Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 16 மே, 2015

கற்பனையான எதிர்பார்ப்பு :

"நான் சொல்லும் பயிற்சியைச் செய்து பாருங்கள் அதற்காகப்
----------------------------------------------------------------------------------------------
'பணம்' தேவையில்லை. "மனம்" தான் தேவை -- மகரிஷி "
-------------------------------------------------------------------------------------
...
.


.
"அன்பர்களே! நமது வாழ்க்கை முழுவதும் சோர்வு, ஏமாற்றம், துன்பங்கள் நிரம்பியுள்ளன. இதற்கெல்லாம் காரணம், பிறரிடம் கற்பனையாகவே எதிர்பார்ப்பதுதான் (Imaginary Expectation).

.
கற்பனை என்றால் அளவு மீறிய ஆசை. அளவு மீறிய ஆசையை வைத்துக்கொண்டு, 'அவர்கள் இப்படிச் செய்ய வேண்டும், இன்னதைத் தரவேண்டும், இன்ன அளவில் செய்ய வேண்டும்' என்று ஒவ்வொருவரிடமும் நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

.
ஆனால், அவரவர்களுக்கு அறிவு இருக்கிறது. அவர் அவர்களுக்குத் தேவையிருக்கிறது. அவரவர்களுக்கு வாழ்க்கைச் சுதந்திரம் இருக்கிறது. 'இவ்வாறுதான் செய்ய வேண்டும்' என்ற விருப்பம் அவர்களுக்கு இருக்கிறது. நமக்குத் தெரிந்தவர்கள் அவ்வளவு பேரும் நமக்கு அடங்கி, நமது அதிகாரத்திற்கு உட்பட்டு, நாம் சொன்னதையே செய்து கொண்டிருப்பார்களா..?..!

செய்வதே இல்லை; செய்ய முடியாது; செய்யவும் மாட்டார்கள்.

.
நாம் எதிர்பார்த்து எதிர்பார்த்து 'என் கணவர் இப்படித்தான் செய்ய வேண்டும்,, இதைத்தான் செய்ய வேண்டும், இந்த அளவில்தான் செய்ய வேண்டும்.' என் மனைவி இதைத் தான் செய்ய வேண்டும். இதற்கு மேல் செய்யக்கூடாது' என்ற அளவில் நமது ஆசையை முன் வைத்து எல்லை கட்டி கற்பனையை உருவாக்கிக் கொள்கிறோம். நிகழ்ச்சிகள் (செயல்) என்று வரும்போது இவர்கள் கற்பனையாக எதிர்பார்த்து இருந்தார்களே, அதற்கு ஒன்றுகூட ஒத்து வராது. என்றைக்கு அமைதியாக இருக்க முடியும்? முடியாது.

.
ஆகையால், எதிர்பார்ப்பதை அடியோடு விட்டு விட வேண்டும்; அமைதி வேண்டும்; மகிழ்ச்சி வேண்டும்; நிறைவு வேண்டும் என்று சொன்னால் நான் சொல்லும் பயிற்சியைச் (Simplified Kundalini Yoga) செய்து பாருங்கள். அதற்காகப் பணம் தேவையில்லை. 'மனம்' தான் தேவை. தெளிவோடும் தீரத்தோடும் செய்ய வேண்டும்.."
.



.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக