Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 31 ஜனவரி, 2014

அடக்கம் (தன்முனைப்பு ) அமரருள் உய்க்கும் :




எல்லா செயல்களுக்கும் மனம் தான் காரணம். மனமோ கருமையத்தில் பல தலைமுறைகளில் ஆன்மா அனுபவமாகப் பெற்ற வினைப்பதிவுகள், பிறந்த பின் ஒருவர் அன்று வரையில் ஆற்றிய செயல்களுடைய பதிவுகள் இவற்றிற்கேற்ற தொகுப...்பு விளைவாகும்.

பொருள், புகழ், புலன் இன்பம், அதிகாரம் இந்நான்கிலும் பற்றுக் கொண்டு மனம் இயங்கும்போது உணர்ச்சி வயப்பட்டு ஆன்மாவானது தன்முனைப்புப் பெறும் . தன்முனைப்பின் வெளிப்பாடு தான் பேராசை, சினம்,கடும் பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்ற ஆறு குணங்களின் வயப்பட்டு மனிதன் செயல்புரியும் போது தான் தனக்கும் பிறருக்கும் உடலுக்கும், அறிவிற்கும் துன்பம் விளைவிக்கும் செயல்கள் பிறக்கின்றன .

இந்த தன்முனைப்பு அடங்கினால்தான் இறையுணர்வு உண்டாகும். அன்பும் கருணையும் இயல்பாக மலரும். பிறகு செய்யும் செயல்கள் அனைத்தும் அறச்செயல்களாகவே இருக்கும்.

ஏனெனில் எல்லாம் வல்ல பேராற்றல் தான் உலகமாக உயிர்களாக பரிணாமமடைந்து , தோன்றி, இயங்கும் அனைத்திலும் உட்பொருளாக மூல ஆற்றலாக அமைந்து எல்லாப் பொருளையும், உயிர்களையும் அவ்வப்போதைய சூழ்நிலைக்கேற்ப இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையினை அறியாத மனிதன் தனது உடல் வலிவு, அறிவு திறன், தனக்குச் சொந்தமான மக்கள், பொருட்கள் இவற்றை வைத்துக்கொண்டு அந்த அளவிலே பெரியவாக நினைக்கிறான். இந்த நினைவே தன்முனைப்பாகும். மெய்ப்பொருள் மறதி அல்லது அறியாமை என்று தன்முனைப்பைக் கூறலாம்.

ஆசான் மூலம் அகத்தவம் ஆற்றத் தன்னை உணர்ந்து இறைநிலையும் உணர்ந்தால் இறைநிலையென்ற எல்லையற்ற பேராற்றலின் தன்முமைப்பு அடங்கிப் போகும்.அன்பும் கருணையும் இயல்பாக மலரும்.

இந்தப் பேரறிவு நிலையில் பேராசை நிறைமனமாகவும்,சினம் சகிப்புத்தன்மையாகவும், கடும்பற்று ஈகையாகவும் , முறையற்ற பால் கவர்ச்சி கற்பு நெறியாகவும், உயர்வு தாழ்வு மனப்பான்மை நேர்நிறை உணர்வாகவும், வஞ்சம் மன்னிப்பாகவும் தன்மாற்றம் பெரும்.

தன்முனைப்பு அடங்கிய இந்த உயர் அறிவுநிலையைத்தான் "அமர்ந்த அருள்" என்றனர் .அவ்வாறு அடங்காத தன்முனைப்பு நிலை அறிவிற்கு மயக்க நிலையை, இருள் நிலையை ஏற்படுத்தும், வாழ்வு துன்பம் சூழ்ந்ததாகவே இருக்கும்.

பேராற்றலுள்ள இறைநிலையில் அதன் மதிப்புணர்ந்து அடக்கம் பெற்றால், அப்பெரு நிலையின் ஆற்றல்கள் அனைத்தும் நமதாக அருள் வெள்ளத்தில் நீந்தி அமைதியாக , மகிழ்ச்சியாக இருக்கலாம். இறைவனோடு அறிவால் இணைந்து கொண்டால் அருள் என்ற பேரின்ப வாழ்வு கிட்டும். இல்லையேல் இருள் என்ற மயக்க நிலையில் துன்புற வேண்டும்.

--அருள் தந்தை

வியாழன், 30 ஜனவரி, 2014

வாழ்த்து




சமுதாய மக்கள் உறவிலே , கணவன் மனைவி உறவிலே , நண்பர்கள் உறவிலே எந்தத் தொடப்பாகட்டும் , கெட்டது ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு பத்து தடவை கெட்டது ,கெட்டது என்று நினைத்தால் , உள்ளத்தில் அவ்வளவும் கேடு என்ற முறையில் காந்த ஆற்றலைக் கெடுத்துவிடும்.

அதை விட்டுவிட்டு அவருக்கும் எனக்கும் உறவு ஏற்பட்ட பிறகு , அவர் எனக்கு எத்தனை நன்மைகளை செய்தார் என்று எண்ணி , எண்ணி அதையே பலதடவை நினைத்து நினைத்து உள்ளத்தில் அவரைப் பற்றிய நல்ல எண்ணங்களை நிரப்பிக் கொண்டு , இனிமையான அனுபவங்களையே பெருக்கிக் கொண்டு வாழ்த்தும் போது அந்த வாழ்த்துக்கு பலன் அதிகம் ....

-- அருள் தந்தை

புதன், 29 ஜனவரி, 2014

மனவளக்கலைப் பயிற்சியைப் பின்பற்றினால் எல்லோரும் உயர் நிலைப் பேற்றை அடையலாம் அது எவ்வாறு சாத்தியம்?

மகரிஷி அவர்களே, நம் நாட்டில் பல மகான்கள் அவ்வப்பொழுது சித்தியடைந்துள்ளனர். அவர்கள் உபதேசத்தால் ஈர்க்கப்பட்டு பலர் பக்தர்கள் ஆனார்கள். ஆனால் தாங்கள் மட்டும் மனவளக்கலைப் பயிற்சியைப் பின்பற்றினால் எல்லோரும் தங்களைப் போல் உயர் நிலைப் பேற்றை அடையலாம் என்று கூறுகிறீர்கள், அது எவ்வாறு சாத்தியம்?

வேதாத்திரி மகரிஷியின் விடை: பல மகான்கள் உலகில் சித்தியடைந்தர்கள் என்று கூறுகிறீர்கள். மேலும் என்னைக் குறிப்பிட்டு 'உங்களைப் போல் மற்றவர்களும் உயர்நிலை பெறுவது சாத்தியமில்லை' என்று கூறுகிறீர்கள்.

நீங்கள் எந்த நிலையை, எந்தப் பேற்றினை சித்தி என்று கருதுகிறீர்கள்......

வேடமிட்ட சந்நியாசிக் கோலத்தையா?

ஏதேனும் ஜால வித்தையில் தேர்ச்சிப் பெற்று பிறர் வியப்புறச் செய்யும் திறமையையா?

இனிக்கப் பேசி சொற்பொழிவாற்றும் தெளிவையா?

நாடு எங்கும் மக்கள் வாங்கிப் படிக்கும் அளவுக்கு நூல்கள் எழுதிப் புகழ் பெறுவதையா?

ஒரு மனிதன் அருட்பேறு பெற்றதை உங்கள் கண்ணாலோ, கருத்தாலோ காண முடியுமா? எந்தக் கோணத்தில் எந்த நிலையிலிருந்து கொண்டு நீங்கள் பிறர் உயர்வைக் கணிக்கிறீர்கள்?

நீங்கள் ஒரு பெரிய ஞானி என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒருவர் பல பழிச்செயல்கள் கொண்டவராக, நடிப்பில் வல்லவராக இருக்கலாம்.

உங்கள் தயவில் வேலை செய்யும் ஒரு கூலியாள் பழிச்செயல் நீங்கி உய்வு பெற்ற ஒரு மகானாக இருக்கலாம்.

ஒருவரைப்பற்றிக் கணிக்க நீங்கள் உங்கள் தெளிவையே அளவு கோலாகக் கொள்ள வேண்டும். அதற்கு முன் ஒருவர் சித்தி பெற்றவர் என்று கருதினால் அது தப்புக் கணக்கேயாகும். மருட்சியால் கொண்ட முடிவாகும்.

மனிதன் புலன்வழியே இன்ப துன்ப நுகர்ச்சியில் மயங்கி உணர்ச்சி வயப்பட்ட நிலையில் மனம் அடையும் பொருத்தா நிலைகள் ஆறுகுணங்களாகும். அவை பேராசை, சினம், கடும் பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலியவையாகும்.

மனதிற்கு மூலமான உயிராற்றலை உணர்தலாகப் பெறும் குண்டலினி யோகத்தால் மனம் ஒடுங்கி தன் மூலத்தில் நிலைபெறுகிறது. அப்போது உணர்ச்சி நிலையல் எழும் ஆறுகுணங்களைப் பற்றியும், அவை இயங்கும் நிலைகளைப் பற்றியும், அகநோக்குப் பயிற்சி என்ற சாதனையால் உணர்ந்து சீரமைப்புப் பெறலாம்.

முறையாகப் பயின்ற பலர் இப்பயிற்சியில் வெற்றி பெற்று அமைதியின் பெருமையை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

செவ்வாய், 28 ஜனவரி, 2014

காந்த ஞானம்

இறைநிலையும் அதன் அலையும் சேர்ந்ததுதான் காந்தம் என்ற பேராற்றல். காந்தத்தின் தள்ளும் சக்தியும், தன்மாற்ற விளைவுகளும்தான் இப்பேரியக்க மண்டலத்தில் நிகழுகின்ற எல்லா நிகழ்ச்சிகளும் விளைவுகளும் ஆகும். 'குண்டலினியோகம்' பயின்று, மனம் என்னும் அலையின் சுழல் விரைவைக் குறைத்து விட்டால் மீதம் இறைநிலையேதான். இதனால் தெய்வமென்ற நிலையை உணருகின்ற போது அதுவே அறிவாக, மனதின் உட்பொருளாக இயங்குவதையும் அறிந்து கொள்ளலாம். இங்குதான் இறையுணர்வும், அறிவறியும் பேறும் மனிதனுக்குக் கிட்டுகின்றன். ஒரு உயிரின் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்ற எல்லா ஆற்றலும், மனமாக இயங்கும் அலையாற்றலும் காந்தமேயாகும். இதைப் பற்றி எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து உலக மக்களுக்கு உணர்த்தும் காலம் அதிகத் தொலைவில் இல்லை. காந்த ஞானம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டால் அதன் மூலம் அறிவிலும், செயலிலும், உணர்வுகளிலும் மனித குலம் ஒன்றுபட்டு விடும். இந்த நிலையை நோக்கியே நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். முழுமை பெறுவோம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 27 ஜனவரி, 2014

காந்த நிலை அறியாமல் கடவுள் நிலை அறிவதோ :


வான்காந்தம் , சீவகாந்தம் என்ற இரண்டு ஆற்றல்களை விஞ்ஞான காலத்திலேயே உணர்ந்து கொள்ள முடியாது என்று சொல்வதற்கில்லை. எல்லாக் காலத்தையும் கடந்து இப்பொழுது மனிதன் கணிணி காலத்தில் வாழ்ந்து வருகிறான். இங்கே நிகழக்கூடிய எல்லா இயக்கங்களையும் ஆராய்ந்தால் காந்த ஆற்றலின் தத்துவம் நன்றாக புரியும்.

காந்த ஆற்றலைத்தான் பிரணவ சொரூபம் என்றும், அர்த்தநாரி என்றும், ஓம்காரம் என்றும் பலவிதமாகக் கூறியிருக்கின்றார்கள். எங்குமே நிறைந்திருக்கக்கூடிய இறைநிலை ஒவ்வொரு உயிரிலேயும் மனமாக, அறிவாக எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் காந்தமாக....

மனித சமுதாயத்திற்கும் ,இறைநிலைக்கும் இடையே மறைபொருளாக உள்ளது காந்த ஆற்றல். காணும் பிரபஞ்சத்திற்கும் , காணாத கடவுள் நிலைக்கும் இடையில் உள்ளது காந்த ஆற்றலை உணரும் காலம் வந்து விட்டது. இந்த ஆற்றல் மூலம் மனிதன் தன்னை உணரலாம், அறிவை உணரலாம், உயிரை உணரலாம், இறைநிலையை உணரலாம்.

--வேதாத்திரி மகரிஷி

சனி, 25 ஜனவரி, 2014

சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயனை அனுபவிக்கின்றனர். இது ஏன்?



வேதாத்திரி மகரிஷியின் விடை:

செயலுக்குதக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது. செயலுக்கும் விளைவுக்கும் இடையே கால நீளம் வேறுபடும். ...

மனிதன் ஆயுள் ஒரு எல்லை உடையது. இதனால் எல்லா செயலுக்கும் விளைவை இணைத்து பார்ப்பதில் தவறு ஏற்படுகிறது.

ஒரு செயலுக்கு அடுத்த நிமிடமே விளைவு உண்டாகலாம். மற்றொரு செயலுக்கு 100 ஆண்டுகள் கழித்து விளைவு வரலாம். ஒரு செயல் அதை செய்தவரிடம் கருவமைப்பாக பதிந்து நான்கு தலைமுறைக்கு பின் விளைவு வரலாம்.

ஆக கணித்து இணைத்து பார்ப்பதில் தவறு இருக்குமே தவிர இயற்கை சட்டத்தில் தவறு இருக்க முடியாது.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

பயம்

வினா: சுவாமிஜி, எனக்கு அடிக்கடி பயம் ஏற்படுகிறது, அது ஏன் ?

வேதாத்திரி மகரிஷியின் விடை:

  எதிர்பாராதவிதமாக மனதிற்கு அதிர்ச்சியூட்டும் செயல்களால் பாதிப்பு ஏற்பட்டோ அல்லது அடிக்கடி சினப்பட்டதாலோ உடலில் நரம்புகள் தளர்ச்சியுற்றுள்ளது. அடிக்கடி இவ்வாறு அதிர்ச்சி ஏற்படும் போது அதை தாங்க முடியாமல் மனதில் பயம் தோன்றுகிறது. பெரும்பாலும் மக்கள் ஏதோ ஒரு வகையில் விந்து நாதாத்தை(sexual vital fluid) இழந்து விடுகிறார்கள். இவ்வாறு உயிர்ச் சக்தியை அதிக அளவு இழப்பதாலும் பயம் தோன்றுகிறது....

1. உடலை நல்ல முறையில் பாதுகாத்து, நரன்புத் தளர்ச்சி ஏற்படாது இருக்க உடற்பயிற்சியுடன் காயகல்பப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வரவேண்டும்.

2. மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள தியானமும், நல்ல ஒழுக்கப் பழக்கங்களையும் கடைப்பிடித்து வரவேண்டும்.

புதன், 22 ஜனவரி, 2014

பிரபஞ்சத்திற்கு அப்பால் ஏதாகிலும் உண்டா?

வினா: சுவாமிஜி, இறைவெளி என்பது சுத்தவெளி என்கிறீர்கள். இறைவெளி தான் சுத்தவெளி என்பதை எவ்வாறு உறுதி செய்ய முடியும்? அதற்கு மேல் ஏதாவது உண்டா?

வேதாத்திரி மகரிஷியின் விடை:

எல்லாம் வல்ல இறையே தான் மனிதனுள் அறிவாயும் உள்ளதால், நானும் அந்நிலையில் நின்று தேடித் தேடிப் பார்த்தேன். இதுவரைக்கும் என் அறிவுக்கு எட்டவில்லை. நமது முன்னோர்கள் நீண்ட காலமாகச் சொல்லி வந்த வேதாந்தங்களிளெல்லாம் கூட பிரபஞ்சத்திற்கு அப்பால் ஒன்றுமில்லை... சுத்தவெளி என்கிறார்கள். அதைத்தான் நானும் சொன்னேன்.

இப்போது இருக்கக்கூடியவர்கள் புதிதாக பிரபஞ்சத்திற்கு அப்பால் ஏதாகிலும் கண்டுபிடித்தால் எனக்கும் சொல்லுங்கள்.

செவ்வாய், 21 ஜனவரி, 2014

அறிவே தெய்வம் எவ்வாறு ?

சுவாமிஜி :

தெய்வத்தை எந்த உருவத்தில் யார் வணங்கினாலும் தன்னுடைய எண்ணத்தைத்தான் --மனத்தைதான் அறிவைத்தான் வணங்குகின்றாரே அன்றி வேறு இல்லை....
அறிவை விரித்து , ஒருவர் ஒன்றை வழிபடுகின்ற போது , அவர் வழிபடுகிற அந்த ஒன்றின் வடிவத்தையும், குணத்தையும் தன்னுள்ளேயே பதிய வைத்துக் , கொண்டு தானே அதுவாக வழிபடுகிறவர் மாறிவிடுகிறார்.

கடவுள் வணக்கமாக மனதைத்தான் வணங்குகிறார்களேயொழிய வேறு ஒன்றும் இல்லை. எல்லாம் வல்ல இறை சக்தியே ஊடுருவி இயங்கிக் கொண்டு இருக்கிற முறையிலே மனிதனிடத்தில் மனமாக இருக்கிறது.

"கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார் நீ
கடவுளைக் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே ".

யார் எந்த வகையில் கடவுளை வணங்கினாலும், எது நிற்கிறது என்று பார்த்தால் தன்னுடைய மனம் தான் அந்த வடிவம் எடுக்கிறது. சிலைகளையோ, சக்தியையோ, அகண்டாகாரமாக இருக்கக் கூடியதையோ, வேறு எந்தப் பொருளையோ கடவுள் என்று வணங்கினாலும் மனம் தான் அந்த வடிவம் எடுக்கிறது. எல்லாம் வல்ல பரம்பொருள் , அறிவு என்ற நிலையிலே அணு முதற்கொண்டு அண்டம் ஈறாக உள்ள எல்லாப் பொருட்களிலும் தன்மை, துல்லியம், ஒழுங்கு என்ற மூன்று அம்சங்களோடு இயக்க ஒழுங்காக அமைந்து இயங்கிக் கொண்டும் மனிதனிடம் ஆராயும் திறன் கூடியதாகவும் இருக்கிறது. எது சுத்தவெளியாக இருக்கிறதோ , எது "கடவுள்" என்று பேசப்படுகிறதோ , அதுவே தான் ஜீவன்களிடம் , உயிர்களிடம் அறிவு எனப் பேசப்படுகிறது .

பிரபஞ்ச அளவில் ஒருங்கிணைபபாற்றலாகவும் , ஆறாவது அறிவாகவும் விளங்குகின்ற "அறிவே தான் தெய்வம்".
 

திங்கள், 20 ஜனவரி, 2014

அனைவரும் செல்வர்களே

இறைவனுடைய சிறு துளியாக இருக்கக்கூடிய மனிதனிடம் முழுமையாக ஆறாவது அறிவு செயல்படுகிறது. அவனிடம் இறைநிலையோடு கலக்கக் கூடிய அளவுக்கு ஆற்றல் இருக்கிறது. மனத்தின் அடித்தளத்தில் இறைநிலையே அமர்ந்து இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் இறைநிலையின் பிரதிநிதியாகவே, இருக்கிறான். அவனிடம் பேராற்றல் அடங்கியிருக்கின்றது .

தனக்கு , தன் குடும்பத்திற்கு ,சுற்றத்தாருக்கு , சமுதாயத்திற்கு , உலகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை என்ன? அதற்குத் தன்னிடம் உள்ள உடல்வலு , அறிவின் உயர்வு, அதிகாரம் , செல்வம், வயது இவற்றைக் கணித்துக் எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்வதற்குத் தயாராக இருப்பது என்றிருந்தால் பிறரிடமிருந்து கையேந்த வேண்டியது இல்லை, பிறரிடம் எதிர்பார்த்துப் பெறுவதற்காக, இயற்கை மனிதனைப் படைக்க வில்லை, அதற்காக யாரும் பிறக்கவில்லை. எதிர்பார்க்க வேண்டியது இல்லை. எதிர்பாத்தல் பெரும் பாலும் ஏமாற்றத்தில் முடிகின்றன. அதோடில்லாமல் வறுமையில் ஆழ்த்தி விடுகிறது.


பிறரிடம் எதிர்பார்க்கும் பழக்கத்தை விட்டுவிட்டு, துன்பத்திற்குரிய செயல்களைத் தவிர்ப்பது, எந்தக் காரணத்தாலோ துன்பப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய உயிருக்குத் தன்னிடம் இருக்கக் கூடிய மிகுதியான ஆற்றலைக் கொண்டு என்னென்ன உதவி தேவையோ அந்த உதவியைச் செய்வது என்ற பண்புகளோடு ஒரு மனிதன் இருக்கும் பொது அவனிடம் அளவற்ற ஆற்றல் பெருகிவிடும். அத்தகைய நிலையில் அவன் அளவற்ற செல்வம் உடையவனாகக் கருதப்படுகிறான். அங்கே ஆற்றல் குறைவுபடுவதே இல்லை. இன்ப ஊற்று வற்றாது சுரக்கும். இறைநிலையோடு இறைநிலையாகவே நிற்கும் காட்சி உள்ளத்தில் ஏற்படும் .

--அருள் தந்தை

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

அறிவும், அறமும் சிறப்படைய வேண்டும்


மனித வாழ்வு சிக்கல் நிறைந்தது. பொறுப்பு மிக்கது. அறிவின் உயர்வும் விளக்கமும் செயலின் திறமையும், நேர்மையும்தான் வாழ்வின் தேவைகளை நிறைவாக்கி வெற்றி பெறச் செய்யும். வாழ்வின் விளக்கத்தைச் சிந்தனையாலும் செயல் விளைவுகளாலும் கண்ட முற்காலத்திய அறிஞர் பெருமக்கள் சுருக்கமாக மனிதகுல நல்வாழ்வுக்கு இறைவழிபாடும் அறநெறியும் இன்றியமையாத தேவைகள் என்று கூறியுள்ளார்கள். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்தவற்கு உடல் நிலையில் எல்லை கட்டிய அறிவுடையோர்களுக்கு கற்பனையால் வடிவமைக்கப்பட்ட தெய்வநிலையையும், சடங்குகளாலும் திட்டமிடப்பட்ட அறநெறியும் கூடிய மதங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். எல்லாத் தோற்றத்திற்கும் குணங்களுக்கும் உள்ளும் புறமும் நிறைந்து மறைபொருட்களாக இயங்கும், இயக்கும் உயிர், மனம், அறிவு, சீவகாந்தம், தெய்வம் ஆகிய மறை பொருட்களை உணர்ந்து கொள்ள ஏற...்ற போதனை சாதனை முறைகளாலும் செயலுக்குத் தக்க விளைவு என்ற இயற்கை நீதியை உணர்ந்து எண்ணம், சொல், செயல்களை அளவோடும் முறையோடும் ஆற்றி மெய்ப்பொருள் உணர்ந்த தெளிவோடு வாழத்தக்க சமய நெறியினை உருவாக்கித் தந்துள்ளார்கள்.

எனினும் இக்காலத்திலும் மக்களால் அவற்றை தெளிவாக உணர்ந்து கொள்ளவோ, முறையாகப் பின்பற்றி பயனடையவோ முடிவில்லை. காலத்திற்கேற்றபடி விளக்கி வழிகாட்டக் கூடிய ஆன்மீக தலைவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். மக்கள் மனம் குழப்பம் அடைந்துள்ளது. விளைவாக உலக மக்கள் வாழ்வில் சிக்கல், பிணக்கு, பகை, நோய்கள், குற்றங்கள், போர்கள் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

இப்போது விஞ்ஞானயுகம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நாட்டு மக்கள் பல நாட்டில் குடியேறியும், பலநாட்டு மக்கள் ஒவ்வொரு நாட்டிலும் குவிந்தும் வாழ்கின்றார்கள். போக்குவரத்து சாதனங்களாலும், செய்தித் தொடர்பு சாதனங்களாலும் மனிதகுலம் பொருளாதாரம், அரசியல், வாழ்க்கைப் பண்பாடு இவற்றில் ஒருங்கிணைந்து உள்ளது. இந்த நிலைமைக்குப் பொருந்துமாறு மனித அறிவுக்கு இறைநிலை உணர்வும், இறைவழிபாடும், அறநெறியும் விளங்கிக் கொள்ளவும் பின்பற்றவும் ஏற்றமுறையில் போதனை சாதனை வழிகள் தேவையாக உள்ளன.

அறியாமை, பழக்கம், உணர்ச்சிவயம் என்ற மூன்றாலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்றவாறு அறிவாட்சித் தரத்தோடு வாழும் மக்களைச் சட்டங்களைக் காட்டி அதிகாரம் செய்தோ, இறந்த பின்னர் சொர்க்கம், நரகம் கிட்டுமென்று ஆசைகாட்டியும், அச்சமூட்டியும் நல்வழிப்படுத்த முயலும் மதங்கள் மூலமோ திருத்தி வாழ்வில் அமைதி காண முடியாது.

இயற்கையாக அமைந்துள்ள பேராற்றலான சிந்தனையாற்றலைத் தூண்டி விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் கூடிய விளக்கத்தின் மூலமும், பயிற்சிகள் மூலமும் தனி மனிதனின் அறிவிலும் அறத்திலும் சிறப்படைய வேண்டும்.


–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 18 ஜனவரி, 2014

TRANSCENDENTAL STATE OF CONSCIOUSNESS :


 (... this could be achieved by anyone who dedicates the "Will and a Few minutes" of daily life.)

The Human being can be guided better by the development of the "Inner consciousness" which will help to guide one as a leading light in this life. Better behaviour and activities which will help other living beings will happen because of the spiritual development which acts as the 'guiding light'.

When one's light of insight is opened by the realisation of Truth i.e., Self or God, 'Spiritual wisdom' becomes one's own life-light to guide his behaviour and activities. When one reaches the light of 'realisation of Truth' he knows the evolution, existence, functions, results and relationships of the physical body, life-force (spiritual body), mind, consciousness and their universal link via the Divine wave system, which is functioning as both Universal magnetism and bio-magnetism. Such greatness is realized to exist in every human and in all living beings.

The state of realisation reached by the human beings helps to understand evolution, existence, development of the physical body, development of the inner life force (Spiritual body) mind, consciousness and their universal link. The Divine Wave System functions as both universal magnetism and also Bio-magnetism. This greatness is capable of being achieved by all living beings especially the human species.
One is able to expand the mind from body-consciousness to Spiritual consciousness and to God-consciousness. By such expansion one can realise the realities of the universe as an inner vision; the whole universe, the solar systems, the field of energy particles and the wave field which comprises static wave and dynamic wave.

One can recall the whole cosmic history of evolutionary process, from the origin to the present, from samllest particle to the greatest masses, and from on-sense to six-sense living beings. In this transcedental state of Consciousness, the self-awareness and spiritual wisdom drawn to plan and lead a new pattern of life in unison with the "Law of Nature". Divine providence and requisite potential are inherent with every human being; this could be achieved by anyone who dedicates the "Will and a Few minutes" of daily life. The practice is simple and easy when compared with other present involvements in life.
- Vethathiri Maharishi.
 

வியாழன், 16 ஜனவரி, 2014

கேள்வி : சுவாமிஜி, நமக்குத் துன்பம் செய்தவரை நாம் மனதார மன்னித்து விடுகிறோம். அப்பொழுது அவர் செய்த செயலுக்கு விளைவு தோன்றக் கூடாது அல்லவா?



சுவாமிஜியின் பதில் : மற்றவரின் செயலால் துன்பம் அடைந்தவர் பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டாலும், துன்பம் செய்தவரின் உள்ளுணர்வாக இருக்கும் பேரறிவானது விட்டுவிடாது. அவர் செய்த செயலைப் பதிவு செய்து இருப்பு வைத்து விளைவைக் காலத்தால் அளித்துவிடும்.
தவறு செய்து கொண்டே இருப்பவன் மனிதன். அதைத் திருத்தம் செய்து கொண்டே இருப்பவன் இறைவன். அந்தத் திருத்தம் தான் விளைவாக வந்து துன்பமாகத் தெரிகிறது.

புதன், 15 ஜனவரி, 2014

செயல்விளைவுத் தத்துவத்தை மனிதன் உணர வேண்டிய அவசியம் என்ன?

1) கேள்வி : சுவாமிஜி, சமுதாய வினைக்கு ஒன்றுமறியாத தனிமனிதன் பாதிக்கப்படுகிறானே அது ஏன்? செயல்விளைவுத் தத்துவத்தை மனிதன் உணர வேண்டிய அவசியம் என்ன?

சுவாமிஜியின் பதில் : சமுதாயத்தினுடைய கூட்டு உழைப்பான உணவு, உடை, உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும் தனிமனிதன் அனுபவிக்கிறான். அதனால் தனிமனித வினை சமுதாய வினைக்கு உட்பட்டே செயல்படும். அதன் பாதிப்பைக் குறைக்க தனிமனிதன் சமுதாயத்தை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் "வாழ்க வையகம்" என்ற உலக நல வாழ்த்தை அமைத்துக் கொடுத்தேன். செயல் - விளைவுத் தத்துவத்தை உணரும் பொழுது மனித வாழ்வில் பொறுப்புணர்வு அதிகமாகிறது. இறைவனே செயலுக்கு விளைவாக வருவதால், இறைவனைத் தனியே தேடுகின்ற காலமும் மிச்சமாகிறது. நாம் செயல்களை ஒழுங்குபடுத்தும் பொழுது எத்தனை தேவையற்ற சடங்குகள் ஒழிகின்றன ! உயிர்களை மதித்து வாழும் பண்பு வளர்கிறது. இதை உலகிற்கு உணர்த்த வேண்டியது சிந்தனையாளர் கடமையாகும்.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

கருமையம்

கருமையம் மிக வியப்பான செயல்களை ஆற்றிக் கொண்டிருப்பதை ஆழ்ந்து ஆராய்ந்தால் உணர்ந்து கொள்ளலாம். கருமையம் என்பது காந்த அலைத் திணிவு. நுண்ணிய ஜீவ இனங்களிலிருந்து அவை பரிணாமத்தால் உயர்ந்து மனிதனாகும் வரையில் கருமையம் தனது செயலை நிறுத்துவதில்லை; தன்மைகளை இழப்பதும் இல்லை. உடல் காலத்தால் மாறிக்கொண்டு இருக்கும். அதை உடலுக்கு இறப்பு என்று சொல்கிறோம். ஆனால், அதிலடங்கியிருந்த உயிர்த்துகளோ, பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக் கொண்டு இருக்கும் உயிர்த்துகளோடு கலந்து விடும். உடலை விட்டு வெளியேறிய இந்தக் காந்த அலைக்கு அதன் இயக்க நியதியினாலும், இதுவரையில் இணைத்துக் கொண்ட தன்மையினாலேயும் ஒரு சிறப்பு நிலை உருவாகிவிடுகிறது.

வான் காந்தத்தில் (Universal Magnetism) மிதக்கும் இத்தகையக் கருமையமானது அதன் சிறப்புக்கு ஏற்பச் செயல்படக்கூடிய, விளைவுகளைத் தரக்கூடியப் பொருத்தமான ஜீவ இனத்தோடு இணைந்து விடும். அது முதற்கொண்டு கருமையம் இணைத்துக் கொண்ட ஜீவனுடைய ஆன்மா, அந்த இணைப்பினாலான சிறப்புக்களையும் பெற்றுவிடும். இவ்வாறு வாழும்போதே சந்ததிகள் மூலம் பல்லாயிரம் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருவதும், உடலை விட்ட பின்னர்கூடத் தனது தகுதிக்கேற்ற ஒரு கருமையத்தோடு இணைந்து கொள்வதும், சாதாரண மன நிலையிலுள்ள மனிதனால் சரியாக உணர்ந்து கொள்ள முடியாது. எனினும் இறையாற்றளால் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இந்த வியத்தகு கருமையம், பேரியக்க மண்டல இரகசியங்கள் அனைத்தையும் அடக்கமாகப் பெற்ற ஒரு இயற்கை நியதியாகும். தன்னிலை விளக்கமானாலும் சரி, இறைநிலை விளக்கமானாலும் சரி, இக்காந்தக் "கருமையத்தை" உணர்ந்து கொள்ளாத முன்னம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியாது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 13 ஜனவரி, 2014

சுவாமிஜி 'தனித்திரு, பசித்திரு, விழித்திரு' என்ற சொற்களுக்கு விளக்கம் என்ன?


 

வேதாத்திரி மகரிஷியின் விடை: இவ்வார்த்தைகள் ஆன்மீகப் பயிற்சியில் உள்ளோருக்கு மிக உயர்ந்த கருத்துக்களை விளக்குகின்றன.

1. எந்த வெளிப் பொருளையும், நிகழ்ச்சியையும் அறிவு நாடாமல், உன்னையே நோக்கி அது நிற்க வேண்டும் என்ற குறிப்பு 'தனித்திரு' என்பது....

உன் மூலம் நாடி அறிவு நிற்பது, உன்னில் ஒடுங்கி நிற்பது; எங்கும் நிறைந்த பூரணமான அரூபநிலையில் நிற்பது என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. உன் மகத்துவத்தை அறிந்து கொள்வதில் வேட்கை கொண்டிரு என்பதே 'பசித்திரு' என்பதாகும்.

"நான் யார்... அறிவா? உயிரா? உடலா? இம்மூன்றும் வேறு வேறா... ஒன்றா? இவற்றின் மூலமும் முடிவும் யாது? " என்பது போன்ற விளக்கங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வத்தோடு இரு என்பதை 'பசித்திரு' என்னும் வார்த்தை உணர்த்துகின்றது.

3. பழைய ஞாபகங்களும், பிறர் விருப்பங்களும் உன் அறிவில் அடிக்கடி பிரதிபலிப்பதால், உன் சிந்தனை அடிக்கடி திசை மாற்றம் அடையக் கூடும். அதனால் ஆன்மீகத் துறைக்கு முரணாக நீ செயலில் ஈடுபட நேரிடக் கூடும்.

ஆகையால் நீ மிகவும் உஷாராக, உன் நிலையில் மாறுபாடு அடையாமல் 'விழிப்பாய் இரு' என்று வலியுறுத்திக் கூறுவதே 'விழித்திரு' என்ற வார்த்தையாகும்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

எதிர்பார்த்தல்

எல்லாவிதமான துன்பங்களும் கவலைகளும் ஏமாற்றம் என்பதிலிருந்து தான் உருவாகி வரும். "எதிர்பார்த்தல்"என்பதானது ஏமாற்றத்தில் கொண்டு நிறுத்துகிறது. உறவினரிடமோ அல்லது ஒருவரிடம் நட்பு, தொடர்பு வைத்திருந்தால், "அவர் எனக்கு இன்னின்ன செய்ய வேண்டும் அவர் மூலமாக எனக்கு இது வரவேண்டும், அவை இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்" என நினைந்து, நினைந்து எதிபார்ர்க்கப் பழகிக் கொள்ளுகிறோம். இத்தகைய எதிபார்ப்பு முழு அளவிலே ஈடேறி வருமா என்றால் வரவே வராது. ஏனென்றால் இந்த எதிபார்த்தல் என்பதில் நான்கு அளவைகள் உள்ளன. நீ ஒன்று தேவை என்று எந்த அளவிலே வைக்கிறாயோ அந்த அளவிலே அவர் ஒப்புக் கொள்ள இயலாது. தேவை என்பதையே முதலில் அவர் ஏற்றுக் கொண்டாலும், தேவை அதன் அளவு இரண்டையும் ஒப்புக் கொண்டாலும் நீ கற்பனை கொண்டுள்ள முறையையோ, காலக்கெடுவையோ அவர் ஒப்புக் கொள்ளாத நிலை இருக்கும்.
இதைத்தான் ஆங்கிலத்தில் " Judgement of need, judgement of quality, judgement of quantity and judgement of time" என்று சொல்லுகிறேன். இந்த நான்கு அளவைகள் ஒவ்வொருவரோடு, அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். எனவே நீ எதிர்பார்த்தது, எதிபார்த்தபடி அவர்கள் மூலமாகக் கிடைக்காது. ஒவ்வொரு மாற்றத்திலும் பிணக்குற்று, பிணக்குற்று எமாற்றத்திற்கு ஆட்பட்டு ஆட்பட்டு அதனாலே துன்பமானது பெருகி கொண்டே போகிறது. இந்த அடிப்படை தெரிந்து கொண்ட பின்னர் "எதிர்பார்த்தல்" என்பதை விட்டுவிடுவது நல்லது எனத் தெரிகிறதல்லவா?. விளைவு நிச்சயமாக உண்டு. நீ எதிர்பார்த்தாலும், எதிர்பார்க்காவிட்டாலும் நீ என்ன செயல் செய்கிறாயோ அந்தச் செயலுக்குத் தக்க விளைவு வந்துதான் ஆக வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை விளங்கிக் கொண்டு, பயனை உணர்ந்து கொண்டு எதிர்பாராது செய்ய வேண்டும்.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

விளைவு வெளிப்படும் காலம் எப்போது?



செயலுக்கு விளைவு உடனடியாக வரலாம். ஒரு நாளில் வரலாம் ,ஒரு மாதத்தில் வரலாம், ஒரு வருடத்திற்குப் பின்னும் வரலாம் , 10 வருடங்களுக்குப் பின் வரலாம். மிகவும் நீண்ட காலத்திற்குப் பின்னும் வரலாம். அடுத்த தலைமுறைக்கும் வரலாம்.ஆனால் விளைவு என்பது நிச்சயம். என்றோ செய்த செயலுக்கு இன்று விளைவு வரலாம். Mஇன்று செய்த gசெயலுக்கு இன்றே விளைவு வரலாம் .காலையில் செய்த செயலுக்கு மாலையில் விளைவு வரலாம் . இப்போது செய்த செயலுக்கு இப்போதே விளைவு வரலாம்.

ஒருவர் செய்த செயலுக்கு விளைவு அவரது வாழ்நாளிலேயே வெளிப்படாதிருக்கலாம் .ஆனால் அது இருப்பாக இருந்து , மகனுக்கோ அவரது பேரனுக்கோ வரலாம். விளைவை மகனோ,பேரனோ அனுபவிக்கலாம். ஆனால் மகனோ, பேரனோ செயல் செய்யவில்லை. இருந்தபோதிலும் விளைவை அனுபவிக்கிறார்கள் என்றால் செயலுக்கான விளைவு வெளிப்படுவதற்கான காலநீளம் அதிகமாயிற்று என்பதே பொருள். ஒரு செயலுக்கான பதிவு தொ டர்ந்து இருக்குமேயானால் ஏழாவது தலைமுறையிலும் அதற்கான விளைவு வரும்.

தந்தையினுடைய செயலை மேல் போக்காக பார்த்து விட்டு, விளைவு இல்லை என்று கருதக் கூடாது . மகனோ, பேரனோ விளைவை அனுபவிக்கும் போது இந்த விளைவுக்குச் செயல் இல்லையே என்று கருதக்கூடாது . செயல் இல்லாத விளைவு இல்லை. அனுபவிக்கும் விளைவு எங்கிருந்து வந்திருக்கும் என்று அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியவரும்.

வியாழன், 9 ஜனவரி, 2014

எண்ணம் தோன்றும் விதம் :




எண்ணம் இல்லாத மனிதனே இல்லை . ஏதேனும் எண்ணம் மனதில் தோன்றிய வண்ணம் உள்ளது.எண்ணம் எழுவதை அறிந்திருந்த போதிலும், ஏன் எழுகிறது? எண்ணத்தின் பிறப்பிடம் எது?
எண்ணத்தின் விளைவு யாது? அதன் முடிவு என்ன? என்பனவற்றை அறிந்தவர் இல்லை .
...
மனிதனிடம் நீண்ட காலமாக பல குணங்கள், பல எழுச்சிகள் எல்லாம் உண்டாகிப் பழக்கம் ஆகிவிட்டன. உயிர்ச்சுழலிலிந்து அந்த அழுத்தம் வெளியாகிக் கொண்டே இருக்கிறது . அவ்வாறு வெளியாகும் போது அந்த உயிர்ச்சக்தியில் பதிவாகி இருக்கிறதோ அப்பதிவுகள் எண்ணங்களாக வெளியே வந்து கொண்டு தான் இருக்கும். ஏற்கனவே பதிவாகிய குணம், தன்மை ஆகியன உயிர்ச்சக்தியிலிருந்து ஓர் அலையாக வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அவ்வாறு வெளிப்படுவதைக் கொண்டு, ஒருவர் தன்னிடத்தில் என்னனென்ன பதிவுகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.


முன்பு மனதை இயக்கிப் பதிவுகளைப் பெற்று ஒரு தன்மையை நாம் கொண்டுள்ளோம். அதை மாற்றி மனத்தை நம்முடைய விருப்பப்படி நடத்தி நாம் அடைய வேண்டிய எல்லா இலட்சியங்களையும் அடைய அதற்கென முறையான ஒரு உளப்பயிற்சி (Systemic Psychic Practice) எல்லோருக்கும் அவசியம் வேண்டும். பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கக்கூடிய மனதின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொண்டு விளக்கத்தை 'நல் விளக்கமாக' பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும் உன்னத கலை தான் 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' "குண்டலினி யோக" (Simplified Kundalini Yoga) பயிற்சி ஆகும்."

"செயல்களால் சிந்தனையும் அதன் உயர்வும்
சிந்தனையால் செயல் பலவும் ஒன்றால் ஒன்றாம்;
செயல் எண்ணப் பதிவுகளே மனிதன் தன்மை
சிந்திப்பீர்! இதனைவிடவேறு நீயார்?,
செயல் எண்ணம் பழக்கவழி ஓடும் மட்டும்
சிற்றறிவாய் துன்புற்று வருந்தும் சீவன்
செயல் எண்ணம் இரண்டினிலும் விழிப்பு கொண்டால்
சிவத்தன்மை சீவனில் பேரறிவாய் ஓங்கும்."

.
வாய்மை:
"தூய்மையாம் விளைவுதரும் சொற்கள் அனைத்துமேவாய்மையாம் அவைவாழ்வின் வளம்காத்துச் சிறப்பளிக்கும்".

 

 
" எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி
எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் கண்டு
எண்ணத்தை எண்ணத்தில் நிலைத்திருக்கச் செய்தால்,
எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும்."

----அருள் தந்தை
 





செவ்வாய், 7 ஜனவரி, 2014

காலில் விழுந்து வணங்குவது சரியா

சுவாமிஜி பதில் :

"அன்பர்கள் காலில் விழுந்து வணங்கும்போது எனக்குப் பொருந்தா உணர்வாக இருக்கிறது. ஒருவருக்கொருவர் இதனை அறிவித்துக் காலில் விழுந்து வணங்குவதைத் தவர்க்கவும். ...

கீழே விழுந்து வணங்கி வாழ்த்துப் பெறுவது ஆண்டான்-அடிமை முறையை வகுத்து அதன் மூலம் மனநிறைவு பெற்ற பழக்கம் . மிகப் பழங்காலத்தியது . வணங்குபவன் யார்? வணக்கத்துக்குரியவர் யார்? அதன் பலன் இதுவரை என்ன? .

அறிவு நிலையை உயர்த்துவதற்காக முற்காலத்தில் அறிஞர்கள் வழிகாட்ட அறியாதோர் பின்பற்றினார்கள்.அக்காலத்தில் அறிவில் ஏற்றத் தாழ்வு இருந்தது.

எந்தப் பெரும் அகண்டாகார அரூப சக்தி எங்கும் நிறைந்துள்ளதோ அது எல்லோரிடத்திலும் நிறைந்து தானே இருக்க வேண்டும்? அப்படியாயின் எல்லோரும் சமநிலையில் உள்ளவர்கள்தானே?.

எனவே காலில் விழுந்து பதிலாக நேர்நிறையுணர்வை உணர்த்தும் வகையில் நின்ற நிலையில் கை கூப்பி வணங்குவதும் வாழ்த்துவதும் நல்லது . இதனையே எதிர் காலத்தில் அமுல் நடத்துதல் வேண்டும்.இது வேதாத்திரியாரின் அன்பான வேண்டுகோள்" .

----வேதாத்திரி மகரிஷி .
 

திங்கள், 6 ஜனவரி, 2014

சங்கல்பம் என்பது என்ன ?




சுவாமிஜி:

அறநூல்களைப் படிக்கும் போதும் சான்றோர்களின் வாழ்க்கை வரலாறைக் கேட்கும் போதும் நாம் பெறவேண்டிய பண்புகளின் பட்டியல் நீளும் அனைத்துப் பண்புகளும் பின்பற்ற வேண்டும் என்ற ஆவலும் தோன்றும். அனைத்துப் பண்புகளையும் ஒரு சேரப் பயிற்சி செய்து பின்பற்ற முடியாது. நாம் அடையக்கூடிய பண்புகளைப் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். எந்தப் பண்பு முதலில் அடைய வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அப்பண்பை அடைய நாம் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்....

சங்கல்பம் என்பது மனதிற்கு தான் இடும் கட்டளை. தனது மனதிற்கு இவ்வாறு கட்டளையிடும் போது தான் சோம்பல், தள்ளிப்போடுதல் போன்ற தமோகுணங்களிளிருந்து விடுபட்டுச் செயல்படும்.

மனதிற்கு அதிக சுதந்திரம் கொடுத்தால் அது பயிற்சியில் உறுதியுடன் ஈடுபடாது .பயிற்சியை ஒரு நோன்பு போன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதான் இப்பயிற்சிக்கு முக்கியத்துவம் ஏற்படும்.

உதாரணமாக தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மேம்போக்காக முடிவு செய்து கொண்டால் குறுகிய காலத்திலேயே உடற்பயிற்சி விட்டுவிடப்படுகிறது.

அதையே ஒரு விரதமாக எடுத்துக்கொண்டு, " தினந்தோறும் காலை உடற்பயிற்சி செய்த பிறகே காலை உணவு எடுத்துக் கொள்வேன் " என்று உறுதி எடுத்தக் கொண்டால் அவரால் வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்க முடியும்.

சங்கல்பம் நற்பண்பைச் சாதனையுடன் மனதைப் பிணைக்கிறது . சங்கல்பத்தின் மூலம் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கவில்லை என்றால் மனம் எளிதில் சாதனையிலிருந்து விலகி விடும்.

தன்னை அறியாமல் மனதில் பல சங்கல்பங்கள் தோன்றி அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அதற்கான செயல் விளைவை அனுபவிக்கிறோம். மனதிக்கு நற்பண்புகளை சங்கல்பமாக கொடுத்து பயிற்சி செய்யும் போது அப்பணியைப் பெற்று மேன்மை பெறுகிறோம்

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

ஜீவசமாதி


 ஜீவசமாதி என்பது என்ன? அது பற்றிய விவரத்தைக் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
...
சுவாமிஜி அவர்களின் விளக்கம்..
ஒருவர் தவத்தின் மூலமாகவும்,தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மைசெய்து முழுமைபெறு நிலையடைந்தும்,காயகல்பத்தின் மூலமாகத் தன வித்துவைக் கெட்டிபடுத்தியும்,உலக வாழ்க்கையில் தன செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும்,இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும் விட்டால்,மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.

முன்னமே செய்துருந்த ஏற்பாட்டின்படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள்.மனஇயக்கம்,உடல்இயக்கம் நின்றுவிட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிருப்பதால் உடல் கெடாமல் இருக்கும்.இதுவே ஜீவசமாதி.

இதுபோலத் தமிழ்நாட்டில் மகான்கள் அடக்கமான பதினெட்டு ஸ்தலங்கள் உள்ளன.பழனி,திருப்பதி,சிதம்பரம்,வைத்திஸ்வரன்கோவில் போன்ற இடங்களிலெல்லாம் சித்தர்கள் அடக்கமாகி இருக்கிறார்கள்.

அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலையை வைத்து கோவில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளனர்.என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடையவிட்டுப் பிரியாதிருக்கும்.

அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்றபோது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர,அந்த மகானுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும்.

சித்தர்கள் அடக்கமான கோவில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை.ஜீவன் என்றால் உயிர். சமாதி என்றால் சமன் - ஆதி.ஆதிக்குச் சமமான மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

                                                                                                               -அருட்தந்தை வேதாத்திரிமகரிஷி

 

சனி, 4 ஜனவரி, 2014

நான் கண்டு கொண்டேன்; நாராயண எனும் நாமம்

கேள்வி: சுவாமிஜி, "நான் கண்டு கொண்டேன்; நாராயண எனும் நாமம்" என்று பெரியவர்கள் கூறுகிறார்களே, அதன் உட்பொருள் என்ன?

வேதாத்திரி மகரிஷியின் விடை: இறைநிலை என்ற பிரம்மமே எழுச்சி பெற்று சுழச்சி நிலையில் விண் என்ற நுண்துகளானது. விண்துகள்கள் மோதி இணைந்து, இயங்குகின்ற தன்மைக்கு ஏற்ப மூலகங்கள் தோன்றின.

விண்ணின் அடர்த்தி நிலையே காற்று. அவ்வடர்த்தி வேறுபாட்டில் தோன்றும் ஹைட்ரஜன் வாயுவோடு ஆக்ஸிஜன் வாயுவும் சேரும் போது நீர்மப் பொருள் தோன்றுகிறது. அந்நிலைக்கு அடுத்த கெட்டிப் பொருளாக உள்ள எல்லாப் பொருளும், உயிர்களும், நீர்மப் பொருளில் இருந்து தான் தோன்றின. நீர்மப் பொருளின் சுழற்சி வேகம் மேலும் குறைந்து நெருங்கி இயங்க திடப்பொருளாக மாறுகிறது....

மண்ணில் ஒரு தாவர விதையைப் போட்டு அதற்குத் தண்ணீர் ஊற்றுகிறோம். அந்தத் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் அணு, அந்த விதையில் அமைத்துள்ள நுண் பதிவுக்கேட்ப சுழற்சி பெற்று, பஞ்சபூதத்தையும் இணைத்து அந்தந்த இரசாயணங்களாக்கி முளை, தண்டு, இலை, கிளை, அரும்பு, மொட்டு, பூ, காய் என்றெல்லாம் மாற்றம் பெறுகிறது. தாவர இனம் ஆக்ஸிஜனைப் பிரித்து மனிதன் சுவாசிக்க உதவுகிறது. அதனால் உயிர்கள் அனைத்தும் நீர்மப் பொருளின் தன்மாற்றத்தாலே தான் தோன்றி வந்தன.

நாரம் + அயனம் = நாராயணம்.
'நாரம்' என்றால் நீர்.
'அயனம்' என்றால் மாற்றம்.

'நாராயணம் என்றால் உயிர்கள் அனைத்தும் நீரின் மாற்றத்தால் தோன்றியது எனப்பொருள்.

திடப் பொருளாக உள்ள அனைத்திற்கும் மூலப் பொருளாக உள்ளது நீர்மப்பொருள் தான். நீருக்கு மூலமாக இருப்பது, எல்லாம் வல்ல இறைவனான 'நீயே தான்'. அவ்வாரன நாரா-அயணமான உன்னை நான் கண்டு கொண்டேன்.

பிரணவப் பொருளான மெய்ப்பொருளின் குணம் மௌனம். அதனால் இறைவனைக் குறிக்க 'அம்' என்ற மகர மெய்யால் அழைத்தார்கள். நானும் 'அதுவாக' - இறைவனாகவே இருக்கிறேன் என்பது தான் "நாம் + அம் = நாமம்".

நமது நெற்றியில் U வடிவில் இரண்டு நரம்புகள் மேல் நோக்கியுள்ளன. அது சிலருக்கு வெளிப்படையாகவே தோன்றும். அந்த நரம்புகளைத் தட்பவெட்ப நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இராமக் கட்டியை இழைத்து அதன் மேல் போட்டு விட்டார்கள். புருவ மையத்தில் இருந்து உயிர் சக்தியை மேலே கொண்டு போய் 'பிரம்மரந்திரம்' என்ற துரிய நிலையில் வைக்க வேண்டும் என்பதைக் காட்ட மையத்தில் சிவப்பு நிறத்தில் மேல் நோக்கி ஒரு கோடு இழுத்து விட்டார்கள். இதைப் புலன்களுக்கு காட்ட அமைத்த சடங்கு முறை நாமமாகும். மொழி வழக்கில் 'நாமம் போட்டான்' என்றால் இன்று வேறு பொருளாகி விட்டது.

எல்லாம் வல்ல இறைவன் எழுச்சி நிலையில் பஞ்சபூதங்களாகி, நீர் வழியே பரிமாண மாற்றம் பெற்று உயிர்களாகத் தோன்றி நாமாகவும் வந்துள்ளான் என்பதை அறிந்த பெரியோர்கள் குறிப்பாக உணர்த்த அவ்வாறு கூறியுள்ளார்கள்.

கேள்வி : நல்லறத்தைக் கைக்கொண்டு, பிறருக்கு நன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைகிறார்கள். பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும் சிலர் பொருள், புகழ், செல்வாக்கு பெற்று நீண்டகாலம் வாழ்கிறார்கள், இதற்குக் காரணம் என்ன சுவாமிஜி?



மகரிஷியின் பதில் : வினைப்பயன் என்ற அளவில் பார்த்தால் பாரம்பரியப் பதிவின் காரணமாகச் சிலர் நீண்ட நாள் வாழக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய முன்னோர்கள் 80, 90 வயது வரை வாழ்ந்திருப்பார்கள்.

அதற்கு மேலும் சிலர் தம்முடைய முயற்சி...யாலும், ஒழுக்கத்தாலும் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்வதும் உண்டு. உயிரைப் போக்கும் அளவுக்குக் கடுமையான நோய் வந்தால் ஒழிய அவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வார்கள்.

சிலர் பணம், புகழ் பெற்று நீண்ட நாள் வாழ்கின்றார்கள் என்பதெல்லாம் பொறாமையால் சொல்வது. பணமும் புகழும் உடையவர் மனதில் அமைதி இருக்கின்றதா? உடலில் சுகம் இருக்கிறதா? இரவில் தூக்கம் வருகின்றதா? அவற்றைக் காத்துக் கொள்ள அவர் எவ்வளவு துன்பப்படுகிறார். இதெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாது.

அதை அறிந்து கொள்ளாமல், இரண்டு கார் வைத்துள்ளார் என்பது மட்டும்தான் வெளியில் தெரியும். வெளியிலிருந்து பார்க்கும் போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல்தான் தோன்றும். மேலும் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும் ஒருவர் பொருளோடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் புகழோடு இருக்க முடியாது.

நேரில் புகழ்வதுபோல் நடிப்பவரும் அவரைக் காணாத இடத்தில் அவரை இழிவாகப் பேசுவார். மேலும் ஆயுள் நீளத்தைக் கொண்டோ, பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவற்றைக் கொண்டோ ஒருவர் புண்ணியவான் என்று நினைப்பது ஒரு மயக்கமே.

நல்லறத்தைக் கைக்கொண்டு நன்மையே செய்து வாழும் ஒருவர் துன்பப்படுதவதன் மூலம் தன் பாவப் பதிவுகளை விரைவில் போக்கிவிடுகிறார். அந்த அளவில் மனம் அமைதி பெறுகிறது. மரணத்தைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.

இறைநிலை எய்த வேண்டுமென்பதே அவரது நோக்கமாக இருக்கும். அத்தகைய ஒருவர் மரணம் என்ற பெயரிலே இவ்வுலக வாழ்வை நீப்பது இயல்புதானே ஒழிய வேறில்லை.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 1 ஜனவரி, 2014

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அருளிய அருள் தொகுதி



அகத்தவம்
அக நோக்குத் தவத்தில் மூன்று நிலைகள் உள்ளன. அவை 1. தன் வயமாகி விழிப்பு நிலையில் இருக்கும் திறன் பெறுதல்(ஆக்கினை), 2. நிலை பேற்றறிவு(துரியம்), 3. நிறை பேற்றறிவு(துரியாதீத தவம்) என்பனவாகும்.

தவம்
தவத்தில்தான் ‘அமைதி’யான மனம் நமக்கு அமைகிறது. அந்த அமைதியால்தான் இல்லறத்தின் ஒவ்வொரு செயலிலும் இனிமையைக் காண்கின்ற பக்குவத்தை பெறமுடியும்.

தவம்
அறிய வேண்டியவைகளை முழுமையாக அறியப்பெற்று செய்யவேண்டிய செயல்களை நெறிபிறழாமல் செய்ய நம்மைத் தூண்டுவதே ‘தவம்’.

தவம்
மன அமைதிக்கு அகத்தவமும், வினைத்தூய்மைக்கு அகத்தாய்வும் தேவை.அகத்தவம் மன ஆற்றலை பெருக்கும் அகத்தாய்வு மன அழுக்கை நீக்கும்.-


 கவலையும் கடமையுணர்வும்
கவலை வேறு, பொறுப்புணர்ச்சி வேறு. கவலைப்படக் கூடாது என்பதற்காக, வந்து விட்ட சிக்கலை மறந்து விடலாகாது. சிக்கலை ஏற்கத் தான் வேண்டும். எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆராயவும் வேண்டும். கடமையுணர்வு வந்தால்தான் சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய அளவுக்குத் துணிவும் தெளிவும் வரும். கடமையைத் தெரிந்து செயலாற்றும்போது கவலை ஏற்படாது.

அறிவு
தன்முனைப்பின் காரணமாக மனிதனானவன் தன் பேரறிவைதத் தன் உடல் அளவில் குறுக்கிக் கொண்டு, பொருள் அனுபோகத்திலும் புலன் அனுபோகத்திலும் மட்டுமே கவனம் கொள்ளச் செய்கிறது. அப்போது அவனது பேரறிவானது வெறும் பொருள் வழி மற்றும் புலன்வழி குறுகித் தன் உயர்வையும், சிறப்பையும் இழந்துவிடுகிறது.

ஆசை
ஆசையின் மறுமலர்ச்சியே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு குணங்கள்.

வினைத்தூய்மை
ஒரு தடவை ஏற்பட்ட பதிவு, மீண்டும் அதற்கேற்ற முறையான மாற்றுச் செயல், அனுபோக, அனுபவ நிலைகளால்தான் மாறமுடியும். இத்தகைய மாறுதலை வினைப்பதிவின் தூய்மை என்று கூறுகிறோம்.

வெற்றி
வாழ்க்கை வெற்றிமிக்கதாக அமைய வேண்டுமாயின், நாம் இயற்கையையும், சமுதாயத்தையும் உணர்ந்து, மதித்து வாழ வேண்டும்.

அன்பு
இறை நிலை தெளிந்த இன்பத்தில் உயிர்கள் பால் எழும் நட்பே அன்பாகும், ஈகை, ஒழுக்கம் இயல்பாம்.

கவலை
இயற்கையை ஒட்டிய எண்ணத்தை விட்டு, கற்பனையான எண்ணத்தை ஒட்டி செல்லும்போது கவலை ஏற்படுகிறது.

ஞானம்
வாழ்க்கையையும் வாழ்வின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ற வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம்.

ஆசைகள்
நாம் எண்ணும் ஆசைகள் நம் நிலைக்கு பொருத்தமானவையாகவும், மனஅமைதியைக் கெடுக்காத வகையிலும் அமைவது அவசியம்.

தொண்டு
உங்களிடமுள்ள இருப்பை வைத்துக் கொண்டு பிறர்க்கு எப்பொழுதும் உதவி செய்து கொண்டே இருக்க முடியும் என்னும் பெருந்தன்மையை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பற்று
ஆசையின் பேரிலும், அனுபோகத்தின் பேரிலும் மனத்தை சிக்க விடுவதே பற்று. -

வஞ்சம்
சினத்தை முடிக்க வலுவையும், வாய்ப்பையும் நாடி நிற்கும் ஆசைதான் வஞ்சம்.

கடும்பற்று
ஆசையுள்ள பொருட்களைத் தனக்கு வேண்டுமெனவும், பிறர் கவராமலும் பாதுகாத்துக் கொள்ளும் செயலே கடும்பற்று (லோபம்).

சினம்
ஆசை தடைப்படும் போது அத்தடையை நீக்க எழும் ஆர்வமே சினம்.

கருமையம்
சிற்றுயிரிலிருந்து சிறப்பு நிலையான மனிதன் வரையில் பரிணாமம் அடைந்த ஜீவ இனச் சரித்திரக் குறிப்புப் பெட்டகம் கருமையம்.

வளர்ச்சி
உடல்வளர்ச்சி - பருவம், உணவு இவற்றால் உண்டாகும்.
அறிவு வளர்ச்சி - கருவமைப்பு, கல்வி இவற்றால் உண்டாகும்.
மன வளர்ச்சி - சிந்தனை, ஒழுக்கப் பழக்கங்கள் இவற்றால் உண்டாகும்.
இவை மூன்றுக்கும் தொடர்பு உண்டு.

கணிப்பு
நாள்தோறும் செய்தவற்றைப் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதன்முன் கணித்துக் கொள்வீர்
மீள்வதில்லை போயினவை எனினும் நீயோ
மேற்பட்டாய் அனுபவத்தில் அதுவே இலாபம்.
விதி மதி இரு நிலை இயக்கம் :

தப்புக் கணக்கு :

தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி; ஒழுங்கமைப்பிற்கொத்தபடி
அப்போதைக் கப்போது அளிக்கும் சரிவிளைவு,
எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதை யுணரார்.

இயற்கையின் பேராற்றல் :

இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்
பெயர்த்து இடம் மாற்றி வைப்பான், பிய்த்தெறிவான், அருள்வான்;
பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர் யார் பேருலகில்?

விதி மதி இரு நிலை இயக்கம் :

ஓர் கல்லை நீ எடுத்துத் தூர வீச
உண்டாகும் இருவிதமாம் இயக்கம் அங்கே;
ஈர்க்கிறது விதி கல்லை பூமிநோக்கி;
எதிர்த்தோடும் அது மதியின் ஆற்றலாலே,
பார்க்கின்றோம் அது செல்லும் வேகம் குன்ற,
படிப்படியாய் கீழ் இறங்கி பூமி சேர,
போர்க்கோலம் போல், விதியும், மதியும் அங்கே
புரிகின்ற போட்டிகளின் முடிவைப் பாரீர்.

கோபம்
நமது கோபத்தை அடக்கிக் கொள்ள நம்மால் முடியவில்லை எனில் பிறர் மீது எப்படி, ஏன் கோபம் கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டும்.

எண்ணம்
நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்த விதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ வளரவோ விடக் கூடாது.

சினம்-வஞ்சம்
சினம் எழும்போதே யார் மேல் எழுந்ததோ அவர்களை மன்னித்துச் சினத்தை ஒழித்துவிட்டால் வஞ்சம் கொஞ்சமும் மிஞ்சாது.

இச்சை
இச்சை என்பது இயற்கை. அந்த இச்சையை அளவுக்கு மேல் வளர விடுவதுதான் நமக்குத் துன்பத்தைத் தருவதாகும்.

மனம்
உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற பத்துவிதமான படர்க்கை நிலையில் ஒரு உயிர் உடலில் இயங்கிப் பெறும் சிறப்புத் தன்மையே மனம் எனப்படுகிறது.

எண்ணம்
"தவறான எண்ணங்களில் இருந்து தப்பிக்கும் வழி எப்போதும் மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவதைத் தவிர வேறில்லை. விருப்பமே இல்லாவிட்டாலும் கூட, நல்லவர்களோடுதான் நாம் பொழுதைக் கழிக்க வேண்டும்".

கற்பு நெறி
கணவன் மனைவி இருவரும் கற்பு நெறி காத்து ஒழுக்கத்தோடு இருக்கும் போது அந்த உறவு நிறைவானதாகவும் புனிதமாகவும் இருக்கும். சலனமற்ற உள்ளம் பெற்றிருப்பார்கள். இருவரும் பிணக்கு ஏற்படாமல் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 'கருவிலே திருவுடையார்' என்பதைப் போல அறிவும் ஆற்றலும் ஒரு சேர அமைந்த தெய்வீக குழந்தைகளைப் பெறலாம்.

இனிமையான வாழ்வு
நமது வாழ்வைச் சிக்கலில்லாமல் இனிமையாக அமைத்துக் கொள்ள வேண்டுமானால் உடலை நலமுடன் வைத்துக் கொள்ளவும், மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்.-

எண்ணம்
உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்கள் நாளுக்கு நாள் உறுதி பெற்று, வாழ்வின் பயனாக விளைந்து விடும். ஆகவே, நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்தவிதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ, வளரவிடவோ கூடாது.-

ஈதல்
எப்போதுமே தன்னிடமுள்ள ஆற்றலை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் பிறருக்கு உதவி செய்து இருப்பதுதான் ஈதலாகும். -

எண்ணங்கள்
தீய எண்ணங்கள் உள்ளத்தைக் கெடுப்பது போலவே உடலையும் கெடுக்கின்றன.

இயற்கை நீதி
விளைவு இலா வினையில்லை. வினையினூடே விளைவு பல தொக்கி நிற்கும் இயற்கை நீதி.-

அமைதி
பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.

வாழ்த்து
பகைமை வைத்துக் கொண்டு வாழ்த்த முடியாது.
வாழ்த்தும் போது பகைமை நிற்காது.

எண்ணம்
உயிர்ச்சக்தியின் இயக்க விளைவுதான் எண்ணம். அது அறியும் திறனுடையதால் அறிவு என்றும் கூறப்படுகிறது

தற்சோதனை
மனம் தன்னைத் தூய்மை செய்து கொள்ள எடுக்கும் முயற்சியே தற்சோதனை.-

பற்று
ஆசையின் பேரிலும், அனுபோகத்தின் பேரிலும் மனத்தை சிக்க விடுவதே பற்று. -

அமைதி
எல்லோரும் அமைதியாக வாழக் கூடிய ஒரு இருப்பு - ஒரு providence - மனித மனத்திற்குள்ளாகவே இருக்கிறது. மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோருக்கும் அதை தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் உண்டு.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி