Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 19 மே, 2015

"வாழ்க வையகம்" "வாழ்க வளமுடன்" என்ற திருமந்திரம் :-


"ஏதாவதொரு பழிச்செயல், தவறான செயல் செய்திருக்கலாம். அதன் பதிவு நம் குழந்தைகளுக்கும் இருக்கும். அந்தப் பதிவுகளை மாற்றி, சூழ்நிலையாலே நம் குழந்தைகளின் வாழ்க்கை மேலும் பாதிக்காமல், அவர்கள் நல்லவர்களாக பாதுகாப்புப் பெற்றவர்களாக நல்ல முறையிலே உலகிலே சிறப்புடன் வாழவேண்டும். எதிர்காலம் ஒளிமயமாக அமைய வேண்டும். கல்வியிலே உயர வேண்டும். என்றெல்லாம் நமக்கு உள்ளத்திலே ஆசையிருக்கும். அந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் குழந்தைகளை வாழ்த்த வேண்டும். ஒவ்வொருவராக நினைத்து "வாழ்க வளமுடன்" "வாழ்க வளமுடன்" "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்தலாம்.

.
வாழ்க வளமுடன் என்று சொல்லும் பொழுதே அந்த வார்த்தையிலே உள்ள ஒரு கருத்தாழத்தை நினைந்து பாருங்கள். "வாழ்க" என்று சொன்னாலே எல்லாம் பெற்று இனிதாக நீங்கள் வாழ வேண்டும் என்ற பொருள் உள்ளடங்கியிருக்கிறது. "வளமுடன்" என்று சேர்க்கும்பொழுது வாழ்க்கையிலே உங்களுக்குத் தேவையான எல்லாப் பேறுகளையும், பெற்று வாழவேண்டும் என்று அமைகிறது. ஆதலினால், நீங்கள் வாழ்த்தவேண்டியவரை உங்கள் மனக்கண் முன் நிறுத்தி "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்துவது மிக்க வலுவுடைய ஆழமான கருத்துடைய நல்ல ஒலியை, தெய்வீக ஆற்றலை பிறருக்குப் பாய்ச்சக்கூடிய ஒரு "திருமந்திரமாகும்".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

1 கருத்து: