Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 22 செப்டம்பர், 2012

கவலை




நினைப்புக்கும், நடப்புக்கும் இடையே வித்தியாசம் வரும்போது இருக்கும் மன நிலையை கவலை என்கிறோம். இருப்புக்குத் தகுந்தவாறு தேவையை மாற்றி அமைத்துக் கொள்ளும்போது கவலை இராது. கவலை உள்ளத்தில் நிலைபெறவொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து களைந்து கொண்டே இருக்க வேண்டும். கவலை வளர்ந்தால் மனதில் நல்லெண்ணங்கள் வரா; அவை நிலைக்கா; உடலாற்றல் செலவாகிக் கொண்டே இருக்கும்.

கவலையை ஒழிக்கத் தேவையானவை:
...
இயற்கை ஒழுங்கமைப்பை அறிதல்
சிந்திக்கும் திறனை பெருக்கிக்கொள்ளுதல்
தன்னம்பிக்கை
முயற்சி
துணிவு

கவலை எழாமல் காக்க
1. தேவையின்றி சிக்கலைத் தானே பெருக்கிக் கொள்ளாது இருத்தல்
2. அவசியமற்ற முறையில் பிறர் செயலில் தலையிடாது இருத்தல்
3. எந்தக் காரணத்தைக் கொண்டும் போதிய நீதி உணர்வு இல்லாமல் தன்கடமையிலிருந்து வழுவாது இருத்தல்

பிறரிடம் எழும் சினமும், தன்னிடம் எழும் சினமாகிய கவலையும் ஒருவரிடம் காணப்படுமானால், அவர் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வியாழன், 6 செப்டம்பர், 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : " வலி, நோய், மரணம் "


 உயிர் விண்ணாம் சூக்குமம் ஆம் உடலுக்குள்ளே
உயிர் சுழல விரியும் அலை சீவகாந்தம்
உயிர் காந்தம் உடலில் அணு அடுக்கைக் காக்கும்
...
உடலியக்கம் மனஇயக்கம் நடத்திவைக்கும்
உயிர் காந்தம் உடலில் மின்குறுக்கு ஆனால்
உடலில் வலி நோய்கள் இவையாக மாறும்
உயிர் காந்தம் மின் குறுக்கால் வற்றிப் போனால்
உயிர் தாங்கும் வித்துடையும் உயிரும் போகும்.

-வேதாத்திரி மகரிஷி

பஞ்ச பூதங்களின் கூட்டுதான் சீவன்கள் ஆகும். சீவன்களில்
கண்களால் காணக்கூடிய உடல் பரு உடலாகும். கண்களுக்குப்
புலப்படாத சூக்கும உடல் என்பது தன்னைத் தானே
சுற்றிக்கொண்டும் உடல் முழுதும் சுற்றிக்கொண்டிருக்கக்
கூடிய உயிர் துகள்களின் தொகுப்பே ஆகும். இதே போன்று
கண்களுக்குப் புலப்படாத காந்த உடல் என்பது தன்னைத்
தானே சுற்றிக்கொண்டிருக்கக் கூடிய உயிர் துகள்களிலிருந்து
வெளியேறும் நுண் துகள்களான காந்தமும் அது உடல் முழுதும்
சுற்றி கொண்டிருக்கும் ஓட்டமும் ஆகும். இக்காந்த ஓட்டம்தான்
அணு அடுக்குகளை சீராகக் காக்கிறது. இதுவே உடல்
இயக்கங்களையும் மன இயக்கங்களையும் பராமரிக்கிறது.
அணு அடுக்கில் ஏதேனும் காரணத்தால் சீர்குலைவு
ஏற்பட்டால் அதை சீர்செய்ய அதிகமான சீவகாந்தம்
அங்கே குவியும்போது அது மின் குறுக்காகி, வலியாக
உணரப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதி இடத்தால் அகன்றும்,
காலத்தால் நீட்டிக்கும்போது நோய் எனப் படுகிறது.
அதிகமான சீவகாந்தம் நோயைப் போக்க முயலும்போது
உடலை நடத்த போதுமான சீவகாந்தம் குறைவுபடுகிறது.
இத்தேவையை நிறைவு செய்யவேண்டி உயிர்த் துகள்கள்
வழக்கத்தைவிட வேகமாக சுழல்வதால் உடல் வெப்பம்
அதிகமாகி, அவ்வெப்பத்தைத் தாங்கமுடியாமல் வித்துக்
கலயம் உடைந்து சீவ வித்துக் குழம்பு உடலைவிட்டு
வெளியேறிவிடுகிறது. உயிரைப் பிடித்துக் கொண்டிருந்த
சீவ வித்துக் குழம்பு உடலைவிட்டு வெளியேறியதும்
உடலிலிருந்து உயிர் வெளியேறிவிடுகிறது. இதுவே
மரணம் ஆகும்.
 
வாழ்க வளமுடன்.