந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று மனதை மறுபுறம் திருப்பி விட்டுக் கொள்கிறோம். இவ்வளவையும் அனுபவிப்பது யார்? இதுவரைக்கும் இவ்வளவையும் கொடுத்தானே இறைவன் அதை மறந்து விடுகிறோம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"இறைவனை வணங்குவதைவிட
சிந்திப்பதே மேல்"

.
"செயலின் விளைவாக இறைவனைக் காணும்
வழியே சிறந்த இறையுணர்வு ஆகும்".

.
"அறியாமை அழிவுக்குத் துணை போகும்.
ஞானம் ஆக்கத்திற்கு அச்சாணியாக இருக்கும்".

.
வினைப்பயன் முன் இருப்பு :

"சிறுதவறு பெருந்துன்பம் விளைத்தல் கண்டு
சிலர் வினையின் பயன் கொள்கை தவறென்பார்கள்;
நிறுவையிலே எடைகல் ஓர் தட்டில் வைத்து
நேர் எதிரில் பொருள் வைத்து நிறுக்கும்போது ;
இறுதியிலே வைக்கும் பொருள் சிறிதென்றாலும்
இதற்கு முன்னம் வைத்ததெல்லாம் சேர்ந்தழுத்தும்;
பெரும் உண்மை சான்றாகும் முன் இருப்பாம்
பெருந்தீய பதிவு சிறுதவறால் ஓங்கும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 28 மே, 2013

இன்பம்

மனிதனை இன்ப துன்பச் சுழலால் பாதிக்கப்படாத அமைதி நிலைக்குக் "குண்டலினி யோகம்" உயர்த்துகிறது. இங்குதான் அமைதி கிட்டும். இயற்கைத் துன்பங்களாகிய பசி, வெப்பதட்ப ஏற்றம், உடற்கழிவுப் பொருட்களின் உந்து வேகம், இவற்றால் ஏற்படும் துன்பங்களைப் போக்கிக் கொண்டால் மீதி இருப்பது என்ன? இன்பம்தான். அமைதிதான். ஆனால் இக்காலத்தில் பலர் ...விரும்புவதும் செய்வதும் என்ன? இன்பத்தை துய்க்க விழைகின்றனர். மேலும் மேலும் இன்பத்தைப் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர். இதன் விளைவாக வாழ்க்கைத் தேவைப் பொருட்கள் எண்ணிக்கை பெருகுகின்றன. துய்க்கும் உடலும் சோர்வுறுகின்றது. மனதும் அமைதியை இழக்கின்றது. உடலுக்கும் மனதுக்கும் திட்டமிட்ட முறைப்படுத்திக் கொண்ட ஓய்வு இல்லை. இயந்திரமாகவே மனிதன் மாறிவிடுகிறான். அமைதி எவ்வாறு கிட்டும், நிலைக்கும்.? எந்த இன்பமானாலும் அது உயிராற்றலின் அழிவால் எற்படுவதேயாகும். ஆகையால் இன்பத்திற்கு விழைவது துன்பத்திற்கு போகும் பாதையாகும். துன்பத்தைக் குறைத்துக்கொண்டே இருந்தால் மீதி இருக்கும் இனிமையே இயற்கையான இன்பம். இந்த இன்பம் தான் அமைதி தரும். இதுவே நிறைவையும் தரும். 

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மந்திரம்:



மனம் ஓர்மை நிலையில் எப்பொருளைத் தீவிரமாக நினைத்தாலும் அப்பொருளாகவே மாறிவிடுகிறது. The mind gets attuned to the ...level of that thing. இதையே உயிர்க் கலப்பு என்று சொல்கிறோம். அந்நிலையில் நாம் அப்பொருளை மதிக்கிறோம். அதனோடு நட்பை வளர்த்துக் கொள்கிறோம். அப்பொருளின் ஆற்றலை நம் உயர்வுக்குப் பயன் படுத்திக் கொள்கிறோம். இந்த தத்துவந்தான் தெய்வ வணக்கத்திலும் இருக்கிறது. இந்து நாகரிகத்தில் இதை 'மந்திரம், யந்திரம், தந்திரம்' என்பார்கள்.

நுட்பமும் வேகமும் பெறுமாறு தன் உயிரினது ஆற்றலை [மனோ சக்தியை] பெருக்கிக் கொள்ளல் - மனதின் திறனை உச்சபட்சமாக உயர்த்திக் கொள்ளல் - மந்திரமாகும். நாம் தவத்தினால் இதைச் சாதிக்கிறோம். மனமாக விரிதலை ஒழித்துத் தன்னில் தானாகவே நிற்கும் உயிர், பின்னால் தன் மூல நிலையையும் எய்தி மீளும் போது அதற்கு தூய்மையோடு வலிமையும், வலிமையோடு தூய்மையும் கிடைக்கின்றன. மெய்ப் பொருளிடம் எந்த மாசும் இல்லை. அதனினும் வலிமைமிக்கது எதுவும் இல்லை. அதனிடம் சென்று அதனுடன் மீளும் உயிருக்குத் தூய்மையும் ஆற்றல் மிகுதியும் இயல்பாகின்றன. இதுவே மந்திரம்.

எழுத்துக்களின் உச்சரிப்பில் அதிர்வியக்கம் ஏற்படுகின்றன. ஒவ்வொரு அதிர்வியக்கமும் உயிரினிடத்தில் ஒவ்வொரு மாறுதலை உண்டு பண்ணுகின்றன. எனவே ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. இதை துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார்கள். இவற்றில் பீஜாட்சரம் - வீரிய எழுத்துக்கள் என்று சில இருக்கின்றன. அவற்றின் துணை கொண்டு உயிராற்றலை வளர்த்துச் சக்தி மிகுந்ததாகச் செய்து கொள்ளல் மட்டும் இக்காலத்தில் மந்திரம் என்று வழங்கப்படுகின்றது. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். ஆம். மனமது செம்மையானால் மனமே மந்திரம். செபிக்க வேண்டியதில்லை. மனதிற்குச் செம்மை ஊட்டுவதே மனவளக்கலை.    


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"வாழ்க வளமுடன்" என்ற வாழ்த்தானது, எல்லா மந்திரங்களையும் விட
மேலான திருமந்திரமாகும்".

.
கருதவம் :

"சத்து எனும் மெய்ப் பொருளின் நிலையுணர்ந்து
சன்மார்க்க வாழ்வு பெற வேண்டு மென்றால்
சித்து எனும் மனமயக்கில் சிக்கிடாதீர்
சிலர் மயங்கித்தரும் பொருளோ புகழோ வேண்டாம்;
வித்துவை நீ கருதவத்தால் வறுக்கும் போது
விளைகின்ற ஈடு இணையற்ற சக்தி
அத்தனையும் அறிவிற்கே ஊட்ட மாக்கி
அறிவறிந்து மக்கள் தொண்டாற்றுவீரே".

.
அறிவே தான் தெய்வம் :

"மனதின் அலையை குண்டலினியோகத்தின் மூலம்
குறைத்து, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிலைக்குக்
கொண்டு வந்து, இவனே அதுவானால் தான் அந்த
நிலையில்தான் அறிவே தெய்வம் ஆகும்"

.
"அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்,
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்;
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர், அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்,
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வோம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 

திங்கள், 27 மே, 2013

கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம்

கேள்வி:
ஐயா, தங்கள் கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம் என்று கூறுவது ஏன்?

மகரிஷியின் பதில்: குருவின் கால்களை தொட்டு வணங்கினால் பாவம் எல்லாம் போய்விடும் நாம் தூய்மை பெற்றுவிடலாம் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது. அதனால் மக்கள், காலை தொட்டு வணங்க வேண்டும் என நினைக்கிறார்கள். உங்களை இறைநிலை வரை உயர்த்தி விட்டிருக்கிறேனே, இன்னும் ஏன் குனிந்து கால்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? குருவின் ஆசி பெற அவரின் கண்களைப் பார்த்தாலே போதுமானது.

எந்த மதம்

கேள்வி:
சுவாமிஜி, தாங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்?

மகரிஷியின் பதில்:
நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல, உலகப் பொது அருள்நெறி சமயத்தைச் சேர்ந்தவன். கர்மயோக நெறியே அதன் வேதமாகும். மனிதன் உடல் நலம், மனநலம் காத்து செயல் விளைவை மதித்து எவ்வுயிர்க்கும் துன்பம் இழைக்காமல் வாழ்வதே கர்மயோக நெறியாகும். இந்து மதத்திலுள்ள நம்பிக்கை, இஸ்லாமிய மதத்தில் உள்ள தொழுகை முறை, கிறிஸ்துவ மதத்தில் உள்ள தொண்டு, புத்த மதத்தில் உள்ள ஆராய்ச்சி, ஜைன மதத்தில் உள்ள ஜீவகாருண்யம் இவை எல்லாம் எனக்குப் பிடிக்கும்

கடவுள் வணக்கம் :



"எல்லாம் வல்ல பரம்பொருள் (Providence) எனக்கு வேண்டியதை எல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு வைத்திருக்கும்... பொழுது அந்தப் பரம் பொருள் இந்த இயற்கையாக, பிரபஞ்சமாக, உலகமாக, மக்களாக எனக்கு உரியவர்களாக, என்னுடைய அறிவாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிற போது நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும், பிச்சை எடுக்க வேண்டும்?. செய்ய வேண்டியதை மனம் கோணாமல் செய்துவிட்டு கவலைப்படாமல், பிறரை நொந்து கொள்ளாமல் இரு. உனக்கு முரண்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களை வாழ்த்திக் கொண்டே இரு. உன்னை வாழ்த்திக் கொள். உன் குடும்பத்தை வாழ்த்து. சுற்றத்தாரை வாழ்த்து, சமுதாயத்தை வாழ்த்து.

மன அமைதியைப் பேணும் வகையில் தியானம், சிந்தனை, அகத்தாய்வு இவற்றில் தொடர்ந்து ஈடுபடு. உடற்பயிற்சியை நன்கு செய்து வா. இவ்வாறு தொடர்ந்து ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பயிற்சியை கைக்கொண்டால் வேறு எந்த ஞானமும் வேண்டாம். இன்னும் ஒரு கடவுளும் வேண்டாம். ஏனென்றால் எந்தச் செயல் செய்தாலும் அங்கே விளைவு கடவுள் செயல்தான். (That is the cause and effect system) அது இயற்கையினுடைய விளைவு தான். நீ செய்யும் செயலுக்குத் தக்கவாறு, பொருளுக்குத் தக்கவாறு உனக்கு இன்பமோ, துன்பமோ, வெகுமதியாகவும் தண்டனையாகவும் கொடுத்துக் கொண்டே இருப்பது எதுவோ அதுதான் எல்லாம் வல்ல இறை. ஆகவே அந்த இறைவனை உன்னுடைய செயலின் விளைவாகக் காலையிலிருந்து மாலைவரையில் பார்த்து மதிப்புக் கொடுத்து வா. அதுவே கடவுள் வணக்கம். அதைவிட்டு தனியாக ஒரு கடவுளைத் தேட வேண்டாம்.  


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும்,
அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதை
அறிந்து கொள்வது ஞானம்".

.
"அவனில் அணு, அணுவில் அவன்
உன்னில் எல்லாம் உன்னை நீ அறி".

.
"உய்யும் வகைதேடி உள்ளம் உருகிநின்றேன்
உயர் ஞானதீட்சையினால் உள்ளொடுங்கி
மெய்யுணர்வு என்ற பெரும் பதம் அடைந்தேன்
மேல்நிலையில் மனம்நிலைத்து நிற்க நிற்க
ஐயுணர்வும் ஒன்றாகி அறிவறிந்தேன்
ஆசையென்ற வேகம் ஆராய்ச்சி யாச்சு
செய்தொழில்களில் கடமை உணர்வு பெற்றேன்
சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கம் கண்டேன்."

.
அறிவும் புலன்களும் :

"அறிவைப் புலங்களில் அதிகநாள் பழக்கினேன்,
அதன்பலன் உணர்ச்சிகள் அறிவை வென்றன.
அறிவையறிவால் ஆராயப் பழக்கினேன்;
அந்த நிலையிலும் புலன்களை இயக்கினேன்,
அறிவு அகண்டாகாரத்தில் நிலை பெற
அதிகவிழிப்பும் வழக்கமும் பெற்றது;
அறிவு புலன்களை அறிந்தது, வென்றது.
அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

ஞாயிறு, 26 மே, 2013

Final destination is Enlightenment


Humans are the only living being which is well equipped with Sixth sense, body and all sensory organs. With this advantage spiritual life is the only way to reach the Peaks of the sixth sense.
Sixth sense is nothing but the realization of the eternal and realising it as the conciousness which rules all. With this realization which is got by streamlining the sixth sense is used to lead a life in love and compassion.
This is the final destination after realizing the eternal.

A SINGLE MAN'S THOUGHT CAN CHANGE THE WORLD.



"If one understands nature, and his thoughts are compatible to nature,
It will not lead to worries anytime anywhere."

It is only the manifestation of these unexecuted evil thoughts that we witness as Natural calamities all around. It is taking shape as cyclone, floods and drought and gives miseries to everybody. This is because only thoughts have manifested as nature; thought is also a component of nature.
If evil thoughts are thought, wherever these thought waves are spreading, that will generate malign effects. Therefore, whatever is thought, it should be habituated to be compatible to nature. With good thoughts, it is possible to transform the entire world.

"If anything is thought with thoughtfulness, it will result in benevolence."

Unified force


An everlasting, singular, almighty, all-penetrative, super-transparent, invisible, fluid dark matter, with inherent potential of ever increasing self-compressive surrounding pressure force, in its intensification resulting in automatic repulsion which forms the infinitesimal primary energy particle is unified force.
This is the omnipotent, divine principle which has the dual character of gravity and gravitational repulsion, existing and functioning as an invisible thread throughtout the universe. Unified force is the primordial state and the same is plenum, force and conciousness, adored as GOD.

Book: Highlights of Vethathiri model of unified force

சனி, 25 மே, 2013

உண்மையும் மயக்கமும்








பெருநோக்கப் பணி :



 பருவுடல் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது, அதனுள் வேலை செய்து வரும் உயிர் பருப்பொருள் ஆக இல்லாமையால் நமக்கு அது புலப்படுவதில்லை. எனவேதான் அதை 'சூக்குமம்' என்கிறோம். உயிருக்கும் உடலுக்குமிடையே "மனம்" என்ற அறிவாற்றல் இயங்கி வருகிறது. மனம் என்பது என்னவென்று ஆராய்ந்து பார்ப்போமானால் தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற அனுபவத் தொகுப்புத்தான் மனம் என்பது தெளிவிற்கு வரும்.

நமக்கு ஏற்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யவே நாம் ஒரு செயலில் ஈடுபடுகிறோம். அதனால் விளையும் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம். துன்பமானால் வருந்துகிறோம். இன்பமானால் சந்தோஷிக்கிறோம். இந்த அனுபவத்திற்குப் பிறகு இப்படிச் செய்தால் இது தீமை தரும் என்று உணர்ந்து அதை மீண்டும் செய்யாமலிருக்க உறுதி கொள்கிறோம். இதுவே முடிவாக நம் மூளையில் பதிந்து விடுகிறது. மீண்டும் அதே தேவை ஏற்படும் போது அதே நன்மையான செயலைச் செய்யும்படி நாம் தூண்டப்படுகிறோம். இதுதான் திருந்திய மனம். இந்த 'மனம்' புலன் வழி மயங்கிச் செயல்படுகிறது. அதை புலன் மயக்கிலிருந்து விடுவித்து ஆன்மாவில் லயமடையச் செய்ய வேண்டும். இதுதான் "மனவளக்கலை" என்ற குண்டலினியோகமாகும்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

நிறைவான வாழ்வு


வினா : தவத்தினால் வாழ்வு ஒளிவிடும் என சுவாமிஜி கூறுகிறார்கள். தவம் செய்து ஊழினை மாற்றி அமைக்க முடியுமா? தவம் இயற்றுபவர்கள் எல்லோருமே நிறைவான வாழ்வு வாழ்கிறார்களா?
...
விடை : தவத்தினால் வாழ்வை ஒளிமயமாக்கிக் கொள்ள முடியும் இதற்குச் சான்றாக
"ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்".
என்னும் குறட்பாவே போதுமானது. விதியை மதியால் வெல்லலாம் என்னும் பழமொழியையும் நினைத்துப் பாருங்கள். மதி என்பது அறிவு. தவம் செய்வதினால் வலிமையும், கூர்மையும் மதிபெறும். அத்தகு மதியானது இனி ஆற்ற இருக்கும் செயல்களை ஒழுங்குபடுத்தி வாழ்க்கையில் இது வரை கிடைக்காத வெற்றியையும் மேன்மையையும் ஏற்படுத்தித் தரும். தவம் செய்பவர்கள் முறையாகவும் தொடர்ந்தும் செய்து வருவதோடு நமது மனவளக்கலை மன்றத்தில் மட்டும் போதிக்கப்படும் தற்சோதனை பயிற்சிகளையும் சேர்த்துச் சிரத்தையோடு செய்து வருவார்களானால் தங்களது இயற்கை சுபாவங்களை மாற்றி அமைக்கும் குணநலப்பேற்றை எய்த முடியும். நிறைவாக முழுமைப் பேற்றையும் எய்தலாம். நீங்கள் கேட்கக்கூடிய நிறைவான வாழ்வும் அதுவே. அத்தகு மேம்பட்ட வாழ்க்கையினை நமது மன்றத்தினர் அனேகம் பேர் அடைந்திருக்கிறார்கள்.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"ஞானம் பெற தவம்,
தவத்தைப் பெற குரு".

.
"அறிவை ஏடுகளில் பெறலாம்
ஞானத்தை தவத்தால் பெறலாம்".

.
"அறிவு என்பது அறியப்படுவது
ஞானம் என்பது உணரப்படுவது".

.
"அறிவாளிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்
ஞானியர்கள் துதிக்கப்பட வேண்டியவர்கள்"

.
"ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனிதனின் வாழ்வின்
நோக்கம், அறிவு முழுமை பெறவேண்டும்".

.
"உய்யும் வகைதேடி உள்ளம் உருகிநின்றேன்
உயர் ஞானதீட்சையினால் உள்ளொடுங்கி
மெய்யுணர்வு என்ற பெரும் பதம் அடைந்தேன்
மேல்நிலையில் மனம்நிலைத்து நிற்க நிற்க
ஐயுணர்வும் ஒன்றாகி அறிவறிந்தேன்
ஆசையென்ற வேகம் ஆராய்ச்சி யாச்சு
செய்தொழில்களில் கடமை உணர்வு பெற்றேன்
சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கம் கண்டேன்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 23 மே, 2013

நுண்மாண் நுழை புலன் :


"Perspicacity" என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் "நுண்மாண் நுழைபுலன்" என்பதாகும். நுண்ணிய என்றால் கூர்மையான, மாண் என்றால் மாண்புடைய, அதாவது விரிந்த சிந்தனையால் உயர்ந்த ஒரு பெருந்...தன்மை, நுழைபுலன் என்பது ஊடுருவியறியும் திறன் (Penetrative Knowledge). இதுதான் நுண்மாண் நுழைபுலன் என்பதற்கான முழு விளக்கம். வள்ளுவரும் ஒரு குறளிலே இதனைக் குறிப்பிடுகின்றார்.

"நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று"

"Taking right and quick decision with quick insight of the mind, linking past experiences, present circumstances & future results. என்ற ஆழ்ந்ததோர் கருத்துடைய நுண்ணறிவு நிலை நுண்மாண் நுழைபுலம்" முக்காலத்தையும் இணைத்துப் பழைய கால அனுபவத்தையும், தற்காலச் சூழ்நிலைகளையும், எதிகால விளைவுகளையும் ஒருங்கிணைத்து நோக்கி ஒவ்வொரு செயலையும் இப்படிச் செய்யலாம் என்று சரியாகவும், விரைவாகவும் தேர்ந்தெடுக்கக் கூடிய ஓர் அறிவு இருக்கிறதே அதைத்தான் "நுண்மாண் நுழைபுலம்" Perspicacity என்று சொல்வார்கள். அந்த நுண்மாண் நுழைபுலம் என்பதிலே விரிந்த அறிவு உண்டாகி விடுகின்றது. மூன்று காலத்தையும் இணைக்கிறது அறிவு - பழைய அனுபவம், தற்காலச் சூழ்நிலை, எதிர்கால விளைவுகள் என்ற அளவிலே அதே நேரத்திலே இயற்கையின் விதியான செயல்-விளைவுத் தத்துவமும் கருத்தில் உள்ளது. மனிதனுடைய தன்மை, அவனுடைய தேவை - இவற்றை இணைத்துச் செயல்படுகிறபோது, சரியான முறையிலே, சரியான வழியிலே, குறுகிய நேரத்திலே, சலனமில்லாமல், குழப்பமில்லாமல் தேர்ந்தெடுக்கக் கூடிய மனப்பக்குவத்தைத் தான் நுண்மாண் நுழைபுலன் (Perspicacity) என்று சொல்லுகிறோம்.



 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஞானம் பெற தவம்; தவத்தைப் பெற குரு".
.
"விடாமுயற்சியும், பகுத்தறிவும், கடின உழைப்பும்
உள்ளவனுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை".
.
"அவரவர் வாழ்வைச் சீரமைக்கும் அற்புத சிற்பி
அவரவர் எண்ணங்களே"
.
"குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம்
குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும்
மறை பொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று
மா அமைதி அனுபவிக்கும் நிலைக்களம் ஆம்
இறைவனது திருநிலையில் இணையும் அப்போ
இன்ப துன்ப விருப்பு வெறுப்பிவை கடந்து
நிறைவு பெரும் தீய வினையகலும் வாழ்வில்
நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்."
.
.- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

"சாதனை" மார்க்கம்:

 

உலக அமைதி :



1) ஒரு நாட்டுக்கு நாடு அரசியல் முறை வேறுபட்டிருக்கும் வரைக்கும்;


2) இயற்கையின் மூலதனமான பூமியைத் தனி மனிதனோ அல்லது குழுவினரோ தங்களுக்குச் சொந்தம் என்று எல்லைக் கட்டிக் கொண்டிருக்கும் வரைக்கும்;

3) ஒரு மனிதன் முயற்சியினால் விளைவிக்கும் எந்தப் பொருள் எனினும் அது அவனுக்கோ, அவனுடைய வாரிசுகள் எனப்பட்ட குறிப்பிட்ட நபர்களுக்கோ தான் உரிமையானது என்ற கற்பனை முறை நீடித்திருக்கும் வரைக்கும்;

4) குழந்தை வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு, என்ற இருவகையும் பெற்றோர்கள் மக்கள் இவர்கள் பொறுப்பிலிருந்து விடுபட்டுச் சமுதாயப் பொதுவாக நடைபெறும் காலம் வரைக்கும்;

5) வாலிபப் பருவமும், உடல் வலிவும் உடைய அனைவருக்கும் அறிவிற்கும் உடலுக்கும் தகுந்தபடி ஆக்கத் தொழில் புரியும் வாய்ப்பு சமுதாயத்தில் கிடைக்கும் ஒரு அமைப்பு ஏற்படும் வரைக்கும்;

6) உலகில் ஒரு மனிதனேனும் உணவு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பட்டினி கிடக்க நேரிடும் முறையில் நிர்வாகம் நடைபெறும் வரைக்கும்;

7) உணவிற்காக வேறு ஒரு ஜீவனைக் கொல்லும் பழக்கமும் அவசியமும் மனிதனுக்கு இருக்கும் வரைக்கும்.

உலக மக்கள் வாழ்வில் நிரந்தரமாக அமைதி என்பது ஏற்பட முடியுமா?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால்
நேர்மையை மட்டும் பின்பற்று".
.
"ஆறாவது அறிவின் கூர்மை தான் சிந்தனை,
சிந்தனை தான் அறியாமையை அகற்றி
அறிவை முழுமையாக்க வல்லது".
.
"தனி மனிதனால் சமுதாயமும் சமுதாயத்தினால்
தனி மனிதனும் ஆக்கவும் காக்கவும் படுகிறார்கள்".
.
இலட்சிய வாழ்வை அடைய முயலுவோம் :-
"உலக சமாதானம் என்ற எல்லை தன்னை,
ஒவ்வொருவருக்கும் இப்போ காட்டிவிட்டேன்;
நில உலகில் இன்றைய வாழ்க்கை முறைக்கும்
நினைவாக உள்ள அந்த உலகத்திற்கும்,
பலவாறு எண்ணிறந்த பேதமுண்டு.
படிப்படியாய் அவை குறைய திட்டமிட்டு,
கலகமெழும் சூழ்நிலைகள் அனைத்தும் மாற்றும்,
கருத்துடனும், கொள்கையோடும், இனி நாம் வாழ்வோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 
 

செவ்வாய், 21 மே, 2013

ஆசையின் மயக்கநிலை

தேவையைக் காரணமாகக் கொண்டு எழுந்த ஆசை தேவை நிறைவோடு நின்றுவிடவேண்டும். பசி, தாகம் முதலிய இயற்கைத் துன்பங்களைப் போக்கிக் கொள்ள எழுந்த ஆசை துன்பத்தைப் போக்குவதோடு நின்றாக வேண்டும். உயிராற்றல் செலவைச் சரி செய்ய எழுந்த ஆசை அப்படிச் சரி செய்வதோடு நின்றாக வேண்டும். ஆனால், பொதுவாக அப்படி நிற்பதில்லை.

தேவை நிறைவின்போது ஏற்பட்ட திருப்தியின் மீது அல்லது இன்பத்தின் மீது உயிர் மயங்கிவிடுகிறது. எந்தக் காரியம் இன்பத்தைத் தந்ததோ, அந்தக் காரியத்தைத் தேவையில்லாமலே செய்ய விழைகிறது. அதாவது உண்மையான தேவை இல்லாமலேயே ஆசை எழுகிறது. எழுகிற துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆசை தோன்றியது போக, இன்பத்தைச் செயற்கையாகத் தேடும் முயற்சியிலே இப்போது ஆசை எழுகிறது. இந்த ஆசையைத் தான் கட்டுப்படுத்த வேண்டும். எழாமலேயே காக்கவும் வேண்டும்.

உயிராற்றல் குறைவை நிறைவு செய்வதற்காக அல்லாமல், இயற்கைத் துன்பத்தைத் தீர்ப்பதற்காக அல்லாமல், உண்மையான உயர்வான தேவையின் காரணமாக அல்லாமல் ஏற்படும் ஆசைகளெல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுவன. அவை துன்பத்தைத் தான் தரும்.

இன்னொன்று, தகுந்த காரணத்தாலேயே ஏற்பட்ட இச்சைகளாளாலும், அவ்வாசைகளை நிறைவு செய்யும் முயற்சியில் தனக்கோ, பிறர்க்கோ துன்பம் தோன்றுமானால், அவ்வாசைகளும் தடுக்கப்பட வேண்டியவையே. மேலும், நிறைவேறிய பின்னர் தீய விளைவுகளைத் தரக்கூடிய இச்சைகளையும் கட்டுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

திங்கள், 20 மே, 2013

உடல் நலம்

1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.


2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும்.உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும். விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulser) நோயாக வழங்கப் பெறுகின்றது.

9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த் நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.


10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

3 bodies and Genetic center of the human.

Vethathiri Maharishi explains 3 bodies and Genetic center of the human.

Physical Body

Human life is a combination of the Physical, Astral and Causal Bodies. Of these, the physical body alone is perceptible to our senses. The astral body is formed by the association of the infinitesimal energy particles, and is known as the life-force. The third one is the causal (magnetic) body.

The human being is regarded as the ultimate stage in the evolution of living beings on the earth. The structure of the “Physical Body” is built with such a precision and appropriate limbs and senses. The human mind is provided with the sixth sense, which is able to realise all kinds of subjective phenomena (i.e. noumena) that are not possible to be understood by any of the five senses. The omniscient consciousness of Nature is to be adored for evolving such a wonderful bio-magnetic organism, to fulfil the greatness of the universe and all its wonders.

Astral Body

The outer layer of man is the physical body. The inner layer is the “Astral Body”, which is the aggregate of the life force particles that penetratively circulate throughout the physical structure. This life force particle in the living being is nothing but the infinitesimal energy particle (Vethon), the primary manifestation in the universal evolution from the Gravity. In the universe, the “Vethon” is the first principle among the “Pancha Boothas”. The same is also known as “Akash” in Eastern philosophy, being the infinitesimal unit of all masses in the universe. If we take the physical body as the first and the peripheral layer of the human being, the second and inner layer is the astral body.

Causal Body

The third layer of man is the “Causal Body”. This is the aggregate total of the bio-magnetism existing and functioning in the physical body. The infinitesimal particles that constitute the astral body have been explained above. The aggregate total of the Yogons emanated by the life force particles coalesces with the surrounding eternal space (Gravity) and evolves as the invisible power, bio-magnetism. By the same process the magnetism evolving at all places in the universe is the supreme power, universal magnetism.

Extension of sensing faculty from the bio-magnetism is the starting point of the living being. The bio-magnetism in the physical body is circulating at its own speed. As a general law of nature, anything that circulates or spins forms its own intensified centre. Under this principle the bio-magnetism also gets intensified and forms its own intensified centre. This centre automatically forms at the centre of the physical body and this is what we call the “Genetic Centre”. Here, the genes with their chromosomes accommodate the intensity of bio-magnetism, sexual vital fluid, and the heavier life force particles. This is a divine magnetic domain of compressed characteristics of the three layers of man (Physical body, Astral body, and Causal body). This is the concept of called genetic centre and the same in a spiritual context is called “Soul”. Just as the consciousness and force cannot be separated from the Gravity, we cannot separate the genetic center and the soul. Such a great, imperceptible diving principle is the soul.



மறதியும்-விழிப்பும்

 

எல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை. இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக-பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய, பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே போரியக்க மண்டலமாக (Universe)விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள்.

உயிரினங்களில் பாரிணாமத் தொடர்பால் சிறப்பு பெற்ற நிலையே மனிதன். போரியக்க மண்டலக் காட்சிகளாக உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐவகை விளைவுகளையும் உணரும் ஐம்புலன்களையும்,இவையனைத்துக்கும் மூலமான வெட்டவெளியின் பெருமையை உணரத்தக்க ஆறாவது அறிவையும் பெற்று மனிதன் வாழ்கிறான்.

உடற் கருவிகளின் சிறப்பாலும் அறிவின் சிறப்பாலும் இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக விருப்பம்போல மாற்றி அமைத்து துய்த்து மனிதன் வாழ்கிறான். தன் செயல் திறனிலும் புலன் கவர்ச்சியிலும் முழுவதும் ஈடுபட்டு, தன் உயிர் சிறப்பும் உயிரின் மூலச் சிறப்பும் மறந்து விடுகிறான். இதனால் அறிவு குறுகிய நோக்கில் செயல்படுகிறது பேராற்றல் பெற்ற இயற்கையே எல்லாமாகி தானுமாகி இன்ப துன்ப உணர்ச்சிகளால் எல்லைகட்டப் பெற்று இயங்கும் பேருண்மையை மறந்து தான் ஏதோ தனித்த பொருளாக இயங்குவதாகக் கருதி மயங்கி வாழ்கிறான்.

இத்தகைய புலன் மயக்க மறதியில் செயல் புரியும் ஆர்வமாக எழும் உயிர் விரைவு, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு மன உணர்ச்சி எண்ணங்களாக எழுகின்றன. பெரும்பாலும் மக்கள் இவ்வுணர்ச்சி மனோ நிலைகளில்தான் எண்ணம், சொல், செயல், இவற்றை ஆற்றுகின்றார்கள். இதன் விளைவாகத் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தைப் பெற்றும் அளித்தும் வாழ்கின்றனர்.

இயற்கை நியதியை உணர்ந்து பிறர் தேவைக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்து முறையோடும் அளவோடும் ஆற்றும் செயல்களே நற்கர்மங்கள். இவற்றால் எல்லோரும் இன்பம் காத்து வாழலாம். இயற்கை நியதியை மறந்தும் மதியாமலும், சமுதாய மக்கள் கருத்தையும் நலனையும் மறந்தும் மறதியாலும் ஆற்றும் செயல்கள் எல்லாம் தீய வினைகளாகும்.

ஒரு மனிதன் தன்னைப் பழக்கிக் கொள்ளும்வாறு தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நல்வினையோ தீவினையோ அவனிடம் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

எந்த செயலும் புலன்கள் உறுப்புகள் இவற்றில் இயக்கப் பதிவாக அமையும். எண்ணப் பதிவாக அமையும். வித்து அணுக்களில் பரம்பரைத் தரபதிவாக அமையும். இம்மூன்று பதிவுகளும் சேர்ந்து உயிரணுக்களில் பாரிணாமச் சிறப்பாற்றலாக அமையும். இவ்வாறு மனிதன் பெறும் பதிவுகளே வினைப்பதிவுகளாகும்(Impressions Of Deeds).

இன்று உலகெங்கும் மனிதகுல வாழ்வில் அமைதி குலைந்து காணப்படுகிறது. பிணக்கும், பகையும், போட்டியும், போரும் வாழ்வில் துன்பங்களை மலியச் செய்து வருகின்றன. இவற்றிற்குக் காரணம் மனிதனேயாகும். தீவினைப் பதிவுகளால் தரக்குறைவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அறிவைப் புலன் கவர்ச்சியில் மயங்க வைத்துக் கொண்டு நினைவில் குறுகி நிற்கின்றான். தனக'கு மூலமான பேராதார நிலையை மறந்து விட்டான். இவையே துன்பங்கட்குக் காரணமாகும்.

உலகில் அமைதி நிலவவேண்டுமெனில், மனித குலம் இனிமை காத்து வாழ வேண்டுமெனில், தீய செயல் பதிவுகளை மாற்றி நற்செயல் பதிவுகளுக்குப் பழகிக் கொள்ளவேண்டும். தவறு புரிந்து ஏற்றுக் கொண்ட, உயிரணுக்களில் பதிவாகியிருக்கும், தீவினைப் பதிவுகளைப் (Impressions Of Sins)போக்கித் தூய்மைபெற வேண்டும். தனது உயிர் மூலம் அறிந்து அறிவில் தெளிவும் முழுமையும் பெற அறிவை ஒடுக்கி உள் நோக்கிப் பயில வேண்டும். இத்தகைய செயல்கள் மூலம் உயிருக்குக்காப்பு, தூய்மை,ஓய்வு என்ற மூன்றும் கிடைக்கும். இவற்றிற்கான பயிற்சி முறைதான் நோன்பு என்றும் தவம் என்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய நோன்பு முறையை நமது முன்னோர்கள் இருவகையாகப் பிரித்தார்கள். அவற்றில் ஒன்று பக்தி நெறி மற்றொன்று ஞானநெறி. குழந்தை வயதுடையவர்களும் அறிவின் நுண்மை இல்லாதவர்களும் தெய்வ நிலையைக் கூர்ந்துணர்ந்து அதில் நிலைத்துப் பயில முடியாது. ஆகவே அவர்களுக்கு தெய்வ நிலையின் பெருமைய விளக்கி அதன் இருப்பு நிலையல் நம்பிக்கை வைத்து வணங்கவும், சமுதாய நலன் கெடாத வகையில் தனது இனிமை காக்கும் செயல்களையே புரிந்து வாழும் எண்ணம், சொல், செயல், பயிற்சிகளையும் வகுத்தார்கள். இதுவே பக்தி நெறியாகும்.

தெய்வ நிலையினைக் கூர்ந்துணரும் அறிவுடையோர்கள் முதலில் தனது உயிர் நிலையை உணரவும், பின் உயிரியக்க விரைவைப் படிப்படியாகக் குறைத்து நிலைத்து நின்று பரமாகி நிற்கவும் ஏற்ற தவ முறையே வகுத்தார்கள். இதன் மூலம் ஒரு மனிதன் தனது அறிவைப் பற்றி, உயிர் மூலத்தைப் பற்றி தெளிவாக உணர்ந்துக் கொண்டு வாழ்வாங்கு தானும் வாழ்ந்து வாழத் தெரியாதவர்களுக்கும் வாழ வழிகாட்டி உதவும் நெறியை வகுத்தார்கள். இதுவே ஞான நெறியாகும்.

காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்று வகையாலும் உடலோம்பல் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே உயிரோம்பலும் மனிதனுக்கு இன்றியமையாதது என அறிந்தோம். உயிர் தூய்மைக்கான பக்தி நெறி,ஞான நெறி, இரண்டு வழிகளில் பக்தி நெறி மனிதனை ஒரளவு தான் பண்படுத்துகின்றது. ஞான நெறியின் மூலம் தான் அறிவின் முழுமைப் பேற்றை அடைய முடியும். ஞான நெறியால் தான் உயிரின் இருப்பு,இயக்கம், விரிவு இவற்றைப் பற்றி தெளிந்து முழுமையாக முடியும்.

பக்தி நெறியிலிருந்து ஞான நெறிக்கு உயர வேண்டுமெனில் மனதை உயிரில் ஒடுங்கி மனம், உயிர் இரண்டையும் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும். உயிரின் இயக்க விரைவைக் குறைத்து ஞானப் பேற்றை அடைந்துப் பின் தன் மூல நிலையான நிறை நிலையை (தெய்வ நிலையை) அனுபவமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற முறையான உளப்பயிற்சி அகநோக்குப் பயிற்சியாகும். இப்பயிற்சி முறைதான் யோகம் என்று கூறப்படுகின்றது.

மனதை உயிரில் ஒடுக்க வேண்டுமெனில், இயக்க மையத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் உயிர் பரவி இருந்தபோதும் அது மூலாதாரம் எனும் முதுகுத்தண்டின் கீழ்ப் புறத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. உயிராற்றலுக்குக் குண்டலினி சக்தியென்னும் ஒரு சிறப்புப் பெயருண்டு. இதனால்தான் குண்டலினி அமர்ந்திருக்கிறதென்று கூறுவது வழக்காயிற்று.

உயிராற்றலான குண்டலிணி சக்தியின் இயக்க மையத்தை புருவ மையத்துக்கு மாற்றியமைத்தால்தான் மனதை அதில் ஒடுக்க முடியும். உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து மாற்றவும் பின் அதில் மனதை ஒடுக்கவும் ஏற்ற பயிற்சி தான் குண்டலினி யோகம்.

உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து எழுப்பிப் புருவ மையம் கொண்டு வர மூச்சுப் பயிற்சியைப் பின்பற்றினார்கள். நமது முன்னோர்கள் மூச்சுப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியை நெற்றிக்குக் கொண்டு வர பல ஆண்டு காலம் தேவை. மேலும் அச்சக்தி ஏறிவரும் வழியில் சுவாதி\u202டிடானம் எனும் நீர் மையத்தையும், மணிப்புரகம் எனும் வெப்ப மையத்தையும், அனாகதமெனும் காற்று மையத்தையும், விசுத்தி எனும் புதாகாச மையத்தையும் கடந்து வரவேண்டியுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் இடப்பெயற்சி கொள்ளும்போது சில பல உடல் நோய்கள் காணும். அவற்றையெல்லாம் அனுபவித்துப் பெரு முயற்சியோடு தான் மேலேறி வரவேண்டும். இல்லறத்தில் வாழ்வோர்களுக்கு இம்முறை ஏற்றதல்ல.

சமுதாயச் சீர்திருத்தம்

 

உலகில் பெரும்பாலான மக்கள் புலன் கவர்ச்சியில் மயங்கி, ஆன்ம நிலையை மறந்து அறுகுண வயமாகி வாழ்கின்றார்கள். துன்பங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பால்கவர்ச்சி விரைவில்,மயக்கநிலையில் பெரும்பாலும் குழந்தைகள் உலகில் உற்பத்தியாகின்றன. அக்குழந்தைகளும் மயக்க நிலையில்தானே வாழ முடியும்? இந்த போக்கிலிருந்து உலகம் திருப்பம் பெற வேண்டுமெனில் திருமணத்திற்கு முன்னதாக ஆணும் பெண்ணும் குண்டலினி யோகம் கற்றுப்பயின்று முழுமை பெறவேண்டும். அப்போது தான் குடும்பத்தைத் திறமையோடு நடத்தும் ஆற்றல் வளருவதோடு அவர்கட்குப் பிறக்கும் குழந்தைகளும் அறிவின் விழிப்பு நிலைக்கு எளிதில் திரும்பிவிடும். இயற்கையான முறையில் கருத்தடைக்கும் குண்டலினியோகம் வழி செய்கிறது. உயிரியக்க மையத்தைக் குறிப்பிட்ட இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை உண்டாகிவிட்டால் தேவையானபோது குழந்தைப் பேறு அடையவும்,வேண்டாத போது அதனை தவிர்க்கவும் நுட்பம், ஆற்றல் இரண்டும் குண்டலினியோகத்தால் கிட்டும்.


பொதுவாகச் சொன்னால் குண்டலிணி யோகம் தனிமனித முழுமைக்கும்,உலக சமுதாய நலணுக்கும் ஏற்றதோர் உளப்பயிற்சி முறையாகும். உயிர் நலம் பேணும் எல்லா முறைகளும் இந்த யோகத்தில் அடங்கியுள்ளன. இவ்வரிய யோகப் பயிற்சி முறையை விரும்புவோர் தகுதியுடையோர் அனைவரும் கற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களுக்கு உதவும் ஒரு அருள் நிலையமே உலக சமுதாய சேவா சங்கமாகும்.

இந்த சங்கத்தின் அருள் விளக்கப் பணி நிலையங்களே மனவளக்கலை மன்றங்கள். இப்போது பல மன்றங்களில் இச்சங்கக் கிளைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கட்கும் வெளிநாடுகட்கும் இம்முறையைப் பரப்பி நலமளிக்க நம்மாலியன்ற தொண்டினைப் புரிவோம். இத்தெய்வீகத் தொண்டின் பெருமையுணர்ந்த அறிஞர்கள் பலர் ஞானாசிரியர்களாகப் பயிற்சி ஏற்றுள்ளனர். மேலும் பலர் முன் வரவேண்டும். இவ்வுலகில் எல்லாப் பகுதிகளிலும் இந்த மனவளக்கலை முறை பரவ நாம் ஒன்றுகூடி செயலாற்றுவோம்.

நம்மை அளித்த உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்றாகக் கருதி உவகையோடு அருட்தொண்டு புரிவோம் வாரிர் என்று தவத்தில் தேர்ந்த அன்பர்கள் எல்லோரையும் அழைக்கின்றேன். இதனால் உங்கள் குடும்பக் கடமைகள் சிறிதளவும் குறைவு படாமல் இருக்கவும் விழிப்போடு இருக்கவேண்டும்.

இதுவரையில் ஞானம் என்ற துறையில் சில தவறான கருத்துக்கள் உலவி வருகின்றன. அவை


1. ஞானம் என்பது எளிதில் மனிதனுக்குக் கிட்டாது.

2. இல்லறத்தார்களுக்கு ஞானம் ஏற்றதல்ல.

3. பெண்கள் ஞானத்திற்கு ஒவ்வாதவர்கள்.

4. ஞானம் பெற்றால் மனிதன் குடும்பத்தை மறந்து விடுவான்.

5. ஞானம் பொருளாதாரத் துறைக்கு எதிரான ஒன்று.

இவ்வகையான ஐவகைத் தவறான கருத்துக்களையும் திருத்தி இன்று எண்ணிறந்த மக்களுக்கு மெய்விளக்கம் அளித்திருக்கிறது நமது மனவளக்கலை மன்றங்கள். இத்தகைய மன்றங்கள் வளர வழி செய்து நம் கடனாற்றுவோம்.

பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.

இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன



-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

"வாழ்க வையகம்" :


 நமது ஐவகைக் கடமைகளில் கடைசியில் வரும் உலகக் கடமையினை ஆற்றுவதில் முடிந்த வரையில் மிகுதியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பொருளிலோ, செல்வாக்கிலோ, உடல்கட்டிலோ போதிய வலிவு இல்ல...ாத நாம் எப்படி உலக நலக் கடமையினை ஏற்று ஆற்ற முடியும் என்று எவரும் மலைக்கவோ சோர்வுறவோ வேண்டாம். உங்களிடம் தவத்தால் உறுதி பெற்ற மனோவலிவு இருக்கிறது. உலக நலத்திற்காக உங்கள் விருப்பத்தைச் சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலித்துக் கொள்ளுங்கள். சிதாகாசமாக இயங்கும் உங்கள் உயிராற்றளிலிருந்து கிளம்பும் அந்த உயர்ந்த நினைவு அலை மாகாகாசம் என்ற பேரியக்கத் தொடர்கள உயிரோடு கலந்து அந்த விருப்பம் நிறைவேற வழிவகுத்துக் கொள்ளும். உங்கள் கடமைகளில் ஒன்றாக நாள்தோறும் " வாழ்க வையகம்" என்ற மந்திரத்தை பத்து தடவையாகிலும் நமது உடன் பிறந்தவர்களாகிய உலக மக்கள் அனைவரையும் விரிவாக நினைந்து ஒலித்துக் கொண்டிருங்கள். அன்பர்கள் பலருடைய இத்தகைய எண்ண உறுதி செயல்படுத்துவதற்காக எந்த நாட்டிலோ ஒரு வெற்றி வீரனைப் பிறக்கச் செய்யலாம். அல்லது இப்போது உள்ள உலக நல நாட்டம் கொண்ட ஒருவரையோ பலரையோ உலக நலத் தொண்டில் முழுமையாகத் திருப்பிவிடலாம். பேரியக்கத் தொடர் களத்தில் அத்தகைய மாபெரும் ஆற்றல் அடங்கியுள்ளது. 

  * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"மனதின் உயர்வு எதுவோ அதுவே மனிதனின் உயர்வு". . " தான் உயரவும் பிறரை உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும் தொண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன".

.
"வாழ்க வளமுடன்" என்ற வாழ்த்து எல்லா மந்திரங்களையும் விட உயர்ந்த திருமந்திரமாகும்" .

.
"மனத்தூய்மை பெற்றால்தான் வினைத்தூய்மை பெற முடியும்.
-----------------------------------------------------------------------------------------------
அதற்கு அகத்தவ பயிற்சி (Simplified Kundalini Meditation) அவசியம்
-----------------------------------------------------------------------------------------------
வேண்டும்."
----------------

.
"வினைத் தூய்மை பெறவேண்டின் மனத்தின் தூய்மை
வேண்டுவது இன்றியமையாத தாகும்;
வினைத்தூய்மை ஒழுக்கமுடன் கடமை, ஈகை,
விளங்கும் அறநெறி நிற்க விரைந்து ஓங்கும்
வினைத்தூய்மை வித்தான மனத்தின் தூய்மை
விண்ணுணரும் அகத்தவத்தால் ஓங்கும் உய்ய
வினைத்தூய்மை மனத்தூய்மை ஒன்றை ஒன்று
உயர்த்தி மனிதன் தெய்வமறியச் செய்யும்."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 

இனிமை கெடாத வாழ்வு :



வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலவ வேண்டும். அதற்கு ஏமாற்றமில்லாமல் வாழ வேண்டும். ஏமாற்றம் என்பது துன்பமும் சோர்வும் அளிக்கின்ற ஒரு மனநிலை. அது தன்னாலும் வரலாம். பிறராலும் வரலாம். இயற்கையாலும் கூட எழலாம்.
1) பேராசை,
2) அறியாமை,
3) தப்புக் கணக்கு,
4) விழிப்பின்மை,
5) பகை,
6) இயற்கைச் சீற்றம்,
ஆகிய ஆறு வகையில் ஏமாற்றங்கள் வருகின்றன. ஏமாற்றத்தின் அளவுக்கேற்ப அதிர்ச்சியும், துன்பமும் விளையும். அவ்வப்போது ஈடு செய்துவிடக் கூடிய சிறு சிறு ஏமாற்றங்களும் உண்டு. நீண்ட நாட்களுக்குத் துன்பம் தொடரக் கூடிய ஏமாற்றங்களும் உண்டு. வாழ்நாள் முழுவதிலும் கூட ஈடு செய்துவிட முடியாத ஏமாற்றங்களும் உண்டு.

பொதுவாக எல்லோரும் தங்கள் வாழ்வில் காணும் துன்பங்களுக்கு இந்த ஏமாற்றமே பெரும்பாலும் காரணமாக இருப்பதால், ஏமாற்றத்தைத் தவிர்க்கக் கூடிய சிந்தனையும், அந்தச் சிந்தனை தந்த விளக்கத்தைச் செயலுக்குக் கொண்டு வருகின்ற அறிவு மேன்மையும் வேண்டும். விழிப்பின்மையால் அலட்சியம், அசிரத்தை, சோம்பல் இவற்றுக்கு இடம் கொடுத்தால் செயல்திறன் குன்றிவிடும். அம்மாதிரியான மனநிலையில் செயலாற்றி, அதன் காரணமாக வெற்றி தவறிப் போகும் போது கவலை வரும்.

சிந்தனையோடு ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். நல்ல முடிவை செயலுக்கு கொண்டு வரும் திறமும், துணிச்சலும் வேண்டும். இத்தகைய சிந்தனையும், அதனால் ஏற்படும் விழிப்புணர்வும், வாழ்க்கை முறையும் மனிதனின் வாழ்வில் வெற்றியையும், அமைதியையும் தரும்.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதனால்,
நாமே எல்லோரையும் எதிரிகளாக மாற்றிக் கொள்கிறோம்.
யாரைப் பார்த்தாலும் விரோத மனப்பான்மை உண்டாகும்".

.
"உடல் உயிர், அறிவு, எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றன?
இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? என்பதை
யெல்லாம் உணர்ந்து கொள்ள 'மனவளக்கலை' பயிற்சி வேண்டும்".

.
எண்ணத்தின் சிறப்பு :

"எண்ணம்,சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது,
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்
இன்பதுன்பம் விருப்பு வெறுப்பு உயர்வு தாழ்வு;
எண்ணத்தின் நாடகமே, பிரபஞ்சத்தின்
இரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி;
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக் கப்பாலும் ஒன்றுமில்லை."

.
"மனம் புலன் உணர்வில் மயங்கிட மாயை ஆம்
மனம் உயிர் வெளியினில் மருவித் தோய்ந்திட
மனம் விரிந்தறிவெனும் மாபதம் எய்திடும்
மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 19 மே, 2013

தன்னிலை விளக்கம்



நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா? இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை. எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே "நான்" என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் "நான்" என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்றுவரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.

.
உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது. சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது. ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே "நான்" எனப்படுவது.

.
ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்ப பலபேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே. ஆகவே "நான்" பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவ பரிணாம சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்ப பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்ப பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.

.
எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே "நான்" என்பதாகும். அரூப நிலையில் ஏகனாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே "நான்" என்பதாகும்.

.
தன்னை யறிந்தால் கடவுளை அறியலாம் :

"உன்னையோ கடவுளையோ அறிய வென்றால்
ஒரு குறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து
தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும்
தனிக்கருணை வடிவான குரு வடைந்தால்
அன்னை வயிற்றடைந்துருவாய் உடலாய் வந்த
ஆதி கருவைப் புருவத்திடையுணர்த்தப்
பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க, உந்தன்
பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 

அனைவரும் சாதனை புரியும் சித்தரே

 

பதவி-பணி-பணிவு

 

வெள்ளி, 17 மே, 2013

கொலை செய்வோர், களவு செய்வோர் மீது சினம்

 

வினா:

இன்றைய வாழ்க்கையில் கொலை செய்வோர், கற்பழிப்போர், களவு செய்வோர் ஆகியோர் பால் சினம் கொள்ளாமல் வாழ இயலுமா?

மகரிஷியின் விடை:

கற்பழித்தல், திருடுதல் முதலிய குற்றங்கள் செய்பவரை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, எவ்வாறு அவர் மீது சினம் எழாமல் இருப்பது என்ற கேள்வி எழுந்தது. ஒவ்வொருவரும் உள்நோக்கி பாருங்கள். நமது ஆயுளிலே தெரிந்த வரையில் எத்தனை குற்றங்களை செய்திருப்போம். அவ்வாறு பல குற்றங்கள் செய்த நிலையிலே, அதாவது பிடிபடாத குற்றவாளிகளாக ஒவ்வொருவரும் இருக்கும் போதே வேறு ஒருவர் குற்றம் செய்யும்போது ஒத்துப்பர்த்து, அவர்தான் குற்றவாளி என்று எண்ணுவது ஒரு சாதாரண மனித மனதின் இயல்பு என்றாலும் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தோமானால் இந்த உண்மைகளைஎல்லாம் உணர்ந்து யார் மீதும் சினம் எழாமல் காக்கும் அளவுக்கு மன விரிவும் அறிவின் உயர்வும் ஏற்படும்.

குழந்தைகள் எந்த பாவமும் செய்யாமல் ஏன் பல துன்பம்

 

வினா:

குழந்தைகள் எந்த பாவமும் செய்யாத முன்னம் ஏன் பல துன்பங்களுக்கு உட்படுகின்றன?

மகரிஷியின் விடை:

குழந்தை என்பது பெற்றோர் கர்மங்களின் தொடர் நிகழ்ச்சி என்பதை முதலில் நினைவு கொள்ள வேண்டும். வித்தில் ஏற்பட்ட பதிவு விளைவாக மலரும் இடம் குழந்தைகள் தான். பெற்றோர் குழந்தைகள் இவர்களுடைய உடல்கள் தாம் வேறுபட்டனவே தவிர உயிர் வேறுபடவில்லை. கர்மம் வேறுபடவில்லை. எனவே குழந்தைகள் வருந்துவதற்கு பெற்றோர் மாத்திரம் அல்ல, பல தலைமுறை தாண்டிய பாட்டன் பாட்டிகளும் பொறுப்பாவார்கள்.

கிரகணம் எப்படி உண்டாகிறது

 

வினா:

கிரகணம் எப்படி உண்டாகிறது? அந்த நாட்களில் உண்ணா நோன்பு, தியானம் செய்வது சிறப்பு என்று சொல்கிறீர்களே, இது பற்றி தங்கள் கருத்து என்ன?

மகரிஷியின் விடை:

சூரியன் வேகமாக சுற்றிக்கொண்டிருக்கிறது. அப்போது heavier elements எல்லாம் நடு மையத்திற்கு சென்றுவிடும் என்று ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். Particle movement குறைந்தால்தான் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைய முடியும்; heavier element ஆக மாறும். அப்படி வரும்போது ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது என்றால் அதற்கு மேலே அசைய முடியாமல் அந்த சுழல் வேகமே நின்று போகிறது. சுழல் வேகமே நின்று போனால் "கரு அணு" என்று சொல்லக்கூடிய Nucleus-க்கு இயக்கமே இல்லை. Nucleus நின்று போய்விட்டால் உடனே அதை சுற்றி வந்து கொண்டே இருக்கும் electron, proton எல்லாம் ஓட ஆரம்பிக்கும். ஓட ஆரம்பித்தால் அதுதான் அணுச்சிதைவு. அந்த அணுச்சிதைவு ஏற்பட்ட உடனே கரு அணு நின்று போய், அதே போல பக்கத்தில் ஒன்று நின்று போய், இதே மாதிரி கோடான கோடி அணுக்கள் அழிந்தன. அங்கு இருந்த கரு அணு எல்லாம் வெட்ட வெளியாக, அந்த வெட்ட வெளியை "Black-spot in the Sun" என்று சொல்கிறோம். அதாவது சூரியனில் கரும்புள்ளி என்று தோன்றும் வெட்டவெளி. சூரியனுடைய இயக்கத்தில் வெட்டவெளி நிற்க முடியாது. அதனால் மையத்தில் ஏற்பட்டபோதும் இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்து பிரபஞ்சமெல்லாம் கடந்து, கோடு போல சென்று சுத்த வெளியோடு கலந்து விடுகிறது. அதனால்தான் அந்த கிரகங்களை எல்லாம் spiritual கிரகங்கள், ஆன்மீக கிரகங்கள் என்று சொல்வது.

ராகு-கேது என்றால் இப்போது விஞ்ஞானிகள் சொல்கிறார்களே Black-hole அதுதான் ராகு-கேது. சூரியனின் நடுமையத்திலிருந்து உற்பத்தி ஆகக்கூடிய அந்த Black-hole இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வந்து எப்போதும் அதை கடந்து கொண்டே இருக்கிறது. அதற்கு நேராக சந்திரன், பூமி, சூரியன் இது மூன்றும் வரும்போது அந்த மறைவு சரியாக வந்து விடும். ஒவ்வொரு மாதமும் மூன்றும் ஒன்றாகத்தான் வருகின்றன; கிரகணம் வருவது இல்லை. ராகு-கேது என்ற அந்த Black-hole நேரில் வருகின்றபோதுதான் அந்த மறைவு உண்டாகிறது. உடனே "கிரகணம்" என்று சொல்கிறோம். சூரியனை மறைக்கும்போது நேரடியாக அந்த இடத்தில ராகுவோ கேதுவோ அந்த ஓட்டம் இருக்குமானால், அதன் பெயர் "சூரிய கிரகணம்"; அல்லது பூமி வந்து சந்திரனுடைய ஒளியை மறைக்குமேயானால் அது "சூரிய கிரகணம்". சந்திரனை பூமி மறைக்கும் போது, அதாவது பூரண சந்திரன் தினத்தில் நடு மையத்தில் பூமி நிற்கும்; அதனால் பூமி சூரியனிலிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை மறைத்துவிடும். அந்த மறைவு சந்திரன் மேல் படுகின்றது. அதுதான் "சந்திர கிரகணம்". அதுவும் ராகு-கேது என்ற Black-hole-க்கு நேரில் வந்தால்தான் அந்த மறைவு தெரியுமே தவிர மற்றபடி மறைப்பது இல்லை. ஆகையினால் ஒவ்வொரு மாதமும் ராகு பிடித்து விட்டது, இது ஒரு பாம்பு என்று சொல்வார்கள். நீளமாக வருவது எல்லாம் பாம்பு என்று சொல்லிக்கொள்வது நமது வழக்கம்.

Black-hole இதனால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும்போது நம் உடலில் உள்ள ரசாயனம் magnetic force வித்தியாசப்படும். அந்த மாறுதல் ஏற்படும்போது நமது உணவு செரிமானமாகின்ற முறை குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்வீக நினைவு அல்லது வேறு எதாவது சங்கற்பம் செய்வது நல்லதே. அப்படி இல்லாமல் இஷ்டம்போல் சுற்றும்போது உடல் உறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் விளையக் கூடிய குழந்தை கேடுற்ற உடலும் மனமும் உடையதாக இருக்க கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆகவே, இத்தகு விபத்துக்களை தடுப்பதற்காகவே அந்த நாட்களை விரத நாட்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர்.

கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் immunity அப்படியே காப்பாற்றப்படும். கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போல்தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் இல்லை. தூய்மை வேண்டும் என்று எடுக்கும்போது எதற்குமே குளித்துவிட்டு செய்வது ஒரு சடங்குதான்.

பெண்

ஐயா, நீங்கள் பெண்களை உயர்த்திப் பேசி அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றீகள் இது சரியாய் ?

மகரிஷியின் விடை:

நீங்கள் இந்த உலகத்திற்க்கு எப்படி வந்தீர்கள்? உங்களை ஒரு பெண் அல்லவா தன் வயிற்றில் பத்து மாதம் வைத்து காத்து உருவாக்கினாள்! அப்பொழுது அவள் உண்ட உணவை, அவள் சுவாசித்த காற்றை அல்லவா நீங்கள் பங்கிட்டுக் கொண்டீர்கள்? மேலும் முதலில் இந்த உலகிற்கு வந்தீர்களே, அங்கு உங்களுக்கு தன் இரத்தத்தை அல்லவா பாலாக மாற்றி முதல் உணவாக அளித்தாள்.

நாம் கடைகளில் சென்று ஒரு புதிய வாகனம் வாங்கும் பொழுது அந்தக் கம்பெனியே உங்களுக்கு முதல் பெட்ரொலை இட்டு நிரப்பி நீங்கள் சிறிது தூரம் வாகனத்தை இயக்குவதற்கு உதவி செய்வது போல், தாய் தானே உங்களக்கு தன் இரத்தத்தைப் பாலாக்கி முதல் உணவு (Fuel) அளித்து நீங்கள் உயிர்வாழ உதவினாள். அதற்கு மேலும் பல மாதங்கள் அந்த தாயின் பாலைக் குடித்துத்தானே வளர்ந்தீர்கள்.

"அந்தப் பெண்மைதானே உங்களுக்கு வாழ்கைத் துணையாகவும் வந்து வாழ்நாள் முழுவதும் உங்கள் இன்ப, துன்பங்களில் பங்கு கொண்டு நீங்கள் வீடுபேறு அடையவும் உதவுகின்றாள். இதில் ஏதாவது ஒன்றை உங்களால் மறுக்க முடிமா? இவ்வளவு பெருமை வாய்ந்த பெண்ணினத்தை போற்றுவதில் உங்களுக்குக் கஞ்சத்தனமும் பொறுக்க முடியாமையும் ஏன் வரவேண்டும்?"

இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை

 


வினா: ஐயா, இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன ?

மகரிஷியின் விடை:

இறைவன் என்னும் தத்துவம் எங்கும் நிறைந்துள்ள ஓர் பேராற்றல். அதனுடைய தன்மைகளில் இன்னொன்று அன்பு. அந்த அன்பு உங்கள் எண்ணம், சொல், செயல்களில் ஊடுருவி நிறைந்திருந்தால் அது தான் நீங்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமை. எல்லோரிடத்திலும் அன்பைக் காட்டுங்கள். இறைவன் மகிழ்ச்சி அடைவான். ஏனெனில் அவன் அன்பும் கருணையுமாக அனைத்து உயிர்களிலும் நிறைந்துள்ளான். அவனை மகிழ்விக்க இதைவிடச் சிறந்த வழி வேறொன்றில்லை. உடலும் குடலும் அற்ற இறைவனுக்கு வேறு ஒரு தேவையுமில்லை. பொருட்களைக் கொடுத்து அரூபமான இறைவனை மகிழ்விக்க நினைப்பது அறியாமையே.

தியானத்தை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே செய்து வந்தால் போதாதா ?

 

வினா: ஐயா, தியானத்தை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே செய்து வந்தால் போதாதா ? மன்றத்திற்கு அவசியம் வர வேண்டுமா ?
மகரிஷியின் விடை:

நாம் நாள் தோறும் குளிக்கின்றோம். ஒரு நாள் குளிக்கா விட்டால் அழுக்கும், வியர்வையும், நாற்றமும் உண்டாகின்றன. நாள் தோறும் குளித்துக் கொண்டே இருந்தால் தான் உடல் சுத்தமாக இருக்கும். இதே போல் தான் புலன்களைக் கொண்டு வாழ்வை நடத்தும் மனிதனுக்கு புலன் மயக்கத்தால், தன்னாலோ, பிறராலோ உயிரில் அழுக்குப் படிகின்றது. அந்த அழுக்கு உடல் நோய், உள்ளக் களங்கம் இவையாக மாறுகின்றன. தவமும் தத்துவ விளக்கமும் கொண்டு, அவ்வப்போதும், நாள் தோறும், வாரத்திற்கு ஒரு முறையும், உயிர்த் தூய்மை செய்து கொண்டே இருக்க வேண்டும். கூட்டுத் தவம், அருள் உரை ஆற்றல் அல்லது கேட்டல் என்பவை மூலம் மனவளக்கலை மன்ற உறுப்பினர்கள் வாரந் தோறும் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடி உயிர்த்தூய்மை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தங்கள் சிஷ்யர்களைக் கூர்ந்து நோக்குமிடத்து...

 

வினா: மகரிஷி அவர்களே, நான் தங்களைத் தவிர தங்கள் சிஷ்யர்களைக் கூர்ந்து நோக்குமிடத்து யாரும் அறுகுண சீரமைப்பிலோ, குணநலப் பேற்றிலோ வெற்றி பெற்றவர்களாகத் தெரியவில்லை. இப்பயிற்சிகள் நல்ல கொள்கையின் முடிவுகள் என்றே கருதுகிறேன். இதில் எனக்கு நம்பிக்கையில்லை. இப்பயிற்சியில் உயிர் தூய்மை அடைந்தவர்கள் யாராவது இருப்பின் நீங்கள் தயவு கூர்ந்து தெரிவித்தால் அவர்களின் பொற்பாதங்களை வணங்க விருப்பம் மிகக் கொண்டுள்ளேன்.

மகரிஷியின் விடை:

பரிணாமத்தில் விலங்கினக் கருத்தொடராக வந்து, இந்நாள் வரையும் வாழ்வில் புலன்வழி நின்று, மயக்க நிலையில் வாழ்நாளைக் கழித்த மனிதனுக்கு அறுகுண சீரமைப்பு என்பது ஒரே நாளில் அல்லது குறிப்பிட்ட காலத்தில் எல்லோருக்கும் கிட்டி விடாது. அவரவர்கள் பெற்ற தெளிவான விளக்கம், தளராத பயிற்சி, விடாமுயற்சி இவற்றிற்கு ஏற்ப பலன் சிறிது சிறிதாகத் தான் கிடைத்து வரும்.

தாங்கள் ஏதோ ஒரு சில அன்பர்களிடம் உரையாடி அவர்கள் உங்கள் கூற்றுக்கு வலுவான மறுப்புக் கூற, நீங்கள் சினமுற்று அந்நிலையில் எடுத்த முடிவே உங்கள் வினாவாகும். ஒருவர் எளிய முறைக் குண்டலினித்தவம், அகத்தாய்வுப் பயிற்சி இவற்றின் மூலம் அறுகுண சீரமைப்பில் வெற்றி பெறவில்லை என்றால் அது குண்டலினி யோகப் பயிற்சி முறையில் உள்ள குறைபாடு அல்ல. அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு ஆர்வத்தோடு முறையாகப் பயிற்சி செய்யாததால் ஏற்பட்ட குறைபாடாகும்.

மேலும் இது ஒரு 'கொள்கை முடிவுதான்' என்று கூறியிருக்கிறீர்கள். எந்தவொரு முறையும் அறிந்து கொள்ளும் அளவில் அது கொள்கை தான். ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்தால் அது கைவல்யம் ஆகும்.

உங்களுக்கு இந்த கொள்கையில் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்கள். அது உங்கள் மனோநிலை. உங்களை வற்புறுத்தி இதனை நம்பும்படி ஒருவர் அடுத்தடுத்துக் கூறினால் அவர் உணர்ச்சி வயப்பட்டவரேயாவார். அவர் சொல்லை நீங்கள் ஏற்று உங்கள் பொன்னான காலத்தை வீணாக்க வேண்டாம். இந்த அகத்தவ முறையில் வெற்றி பெற்றவர் யாராகிலும் இருந்தால், அவரைக் காட்டினால் அவர் பாதம் வணங்குவேன் என்று கூறுகிறீர்கள். இது ஒரு சவாலாகவே இருக்கின்றது.

மெய்ப்பொருள் எல்லாமாகவும், தானாகவும் விளங்கும் அகண்ட காட்சியை அகத்ததுவாய் உணர்ந்தவர்க்கு உங்கள் வணக்கம் ஏனோ ? அத்தகைய அன்பரை உங்களுக்குக் காட்டிக் கொடுத்து உதவும் திருப்பணி எனதல்ல. மெய்யுணர்ந்து உய்வு பெற்ற எண்ணிறந்த மெய்யன்பர்கள், என் உயிரோடு உயிராய், அறிவோடு அறிவாய் கலந்து உலகிற்கு நல்விளக்குகளாய்த் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை எந்த அளவுகோல் கொண்டு நீங்கள் அளந்து கணிக்க முடியும் ?

எனது வாழ்க்கை வரலாறு -5



அச்சமூட்டிய விபத்து

ஒருநாள் நான் ஆபிசுக்குப் போகப் பஸ் ஏறக் காத்திருந்தேன். இடம் மந்தைவெளி தபாலாபீசுக்கு எதிரே. அங்கு சக்கிலி இருந்தான் எப்போதாகிலும் எனது செருப்பு காது அறுந்துவிட்டால் அவன்தான் தைத்துத் தருவான். அன்றும் அந்த மாதிரி செருப்பைத் தைக்கக் கொடுத்தேன். அவன் தைத்துக் கொண்டிருந்தான். அவன் வயிறு ஒட்டியிருந்தது. “ஏனப்பா, காலையில் நீ ஒன்றும் சாப்பிடவில்லையா?” என வினவினேன். “இல்லை” என்றான். மேலும் சொன்னான். “நேற்றிரவுகூடச் சாப்பாடு கிடையாது சாமி” என்றான். இந்தச் சொல் என்னைக் கிறுகிறுக்க வைத்து விட்டது. “ஏன் என்றேன். “நேற்று வருவாய் இல்லை சாமி” என்றான். இந்தப் பரிதாபமான வார்த்தை என் உள்ளத்தை தொட்டுவிட்டது. அவனுக்குக் கொடுக்க வேண்டியது அரையணா. ஒரு அணாவாகக் கொடுத்துவிட்டு அன்று ஆபிசுக்குப் போய்விட்டேன். “நேற்று இரவுகூட சாப்பாடு கிடையாது சாமி” என்னும் சொற்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பட்டினியின் கொடுமையை நான் உணர்ந்து இருக்கிறேன்.
இதுபோல எத்தனையோ ஏழைகள் உணவு இன்றிப் பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை எப்படி மாறும்? இந்த சிந்தனை வலுத்தது. மாலை வீட்டிற்கு வந்தேன். அன்று எனது ஆசான் வீட்டுக்குக்கூடச் செல்லவில்லை. பட்டினியைப் பற்றிய நினைவு என்னை வாட்டியது. எனக்கு ஒரு முடிவு தோன்றியது. “எத்தனையோ ஏழைகள் ஒருவேளை உணவு கொண்டும், சில சமயம் அதுகூட இன்றியும், பட்டினி கிடக்கும் போது நான் மட்டும் இரண்டு வேளை ஏன் சாப்பிட வேண்டும்? ஒருவேளை மாத்திரம் சாப்பிட்டு வந்தால் போதாதா?” என்று வினவி, அதையே முடிவாகக் கொண்டேன். அன்றிரவு உணவு உட்கொள்ளவில்லை. மறுநாளும் எனக்கு இரவு உணவு வேண்டாம் என்றும், சில நாட்களுக்கு ஒரு விரதம் எடுத்திருப்பதாகவும், என் அக்காளிடம் கூறிவிட்டேன். காலையில் எழுந்தால் உடல் காற்றில் பறப்பதுபோல இருந்தது. சிறிது நேரம் சென்று பல் துலக்கிச் சிற்றுண்டி கொண்டபின்தான், வலிவு வரும். இதைச் சரிபடுத்திக் கொள்ள நினைத்தேன். மாலையில் காலணவுக்கு வருத்த வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன். பத்து தினங்களில் நிலைமை சரியாகி விட்டது. மாலையில் சாப்பாட்டு நினைவு வராது. எனினும் “உலகில் வறுமை ஒழிய நான் என்ன செய்ய வேண்டும்? அது என்னால் எப்படி முடியும்?” என்ற சிந்தனை வலுத்துக் கொண்டே வந்தது. இருபத்து மூன்றாவது வயதில், இரவு உணவு விட்டேன். இன்றுவரை அதே பழக்கம் தொடர்ந்து வருகிறது. அன்பர்கள் வற்புறுத்தலால் ஏதேனும் சிற்றுண்டி சில சமயம் கொள்வதுண்டு. பால் மாத்திரம் இரவில் விடாமல் பருகி வருகிறேன்.
எனது திருமணம் நிச்சயமாகிவிட்டது. “என் மனதுக்கு ஒத்தவளை, என் உள்ளத்தைப் புரிந்து கொண்டவளை, உயர்ந்த பண்பும் சிறந்த அறிவும் உடையவளை, நான் மனைவியாகப் பெறப் போகிறேன்” என்று எண்ணுந்தோறும், களிப்புக் கடலில் நீந்திக் கொண்டிருந்தேன். ஒரு இலட்சிய வாாழ்க்கை நடத்த, ஏற்றதோர் வாழ்க்கைத் துணைவியை நாடினேன். அடைந்தேன். சிக்கனமாகவே, திருமணம் நடந்தேறியது. எனது அன்னையுள்ளம் குளிர்ந்தது. எனது தம்பிக்கும் அதே நாளில் திருமணம் நடத்திவிட்டேன். அன்னையை என்னோடு இருக்கும் படி அழைத்து வந்து விட்டேன். என் தம்பியும் என்னோடு இருந்தான். வேறு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு நாங்கள் வாழ்ந்தோம்.
கண்ணுக்கும் கருத்துக்கும் ஒத்த மனைவி கிடைத்தாள். போதிய வருவாய் இருந்தது. மகிழ்ச்சியுள்ள வாழ்க்கைதான். இந்தக் களிப்பில் நிறைவை எய்திவிடவில்லை. உயிர் எது? கடவுள் எங்கே? உலகில் வறுமை ஒழிவது எவ்வாறு?” இந்தச் சிந்தனைகள் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே இருந்தன.

பருவத்திற்கேற்ற கடமை
பொருள்வேண்டும் எனினும் அது மக்கட்கெல்லாம்பொது சொத்தாய் இருக்கட்டும்; இளைஞர் எங்கும்பொருள் ஈட்ட உழைக்கட்டும்; முதியோர் தங்கள்புத்தி நுட்பம் தொழில் நுட்பம் போிதிக்கட்டும்பொருள், ஆட்சி, விஞ்ஞானம், அறிவின் தன்மை,பூதஉடல் தரமுணர்ந்தோர் அரசாளட்டும்பொருட்கள் எல்லாம் வாழ்விற்கே என்பதல்லால்பொருட்கட்கே வாழ்வு என்ற கருத்து வேண்டாம்.

பொருளாதாரம்
தனிமனிதன் உரிமை என்ற பிடியினின்றுசகல தொழில் நலம், வீடும் நிலம், வியாபாரம்மனிதர் பலர் இணைந்த கூட்டுறவின் கீழேமாறிவிடும் திட்டத்தை அமுலாய்க் கொண்டுவினியோகம் தொழில் பொருள் என்றிரண்டிலாக்கிவேலையின்மை, வறுமை இவையொழித்துக் காட்டஇனியேது பொருளாதாரத்தில் எங்கும்ஏற்றத் தாழ்வெனும் நிலைமை ஆய்வீரே.

முழு சுதந்திரம்
உணவு, உடை, இடம்பெற்று சுதந்திரமாய் வாழஉலகமக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு அன்றோ?உணவு, உடை, இடம், பணத்தால் ஒருசிலரே முடக்கிஒருவர் பலர் சுதந்திரத்தைப் பறித்திடுதல் நன்றோ?உணவு, உடை, இடம் முடக்கும் ஒழுங்கறியார் கூடிஉருவாக்கும் சட்டங்கள் நீதியெனில் சரியா?உணவு, உடை, இடம் விடுவித்துலகப் பொதுவாக்கிஓருலக ஆட்சியின்கீழ் சுதந்திரமாய் வாழ்வோம்

எனது வாழ்க்கை விளக்கம்
இரண்டாம் உலகப் போர்க்காலம். உலகெங்கும் போர் அச்சம் மிகுந்திருந்தது. எனக்கு ஏதேனும் சமுதாயத்திற்குப் பயனுள்ள முறையில் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. போஸ்டல் ஆடிட் ஆபீஸ் செயின்ட்ஜான் ஆம்புலன்ஸ் (First Aid) குண்டு வீச்சுப் பாதுகாப்பு (Air Raid Precaution) ஆகிய இருதுறைகளிலும் பயிற்சி பெற்றேன். துப்பாக்கிச் சுடுவது தவிர மற்ற எல்லா வகையான இராணுவப் பயிய்சிகளும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படைக்கு உண்டு. எல்லாவற்றிலும் ஆர்வத்தோடு பயிற்சி பெற்றேன். உடை கூட இராணுவ உடைதான். வாரத்தில் இரண்டு நாட்கள் காரியாலயத்திற்கு அவ்வுடையிலேயே செல்ல வேண்டியிருக்கும். அப்போது போர்க்காலப் பாதுகாப்பாகச் சென்னையைக் காலி செய்ய உத்திரவாகிவிட்டது. போஸ்டல் ஆடிட் ஆபீஸ் கோயம்பத்தூருக்கு மாற்றப்பட்டது. நான் உடனே அங்கு செல்ல முடியாமல் ஆறு மாதங்களுக்கு லீவு எடுத்துக்கொண்டேன். அப்போது லுங்கி வியாபாரம் ஏற்றுமதித் தடை காரணமாகச் சிறிது மந்தமாக இருந்தது. துணி விற்பனை மட்டும் சற்று முனைப்பாக இருந்தது. லீவும் முடிந்தது. மேலும் லீவு நீட்ட முடியாமல், நான் மாத்திரம் கோயம்புத்தூருக்குச் சென்று வேலையில் சேர்ந்து கொண்டேன்.
ஓட்டல் சாப்பாடு, காரியாலயத்திலேயே படுக்கை. இவ்வாறு இரண்டு மாதங்கள் கழிந்தன. எனக்கு ஓட்டல் ஒத்துக் கொள்ளாமல் உடல் நலிவுற்றது. என் துணைவிக்கு என் நிலையை எழுதினேன். நீங்கள் வந்தால் நானும் உடன் வந்து விடுகிறேன் என்று பதில் எழுதினாள். எங்கேனும் ஒரு வீடு குடியிுுருக்க ஏற்பாடு செய்துவிட்டு உடனே வருமாறு கேட்டுக் கொண்டாள். அவ்வாறே கோவைக் கோட்டைமேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் ஒரு அறையை வாடகைக்குப் பேசி வைத்துவிட்டு, மூன்று நாள் லீவில் கூடுவாஞ்சேரி சென்றேன். துணிக்கடையை சரியாக என் தம்பி நடத்தவில்லை. மூலதனம் மிகவும் குறைந்து போயிருந்தது. அதைச் சிறிது ஒழுங்கு செய்துவிட்டு, என் துணைவியோடு கோவைக்குச் சென்றுவிட்டேன். அங்கு சில மாதங்கள்தான் இருந்தோம். இரண்டாந்திருமணத்தைப் பற்றிய திட்டங்கள் அங்கேயே உருவாக்கிக் கொண்டோம். என் அன்னைக்கு எங்களை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. மீண்டும் லீவு எடுத்துக்கொண்டு கூடுவாஞ்சேரிக்கு வந்துவிட்டேன். பதினோரு மாதங்கள் லீவில் இருந்தேன். இதற்குள் காரியாலயங்கள் மீண்டும் சென்னைக்கு வர உத்தரவாயிற்று. அந்தச் சமயத்தில் நான் வேலைக்குப் போய்ச் சேர்ந்துகொண்டேன். காரியாலயம் சென்னைக்கு மாற்றப்பட்டது. கோவையில் நாங்களும் கூடுவாஞ்சேரியில் என் அன்னையோடு மற்றவர்களுமாகக் குடும்பம் பிரிவுபட்டிருந்தபோது எனக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. செழித்து வந்த பொருளாதாரம் சிறிது சிதறுண்டது. காரியாலயம் சென்னைக்கு மாற்றப்பட்ட போது அந்தப் பெரும் சிக்கல் நீங்கியது. கூடுவாஞ்சேரிக்கு வந்தவுடன் இரண்டாந் திருமண ஏற்பாடு செய்ய முனைந்தோம். எனக்கு அப்போது வயது முப்பத்திரண்டு. முதல் திருமணமாகி பத்து ஆண்டுகள் முழுமை பெறவில்லை. திருமணத்திற்கு நாங்கள் ஒப்புதல் செய்து கொண்டோம். அதுவரையில் எனது துணைவியின் தந்தையார் ஒப்புதலைப் பெறவில்லை. அதற்காக நாங்கள் மயிலாப்பூருக்குப் போனோம். அப்போது என் மனைவியிடம் ஒரு கருத்தை தெரிவித்தேன். அவள் தந்தை ஒப்புக்கொள்ளாவிடில் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டுமென்றேன். “அவர்களைச் சம்மதிக்கச் செய்வது என் பொறுப்பு” என்றாள். மேலும் கூறினாள். “அவர் உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும், திருமணம் நடக்க வேண்டியது தான். அதன் பிறகு அவரைச் சமாதானப் படுத்துவது என் வேலை” என்றாள். எனது மாமனாரை நாங்கள் அனுமதி கேட்டபோது “உங்கள் விருப்பம்போல் நடத்திக்கொள்ளுங்கள்” என்று ஒரே வார்த்தையில் கூிறிவிட்டார். இதை முனனமே என் துணைவி ஏற்பாடு செய்துவிட்டாள் போலும்.
கூடுவாஞ்சேரிக்கு அடுத்த நந்திவரம் கிராமத்தில் பெண் பார்த்தாயிற்று. எல்லாம் என் துணைவியின் ஏற்பாடுதான். வழக்கத்திற்கு மதிப்பளித்து, ஒரு நாள் நான் நேரில் போய் பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தேன். எனக்குத் தத்துவ ஆராய்ச்சியால் மனம் எவ்வளவோ தெளிவும் உறுதியும் பெற்றிருந்தது. எனினும் எனது வருங்கால வாழ்வை நோக்கிச் சிந்தித்தபோது ஒரு பெரிய புயல் வீசத் தொடங்கியது. என் உயிருக்குயிரான கண்மணி, எனது உள்ளத்தின் போக்கிறிந்து எனக்கு உதவியும், தொண்டு செய்தும் காக்க வல்லவள் என் துணைவி. அவள் இடத்தில் மற்றொரு பெண்ணைக் கொண்டு வந்து அமர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தை நினைந்து நினைந்து வருந்தினேன். கோவைக்குச் சென்றபோது தவிர மற்ற நாட்களில் நாங்கள் பிரிந்திருந்ததே கிடையாது. இரண்டாந் திருமணத்தின் மூலம் அவள் என் வாழ்விலிருந்து பெரும்பகுதி ஒதுங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நினைந்து நினைந்து உருகினேன்.
திருமணத்திற்கு நாள் நிச்சயமாயிற்று. திருமாங்கல்யம் செய்வதற்கு ஆச்சாரியிடம் பொன் வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒரு நல்ல நாளைக் குறிப்பிட்டிருந்தோம். அன்று நான் ஏதோ காரணத்தால் ஊரில் இல்லை. மாலைதான் வந்து சேர்ந்தேன். “நீங்கள் இன்று மாங்கல்யம் செய்ய ஆச்சாரிக்குப் பொன் வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னீர்கள். நேரத்தோடு நீங்கள் வராததால் நானே ஆச்சாரியைக் கூப்பிட்டுப் பொன் கொடுத்துவிட்டேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினாள் என் துணைவி. எனக்கு வியப்பாயிருந்தது. இவளிடம் பொன் ஏது? பணமும் இல்லையே? எப்படி பொன் வாங்கிக் கொடுத்திருப்பாள்? என்று யோசித்தேன். உடனே அவள் “பொன் ஏது என்று யோசிக்கிறீர்களா? என் வளையல்கள்தான்; இரண்டைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள். அவள் கைகளைப் பார்த்தேன். கைக்கு ஒரு வளையல்தான் இருந்தது. ஒரு சவரன் பொன்னில் நாலு கவரிங் வளையல்கள் போட்டிருந்தாள். அவற்றில் இரண்டுதான் அளிக்கப் பெற்றது. இரண்டாம் திருமணத் தாலியாக மாறியது. எனது உள்ளமே உருகிவிட்டது. அவள் ஒரு வெற்றிப் பார்வை வீசினாள். “என் வாழ்வில் பெரு நிதியான உங்கள் அன்பிலேயே ஒருத்திக்குப் பங்குகொடுக்கப் போகும் எனக்கு இந்தப்பொன் வளையல்களில் பங்கு கொடுப்பது பெரிய காரியமன்று” என்றாள். “வசதியிருக்கும் போது நான் மீண்டும் வளையல் செய்துபோட்டுக்கொள்கிறேன்” என்றாள். எதிர் காலத்தில் அவள் நடத்தை குடும்ப நிர்வாகத்தில் எப்படியிருக்கும் என்று எனக்கு ஒருவாறு தெரிந்துவிட்டது. அதை விளக்குவதற்கே இந்த நிகழ்ச்சி நடந்தது போலும். அவளைச் சிறுவயது முதலே நன்கு அறிவேன். ஆனால் தியாக உணர்வை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அன்றுதான் கிடைத்தது.
ஒரு மனிதனிடம் அடங்கியுள்ள மன ஆற்றல், நட்பு அளவு அவை சந்தர்ப்பங்களால்தான் வெளிப்படும். அவள் என்ன நினைத்து வளையல்களைக் கழற்றிக் கொடுத்தாளோ என்று, எனது நினைவு ஓடியது. நாலு வளையல்களில் வரப்போகிறவளுக்கும் இரண்டு வளையல்கள் உரியவை தானே என்று நினைத்தாளோ! நல்ல நாள் என்று குறித்த தினத்தில் மாங்கல்யத்திற்குப் பொன் கொடுக்க வேண்டும் என்ற எண்ண அழுத்தத்தில் அதை அளித்தாளோ! திருமணத்திற்கு எவ்வளவோ செலவுகள் உள்ளனவோ, அதோடு பொன் வாங்குவதற்கும் ஏன் தனியே செலவழிக்க வேண்டும்; இருப்பதைக் கொண்டே அலுவலை முடிக்கலாமே என்று நினைத்தாளோ! இதன் மூலம் இரண்டாந் திருமணத்தில், நான் எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று நிரூபித்துக்காட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டாளோ! இவை எல்லாவற்றிற்கும் அவள் தியாகச் செயல் இடமளித்தது. வசதிகளோடு அமைந்த சொந்த வீட்டை வறுமை காரணமாக விற்றுவிட்டு வாடகைக்கு ஒரு சிறிய வீட்டில் குடிபுகப் போகும் ஒருவர் உள்ளத்தில் நிலை எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது என் எதிர்கால வாழ்வை நினைக்கும்போது எனது உள்ளம். கண்ணீர் துளிர்ந்தது. மூன்று வகையில் கண்களிலிருந்து நீர்வரும். மகிழ்ச்சி பொங்கி வரலாம். துன்பம் மேலிட்டு வரலாம். கண்நோயுற்றால் வரலாம், எனக்கு கண் நோய் இல்லை. கண்ணீர் வந்தது. மகிழ்ச்சியினாலா அல்லது வருத்தத்தினாலா என்று பிரித்துக் கூற முடியவில்லை.
15-06-1943 தேதிதான் திருமணத்திற்க் குறித்த நாள். அந்த நாள் வந்துவிட்டது. இரண்டாந் திருமணத்தைப் பார்க்க வேண்டுமென்ற விழைவில் எங்கள் சுற்றத்தாரும் நண்பர்களும், சுற்றுப்புறக் கிராமவாசிகளும் வந்து குழுமிக்கொண்டிருந்தனர். திருமணத்திற்கு முன் இரவே கூட்டம் அதிகம். லுங்கி வியாபாரம் தலையெடுத்து நன்றாக நடைபெறும் காலம் அது. பல ஊர்களில் எனக்கு ஒப்பந்த நெசவாளர்கள் இருந்தனர். திருமணநாள் காலையில் அவர்களெல்லாருமே வந்து குவிந்து விட்டனர். இரண்டாந் திருமணத்தில் முதல் மனைவிதான் தாலி எடுத்துக்கொடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். இதன் மூலம் முதல் மனைவியின் ஒப்புதல் மீதுதான், இரண்டாம் மனைவி இல்லத்துக்கு வருகிறாள் என்பதைச் சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மறைபொருள் விளக்கமே முதல் மனைவி திருமணத்தில் பங்கு கொள்ள வேண்டுமென்றும், அவள்தான் திருமாங்கல்யத்தை எடுத்துக் கணவன் கையில் கொடுக்க வேண்டுமென்றும், நமது முன்னோர்கள் இதை ஒரு சடங்காக வைத்துள்ளனர். இரண்டு பெண்களும், இருபுறத்திலும் உட்கார்ந்துதான் ஓமம் முதல் எல்லாச் சடங்குகளும் நடந்தன. வெளியிலிருந்து வந்து குழுமியிருந்த தாய்மார்கள், சகோதரிகள் எல்லோருக்கும் உள்ளத்தில் அடக்க முடியாத ஆவல். திருமாங்கல்யம் எடுத்து முதல் மனைவி, கணவன் கையில் கொடுக்கும்போது அவள் ஆற்றாமையால் கதறி அழுவாள். அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டும். நாமும் சிறிது கண்ணீர் சிந்தி நமது அனுதாபத்தைத் தெரிவித்து மனச் சுமையை இறக்கிக்கொள்ளலாம்.
இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டிருந்து பல நாட்களாக இத்திருமண நாளை எதிர்பார்த்து வந்திருந்த தாய்மார்கள் கூட்டம் வரவர அதிகமாகியது. மற்றச் சடங்குகள் முடிந்து தாலி எடுத்துக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. புரோகிதர் சொற்படி எனது முதல் மனைவி திருமாங்கல்யத்தை மனதிடத்தோடு எடுத்தாள். என் கையில் கொடுத்தாள். நான் அவள் முகத்தைப் பார்த்தேன். எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் என்னை நோக்கினாள். “துணிவோடு தாலி கட்டுங்கள். எல்லாம் நான் சமாளித்துக் கொள்கிறேன்” என்று சொல்லும் வீர உணர்ச்சி, அவள் பார்வையில் விளங்கிற்று. எனினும் நான்தான் கோழையாகிவிட்டேன். சிறிது கண் கலக்கம் ஏற்பட்டது. உடனே சமாளித்துக் கொண்டேன். இந்த நிலையில் நான் தோல்வி கண்டதற்கும் அவள் வெற்றி பெற்றதற்கும் காரணம் உண்டு என்பதைப் பின்னர் சிந்தித்து உணர்ந்தேன். அவள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி எண்ணி, உள்ளத்தைப் பண்படுத்தி வந்திருந்தாள். நான் பொதுவாக எதிர் காலத்தைப் பற்றிச் சிந்தித்து வைத்திருந்தேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் திருமணத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த முறையிலான உளப் பயிற்சியால் அவள் பரீட்சை வந்த போது நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுவிட்டாள். பாடத்தை அக்கரையோடு படிக்காமல் பரீட்சையில் வினாத்தாள் கையில் வாங்கியவுடன் திகைப்புற்ற மன நிலையில், கைகள் உதறலோடு விடை எழுதத் துவங்கும் மாணவன் போல என் நிலை வந்துவிட்டது. கைகளில் சிறிது உதறல் எடுத்து, பொதுவாக நான் பெற்றிருந்த தவச் சாதனையால் இந்த நிலையைச் சமாளித்துக்கொண்டு கொட்டு மேளம் முழங்கத் திருமாங்கல்யத்தைச் சூட்டி விட்டேன்.
எனக்குத் திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை. மாறாக ஒரு திகைப்பும், குற்றம் புரிந்துவிட்டது போன்ற மனப்பான்மையுமே இருந்தன. எல்போர்டு (L.Board) போட்டு கொண்டு, கார் ஓட்டும் கணவனோடு அந்தக் காரில் முதல் முதலாகக் கணவன் வற்புறுத்தல் மீது பயணம் செய்யும் மனைவியின் மனநிலை போல, ஒரு பயங்கர மனோநிலைதான் எனக்கிருந்தது. எனக்கும் என் முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட இரண்டாந்திருமண ஒப்பந்த சூழ்நிலைகளும், உண்மை விளக்கங்களும் வெளியே உள்ளவர்கள் உணர்வார்களா? செல்வச் செருக்கால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுகிறான் என்று சிலர் நினைப்பார்கள். அறியாமையால் இரண்டு பெண்களை மனைவியாக்கிக் கொள்கிறான் என்று சிலர் நினைப்பார்கள். பெண் உள்ளத்தோடு பெண் உள்ளம் ஊடுருவி இணைந்து பரிதாபம் கொண்டு, அவள் மீது இரக்கமும், என்மீது வெறுப்பும் சிலர் கொள்வார்கள். இவற்றையெல்லாம் முன்னமே பலதடவை சிந்தித்து உணர்ந்துதான் இருந்தேன், என்றாலும் திருமணத்தில் குழுமியிருந்தவர்கள் முகங்களை நான் கண்ட போது, அவர்கள் நேரில் என்னைப் பார்த்து அவ்வாறெல்லாம் உரையாடுவதுபோல இருந்தது. இத்தகைய சிக்கலான மனோநிலையில் எனது இரண்டாம் திருமண விழா நடந்தது.
முதல் திருமண விழாவோடு இரண்டாந் திருமண விழாவை ஒப்பிட்டுப் பார்த்தால், முற்றிலும் வேறுபட்ட மனோ நிலைகள் எனக்கு அமைந்திருந்தன. வாழ்க்கையின் மகிழ்ச்சியைத் துய்க்கத் தொடங்கும் நாளாக அன்றிருந்தது. வாழ்க்கை இன்பங்களை விட்டுத் துன்பங்களை ஏற்கும் தொடக்க நாளாக இரண்டாம் திருமண நாள் அமைந்தது. பார்த்த நாடகமாக இருந்தால், அடுத்து வரபோகும் காட்சிகளும் பாத்திரங்களின் உணர்ச்சிகளும் இவ்வாறிருக்கும் என்று யூகித்து எதிர்பார்க்கலாம். இதுவரை பாராத, அதன் கதையமைப்பும் அறியாத நாடகம், எனது இரண்டாம் திருமணம், தாலி கட்டும் காட்சியில் கதாநாயகிகள், நாயகன் உணர்ச்சிகள் இவ்வாறு தான் அமையும், அவற்றை நேரில் காணலாம் என்று, பலவிதமான மனச் சோடனைகளோடு வந்திருந்த தாய்மார்கள், ஏமாந்து போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் கண்களில் முட்டிக்கொண்டிருந்த நீர் வெளியாக வாய்ப்பே இல்லை. இந்தப்பெண் என்ன இம்மாதிரி ஏமாற்றி விட்டாளே என்ற வருத்தத்தில் தான் சில தாய்மார்கள் கண்களில் நீர் சிந்தியிருக்கலாம்.
எப்படியோ இரண்டாந் திருமணம் என்ற காட்சி, என் வாழ்க்கை என்ற நாடகத்தில் முடிந்துவிட்டது. வாசலில் பெரிய பந்தல் போட்டிருந்தும் இடம் கொள்ளவில்லை. அவ்வளவு பேருக்கும் உணவு அளித்தாக வேண்டும். பந்தி ஒன்றுக்கு 200 பேர் உட்காரலாம். பகல் 12.00 மணிக்குத் தொடங்கிய உணவளிக்கும் வேலை மாலை 4 மணி வரையில் முடிவடையவே இல்லை. பந்திக்குப் பரிமாறுவதில், நானும் எனது இலட்சிய மனைவி லோகாம்பாளும், நேரில் பங்கு கொண்டோம். எங்கள் பாடு சோர்ந்துவிட்டது. ஒருவாறு திருமணம் முடிந்துவிட்டது. எனது இரண்டாம் மனைவியின் பெயர் கண்ணம்மா, திருமணத்திற்கு முன்னமே அப்பெயரை மாற்றி விட்டோம். அவளுக்கு “இலட்சுமி” என்ற பெயர் சூட்டி விட்டோம். இந்தத் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட எனது வாழ்க்கை விளக்கங்கள் “இருதாரம்” என்ற தலைப்பில் பன்னிரெண்டு கவிகள் மூலம் விளக்கியிருக்கிறேன்.

எது பண்புநீதி வழுவாது மக்கள் உழைத்து உண்டுநித்திய அநித்தியத்தின் விளக்கம் பெற்றுஆதிநிலை அறிவுநிலை யுணர்ந்து அன்பால்ஆன்மீக நெறியில்பலர் வாழ்ந்த நாட்டில்சாதி, மொழி, நாடு, வெறி இவற்றின் மூலம்தங்களையே உலக மக்களிடமிருந்துபேதித்துப் பிரிவு பிரிவாக்கிக் காணும்பித்து ஒருபெரிய களங்கமன்றோ ஆய்வீர்

நீங்களும் இதுபோலாகலாம்
அழுக்காறு அவா வெகுளிகடுஞ்சொற்கள் எனும் நான்கு வேண்டாவற்றைஅத்தனையும் மாற்றிவிட்டுத்தூய்மைப் பேறடைந்தபயன் அறிவறிந்தேன்பழுத்தமனம் அருளாற்றல்கணம் மறவா விழிப்புநிலை பிறழ்வதில்லைபண்பட்டதென எண்ணம்சொல், செயல் இவை விளைவாய் நலம் காண்கின்றேன்ஒழுக்கமுடன் கடமை பிறர்க்குதவி செய்யும் ஆற்றலிவை வாழ்வில் ஓங்கிஒளிவீசிப் பாருலகமக்கள் நலநாட்டத்தில் தொண்டானானேன்முழுத்திறமை வளர்கிறதுகொடுப்பதென்றிக் கேட்பதில்லை எதிர்ப்பார்ப்பில்லைமுதிர்ந்து வரும் அறிவுசிவக்காட்சியென உள்ளுணர்ந்து நிறைவாயுள்ளேன்

எனது இரண்டாவது திருமணம் நடைபெற்ற பிறகு எனக்குக் குடும்ப வாழ்க்கையில் பொறுப்பு மிகுந்துவிட்டது. இரண்டு பெண்களின் உள்ளங்களையும் ஊடுருவி ஆராய்ந்துதான், ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும். தன்னைப் புறக்கணித்து நான் எந்தச் செயலையும் புரிவதாக, இருவரில் ஒருவர் கூட நினைத்துவிடக்கூடாது. அத்தகைய கருத்து உருவாகிவிட்டால், பின்னர் அதனை ஒழுங்கு செய்வது கடினம். எனவே, மிகவும் விழிப்போடு ஒவ்வொரு செயலையும் செய்வேன். பரம் பொருளிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்பது, ஒரு தெளிவான விளக்கம். ஆயினும் உயிர்கள் அனைத்துமே பெண் குலத்தினிடமிருந்து தோன்றின என்ற விளக்கம் எனது சிந்தனையில் முதலிடம் பெற்றது. எனவே, நான் பெண்களை மிகவும் மதிப்போடு நடத்திவந்தேன். இந்தக் கருத்தை ஒட்டியே உலக சமாதானம் என்ற நூலில்.
பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம்பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்வே றென்னபெருமை இதைவிட எடுத்துப் பேசுதற்கு?
என்ற கருத்து ஒரு கவியில் எடுத்துக் காட்டி இருக்கிறேன். ஒருவர் மனமும் நோகாமல் வாழ்வை நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு குடும்பத்தை நடத்தினேன். லுங்கி வியாபாரம் அப்போது நாளுக்கு நாள் மேலோங்கியது. வெளியிலே சாயம் தீர்த்து நூல் கொண்டுவருவது மிகவும் தொந்தரவாக இருந்தது. ஆகவே, ஒரு சாயத் தொழிற்சாலையையும் ஏற்படுத்திக் கொண்டேன்.
நான் அடைய விரும்பிய இலட்சியங்களில், வறுமையில்லா வாழ்வும் ஒன்று. எனது வறுமை ஒழிந்துவிட்டது. தேவைக்கு மேலாக வருவாய் பெருகிவிட்டது. மாதம் ஒன்றுக்கு லுங்கி விற்பனை, ஒன்றேகால் இலட்சம் ரூபாயை எட்டியது. இதனால் என் அளவில் வறுமை ஒழிந்து போயிற்று. ஆனால் என் போன்று வறுமையில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் வறுமை ஒழிய வழி என்ன? இந்தச் சிந்தனை ஓங்கியது. முதலில் என்னிடம் தறி வேலை செய்யும் தொழிவாளர்களின் வறுமையை நீக்க வேண்டும். முதலில் செய்ய வேண்டியதும், செய்ய முடிந்ததும் இதுவே. எனவே, தாராளமாகக் கூலியைக் கொடுத்தேன். பிறகு ஆண்டுதோறும் நிகர லாப வருவாயில் 25% போனசாகக் கணக்குப் போட்டு, நெசவாளர்கள் எல்லோருக்கும் கொடுத்து வந்தேன். நெசவாளர் மனைவி குழந்தை பெற்றால், உடனடியாக ரூ.15/- இனாமாக வழங்கும் ஏற்பாடும், தாயோ தந்தையோ இறந்துவிட்டால், ரூ.25/- இனாமாக வழங்கும் ஏற்பாடும் செய்தேன்.
நெசவுத் தொழிலையும் துணி விற்பனையையும் எவ்வாறு நடத்த வேண்டுமென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டேன்.


அவை இந்தக் கவிகள் மூலம் விளங்கும்:-

“ஆடைகளைத் தோற்றுவிக்கும் பணியில் கண்டஅனுபவமும் திறமையும் கொண்டெல் லோருக்கும்கோடையிலும் குளிரினிலும் உடுத்திக் கொள்ளக்குறைந்த விலையில் நல்லதுணி வகைகள்ஊடை வலுபாவு வலு பொருத்தம் பார்த்துஒத்துநெய்து சரி அகல நீளம் வைத்துக்கூடை சுமப்போனுக்கும் செல்வர்கட்கும்குறித்த விலைவிற்கும் ஒருபணியைச் செய்வேன்.”

“விற்பனையில் ஒத்துழைக்கும் எவர்க்கும் லாபவிகிதத்தில் பெரும்பாலும் குறைந்திடாமல்சிற்பிகளைப் போலறிவைப் புலன்களோடுசேர்த்தொன்றித் தொழிலாற்றும் நெசவாளர்கள்அற்புத செய்கைக் கேற்ற கூலி தந்தும்ஆடைகள் நெய்தே விற்கும் மற்றையோர்கள்கற்பனையாலும் என்னால் நட்டம் காணாக்கருத்துடனே உடுத்துபவர் திருப்தி காண்பேன்.

இவ்வாறு கொள்கையை வகுத்துக்கொண்டு தொழிலை நடத்தி வந்தேன்

எனது வாழ்க்கை விளக்கம் -4



என் வயது இருபத்திரண்டுக்குப் பிறகு, எனது வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்ப்பட்டன. பொருளாதாரத் துறையில் உயர வேண்டுமென்ற ஆர்வம் ஒருபுறம், தத்துவத்துறையில் உயிரின் நிலை என்ன? தெய்வம் எவ்வாறு உளது? என்று அறிந்துவிட வேண்டுமென்ற ஆர்வம் ஒருபுறம், என் அறிவை ஆட்க்கொண்டன. எப்போதுமே சிந்தனைதான். முயற்சிதான் பொருள் துறையை உயர்த்துமென்பதில் அசைவற்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆராய்ந்து கொண்டேயிருந்தால், கடவுளையும் கண்டுவிடலாம் என்ற ஒரு திண்ணமான எண்ணமும் எனக்கிருந்தது.
போஸ்டல் ஆடிட் ஆபிஸில் கிடைத்த வேலை எனக்குச் சிறிதுகூடச் சம்மதமில்லை. எனினும் அந்த வேலையையும் விட்டு விட்டு என்ன செய்வது? வேறு வேலை கிடைத்தால் பின்னர் அதைப் பற்றி முடிவு செய்யலாம் என்று தொடர்ந்து வேலை செய்து வந்தேன். ரூாபாய் பதினைந்து என் வேலைக்குச் சம்பளம். தறி நெசவில் மாதம் சுமார் பத்து ரூாபாய் கிடைக்கும். மொத்தம் கூட்டினால் ரூாபாய் இருபத்தைந்து, அந்தக் காலத்தில் என் தேவைக்குப் போதும். என் உணவுக்கும், பெற்றோர்களுக்குப் பணம் அனுப்புவதற்கும், அத்தொகை போதுமானதாக இருந்தது. எனினும் எதிர்கால முன்னேற்றம் எப்படி? மேலும் காலையிலும் மாலையிலும் நான்கு பர்லாங்கு தூரம் சென்று, தறி நெய்துவிட்டு வருவதென்பது, எனக்குத் தாங்கொணாத் துன்பமாக இருந்தது. முதலில் தறி நெசவிற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும். இந்த நினைவில் மிக அழுத்தமாக இருந்தபோது, ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எனக்குப் பகுதி நேெர வேலை கிடைத்தது. இரத்தினம் என்னும் பெயருடைய ஒருவர், அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார். என்னிடம் மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். நான் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியன். காலையில் இரண்டு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூபாய் பத்து, நெசவுத் தொழிலைவிட சிறிது சுலமாக இருந்தது. எனினும், முன்னேற்றம் எவ்வாறு?
எனது பொருள் துறை வளர்ச்சியைப் பற்றி, ஒருநாள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு எண்ணம் தோன்றியது. “ஆயுர்வேத மருந்துகள் எல்லாம் தெரிந்திருக்கும் நான், ஏன் மருத்துவம் செய்யக் கூடாது?” இந்தத் துறை எனக்கு எதிர்காலத்தில் வளர்ச்சி தரும் என்று நினைத்தேன். முதலில் எவ்வாறு தொடங்குவது? என்ற சிந்தனை. கடைசியாக ஒரு முடிவிற்கு வந்தேன். பல் பொடியும், தாம்பூல மாத்திரையையும் செய்து விற்பது என்று முடிவு செய்தேன். அப்படியே தாம்பூல மாத்திரையைத் தயார் செய்தேன். அதில் கஸ்தூரி, கோரோசனம், குங்குமப்பூ, இவையெல்லாம் இருக்கும். ஒரு உயர்ந்த முறை அது. எனது ஆசான் வைத்யபூபதி எஸ். கிருஷ்ணாராவ் செய்முறை அது. ஒரு புட்டி நூறு மாத்திரைகள் விலை நாலு அணா. போஸ்டல் ஆடிட் ஆபிசிலேயே, அதை விற்கத் தொடங்கினேன். சிறுகச் சிறுக விற்பனை அதிகமாயிற்று. ஒரு முறை செய்தால் ரூபாய் பத்து செலவாகும். வரவு ரூபாய் நாற்பது. ஒரு மாதத்தில் விற்றுவிடும். இதோடு பல்பொடியும் செய்தேன். “சிகாமணி நாயுருவி பல்பொடி” என்பது அதன் பெயர். இரண்டு விற்பனைகளும் சேர்ந்து, மாதம் ஐம்பது வருவாய் அளித்தது. எனது நம்பிக்கை வலுப்பெற்றது. பொருள் துறையில் எப்படியும் முன்னேறிவிடுவேன் என்ற ஒரு எண்ணமும் உறுதியும் எனக்கு உண்டாகிவிட்டன.
இருபத்துமூன்றில் எனக்குத் திருமணம் செய்து வைக்க, என் பெற்றோர்கள் முனைந்தனர். எனது அக்காள் மகளையே எனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி, என் மாமாவை என் தந்தையார் கேட்டார். எனது மாமாவுக்குத் தனது மகளை ஒரு செல்வ வளமிக்க ஒருவனுக்குக் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம். எனக்கு என் அக்காள் மகளையே மணக்க வேண்டுமென்ற விருப்பம். என் மாமாவின் முடிவு கண்டு என் பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். எனக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கலாமா என்று, என்னை வினவினார்கள். குழந்தை வயது முதலே என்னோடு பழகி என் உள்ளத்தில் நீங்கா நினைவு பெற்றபின், வயது வந்த பிறகும் அவளையே மணக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்த எனக்கு, வேறு எந்தப் பெண்ணையும் மணக்க விருப்பமில்லை. திருமணப் பேச்சு நின்று விட்டது.
சுமார் ஆறு மாதங்கள் சென்று விட்டன, இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு பேரிடி. என் தந்தைக்கு காய்ச்சல் கண்டு மிகவும் அபாய நிலையில் இருப்பதாகச் செய்தி வந்தது. மறுநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு கூடுவாஞ்சேரிக்குப் போய் என் தந்தைக்கு வேண்டிய கடமைகளைச் செய்யலாம் என்று இருந்தேன். மறுநாள் காலையே, என் தந்தை இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. என்னால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. செய்தியைக் கேட்ட இடத்திலேயே, அப்பா என்று கூவிக் கதறிக் கதறி அழுதேன். எதிர் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். என்மீது பரிதாபம் கொண்ட அவர், என்னை அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் மனைவியும் அவரும் என்னைத் தேற்றினார்கள். அவரைப் பார்த்து என் அப்பாவை நான் இழந்துவிட்டேனே என்று மீண்டும் ஒரு முறைக் கதறினேன். “அப்பா! வேதாத்திரி, கவலைப்படாதேடா! உனக்கு நான் தந்தையாக இருந்து ஆகவேண்டிய அனைத்தும் செய்கிறேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களோடு நீ மூன்றாவது பிள்ளையாக இரு அப்பா” என்று உள்ளக் குழைவோடு ஆறுதல் கூறினார்கள்.
பிறகு ஊருக்குச் சென்று என் தந்தைக்கு இறுதிக் கடன் ஆற்றினேன். பிரிவாற்றாமை என்ற அனுபவம், எனக்கு அது தான் முதல் தடவை. மீண்டும் மயிலாப்பூருக்கு வந்து எனது கடமைகளை ஆற்றத் தொடங்கினேன். தாம்பூல மாத்திரை, பல்பொடி விற்பனை எனக்குப் போதிய பணம் அளித்ததால் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் வேலையை விட்டு விட்டேன்.
எனது அக்காள் வீட்டு பக்கத்து வீட்டில் சொக்கலிங்க கிராமணி என்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஒருநாள் என்னை அழைத்து தனது இரண்டு மகன்களுக்கும் பிரைவேட் பாடம் சொல்லிக் கொடுக்கும்படியும் மாதம் ரூபாய் ஏழு தருவதாகவும் கூறினார். சிறிது தயங்கிப் பின் ஒத்துக் கொண்டேன். இரண்டு மாதங்கள் சென்றன. ஒருநாள் அவர் என்னை நோக்கி “ஏன் திருமணம் செய்துகொள்ளத் தாமதம்” என்று வினவினார். “எனக்கு போதிய பணம் இல்லை” என்று பதிலளித்தேன். நான் ஒரு சீட்டுக் கட்டி வந்தேன். ரூபாய் நூறுதான் அதன் மூலம் கிடைக்கும். திருமணத்திற்கு என் திட்டப்படி ரூாபாய் இருநூறு வேண்டும், இந்த நிலைமைகளை விளக்கிச் சொன்னேன். வட்டி இல்லாமல் நூறு எனக்கு கடனாகக் கொடுப்பதாகவும் உடனே திருமண ஏற்பாடு செய்யும் படியும் ஊக்கமளித்தார்.
இந்தப் பேச்சுக்கள் அனைத்தையும் எதிர் வீட்டு அப்பாவிடம் சொன்னேன். உடனே அவரும் அவர் மனைவியும் வந்து, என் மாமாவைப் பெண் கேட்டார்கள். உடனே பதில் தரவில்லை. அவர்களும் விடவில்லை. எப்படியோ ஒருவாறு நான் விரும்பியவளையே எனக்கு மணம் செய்ய முடிவு செய்து விட்டார்கள், பணமும் தயார் செய்துவிட்டேன்.






ஒருநாள் நான் ஆபிசுக்குப் போகப் பஸ் ஏறக் காத்திருந்தேன். இடம் மந்தைவெளி தபாலாபீசுக்கு எதிரே. அங்கு சக்கிலி இருந்தான் எப்போதாகிலும் எனது செருப்பு காது அறுந்துவிட்டால் அவன்தான் தைத்துத் தருவான். அன்றும் அந்த மாதிரி செருப்பைத் தைக்கக் கொடுத்தேன். அவன் தைத்துக் கொண்டிருந்தான். அவன் வயிறு ஒட்டியிருந்தது. “ஏனப்பா, காலையில் நீ ஒன்றும் சாப்பிடவில்லையா?” என வினவினேன். “இல்லை” என்றான். மேலும் சொன்னான். “நேற்றிரவுகூடச் சாப்பாடு கிடையாது சாமி” என்றான். இந்தச் சொல் என்னைக் கிறுகிறுக்க வைத்து விட்டது. “ஏன் என்றேன். “நேற்று வருவாய் இல்லை சாமி” என்றான். இந்தப் பரிதாபமான வார்த்தை என் உள்ளத்தை தொட்டுவிட்டது. அவனுக்குக் கொடுக்க வேண்டியது அரையணா. ஒரு அணாவாகக் கொடுத்துவிட்டு அன்று ஆபிசுக்குப் போய்விட்டேன். “நேற்று இரவுகூட சாப்பாடு கிடையாது சாமி” என்னும் சொற்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பட்டினியின் கொடுமையை நான் உணர்ந்து இருக்கிறேன்.
இதுபோல எத்தனையோ ஏழைகள் உணவு இன்றிப் பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை எப்படி மாறும்? இந்த சிந்தனை வலுத்தது. மாலை வீட்டிற்கு வந்தேன். அன்று எனது ஆசான் வீட்டுக்குக்கூடச் செல்லவில்லை. பட்டினியைப் பற்றிய நினைவு என்னை வாட்டியது. எனக்கு ஒரு முடிவு தோன்றியது. “எத்தனையோ ஏழைகள் ஒருவேளை உணவு கொண்டும், சில சமயம் அதுகூட இன்றியும், பட்டினி கிடக்கும் போது நான் மட்டும் இரண்டு வேளை ஏன் சாப்பிட வேண்டும்? ஒருவேளை மாத்திரம் சாப்பிட்டு வந்தால் போதாதா?” என்று வினவி, அதையே முடிவாகக் கொண்டேன். அன்றிரவு உணவு உட்கொள்ளவில்லை. மறுநாளும் எனக்கு இரவு உணவு வேண்டாம் என்றும், சில நாட்களுக்கு ஒரு விரதம் எடுத்திருப்பதாகவும், என் அக்காளிடம் கூறிவிட்டேன். காலையில் எழுந்தால் உடல் காற்றில் பறப்பதுபோல இருந்தது. சிறிது நேரம் சென்று பல் துலக்கிச் சிற்றுண்டி கொண்டபின்தான், வலிவு வரும். இதைச் சரிபடுத்திக் கொள்ள நினைத்தேன். மாலையில் காலணவுக்கு வருத்த வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன். பத்து தினங்களில் நிலைமை சரியாகி விட்டது. மாலையில் சாப்பாட்டு நினைவு வராது. எனினும் “உலகில் வறுமை ஒழிய நான் என்ன செய்ய வேண்டும்? அது என்னால் எப்படி முடியும்?” என்ற சிந்தனை வலுத்துக் கொண்டே வந்தது. இருபத்து மூன்றாவது வயதில், இரவு உணவு விட்டேன். இன்றுவரை அதே பழக்கம் தொடர்ந்து வருகிறது. அன்பர்கள் வற்புறுத்தலால் ஏதேனும் சிற்றுண்டி சில சமயம் கொள்வதுண்டு. பால் மாத்திரம் இரவில் விடாமல் பருகி வருகிறேன்.
எனது திருமணம் நிச்சயமாகிவிட்டது. “என் மனதுக்கு ஒத்தவளை, என் உள்ளத்தைப் புரிந்து கொண்டவளை, உயர்ந்த பண்பும் சிறந்த அறிவும் உடையவளை, நான் மனைவியாகப் பெறப் போகிறேன்” என்று எண்ணுந்தோறும், களிப்புக் கடலில் நீந்திக் கொண்டிருந்தேன். ஒரு இலட்சிய வாாழ்க்கை நடத்த, ஏற்றதோர் வாழ்க்கைத் துணைவியை நாடினேன். அடைந்தேன். சிக்கனமாகவே, திருமணம் நடந்தேறியது. எனது அன்னையுள்ளம் குளிர்ந்தது. எனது தம்பிக்கும் அதே நாளில் திருமணம் நடத்திவிட்டேன். அன்னையை என்னோடு இருக்கும் படி அழைத்து வந்து விட்டேன். என் தம்பியும் என்னோடு இருந்தான். வேறு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு நாங்கள் வாழ்ந்தோம்.
கண்ணுக்கும் கருத்துக்கும் ஒத்த மனைவி கிடைத்தாள். போதிய வருவாய் இருந்தது. மகிழ்ச்சியுள்ள வாழ்க்கைதான். இந்தக் களிப்பில் நிறைவை எய்திவிடவில்லை. உயிர் எது? கடவுள் எங்கே? உலகில் வறுமை ஒழிவது எவ்வாறு?” இந்தச் சிந்தனைகள் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே இருந்தன.




பருவத்திற்கேற்ற கடமை


பொருள்வேண்டும் எனினும் அது மக்கட்கெல்லாம்பொது சொத்தாய் இருக்கட்டும்; இளைஞர் எங்கும்பொருள் ஈட்ட உழைக்கட்டும்; முதியோர் தங்கள்புத்தி நுட்பம் தொழில் நுட்பம் போிதிக்கட்டும்பொருள், ஆட்சி, விஞ்ஞானம், அறிவின் தன்மை,பூதஉடல் தரமுணர்ந்தோர் அரசாளட்டும்பொருட்கள் எல்லாம் வாழ்விற்கே என்பதல்லால்பொருட்கட்கே வாழ்வு என்ற கருத்து வேண்டாம்.




பொருளாதாரம்


தனிமனிதன் உரிமை என்ற பிடியினின்றுசகல தொழில் நலம், வீடும் நிலம், வியாபாரம்மனிதர் பலர் இணைந்த கூட்டுறவின் கீழேமாறிவிடும் திட்டத்தை அமுலாய்க் கொண்டுவினியோகம் தொழில் பொருள் என்றிரண்டிலாக்கிவேலையின்மை, வறுமை இவையொழித்துக் காட்டஇனியேது பொருளாதாரத்தில் எங்கும்ஏற்றத் தாழ்வெனும் நிலைமை ஆய்வீரே.




முழு சுதந்திரம்


உணவு, உடை, இடம்பெற்று சுதந்திரமாய் வாழஉலகமக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு அன்றோ?உணவு, உடை, இடம், பணத்தால் ஒருசிலரே முடக்கிஒருவர் பலர் சுதந்திரத்தைப் பறித்திடுதல் நன்றோ?உணவு, உடை, இடம் முடக்கும் ஒழுங்கறியார் கூடிஉருவாக்கும் சட்டங்கள் நீதியெனில் சரியா?உணவு, உடை, இடம் விடுவித்துலகப் பொதுவாக்கிஓருலக ஆட்சியின்கீழ் சுதந்திரமாய் வாழ்வோம்.




எனது வாழ்க்கை விளக்கம்


ஒழுக்கம், உழைப்பு, சிந்தனை, உயர்ந்தோர்களிடம் மதிப்பு இவற்றை மூலதனமாக வைத்தே எனது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள, இடைவிடா முயற்சியை மேற் கொண்டேன். எனினும் எனக்குப் போதிய அளவு நிறைவு கிட்டவில்லை. அடுத்தடுத்துச் சிக்கல்கள் ஏதேனும் உருவாகும். அதைச் சமாளித்து வெற்றி பெறுவதற்குள் மீண்டும் வேறு சிக்கல் கிளம்பும். மனித வாழ்வே சிக்கலுடையதுதான். அறிவாளி, மூடன், செல்வந்தன், ஏழை, வலியவன், எளியவன், படித்தவன், படிக்காதவன், இளைஞன், முதியவன், இல்லறத்தான், துறவறத்தான், ஆண்பெண் எவரென்றாலும் என்ன? வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒன்று அல்லது பல சிக்கல்களுக்குள்ளாகித் தவித்துக் கொண்டு தான், வாழ்வை நடத்துகின்றனர், நடத்தவேண்டும். சமுதாயச் சூழ்நிலை அமைப்புதான் வாழ்க்கைச் சிக்கலுக்கு முதல் காரணம். அந்தச் சமுதாய அமைப்பு என்ற வலுவுள்ள சக்கரத்தின் சுழலில், ஒவ்வொரு மனிதனும் அவன் பொறுப்புணர்ச்சியின் அளவிற்கு அமுக்கப்பெற்றுத் தவித்துக்கொண்டே வாழ்ந்துவருகின்றான். நான் மட்டும் என்ன விதி விலக்கா? சிக்கலைக் களைந்து வாழ்வில் முன்னேற்ற மடைந்து, அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை அடைய வேண்டுமென நான் விரும்புனேன். சமுதாயச் சூாழ்நிலை சறுக்கு மரம் போல் என்னைக் கீழ்தள்ளும். எனினும் எக்காலத்திலும் முயற்சியை நான் தளரவிட்டதில்லை. எனக்கு ஒரு முடிவு உள்ளத்தில் அமைந்திருந்தது. “நாம் வெற்றியை நாடிப் பாடுபடுகிறோம். முறையாக முயன்றால் கட்டாயம் அது கிடைக்கும். ஆனால் ஒவ்வொன்றுக்கும் கால நீளக் கணக்கு உண்டு. இடைக் காலத்தில் வெற்றி கிட்டவில்லையே என்று நினைத்தால், அது தோல்வியாகத் தோன்றும், எனவே, வெற்றி கிட்டும் வரை முயற்சி, உழைப்பு, சிந்தனை, ஒழுக்கம் இவற்றைக் கொண்டு பாடுபட வேண்டும்” என்ற முடிவு என்னிடம் அசைக்க முடியாததாக இருந்தது.
எனது திருமணம் நடந்து எட்டு மாதங்களில் எனது தம்பிக்குக் குடல் இறக்கநோய் கண்டுவிட்டது. அவனால் தறி நெய்ய முடியவில்லை. குடும்பம் பெருகி விட்டது. பொருளாதாரத்தில் அப்போதைய வாழ்விற்குப் பற்றாக்குறை அதிகமில்லை என்றாலும், முன்னேற முடியாத சறுக்கல் இருந்தது. எனது தம்பி நோய் வாய்ப்பட்டது, குடும்பப் பெருக்கம், இவை என் வாழ்விலும் பெரும்பாரமாகித் தவிர்க்க முடியாத சிக்கலாகி விட்டது. என் செய்வது? கடும் உழைப்பை ஏற்றேன், கடமைகள் ஆற்றினேன். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கழிந்தன. என் வாழ்வில் தோன்றிய அத்தனைத் துன்பங்களையும் எளிதில் களையவும், எழும் சிக்கல்களைச் சமாளித்து வெற்றி பெறவும், என் வாழ்க்கைத் துணைவி யமைந்தது எனது பெற்றோர்கள் செய்த தவம் என்றே, அடிக்கடி நினைந்து மகிழ்வேன். என்றாலும் சாதாரண மனிதன் சபலம் கொள்வது போல் அடிக்கடி நானும் கொள்வதுண்டு. என் மனைவியின் நிலைமை பற்றித்தான் அந்தச் சபலம். அவள் நல்ல செல்வத்தில் வளர்ந்தவள். அவள் தந்தை குதிரைப் பந்தயத்திற்குப் போகும் பழக்கம் உள்ளவர். அதிலிருந்து அவரை எவராலும் திருப்ப முடியவில்லை. பொருள் அழிந்து வறுமை எய்தியதோடு, மருத்துவத் துறையில் அவர் போதிய நினைவைச் செலுத்த முடியாமல் வருவாயும் குறைந்தது. அந்தக் காலத்தில் தான் அவள் பூப்பு அடைந்தாள். அதன்பின் மூன்று ஆண்டுகள் சென்றுதான் திருமணம் நடந்தது. வறுமையிலேயே திருமணம். வறுமையில் வாழ்பவர்கள் ஓரளவு அதைத் தாங்கும் ஆற்றலும் பெற்றிருக்கிறார்கள். செல்வத்தில் இருந்து வறுமைக்கு வந்தால், அதுதான் தாங்கொணா நிலைைமை. திருமணத்திற்குப் பின்னும் அவளுக்கு என்னிடமும் அதே நிலை நீடிக்கிறதே என்று வருந்தினேன். ஆயினும் அவள் சோர்வோ சலிப்போ குறையோ வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இரவு பகலாக என்னுடன் பொருள் துறையை வளமாக்குவதில் நன்கு உழைத்தாள். எளிய வாழ்க்கை நடத்தினோம். ஆயினும் எனக்கு அவள் பெருநிதி. அவளுக்கு நான் ஒரு ஒப்பற்ற நிதி. இந்த மனோநிலையில் நாங்கள் எல்லாம் உடையவர்களாக எல்லாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நன்கு ஆற்றி வாழ்ந்து வந்தோம்.


எனக்கு வயது இருபத்தேழு. அப்போது ஒரு முடிவு எனக்கு ஏற்ப்பட்டது. “கூடுவாஞ்சேரிக்கு குடிபோய்விட வேண்டும். கிராம வாழ்வில் செலவு குறையும். சீசன் டிக்கெட் அப்போது மாதம் ஒன்பது ரூபாய்தான். அதற்குக் கூடுவாஞ்சேரியிலிருந்து இரண்டு படி பால் வாங்கி வந்து சென்னையில் எந்த ஓட்டலிலாகிலும் கொடுத்துவிட்டால், ரூ. 15/- கிடைக்கும். அதனால் இரயில் வண்டிச் செலவும் தள்ளிப் போகும்” என்று ஒரு நினைவு தோன்றியது. போஸ்டல் ஆடிட் ஆபிஸில் ஒரு கான்டீன் இருந்தது. இதன் செயலாளரை அணுகி, என் விருப்பத்தைத் தெரிவித்து நாள்தோறும் இரண்டுபடி பால் என்னிடம் விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி கேட்டேன். அவர் அன்போடும் மகிழ்ச்சியோடும் எனக்கு அத்தகைய உதவியைச் செய்வதாகக் கூறினார்.
நான் மட்டும் ஒரு மாதத்திற்கு இரயில் பிரயாண சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டேன். கூடுவாஞ்சேரியில் இருந்த எனது மற்றொரு அக்காள் வீட்டில் இரவில் தங்கி காலையில் 2 படி பால் எடுத்துக் கொண்டு எழும்பூர் வந்து அங்கிருந்து, ஒரு மைல் தொலைவில் உள்ள ஆபிசுக்கு நடந்து வருவேன். என் கணக்குப்படி நாட்தோறும் எட்டு அணா கிடைத்தது. பால் நன்றாக இருப்பதையும், கூடுவாஞ்சேரி பாலில் போட்ட காப்பி மிகவும் சுவையாக இருப்பதையும் கண்டு, மேலும் நான்கு படி ஆர்டர்கொடுத்தார்கள். அடுத்த மாதம் எனது குடும்பத்தைக் கூடுவாஞ்சேரிக்கே அழைத்து வந்து விட்டேன். மாதம் ரூ. 11/2க்கு ஒரு முழு வீடு வாடகைக்குக் கிடைத்தது. பலவிடங்களில் ஓட்டைகள் தான் என்றாலும், அதுவே எங்களுக்கு அச்சமயம் மேலாக இருந்தது. மாதம் ரூ. 50/- வீதம் பால் விற்பதில் கிடைத்தது.
அப்போது எனக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்பு ஒன்று ஆபீசில் உருவாகியது. கார்டு பையில்கள் (Guard Files) வெளியிலிருந்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பதில் கழிவுத்தாள்களைக் கொண்டே பைல்கள் தயாரித்துக் கொள்ள ஒரு திட்டம் உருவாகியது. அதன்மூலம் நல்ல வருவாய் கிடைக்குமென்றும், அதை நானே கான்ட்ராக்ட் எடுத்துக் கொள்வது நல்லதென்றும், என்னிடம் அன்பு கொண்ட ஆபீஸ் சூப்பரின்டென்டென்ட் ஒருவர் கூறினார். ஆனால் ஒரு நிபந்தனை! ‘புக்பைண்டிங் திறமை பெற்றவன்’ என்று ஒரு அத்தாட்சித் தாள் கொடுக்க வேண்டும். நான் ஒப்புக்கொண்டேன். ஒரு பைண்டரைக் கொண்டு ஒரு வாரத்தில் இரவு பகலாக உழைத்துப் புக்பைண்டிங் கற்றுக்கொண்டேன். ஒரு அச்சகத்தில் எனது வேலையை நிரூபித்து அங்கிருந்து அத்தாட்சித்தாளும் வாங்கிக் கொடுத்தேன். ஆபீசில் அந்த கான்ட்ராக்டை என் பேருக்கே கொடுத்து விட்டார்கள்.




கழிவுத்தாள்கள், அட்டைகள் இவற்றை ஆபீசிலிருந்து, கூடுவாஞ்சேரிக்கு நாள்தோறும் எடுத்துக்கொண்டு வந்து சேர்ப்பேன். எனது துணைவி அவற்றை ஒழுங்காக அடுக்கித் தைத்து வைப்பாள். நான் இரவில் வந்தபின் வச்சிரம் பூசி அட்டைக்கு வண்ணத்தாள் ஒட்டி, கோப்புகளாகச் செய்வோம். இவ்வாறு வருடம் ஒன்றுக்கு 1500, அல்லது 2000 பைல்கள் தயாராகும். ஆண்டுதோறும் ரூ. 300/-லிருந்து ரூ. 500/- வரையில் மொத்தமாகக் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள் ரூ. 600/- கொடுத்துக் கூடுவாஞ்சேரியில் ஒரு வீடு வாங்கினோம். பொருள் துறையில் முதல் வெற்றி வீடு வாங்கப்பட்டது. பைல்கள் செய்வதில் வருவாயும் சற்றுக் கூடியது. பால் விற்பனையும் ஓங்கியது. ஓரளவு பணவு மீதியிருந்தது. பால் வியாபாரத்தில் அதிக சங்கடம். வெயில் காலத்தில் சில குடங்கள் பால் முறிந்துவிடும், அவற்றிற்குப் பதில் நல்ல பால் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அதற்கென ஆள் வைத்திருந்தேன். எனினும், அவனாலும் சமாளிக்க முடியவில்லை. அந்த வியாபாரத்தை நிறுத்திவிட எண்ணினேன். அப்போது நாள் ஒன்றுக்கு ரூ. 25/- பால் மூலம் இலாப வரவு இருந்தது. எனது நண்பர் கபூர் சாயபு என்பவர் பால் விற்பனை செய்து வந்தார். அவரிடம் பால் வியபாரத்தை முழுமையாக ஒப்புவித்து விட்டேன். கையில் கொஞ்சம் பணம் இருந்தது. இதை வைத்துக் கொண்டு, லுங்கி உற்பத்தி விற்பனை நடத்த எண்ணினேன். சென்னையில் அங்கப்ப நாய்க்கன் தெருவில் மெளலானா லுங்கிக் கம்பெனி பலர் அறிந்த ஒன்று. அங்குச் சென்று லுங்கி நெசவுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டேன். எனக்கு ஞாயிற்றுக்கிழமைதான், துணி பார்வைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். அப்படியே ஒப்புக் கொண்டார்கள். லுங்கி உற்பத்தி விற்பனைக்கு என் தம்பியையே நியமித்து, நான் ஆபீஸ் வேலைகளோடு, வியாபாரத்தையும் கவனித்து வந்தேன்.
நாளுக்கு நாள் பொருள் துறையில் முன்னேற்றம் கண்டேன். ஆயினும் உயிர், தெய்வம் என்ற இரண்டைப்பற்றி அறியாது திகைத்தேன். சிந்தனை மிகுந்து ஒரு நம்பிக்கை ஒளி வீசியது. எனக்கு என் ஆசான் எஸ். கிருஷ்ணாராவ் விளக்கி வைத்த பஞ்ச பூத தத்துவம் வர வர மிகத் தெளிவாக விளக்கியது, ஒரு நாள் இரவு மணி மூன்று இருக்கும்; விழித்துக்கொண்டேன். சிந்தனை மிகுந்தது, ஒரு முடிவு தோன்றியது.
“பிரபஞ்சம் ஐந்து பூதங்களும், ஆதியான தெய்வ நிலையும் சேர்ந்த, ஆறு நிலைகள் தானே கொண்டது. ஐந்து பூதங்களுக்கு அப்பால் சுத்த வெளியைத் தவிர வேறு ஏது? எனவே சுத்த வெளியேதான் தெய்வம் என்று கூறப்படுவதாக இருக்க வேண்டும். தாயுமானார் பாடியுள்ள அங்கிங்கெனாதபடி என்ற கருத்தோடு இணைத்தால், அதுதான் சரி. ஆயினும் உயிர் என்பது இந்த ஆறு நிலைகளில் எதுவாக இருக்கும். இயக்க நிலையில் உள்ளதே உயிர். ஆகவே அது பஞ்ச பூதங்களில் ஒன்றான விண்ணாகத்தான் இருக்க வேண்டும்” என்ற ஒளி போன்ற கருத்து விளங்கியது. இந்த அடிப்படையான உள்ளுணர்வை வைத்துக்கொண்டே, மேலும் சிந்திக்கத் தொடங்கினேன். என்ன வியப்பு? எனக்கு வர வர உலகமே முன்னைவிட வேறுபட்டுத் தோன்றியது. காலையிலிருந்து உறங்கப்போகும் வரையில், நான் ஈடுபடும் வேலைகளில் எல்லாம் தெய்வம், உயிர் நிலைகளின் விளக்கத்தை ஒப்பிட்டு ஆராய்வேன். ஒவ்வொரு செயலும், காட்சியும், மனிதரும், எனக்கு அவ்வப்போது மெய்விளக்கப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நூல்களாகத் தோன்றின. இந்தத் துறையில் உள்ளம் பூரித்து, மனம் அமைதி கொண்டது. எனினும் பழைய நூல்கள், புராணங்கள், கட்டுக்கதைகள், சடங்குமுறைகள், இவற்றில் அமைந்த கருத்துகட்கும், எனது விளக்கத்திற்கும், வேறுபாடுகள் இருந்தன. இவை எல்லாவற்றிற்கும் நிறைவு காண வேண்டும். உள்ளத்தின் பூரிப்போடு சில ஆண்டுகள் “பஞ்ச பூத தத்துவ விளக்கம்” என்ற பூங்காவில், அறிவைச் செலுத்தி மகிழ்ந்திருந்தேன். எந்தச் சமயத்திலும் பொருள்துறை வளர்ச்சியில், என் முயற்சியைக் குறைத்துக் கொள்ளவில்லை. காலை மணி நான்கு முதல் இரவு மணி பத்து வரையில், அயராது உழைத்தேன்.


எனது வயது முப்பத்திரண்டு ஆகியது. அப்போது, என் உள்ளத்தை மோத ஒரு நிலைமை உருவாகியது. திருமணமாகியும் எங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இதைக் குறிப்பிட்டுக்காட்டி என் துணைவியை யார் யாரோ மனத்தைப் புண்படுத்தி விட்டார்கள். மலடி என்று இழித்துக் கூறும் வார்த்தை அவள் காதில் விழுந்தது. அதோடு மற்றும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் தான், அவர்களுக்குக் குழந்தை என்றும் சொல்லி விட்டார்கள். பாவம் கபடமற்ற உள்ளம், வசைச்சொற் கேட்டறியாகவள், உள்ளம் வெந்து துடித்தாள். என்னிடம் இவற்றை யெல்லாம் கூறிய போது தக்க ஆறுதல் கூறினேன். எவர் என்ன சொன்னாலும், நீ காதில் போட்டுக் கொள்ளாதே. நாம் பிறருக்குத் தீங்கு செய்யக் கூடாது. மேலும் இயன்ற வரை பிறருக்கு உதவி செய்து வரவேண்டும். இந்த லட்சியத்தோடு நாம் வாழ்கிறோம். இயற்கையாக நிலவும் குழந்தைப் பேறின்மைக்கு, நாம் வருந்தவும் கூடாது. அதைப் பொருளாக வைத்து நம்மைத் தூற்றுபவர் பேச்சுக்கும், மதிப்பளிக்கக் கூடாது என்று, அடிக்கடி கூறினேன். எனினும் அவள் உள்ளம் பிறர் தூற்றும் பழிச்சொற்களால் அமைதியிழந்து தவித்தது. எனக்கு அவள் மனநிலை கண்டு சகித்துக்கொள்ள முடியவில்லை. இது ஒரு பெருஞ்சிக்கலாகி விட்டது. நாள் தோறும் நீங்கள் இரண்டாந் திருமணம் செய்து கொளளத்தான் வேண்டும் என்பாள். நான் ஆறுதல் கூறி வருவதோடு, காலையில் படுக்கை விட்டெழுந்தவுடன் கண்களை நெருடி விட்டுக் கொண்டு ஒரு பாட்டைப் பாடுவேன்.




அந்தப் பாட்டு இது தான்,“பெண்டிரண்டு கொண்டாலும் சுகமில்லை;பெருநெருப்பு சாமளவும் துக்கம்துக்கம்”


இதை விடாமல் பாடுவேன். என்றாலும் அவள் மனம் அமைதி பெறவில்லை. குருவிக் கூண்டைக் கலைத்துவிட்ட மாதிரி, எங்களைக் கலைத்துத் தவிக்கவிட திட்டமிட்டு விட்டது சமுதாயம்; உறவினர், சுற்றத்தார் என்ற உரிமையில். மனித வாழ்வில் எழும் சிக்கலைப் பாருங்கள்! எல்லாவற்றையும் தாங்கி வெற்றி பெற்றுத்தான் முன்னேறவேண்டும்.




சிறியது உடல் பெரியது மெய்


பெற்ற உடம்பின் பயனாய் ஊறு முதல் ஐந்துபுலன்மூலம் அனுபவித்தல் சிற்றின்பமாகும்நற்றவத்தால் உயிரறிந்து அளவறிந்தபோதுநாம்பிறவி எடுத்தபயன் பேரின்பமாகும்சிற்றின்பம் இன்றிப் பேரின்ப மென்பதில்லைசிறியதுடல் பெரியதுமெய் சீவன்சிவன் உண்மைபற்றின்றி வாழ்வில்லை அளவுமுறை கண்டால்பற்றற்ற வாழ்வாகும் பகுத்துணர்வோம் நாமே.




விளைவறிந்த விழிப்பு


விறகதனை வாங்குகின்றோம் எரிப்பதற்கேவேண்டிய போதல்லாது நெருப்பின் பக்கம்மறதியினாலும் வையோம் அதுபோல் ஆண்பெண்மணமாகா முன் நெருங்க விடக்கூடாதுஉறவுகளில் பெற்றோர்கள் பெற்ற மக்கள்உடன்பிறந்தார் குறிப்பிட்ட சுற்றம் அல்லால்பிறருடனே ஆணோடு பெண் நட்பாகாபிழையில்லை தொழில் வயது நாடு ஒத்தால்.




இனிது வாழ்க


உடல்நலம் நீள்ஆயுள் கல்வி செல்வம்ஒழுக்கம் புகழ் மெய்ஞானம் இவற்றில் ஓங்கிகடல்சூழ்ந்த நிலஉலக மக்களெல்லாம்கடமையுணர்ந்தாற்றி பெருவாழ்வு வாழ்ககுடல்பசி யோடறிவுப்பசி நிறைவுபெற்றுகுற்றமெழும் சூழ்நிலைகள் அனைத்தும் மாற்றிஇடல் காத்தல் ஈட்டல் என்ற துறைகள் மூன்றில்ஏற்றம் பெற்றென்றென்றும் இனிதுவாழ்க.




எனது வாழ்க்கை விளக்கம்




எனது வாழ்வின் அமைப்பே விசித்திரமானது. ஒருபுறம் குடும்பத்தில் சிக்கல்கள் மாறி மாறி உருவாகும்; வருந்துவேன். சிந்திப்பேன். தெளிவு பெறுவேன். துணிவு பெறுவேன். மற்றொரு புறம் தத்துவ ஆராய்ச்சியில் இடைவிடாத ஈடுபாடு. எப்போதும் சிந்திப்பேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், செயலிலும், விளைவிலும், இயற்கையின் ஒழுங்கமைப்பைக் கூர்ந்து ஆராய்ந்து தெளிவு பெறுவேன். இத்துறையில் எனக்கு நாளுக்கு நாள் இன்பம் மேலோங்கி வந்தது, இரண்டாந் திருமணம் குறித்து, என் துணைவியின் உறுத்தல், என் வாழ்வில் பெரும் சிக்கலாகிவிட்டது. எனினும் இந்தச் சிக்கல் காலத்தால் தீர்ந்துவிடும் என்று, அதை ஒதுக்கி வைத்தே மற்ற கடமைகளை ஆற்றிவந்தேன்.
பஞ்ச பூதத் தத்துவப் பூங்காவிலே அமர்ந்து, என் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வந்தேன். அப்போது என் அறிவு நாளுக்கு நாள் மேலும் மேலும் ஒளிபெற்று வந்தது. முன்னே விளக்கியபடி நான் காணும் தோற்றங்கள் அனைத்தும், பஞ்ச பூதக் கூட்டுக் காட்சிகளாகவே எனக்குத் தோன்றின. முதலில் சில நாட்கள் வரை “ஆகாசம்” என்ற நிலைதான் தெளிவாகப் புரியாமலிருந்து கடைசியாக அதைப் பற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது. அணுவைப் பற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது. அணுவைப் பற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது. அணுவைப் பற்றி ஏதோ சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். சில பல இயக்கத் துகள்கள், ஒன்று சேர்ந்து இயங்கும் ஒரு கூட்டமைப்பே அணுவென உணர்ந்தேன். விஞ்ஞானிகள் கூறும் அவ்வணுவின் அமைப்பில் சிந்தனை ஓடியது. ஒவ்வொரு அணுவிலும் கரு அணு (Neutron), துணைக்கரு அணு (Proton) மின்னணு (Electron) என்று ஒரு கூட்டு உள்ள இயக்கம் ஒன்று உள்ளது எனில் அக்கூட்டு அமையாத தனிநிலையும் இருக்கத்தானே வேண்டும்? இந்த மூன்று வகைத் துகள்களும் அவ்வமைப்பில் பெற்ற இயக்கச் சிறப்பால் பெற்ற பெயர்களே, கருவணு, துணைக்கருவணு, மின்னணு என்பதெல்லாம் என்ற விளக்கம் கிடைத்தது. அத்தகைய தனித்த இயக்க மூலக் கூறுதான் “ஆகாசம்” எனப்படும் நுண்ணியக்க நிலை என விளங்கிக் கொண்டேன். அதன்பின் பிரபஞ்சம் முழுவதையும் ஆகாசம் (Ether) எனும் பரமாணுக்களின் தொகுப்புக் களமாகவே கருதும் ஒழுங்கு முறை என் அறிவிற்கு ஏற்பட்டது. ஆகாசம் எனும் தனி மூலக் கூறுகளின் திரட்சியால் விஞ்ஞானிகள் கூறும் அணு அமைந்தது என்றும், அம்மூலக் கூறுகளின் எண்ணிக்கைக்கேற்ப அணுவின் மூலக மதிப்புகள் (Elemental Values) பலவாக கணிக்கப் பெற்றன என்றும் உணர்ந்தேன். எந்தத் தோற்றமும் ஆகாசமும் வெளியும் சேர்ந்த கூட்டு அமைப்பாகவும், வெளியின் விகித அளவு (Proportion) குறையக் குறைய தோற்றப் பொருட்களின் திண்மை மிகுகின்றது என்றும், திண்மை மிகமிக, விளைவுகள் - அதாவது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் முதலியவை - வேறு படுகின்றன வென்றும், இந்த விளைவு வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே ஆகாசத்தின் திரட்சி வேறுபாடுகளுக்குக் காற்று, வெப்பம், நீர், நிலம் என்ற பெயர்ப் பிரிவுகள் உண்டாயின வென்றும் உணர்ந்து கொண்டேன். ஆகாசமே, பிரபஞ்சம் எனும் பேரியக்கத் தொடர்க்களம் முழுமைக்கும் அடிப்படையான இயக்க மூலக்கூறாக இருக்க, அதன் முன்நிலை எது என்ற சிந்தனையில் மேலும் ஆழ்ந்தேன். ஆகாசத்திற்கு அப்பால் என்ன இருக்கின்றது? சுத்தவெளி தானே உள்ளது? இந்தச் சுத்தவெளிக்கும் பரமாணு எனும் ஆகாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவென்று ஆராயத் தொடங்கினேன். இதைப் பற்றிப் பலநாட்கள் சிந்தனை செய்து வந்தேன். எனக்கு அகத்தே ஒரு விளக்கமும் காட்சியும் கிடைத்தன, “வெட்ட வெளியே மெய்ப்பொருள். அதன் இயக்க நிலையே பரமாணுவெனும் ஆகாசம். தெய்வம் எனப்படுவதும் சிவம் எனப்படுவதும் சுத்தவெளியே; அதன் நுண்ணியக்க ஆற்றலே (Energy) ஆகாசம்.” மனம் விரிந்தது, நிலைத்தது. உள்ளுணர்வு மலர்ந்தது. அகத்தே எல்லையற்ற கடல் காட்சியாயிற்று. அலைகள் கோடாணு கோடி காட்சியாயின. ஒரு கவியும் உருவாயிற்று; அந்தக்கவிதான் இது




ஆதியெனும் மெய்ப்பொருளோ கடல்போ லொன்று;அதிலெழுந்த இயக்கமெலாம் அலைகள் போலாம்;பேதமுடன் அலைகளவை விரிந்த போதும்பிரியாது கடலை விட்டுக்கடல் ஒன்றேனும்வாதமிடும் பலகோடி அலைகளூடும்வழுவாது நிறைந்து நின்று, முடிவில் தன்னுள்நீதமொடு இணைத்துக்கொள் தன்மை போன்று,நிலையற்ற இயக்கமெலாம் முடியும் மெய்யில்”




வெட்டவெளியே மெய்ப் பொருளாகவும், அதன் ஆற்றலே சக்தியெனும் ஆகாசமாகவும், அதன் திரட்சிநிலை வேறுபாடுகளே பஞ்ச பூதங்காளகவும், அவை இணைந்த கூட்டுக் காட்சிகளே பேரியக்கத் தொடர்க்களத் தோற்றங்களாகவும் விளக்கம் பெற்றேன்.




சுத்தவெளி ஏதுமற்ற இடம்தானே, அதைப் பொருள் என்று எப்படிக் கூறுவது என்ற திகைப்பு முன்னர் ஏற்பட்டது. பின்னர் அதைப் பற்றிய ஐயமும் தெளிந்துவிட்டது. இயக்கத்தோடு இயக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் கணிப்பு நிலையிலுள்ள அறிவிற்கு, வெட்டவெளி ஏதுமற்றதாக இருக்கிறது. அறிவே சமாதிநிலையில் பொருளாகவும், இயக்க நிலையில் உயிராகவும், புலன் வழியிலான காட்சி நிலையில் எண்ணற்ற இயக்க வேறுபாடுகளாகவும், இயங்கும் உண்மையினைக் கூர்ந்து தவ நிலையின் அநுபவமாக உணரும்போது வெட்ட வெளியே பொருள் என்றும் அதன் இயக்க ஆற்றவான பரமாணு உயிர் என்றும், அணுக்களின் திரட்சி நிலைகள் பலவாறான வேறுபட்ட தோற்றங்கள் என்றும், விளங்கி விட்டது. மேலும் பேராற்றல் பெற்ற கோடான கோடி சூரியன்களும் (நட்சத்திரங்களும்) மற்ற கோள்களும் வெட்ட வெளியில்தான் மிதந்து உருண்டு ஓடி இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்ற உண்மை தெளிந்த விடத்தில், வெட்ட வெளியே, எல்லாம்வல்ல (Almighty) பரம்பொருள் என்னும் விளக்கம் உண்டாயிற்று. இடம், இயக்கம் இரண்டையும் ஒத்தப் பார்த்தால் இயக்கத்தைவிட இடம் வலிதாகவன்றோ இருக்க வேண்டும். இவ்வாறேல்லாம் சிந்தித்துச் சிந்தித்துச் சமாதி நிலையிலும் (நிறைபேற்றுநிலை), துரிய நிலையிலும் (நிறைபேறுநிலை), புறக்காட்சி நிலையிலும் (புலனுணர்வு நிலையிலும்) நின்று நின்று பல நாட்கள் பல மாதங்கள் ஆராய்ந்து, பொருள் (Matter) ஆற்றல் (Energy), தோற்றம் (Mass), உணர்வு (Consciousness), ஆகிய நிலைகளை விளங்கிக்கொண்டேன். எல்லாம் வல்ல பரம்பொருளே ஆகாசமென்ற உயிர்த் துகள்களாய், அதன் திரட்சித் தோற்றமே உடலாய், உயிர்- உடல் கூட்டு இயக்கத்தால் உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோக, அனுபவ, ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற உயிரின் பத்து படித்தளப் படர்க்கை இயக்க ஆற்றலான மனமாய் இயங்கும் மறைபொருள் உண்மைகள், எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டன.
“ஒரே பொருள் எல்லாமாக இருக்கிறது” என்ற அத்வைத தத்துவம் விளங்கிவிட்டது. “அது மலர்ச்சிபெற்று இயக்கம் என்ற நிலை வேறுபாட்டோடு சித்து-உயிர்-ஆகாசம்-பரமாணு-சக்தி என்று பேசப்படும் ஆற்றலாக இயங்கித் திரட்சி நிலையில் உலகமாகி உயிர்களாகி அனந்தமாக இருக்கின்றன” என்ற தெளிவில் துவைத தத்துவமும் விளங்கிவிட்டது.
உயிர்களாகி, மனிதனாகி புலன் மயக்கின் தேவை, பழக்கம், சூழ்நிலைகள் நிர்ப்பந்தங்களில், சிக்கலுற்று துன்பங்களை விளைத்துக் கொண்டு தவிக்கும் நிலையிலிருந்து விடுபட்டு வாழவேண்டுமெனில், தனது அறிவை அகநோக்குப் பயிற்சியால் பண்படுத்தி, மனதின் இயக்க விதியறிந்து, உயிரின் நிலையறிந்து, அவ்வுயிரைப் பரநிலையோடு இணைத்து இணைத்து நின்று தவம் ஆற்றி, அறிவின் முழுமை பெற வேண்டும். பிறவிக் கடலைக் கடக்க இதுவே சரியான வழி. இதற்குப் பொருள்நிலை, நிகழ்ச்சி நிலையறிந்து, அகநோக்குத் தவத்தில் முழு ஆற்றல் பெற்ற ஆசான் அருளைநாடி அவர்மூலம் முறையாக நோன்பு ஆற்றியே மனிதன் உய்ய வேண்டும், என்ற விசிட்டாத்வைத தத்துவமும் எனக்கு விளங்கிவிட்டது.


அறிவறியும் விளக்கத்தில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து வந்தேனோ, அந்த அளவிற்கு என் வாழ்க்கையில் பல தடைகளும் சிக்கல்களும் உருவாகிக்கொண்டே இருந்தன. எனது இல்லத்தரசி என்னை இரண்டாந் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென, நாளுக்கு நாள் அழுத்தமாக வற்புறுத்திக் கொண்டிருந்தாள், நான் காலம் கடத்திக் கொண்டே வந்தேன்.
ஒருநாள் “காவேரி” எனும் மாத இதழில் ஒரு கதை வெளியாகி இருந்தது. அதைப் படித்து முடித்த என் துணைவி அவ்விதழை என்னிடம் கொடுத்து அந்தக் கதையைப் படித்துப் பார்க்கும்படி கூறினாள். படித்தேன்; என் கண்களில் நீர் மல்கியது. அக்கதையின் சுருக்கம் இதுதான்;
அன்பு நிறைந்த கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்திவருகிறார்கள். அவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. உற்றாரும் மற்றவர்களும் அப்பெண்ணைத் தூற்றுகிறார்கள். மலடி என்று மனம் நோகும்படி பழித்துக் கூறுகிறார்கள். அவள் உளம் நொந்து விட்டது. கணவனை வணங்கி, “அத்தான் நீங்கள் வேறு ஒரு பெண்ணை இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து கொள்ளுங்கள். என்மீது பழிச்சுமையும் இறங்கும். நம்குடும்பத்துக்கும் ஒரு குழந்தைப் பேறு உண்டாகும்” என்கிறாள். கணவன் மறுத்துப்பேசி அவளுக்கு ஆறுதல் கூறிவருகிறான். உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை, என் வாழ்வில் பங்குகொள்ள விரும்பவில்லை” என்று உறுதியாகக் கூறிவிடுகிறான். ‘நான் இற்ந்துவிட்டால் அப்போது நீங்கள் மறுமணம் செய்து கொள்வீர்களல்லவா?’ என்று கேட்கிறாள். ‘இவ்வாறெல்லாம் வீண் கற்பனையில் ஏன் மனதைப் புண்படுத்திக் கொள்ளுகிறாய் அமைதியோடு இரு!’ என்று கூறிவிட்டுக் கணவன் வெளியே போய்விடுகிறான். அன்று இரவு அவன் வீட்டுக்கு வந்தபோது மனைவி வீட்டில் இல்லை. தேடிப் பார்த்தார்கள். எங்கும் காணவில்லை, மறுநாள் காலையில் காவேரி ஆற்றோரத்தில் அவள் பிணம் ஒதுங்கியிருந்தது என்ற செய்தி வருகிறது. இதுதான் கதை. “உற்றார் உறவினர் பழிச் சொற்கள் ஒருபுறம் அவளைப் புண்படுத்தின; அந்த நிலைமையை உண்ர்ந்து இரண்டாந் திருமணம் செய்து தன்னைப் பழிச்சொற்களிலிருந்து விடுவிக்க மறுக்கும் கணவனின் பிடிவாதம் ஒருபுறம் அவளைப் புண்படுத்தியது. அவள் மேலும் இந்நிலையில் உயிர்வாழ விரும்பவில்லை” என்ற ஒரு பெண்ணின் மனதைப் படம் பிடித்துக் காட்ட அந்த எழுத்தாளன் அக்கதையை எழுதினான்.
பிள்ளை இல்லாத ஒரு பெண்ணைப் பார்த்து மலடி என்று உற்றார் உறவினர் தூற்றுவது எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கவே, அந்த ஆசிரியர் அக்கதையை எழுதினார். ஆயினும் அவர் சிந்தனையை மேலும் விரித்துக் கதையை முழுமையாக முடிக்கவில்லை. அதைச் சற்று நீட்டி முடித்திருக்க வேண்டும். “கணவன் தனது அன்பு மனைவியின் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறினவன் பின்னர் விடு திரும்பவே இல்லை. சில மாதங்கள் கழித்து ரிஷிகேசத்தில் ஒரு சந்நியாசி வேடத்தில் பார்த்ததாக யாரோ கூறினார்கள்” என்று முடித்திருந்தால், என் கதையும் மாறி இருக்கும். முழுமை பெறாத அக்கதை தான், என் வாழ்வின் குறுக்கீடாக ஒரு பாறாங்கல் போல் நின்றது. கதையைப் படித்தேன். எனக்கு ஒரே திகைப்பு எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ‘கதையைப் படித்து விட்டீர்களா’ என ஒரு வெற்றிப் பார்வையோடு என்னைப் பார்த்துக் கேட்டாள் என் துணைவி. ஆழ்ந்த சிந்தனையோடு மெளனமாக ஒரு பெரு மூச்சு விட்டேன். அதற்குள் அவசரமாக அடுப்பண்டை போய் விட்டாள். இராஜம் என்று கூப்பிட்டேன். அவள் பெயர் லோகாம்பாள். ஆயினும் இராஜாம்பாள் என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். கூடுவாஞ்சேரியில் நாங்கள் விலைக்கு வாங்கிய வீட்டில்தான் அப்போது இருந்தோம். நான் கூப்பிட்டவுடன் அதற்காகக் காத்திருந்தவள்போல விரைவாக வந்தாள். அவள் முகத்தில் ஒரு வெற்றி ஒளி வீசியது. அவள் இருகரங்களைப் பற்றிக் கொண்டேன். எனது கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. “உன் மனநிலையைப் புரிந்துகொண்டேன். இனி நான் தடை சொல்வதற்கு இல்லை. உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்யையும் நிமிர்ந்துகூடப் பார்க்க விரும்பாத எனக்கு இத்தகைய நிலைவரக் கூடாது. வந்து விட்டது, விதியை ஓரளவு மதியால் வெல்லலாம். ஆனால் அந்த விதி ஒரு சிக்கலில்-சுழலில் கொண்டுவந்து விட்டு, என் அறிவு செயல்பட வொட்டாது செய்துவிட்டது. இரண்டாம் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறேன். ஆவன செய்” என்று குரல் தழுதழுக்கக் கூறினேன். அவள் பிரிவாற்றாமையைக் காட்டி அவளும் அழுதுவிட்டாள். மேலும் கூறினாள். “நீங்கள் திருமணம் செய்துகொண்டால் எந்த விதத்திலும் எங்களுக்குள் சண்டை வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று