Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 10 மே, 2015

அறிவு செயலுக்கு வரும் நிலை

உடலுக்குள் இருக்கும் உயிர், உணர்ச்சியின் அனுபோகத்தில் உடல் வரைக்கும் எல்லை கட்டிக் கொண்டு இருந்தாலும் தன் முழுமையை உணர்ந்து கொண்டால் - தன்னையும் ,தன் மூலத்தையும், அறிந்து கொண்டால் எல்லாவற்றிலும் தன்னையே பார்க்கின்ற ஒரு தன்மை வந்து விடுகின்றது. தன்முனைப்பு நீங்கி விடுகின்றன. இந்த நிலையில் பிறரை மதிக்கவும்,
ஆதரிக்கவும், பரிவு காட்டவும்முடிகிறது. இறைநிலைக்கும் மன நிலைக்கும் உள்ள தொடர்பை உணர வேண்டும் என்றால், அவற்றை உருவத்துக்கும்,
அதிலிருந்து தோன்றும் நிழலுக்கும் ஒப்பிடலாம்.
உருவத்தை விட்டு நிழல் பிரிவதே இல்லை. ஆனால், நிழலை எடுத்துக்காட்டவல்ல ஒளியானது உருவத்தின் மீது படும் கோணத்திற்கு ஏற்ப, நிழலானது அளவில் மாறுபடும். அது போன்று மனிதமனம் இறைநிலையை
விடுத்து இயங்குவதே இல்லை.
இறைநிலையுடன் நம் எந்த அளவு ஒன்றி கலக்கிறதோ அந்த அளவு மனம் அமைதி நிலைக்கு சென்று அறிவு செயலுக்கு வரும்.
----அருள்தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக