Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 30 நவம்பர், 2011

வேதாத்திரிய திருக்குறள் உட்பொருள் விளக்கம்

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்”

ஓர் உயிருக்குப் பிறவித் தொடர் நீண்டு கொண்டே போவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

1) உலகப் பொருட்களைத் துய்த்தும் நிறைவு பெறாமல் அவற்றின்மீது பற்றி நிற்பது.
2) விளைவறியாது பழிச்செயல்களை ஆற்றி ஆன்மாவில் பாவப் பதிவுகளைக் கூட்டிக் கொண்டிருப்பது.
3) தனக்கு மூலநிலையான தெய்வ நிலை உணர்ந்து அதனோடு இணைப்பு பெறாதது.

இம்மூன்று குறைபாடுகளால் உயிர் உலகக் கவர்ச்சியில் நிற்கின்றது. வான் கவர்ச்சிக்கு வழியில்லை. பரம்பொருளாகிய இறைவனின் நிலையுணர்ந்து தன்னை அதனோடு இணைத்துக் கொள்ளும் பேற்றை ஒருவன் பெறாவிட்டால் வினைப்பதிவுகளால் பிறவித் தொடர் நீண்டு கொண்டே போகும். பிறவிக் கடலைக் கடக்க முடியாது என்று தெளிவுபடுத்துகின்றார் இந்தக் குறளில்.

வியாழன், 10 நவம்பர், 2011

ஐக்கிய நாடுகள் சபையில் வேதாத்திரி மகரிஷி ஆற்றிய உரை

(9 சனவரி, 1973)

(ஆங்கில உரையிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.)

அன்பான நண்பர்களே, ஆன்மீக மேம்பாடு பற்றிக் கேட்பது என்ற நல்ல நோக்கத்தோடு இங்கு குழுமியிருக்கும் உங்களனைவரையும் பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆன்மீக அறிவு என்பது வாழ்க்கையை முழுமையாக்குவதற்கும், ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், உலக மக்கள் அனைவரது வாழ்விலும் அமைதியைப் பராமரிப்பதற்கும், மிக அவசியமான ஒன்றாகும்.

மிகப் பெரிய நிறுவனமான ஐக்கியநாடுகள் சபை இதற்காகத் தொடங்கப்பட்டது. மனிதகுலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஐ.நா. சபை இயங்கி வருகின்றது. அரசியல் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் அமைதியைக் கொண்டு வருவதற்கு ஐ.நா. சபை மிகக் கடினமாக உழைக்கின்றது.

எல்லா நாட்டுப் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து உலக அமைதியைப் பற்றி எண்ணுவதற்கான ஒரு நல்ல திட்டமே ஐக்கிய நாடுகள் சபை. ஆபத்தான அணு ஆயுதங்களுக்கு எதிராக மனித இனம் உயிர் வாழ்வதற்கான ஒரே நம்பிக்கை உலக சமாதானமாகும்.

தத்துவ ஞானத்தில் சிறந்தவர்களும், உலகளாவிய எண்ணங்களில் சிறந்த அறிஞர்களும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் நற்பணிகளைப் பாராட்டுகிறார்கள்.

ஆன்மீக அறிவு மேம்பாடு:
இங்கே, நான் உலக அமைதிக்கு மிக முக்கியமான மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும்.. அது மனித இனம் ஆன்மீக அறிவில் மேம்பாடு அடைவதாகும்.

உண்மையிலேயே, அமைதியான வாழ்க்கைக்குப் பொருளாதார வசதிகள் அவசியமானவை. ஆனால் ஆன்மீக அறிவு இல்லாமல், பொருள் வசதிகள் மட்டும் வாழ்க்கையில் திருப்தியையும், அமைதியையும் கொண்டு வர முடியாது. இங்கு ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.

உணவு, உறைவிடம், உடை ஆகியவை உலகியல் வாழ்வில் அவசியமான பொருட்கள். உலகையும் இம்மூன்று அவசியமான பொருட்களின் சேமிப்பையும் அகக்காட்சியாகப் பாருங்கள்.

துணிகள் உற்பத்தியை உலகம் இன்று உடனடியாக நிறுத்தி விட்டாலும் இப்போது நாம் உற்பத்தி செய்து சேமித்து வைத்துள்ள துணிகள் எல்லா மக்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்குப் போதுமானதாக உள்ளன. இதுபோல், சேமித்து வைத்துள்ள உணவு ஓராண்டிக்குப் போதுமானதாக உள்ளது. உறைவிடமும் ஒருவருக்குத் தேவையான பரப்பளவிற்கு எடுத்துக் கொண்டால், யாருக்கும் உலகில் வீடு இல்லை என்று தவிக்க வேண்டியதில்லை.

சில மனிதர்களிடமும் சில நாடுகளிலும் இந்த வசதிகள் குறைவாக இருக்கலாம். மற்ற மனிதர்களிடமும் நாடுகளிடமும் இவை உபரியாக உள்ளன.

ஆன்மீக அறிவின் மேம்பாடுதான் இவ்வாழ்க்கைத் தேவைகளை உலக மக்களுக்கு அன்பு, மதிப்பு, பொறுப்பு இவற்றுடன் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கின்றது.


ஆன்மீக வளர்ச்சியினால் ஒரு மனிதனிடம் இயற்கையாக மலர்கின்ற அன்பு மற்ற மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வைக்கிறது. அன்பு மற்றவரது தேவைகளையும் ஆசைகளையும் மதிக்கின்றது. திருப்திகரமான வாழ்க்கைக்கு, மற்றவர் எடுக்கின்ற முயற்சிகளுக்கு அன்பு உதவுகிறது. ஒருவரது அன்பு தனது சொந்த உடலுழைப்பையும், பொருளாதார வசதியையும், அறிவாற்றலையும் மற்றவர்களுக்குத் தந்து, தியாக உணர்வுடன் விரும்பி வாழ உதவுகிறது.

அரசியல்> பொருளாதார வழிகளில் ஒருவரது வாழ்க்கை வசதிகளை அதிகப்படுத்த முயற்சிகள் எடுப்பதோடு, மனித சமுதாயத்தில் ஆன்மீக முன்னேற்றமும் ஏற்பட ஒரு வாய்ப்பு தர வேண்டும். ஏனெனில், தகுதியுடைய மக்கள் அனைவரும் ஆன்மீக அறிவில் குறிப்பிட்ட காலத்தில் மேம்பாடு அடைவர்.

ஆன்மீக மேம்பாடு என்றால் என்ன? என்பதைக் கவனிப்போம். வாழ்கின்ற முறையில் மனம்தான் மையப் பொருளாக உள்ளது. சிறப்பான இயக்கமாக உள்ளது. ஒருவன் மனதின் மதிப்பையும், அதன் அற்புதமான செயலையும் புரிந்து கொள்ளும்போது, அவனால் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறது.

உயிரும் மனமும்:
உயிரின் படர்க்கை நிலையே மனம் என்பதால், முதலில் உயிரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வோம். ஏனெனில், உயிர்தான் மனதிற்கு அடிப்படை. உயிரும் மனமும் மனிதனின் அறிவாட்சித் தரத்தில் (ஆளுமைத்திறனில்) இரகசியமான அம்சங்கள். ஐம்புலன்கள் மூலம் பெறும் அறிவைக் கொண்டு இவற்றைப் புரிந்து கொள்ள முடியாது.

ஓர் ஒழுங்குமுறையான மனப்பயிற்சியின் மூலம்தான் இவற்றைப் புரிந்து கொள்ள முடியும். மனம் அதனுடைய மூலத்தைத் தேடுவதும், உயிர், மனம் இவ்விரண்டின் இருப்பையும், அவற்றின் இயக்கத்தையும், இவை ஒவ்வொன்றிற்கும் இடையே உள்ள தொடர்பையும் புரிந்து கொள்ள மனப்பயிற்சி உதவுகிறது. இத்தகைய மனப்பயிற்சிதான் தவம் அல்லது எளியமுறை குண்டலினி யோகம் எனப்படுகிறது.

குண்டலினி என்ற பெயர் இறையாற்றலைக் குறிக்கிறது. இது பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஆற்றல்களுக்கும் அடிப்படையான உயர்ந்த பேராற்றல். உயிரினங்களிலுள்ள உயிராற்றல் இறைநிலையின் பேராற்றலின் ஒரு பகுதிதான். இறைநிலையின் பேராற்றல்தான் பிரபஞ்சத்தின் இயக்கங்களை வழி நடத்துகிறது. உண்மையிலேயே அடிப்படையான விண்துகள்களின் தொகுப்புதான் வெவ்;வேறு திணிவுகளுடன் விளங்கும்போது தோற்றப் பொருட்களாக அமைகின்றன.

எனவே, விண்துகள் (அல்லது உயிர்த்துகள்) தான் பௌதிகத் தோற்றப் பொருட்கள் உற்பத்திற்கு அடிப்படையான தத்தவமாகவும், மனம் மன இயக்கத்திற்கு அடிப்படையானதாகவும் விளங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விண்துகள்> அதன் இருப்பு> இயக்கம், விளைவு இவற்றை அறிந்து உணர்ந்து கொள்ளுதலே ‘ஆன்மீக அறிவு’ எனப்படும். இந்த அறிவுதான் எல்லா விஞ்ஞானங்களுக்கும் விஞ்ஞானம் ஆகும். பொருளாதார அறிவோடு மட்டும் வாழுதல் என்பது மனதிற்கு ஒருபுறம் பாரமாக இருக்கும். அதைச் சரிசமன் செய்வதற்கு ஆன்மீக அறிவு கட்டாயம் தேவை.

உயிரை உணர்தல்:
நமக்குள் உயிராற்றலாக இயங்குகின்ற உயிரை எப்படி உணர்ந்து கொள்வது? உயிர்த்துகள் உடல் முழுவதும் ஊடுருவிச் சென்றாலும் பரு உடலின் நடுப்பகுதியில் ஓர் இயக்க மையம் உயிருக்கு அமைகின்றது. பொதுவாக, உயிரின் இயக்க மையம் என்பது முதுகுத்தண்டின் அடியில் அமைந்து உள்ளது. இதை ‘மூலாதாரம்’ என்று முந்தைய யோகியர்கள் அழைக்கின்றனர்.

இந்த உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து ஆக்கினைச் சக்கரம் என்ற புருவ மத்திக்கு மாற்றி அமைத்தாலன்றி, உயிரின் இருப்பையும் இயக்க நிலையையும் மனதால் உணர முடியாது.

முற்கால யோகிகள் மூச்சுப் பயிற்சியின் மூலமாகவும், மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாகவும் இந்த உயிர் மையத்தை மாற்ற முயற்சி செய்தனர். ஆனால், இவ்விரண்டு முறைகளும் கடினமானவை. அதிகக் காலம் எடுத்துக் கொள்பவை. சக்தியை மேலே கொண்டு வருவதற்குப் பல ஆண்டுகள் பயிற்சி செய்ய வேண்டும்.

இதற்கிடையில் இந்த ஆற்றலை மேலே கொண்டு வரும்போது, வழியில் தடை ஏற்பட்டால், உயிருணர்வு பெறுபவர் சில தீய விளைவுக்கான பயன்களை அனுபவிக்க நேரிடும். எனவே, குடும்ப வாழ்வில் ஈடுபட்டோர் இந்த யோகத்தின் நன்மைகளை உணர முடியாமல் போயிற்று.

இப்போது ஒரு புதிய முறையை நாம் கண்டுபிடித்துள்ளோம். இது பாதுகாப்பானது;;. உண்மையானது. விரைவானது. குண்டலினி யோகத்தில் சிறந்து விளங்குகின்ற குருவானவர் கற்றுக் கொள்ளும் மாணவரது உயிராற்றலைச் சில நிமிடங்களிலேயே எளிதாகத் திணிவு பெறச் செய்து, தொடுதல் முறையில் மேலே கொண்டு வர முடியும்.

குருவானவர் குண்டலினி சக்தியின் இயக்க மையத்தை மாற்றி, நிலை நிறுத்தியவுடன் கற்பவர் உயிர்ச்சக்தியின் அழுத்தத்தைப் புருவமத்தியில் மனதால் கவனிக்க வேண்டும். இந்த வழிமுறையே ‘தவம்’ எனப்படும். உயிராற்றலை மனதால் கவனிக்கும்போது மனதின் விழிப்புநிலை முன்னேற்றம் அடைகிறது. உயிராற்றல் வீணாகச் செலவாவதைச் சேமிக்கிறது. மனதில் உறுதியையும் அமைதியையும் அதிகப்படுத்துகிறது.

மனம் அதன் அடிப்படையான உயிரைக் கவனிக்கின்றபோது உயிரும் மனமும் இருப்பதையும் இயங்குவதையும் இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பையும் செய்முறை பயிற்சியின் அனுபவத்தால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தவத்தில் தெளிவாக இறைநிலையை உணர்ந்த குருவின் மூலம் ஆன்மீக சாதனை கற்பவரின் உயிராற்றலை> குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து ஆக்கினை மையத்திற்குக் கொண்டு வந்து, நிலை நிறுத்தி, உணர வைப்பது ‘தீட்சை’ எனப்படும். இது ஆன்மீக சாதனைப் பயிற்சியில் முதல்படி. மேலும் சில பயிற்சிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் கற்றுப் பழக வேண்டும். உலக சமுதாய சேவா சங்கத்தின் உறுப்பினர்களான நாங்கள் இந்தக் குண்டலினி தவத்தை ‘எளியமுறைக் குண்டலினி யோகம்’ (Simplified Kundalini Yoga) என்று அழைக்கிறோம்.

எளியமுறைக் குண்டலினி யோகம் (SKY):
இது நான்கு பயிற்சி முறைகளை உள்ளடக்கியது. அவை:
(1) அகத்தவம் (Meditation)

(2) அகத்தாய்வு (Introspection)
(3) குணநலப்பேறு (Sublimation)
(4) முழுமைப்பேறு (Perfection)

அகத்தவம் மன உறுதியையும் மன அமைதியையும் பெருக்குகிறது.

அகத்தாய்வு அறிவு ஒளி வீசச் செய்கிறது. ஒருவரது வாழ்க்கையில் ஒளி விளக்காக வழி காட்டுகிறது.

குணநலப்பேறு ஒருவரது பழக்கங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்தி, நல்ல குணங்களை உண்டாக்குகின்றது.

முழுமைப்பேறு என்பது ஆன்மீக மேம்பாட்டில் சிறப்பாகக் கிடைத்த கனி,

இந்த எளியமுறைக் குண்டலினியோகம் முழுவதையும் பத்து (10) வகுப்புகளில் (வகுப்பிற்கு ஒரு மணி நேரம் என்ற முறையில்) கற்றுக் கொள்ள முடியும்.

அன்புள்ள நண்பர்களே, மனிதன் பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கின்ற விநோதமான உயிரினம். ஒழுங்கான ஆன்மீகப் பயிற்சியின் மூலம் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொண்ட பின்னர்தான், மனிதன் முழுமைப்பேறு என்ற இலட்சியத்தை அடைய முடியும்.

உலக சமுதாய சேவா சங்கத்தின் நோக்கமே ஆன்மீக அறிவை எல்லா நாட்டு மக்களுக்கும் பரப்புவது ஆகும். என்னுடைய வாழ்வில் நாற்பது (40) ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த பிறகு ஆன்மீக அறிவு மட்டுமே தனிமனிதனிடத்திலும் சமுதாயத்திலும் நாடுகளுக்கிடையேயும் அமைதியை விளைவிக்கும் என்பதை நான் கண்டு கொண்டேன். ஆன்மீக மேம்பாட்டிற்கு ஒரு பாதுகாப்பான, முழுமையான முறையை நான் வழிவகுத்தேன். அதைத் தகுதியான மனிதர்களுக்குப் போதித்து வருகிறேன்.

அற்புதமான உளப் பயிற்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்ற எந்த நண்பருக்கும் என்னுடைய அறிவைப் பகிர்ந்து கொள்ள நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். இச்சொற்களோடு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

“நீங்களனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், அமைதி பெற்று, ஓங்கி வாழ்க வளமுடன்” என வாழ்த்துகிறேன்.


Vethathiri Maharishi’s Immortal Speech at the United Nations Organization, New York, U.S.A.On 9th January 1975 :
“Dear Friends, I am very much glad to see all of you gathered here with a noble aim of hearing something about spiritual development. The spiritual knowledge is very important to make our life perfect and to maintain peace in the life of one and all on the Globe. This great Organizati...on U.N.O. has been started and is functioning only with the aim of establishing peace among mankind. In both political and economic fields, the U.N.O. strives hard to bring peace.

”It is a noble scheme to bring the representatives of all nations under one roof and make them think about the international peace which is the only hope of survival of mankind against the dangerous atomic weapons. The world of philosophical wisdom and intellectuals of international thought will appreciate the useful works of U.N.O.
Spiritual Knowledge Development:

”Here I have to point out one more things which are also very much important for peace. That is the development of spiritual knowledge among mankind.

“Of course material comforts are essential for peaceful life but without spiritual knowledge, material comforts alone will not bring satisfaction or peace in life.

“Here I will give an example. Food, shelter and clothes are the important commodities in materials comforts. Please visualize the whole world and the available stocks of these three main commodities.

“The clothes in stock at present will be sufficient for the next two years for all people even though the whole world stops production at once. Similarly, the present stock of food will be sufficient for one year. If the shelters are restricted to the area of actual need, no one in the world will have to suffer for want of shelter. With some persons and with some countries these commodities may be less; and with others they are in surplus.

”The development of spiritual knowledge only will enable mankind to share all the needs with love, respect and responsibility. The love which blossoms in a man as a natural process by spiritual development will enable him to understand the feelings of others, to respect the needs and ambitions of others and to cooperate in the effort of satisfactory living by willing sacrifice on one’s own physical, financial and intellectual abilities. Therefore, in addition to the efforts for increasing the material comforts by political and economic means, an opportunity for spiritual development in the human society should be provided so that all deserving persons will develop spiritual knowledge in time.

“Let us consider: What is the spiritual development? In the process of living, the mind is the nucleus and important phenomenon. When one understands the values and wonders of the mind, he can enjoy life successfully and happily.

Life force and mind:

“As the mind is only the psychic extension of the life force, it is imperative first to know about the life force which is the base of the mind. The life force and the mind both are secret phenomena in the personality of man. These cannot be understood by any of our conventional five senses.

”It is only by a systematic psychic practice, with the mind tracing its own base, the existence and functions of both the life force and the mind and their relationship with one another can be understood. Such a psychic practice is called ‘meditation’ or ‘Kundalini Yoga’. Kundalini is the name of the fundamental supreme universal energy, the divine spirit. The life force in any living being is a part and parcel of the universal force, which governs the universal functions. In fact, it is the association of such force (energy-particles) in various intensities that conditions all the manifestations.

“Therefore, it is to be understood that the spirit is the basic principle of all the physical manifestations as well as the psychic function, the mind. Realization of the spirit, its existence, functions and results is spiritual knowledge or wisdom. This is the Science of all sciences. Living with material knowledge alone is one sided load to the mind. For balanced life, spiritual knowledge also is a must.

Realization of life force:

“How to realize the spirit within us, which is working as the life force? Although the life force is pervading the entire body, it has a working centre in a particular place in the physical body. Generally the working centre of the life force is at the base of the spine which is called Mooladar by ancient yogis. Unless this centre is changed from Mooladar to Agna Chakra, the point between the eye-brows, the presence of the life-force cannot be perceived by the mind.

“The ancient yogis tried to change the centre by breathing exercises or by chanting mantras. Both the methods were strenuous and time-consuming. Many years were required to bring the energy up. Meanwhile if the energy got stuck up on the way, the aspirant had to suffer from some ill-effects too. Therefore, family people could not practice and get the benefit of this yoga.

”Now, we have found out a safe, sure and quick method to bring up the working centre of the life force. A master trained in Kundalini Yoga can easily intensify the life force of an aspirant within minutes and bring it up by a touch method.

“After the master has fixed up the working centre of Kundalini power, the aspirant has to simply observe the force of the power mentally. This process becomes Meditation. Mere observation of the force mentally develops awareness of the mind, conserves the life force from wastage, and improves steadiness and peace of mind. By the mind observing its own base, the existence and functions of both the life force and mind and the relationship between them will be understood as a practical experience.

“Activating the life force, the Kundalini power, from Mooladar and fixing it up at the Agna Centre of an Aspirant by an eminent master is the Initiation. This is the first step in the spiritual practice. There are some other practices which are to be learnt and followed one by one. We, the members of the World Community Service Centre call this Kundalini Meditation as Simplified Kundalini Yoga (SKY).

Simplified Kundalini Yoga:

“SKY has four processes on the whole. They are:
(1) Meditation, (2) Introspection, (3) Sublimation and (4) Perfection.
Meditation develops will power and peace of mind.
Introspection enlightens the knowledge and guides one as a life light.
The process of Sublimation metamorphoses the character by gradual changes in one’s habits.

Perfection is the fruit and significance of the spiritual development.

The full course of SKY can be completed in ten sittings of one hour each.

“Dear friends, man are a peculiar living being who is always struggling between habit and wisdom. After he is developed in thinking abilities, only through a systematic spiritual practice he can achieve the goal of perfection.

“The aim of the World Community Service Centre is to spread the spiritual knowledge to the people of all nations. After a long period of research over forty years of my life, I found out that only spiritual knowledge will result in peace, within self, in the society and among nations. I formulated a safe and perfect method for spiritual development and am teaching it to deserving persons. I am ready to impart my knowledge to any friends who is willing to undergo the wonderful psychic practice SKY.
With these words, I conclude my speech and wish all of you good health, long life ,prosperity wisdom and peace…

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மனிதனின் ஆறு குறைகள்


  • 1.மற்றவற்றை ஒடுக்குவதால், தான் உயர முடியும் என்ற பேதமை.


  • 2.மாற்ற முடியாதவற்றைப் பற்றியும், திருத்த முடியாதவற்றைப் பற்றியும் கவலைப்படுவது.


  • 3.நம்மால் செய்ய முடியாத ஒன்றை வேறுயாராலும் செய்ய முடியாது என்று அடித்துப் பேசுவது.


  • 4.அற்ப விஷயங்களைக் கூட விட்டுக் கொடுக்க முடியாமல் இருப்பது.


  • 5.மனதையும் அறிவையும் பக்குவப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது.


  • 6.நாம் வாழ்வது போலவோ, நமது விருப்பு வெறுப்புப் போலவோ பிறரையும் இருக்கத் தூண்டுவது. இக்குறைகளைச் சரிப்படுத்திக் கொண்டால் மனிதன் நிம்மதியாக வாழலாம்.

  • ஞாயிறு, 23 அக்டோபர், 2011

    "How to Eat " by Vethathiri Maharishi

    "At the dining table, we are for the most part under the influence of the taste-sense. It is an emotional condition actually, where our judgement could be impaired. Only in order to generate the appropriate corrective, awareness, some special exercise called 'Kaya Kalpa' is prescribed before taking food or drink. What should be remembered is that nourishment is not in direct proportion to the quantity of food-intake. The food-items should be such as are suited to our digestive system and we should have felt appetite well in advance.
    Actually when your stomach remains hungry for a while, the cells of the body naturally get oriented to draw sustenance from the atmosphere,(space) and from inner- earth radiations. Then you go to your lunch or dinner and there is balance in intake. If you follow this advice you will find that your intellectual faculties are rendered more brisk and sharp as a result."

    KAYA KALPA COURSE – THE ART OF LIVING GIVEN BY SIDHDHAS



    The term KAYA means "body" and KALPA means "immortal". "KAYA KALPA" is a wonderful technique of the SIDDHAS of South India and has a threefold objective.

    1. Withstanding the ageing process.
    2. Maintaining youthfulness and physical health.
    3. Postponing death


     Benefits of Kaya Kalpa Practice:-
    a. Nerves systems will become strengthen.
    b. Can prevent from diseases like Asthma, sinus problem, diabetis, skin diseases.
    c. For ladies Menses problems will be solved. Menopause problems will be solved.
    d. Sexual vital fluid becomes thickened and the stock is increased so that the life force and bio-magnetism are sufficiently maintained in the body. It strengthens and rejuvenates the body. It will help to cure and prevent diseases and relieve the practitioner of the troubles of old age. "Sexual Potency" is enhanced but craving is brought within control.
    e. Kaya Kalpa practice improves character and personality. There will be genetic improvement for healthier and more intelligent progeny.
    f. Conception can be controlled at will when either of the partners has become successful in the practice over a sufficient period of time.
    Kaya Kalpa is a precious gift to mankind. This practice helps one to maintain physical and mental health, further spiritual development and rejuvenates the physical system to withstand the ageing process. The practice will help all people regardless of sex, race, religion or creed, to enjoy a happy and satisfactory life.

    வானியலும் சோதிடமும்

    மனிதனாக உருவாகும் அமைப்புகள் ஒரு மனிதனுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் எல்லாமே கோள்களால் தான் என்று கொள்ள முடியாது, விளைவுகள் சிறிதாகவோ பெரிதாகவோ நலமோ தீதோ விளைவிக்கின்றன என்பது உண்மைதான். எனினும் மற்ற வழிகளில் ஏற்படும் நன்மை தீமைகளும் கலந்துதான் ஒரு மனிதனின் தரத்தையும் தன்மையையும் நன்மை தீமைகளையும் உருவாக்குகின்றன.

    பிரபஞ்ச இயக்கத் தொடராக ஒவ்வொரு மனிதன் உடலும் அறிவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அறிவால் சில மாற்றங்களையும் பெறுகிறோம். பேரியக்க ஒழுங்கமைப்பையும் அறிவின் உண்மையையும் இணைத்தறிந்து ஒழுகி வாழ்ந்தால் இன்பமும் அமைதியும் எய்தலாம்.

    வெள்ளி, 7 அக்டோபர், 2011

    உருவ வழிபாடு ஏன்?

    உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, உடல்வலிவு, சுகம், செல்வம், இவ்வேழு சம்பத்துக்களும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் தங்கு தடையின்றி எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளமுடியும்.

    இது கருவமைப்பின் மூலமாகவோ அல்லது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வின் காரணமாகவோ ஒவ்வொருவருக்கும் ஒன்றில் சிறப்பு இருக்கும். ஒவ்வொன்றில் குறைவு இருக்கும்.

    குறைவாக உள்ளதை சரி செய்து, சமப்படுத்திக் கொள்வதற்கு அவரவர்கள் அறிவினாலேயே மனதில் சங்கல்பத்தின் மூலம் திடப்படுத்தி, பல தடவை அதையே எண்ணி எண்ணி குறைபாட்டைக் களைந்து நிறைவு செய்து வருவதற்கு, அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.

    பூஜாவிதி என்பது சடங்குகள் என்றாலும் எந்தக் குறைபாடு மனிதனிடம் இருக்கிறதோ, அந்தக் குறைபாட்டை அவனே நீக்கிக் கொள்வதற்காக மனஎழுச்சி, மனோதிடம், கற்பனையாக இருந்தாலும், பலதடவை செய்து செய்து இம்மாதிரி எனக்கு வேண்டும் என்று எண்ணும்போது முனைமனமானது, அடிமனதோடு தொடர்பு கொள்ளும்., அடிமனமானது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆற்றல் களத்தோடு தொடர்பு கொண்டு, எங்கேயிருந்தாலும் இவனுக்கு வேண்டியது தானாக வந்து சேரும் அளவுக்கு உண்டாக்கும்.
    இயற்கைச் சட்டம் என்ன என்றால் fraction demands totality supplies
    இயற்கையிலிருந்து துண்டுபட்டுள்ளதே ஜீவன், மனிதன்
    முழுமுதற்பொழுதாக உள்ள இறைநிலை, அறிவு என்ற நிலையில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து, உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றிலும் நிரம்பி இயங்கி கொண்டிருக்கிறது.
    அதனால் எங்கே யாருக்கு என்ன தேவைப்பட்டாலும், விரும்பினாலும் அது கிடைக்கத்தான் வேண்டும்

    ஆனால் விரும்புவர்கள் மனதை அதற்குரிய முறையில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தகுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

    ---வேதாத்திரி மகரிஷி,

    சனி, 24 செப்டம்பர், 2011

    குண்டலினி - அறிமுகம்

     

     குண்டலினி என்பது என்ன?, அது எங்கே இருக்கிறது?,எப்படி இருக்கிறது?, என்னவெல்லாம் செய்யக் கூடியது? இந்த குண்டலினியை எழுப்புவது, அதன்  செயல்பாடுகள், விளைவுகள், அனுபவங்கள் குறித்து பார்க்க வேண்டி  இருக்கிறது.

    நமது உடலில் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகள் இருப்பதாக இந்த நாடிகளைப்  பற்றிய சிறிய அறிமுகம் இப்போது அவசியமாகிறது.

    நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல், நோக்குதல் போன்றவை நேரடி  அர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளை நாடுவதால் கூட இவைகளுக்கு நாடி என  பெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்வதானால் நவீன அறிவியல்
    சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்த நாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம். ஆனால் நரம்புகளைப் போல இவற்றை நேரடியாக பார்க்க முடியாது என்றும் இவை சூட்சுமமானது என்கின்றனர்.

    மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில்,

    தலையில் 7000ம் நாடிகளும்,
    வலது கண்ணில் 2000ம் நாடிகளும்,
    இடது கண்ணில் 2000ம் நாடிகளும்,
    மூக்கில் 3330 நாடிகளும்,
    வலது காதில் 1500 நாடிகளும்,
    இடது காதில் 1500 நாடிகளும்,
    பின்கழுத்தில் 1000ம் நாடிகளும்,
    பின்னங் கழுத்தின் கீழே 8000ம் நாடிகளும்,
    முதுகில் 3680 நாடிகளும்,
    கண்டத்தில் 1000ம் நாடிகளும்,
    நாபியில் 8990 நாடிகளும்,
    வலது கையில் 1500 நாடிகளும்,
    இடது கையில் 1500 நாடிகளும்,
    விலாப் பகுதியில் 3000ம் நாடிகளும்,
    கால்களின் இடுக்கில் 8000ம் நாடிகளும்,
    பிஜத்தின் கீழே 2000ம் நாடிகளும்,
    பிஜத்தின் மேல்2000ம் நாடிகளும்,
    கோசத்தில் 13000ம் நாடிகளும்,
    பாதத்தில் 1000ம் நாடிகள் என ஆக மொத்தம் 72000ம் நாடிகள் இருக்கின்றதாம்.

    இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள் முக்கியமானவைகளாகச் சொல்கின்றனர்.அவை பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.

    பிங்கலை என்பது வலது நாசியிலும், இடங்கலை என்பது இடது நாசியிலும், சுழுமுனை என்பது இவை இரண்டிற்கு நடுவிலும், சிகுவை என்பது உள்நாக்கிலும், காந்தாரி என்பது இடது கண்ணிலும், புருடன் என்பது வலது கண்ணிலும், அத்தி
    என்பது வலது காதிலும், அலம்புடை என்பது இடது காதிலும், சங்கினி என்பது பிறப்பு உறுப்பிலும், குரு என்பது சனவாயிலிலும் ஓடுகிறதாம்.

    இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்த எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமது உயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இந்த நாடிகள் ஏழு மையங்களில் இணைந்து பிரிந்து செல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதார மையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதார மையங்கள்தான் நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இவை மூலாதாரத்திற்கும், உச்சந்தலையான துரியத்திற்கும் இடையே உடலின் ஊடாக
    அமைந்திருக்கின்றன.

    இது பற்றி காகபுசுண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

    உச்சிதலை நெற்றிவிழி புருவமத்தி
    உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
    பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
    பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய …………

    நெற்றிவிழி புருவமத்தி
    உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
    பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
    பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய
    கச்சிலை சொன்னாரோ முத்தர் சித்தர்
    கால்வாசி கால்யோகம் காணாப்பித்தர்
    கொச்சிநரை சொல்லவில்லை வெளுத்தமார்க்கம்
    குண்டலியைக் கண்டாக்காற் கருக்கும்பாரே.

    - காகபுசுண்டர் -

    1.மூலாதாரம்
    2.சுவாதிஷ்டானம்
    3.மணிபூரகம்
    4.அநாகதம்
    5.விசுத்தம்
    6.ஆக்ஞேயம்
    7.துரியம்
    என்பதே இந்த ஆதார மையங்கள். இவை மனித உடலில் முறையே
    1.மூலம்
    2.தொப்பூழ்
    3.மேல்வயிறு
    4.நெஞ்சம்
    5.மிடறு
    6. புருவநடு
    7. உச்சந்தலை என ஆறு இடங்களில் அமைந்திருக்கிறது.

    இதுவரை நாடிகள் மற்றும் அவை குவிந்திருக்கும் ஆதார மையங்கள் நமது குண்டலினியானது இந்த ஆதார மையங்களின் ஊடாகவே பயணிக்க வேண்டியிருப்பதால் நாடிகளைப் பற்றிய ஆரம்பத் தெளிவு வேண்டி குண்டலினி என்பது மாயமோ,
    மந்திரமோ இல்லை. அது ஒரு வகையான உள்நிலை உளவியல் தொழில்நுட்பம். இதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்தான் இதன் செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல் சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலை
    மாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம். உயர்த்துதல் என்பதை விட பரவுதல் என்கிற வார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.

    குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகளை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். அது பற்றி பின்னர் பார்ப்போம். இத்தகைய பயிற்சியை மேற் கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே
    கூறியிருக்கின்றனர்.

    குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன் முதலில் மெய்யான குருவினை கண்டறிய வேண்டும். இதற்கு அவன் ஆசைகளை குறைத்தவனாக இருப்பது மிகவும் அவசியமாம். தீவிர வைராக்கியமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சுத்தமான
    மனமுள்ளவனும், மனத்தின் ஆவேசமான ஆசைகளைத் துறந்தவனை மெய்யான குரு தானாகவே
    அண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரே முன்னின்று அரவனைத்து வழி நடத்துவார். இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் பயிலும் சாதகனே குண்டலியை
    எழுப்புவதால் உண்டாகும் முழுப் பலனையும் அடைவான் என்கின்றனர்.

    நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஒருவன் ஆசனம், பிராணாயாமம், மத்ரை இவற்றின் பலத்தால் மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன் இடறி விழுந்து தன்னையே கெடுத்துக் கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏற அவன் சக்தியற்றுப்
    போவானாம். இதுவே, சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள் (குறைவுகள்) ஏற்படவும், வழி பிசகவும் காரணமாய் அமையும் என்கின்றனர்.

    யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். பயிற்சியின் பூரண அறிவு இரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்க ஆசிரியன் அவசியம். கடைசியாக நிதானமானதும் குண்டலினி எழுப்பப்படும்போது
    சாதகனுக்கு வழியில் பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை) உண்டாகும். ஆதலால் சாதகன் ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்த ஆவலைத் தகர்க்கத்தக்க சக்தியற்றவனாகி விடுவான்.

    குண்டலினி பயிற்சியைப் போலவே அந்த சம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். குண்டலினி பற்றிய விபரங்களோ விளக்கங்களோ முழுமையாக தெரியாதவர்கள் இதில் வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டே
    இத்தனை நீளமாக குண்டலினி பற்றிய அறிமுகத்தினை பகிர நேர்ந்தது.

    சித்தரியலில் குண்டலினி பற்றி பேசாத சித்தர்கள் வெகு குறைவு. அநேகமாய் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த குண்டலினியின் மகிமையை கூறியிருக்கின்றனர். இதனை உயர்த்துவதன் மூலம் சாதாரண உணர்வினை, பரபிரம்ம
    உணர்வாக உயர்த்திடலாம் என்று கூறுகின்றனர்.

    சுருள்சுருளாய் நெளிந்த ஒரு காதணியை குண்டலம் என வழங்குகிறோம். இப்படி சுருண்டு வளைந்து பாம்பினைப் போல இந்த நிலை சக்தி மூலாதாரத்தில் இருப்பதால் இதனை குண்டலினி என அழைப்பதாக ஒரு பெயர் காரணம் கூறுகிறது. இதை
    ஒரு யோக வித்தையின் மூலம் எழுப்பிடலாமாம். இதன் ஆற்றலை ஒருனியை பாம்பினை ஒத்ததாக கூறுகின்றனர்.

    குண்டலினியின் இருப்பிடத்தை காகபுசண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

    குண்டலியைக் கண்டாக்காற் கருக்குமென்பார்
    குண்டலியி னிருப்பிடமும் மூலமென்றார்
    குண்டலிதா னென்றாக்கால் நரம்போதோலோ
    குருந்தண்டோமுள்ளெலும்போ பிடரிமார்போ
    குண்டலியே யென்றவர்கள் பெயரார் சொன்னார்
    கொத்தளத்தின் பெருமைதனைச் சொல்லினார்கள்
    குண்டலியே வாய்திறக்கப் பேசுமென்றார்
    குருவென்றார் வாலையென்றார் குமரனென்றாரே.

    - காகபுசுண்டர் -
    குண்டலினியை சித்தர் பெருமக்கள் வெவ்வேறு பெயர்களில்
    அழைத்திருக்கின்றனர். அதைச் சொல்லும் கொங்கணவர் பாடல் ஒன்றை பார்ப்போம்.

    சிறந்திட்ட குண்டலியின் பேர் செப்பக் கேளு
    சிறப்பான சிவயோக மென்றுபேரு
    சிறப்பான வாசி யென்று மிதுக்கே பேரு

    • பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது நம்முடைய இந்த உடல்
    • உடலின் உள்ளேயும் வெளியேயும் நின்று இயங்கும் ஆற்றலையே நாம் உயிர் என்கிறோம்.
    • உயிரின் படர் நிலைதான் மனம்.
    • மனத்திற்கு “ஞானம்”, “உறுதி” என இரண்டு முகங்கள் உள்ளது. இவை தனித்துவமானவை.
    • உணர்தல், உணர்த்துதல் என்கிற இரண்டு வேலைகளை மட்டுமே மனம் செய்திறது.
    • நம்முடைய உணர்தல் மற்றும் உணர்த்தும் நிலைமை மேம்பட விழிப்புணர்வு தேவைப் படுகிறது.
    • குண்டலினியை தூண்டுவதன் மூலம் இந்த விழிப்புணர்வினை உயர் தனித்துவ நிலைக்கு கொண்டு செல்லலாம்.
     
    இவை எதுவும் புதிய விஷயங்கள் இல்லை. நம்மில் பலரும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இருப்பினும் அடிப்படை கூறுகளின் மீதான புரிதலை உருவாக்கிட இந்த பதிவுகள் உதவி இருக்கும் என நம்புகிறேன்.

    வாழ்க வளமுடன்
    குருவே துணை
     

    திங்கள், 1 ஆகஸ்ட், 2011

    Vethathiri Maharishi Quotes


    1. Habit is Destiny.

    2. Man, society and nature all are interlinked with one another. Man cannot be separated from this.
    ...

    3. God + Impurities (Sins) = Man; Man - Impurities = God.

    4. Every man is due to the society because all are enjoying the benefits and prosperities of the society.

    5. A proper spiritual approach for changing the behaviour of man and establishing World Peace is Karma Yoga.

    6. A living being is a joint function of life force and physical body. The life energy in a living being is the bio-magnetism which gets physical transformation and maintain the metabolic routine of the body and psychic functions.

    7. Short circuit in blood / heat / air circulation is felt as Pain.

    8. Good thoughts, divine thoughts are even in the atmosphere, criss-crossing as waves: and when our mind become receptive, these thoughts are registered there.

    9. Whatever an action may be, there is a result. And for every result there is an action or cause. This is the cause and effect system which never fails.

    10. Karma Yoga superimposes good impressions against the impressions of sins.

    11. To live in harmony, do not command, do not comment, do not demand.

    12. Constant awareness, introspection and planned action these three would develop your intellect. Success then is certain in life.

    13. An integrated practice of reorganising and restructuring the body and the mind for a newly planned life is Kundalini Yoga.

    14. Using violence against violence carefully in inevitable circumstance is non-violence.

    15. No one can take away from you what Providence has allotted for you.

    16. The husband-wife relationship is divine; no other can equal it in its depth and intensity, because only in this relationship the union of souls occur.

    17. Vegetarianism is the only way of life based on the observance of non-violence. Non-violence is a method of living without hurting, torturing or killing any living being for one's own enjoyment.

    18. Blessings are safe and beneficial always. Blessings are more powerful and more divine than chanting mantras.

    19. Do not comment on the activities of others, even if it be your life-partner or children. Guiding them is one thing, but criticizing them would have a negative effect.

    20. When we reach Alpha, Theta and Delta frequencies, all the brain cells which were dormant and not used up to now, even though existed, begin to function.

    21. When any force starts, it has to stop. The gap between the two, the start and the stop, is calculated as Time.

    22. Unemployment and ignorance to earn his livelihood will make a Criminal.

    23. When you do meditation, you get God consciousness and undisturbed peace in you. That will be added as a plus point to your material benefits also.

    24. Giving up and giving up whatever is not wanted whether it is men, material, action or enjoyment is the method of purification and enlightenment.

    25. Physical body, life force and mind, are inter-linked and inter-connected in the existence of Man.

    26. Man has to understand the value of himself, the purpose of birth and has to develop his consciousness to fulfil the purpose.

    27. Consciousness is the radical universal principle.

    28. Feeler of the pain and pleasure is life force (soul).

    29. Gnana Yoga (SKY) is the process of throwing light on the souls to guide them in reaching their goal quickly without unnecessary delay. This is possible by attaining the full understanding of Truth, Universe, Life and Knowledge.

    30. The benefits of Nature are all over the Universe but the secrets of Nature are only within your own Mind. Go in and in to get more and more.

    31. Desires of experiencing God through senses will never be successful. By developing your Consciousness you have to become God yourself.

    32. The art of tolerating the needs, regulating the habits and making better use of the environments for the harmony of self and others is Morality.

    33. When man realize himself, he realizes the value of everybody. So to respect the needs and ambitions of others and to restrict and moralize one's own activities become possible.

    34. There is no problem in the Nature, only the problem is in the Mind.

    35. The principal goals of introspection are examining yourself and finding out "What You are?"

    36. The one and only valid test for a person's wisdom is the peace and harmony prevailing in his family.

    37. The three main ways in which man wastes his energy are Greed, Anger and Worry.

    38. Man's needs and achievements must be compatible to and in accordance with the purpose of his birth.

    39. To speak or act in a manner which will wound the feelings of one's life-partner is really a curse that will leave an indelible on the human mind.

    40. Revelation of the realities of Nature or enlightenment of Consciousness is not by any effort. Effort means conditioning.

    41. Awareness is a higher stage of knowledge in its evolutionary progress towards wisdom.

    42. Thought force is the first Phenomenon to be understood by the Truth Seekers.

    43. We are not separate in the World; We are linked by the universal force which is called Universal Consciousness

    ஞாயிறு, 31 ஜூலை, 2011

    நல்ல குடும்பம்


    ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான
    அறிவுரைகளை கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி. அந்த அறிவுரைகள் ...

    1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

    2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

    3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

    4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.

    5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

    6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.

    7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகியனவற்றையும் கடைப்பிடித்து வரவேண்டும்.

    8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

    9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

    10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்.

    -  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

    திங்கள், 25 ஜூலை, 2011

    வீண் கவலை வேண்டாம்!


    வாழ்க வையகம்                                         வாழ்க வளமுடன்

    * கடமை உணர்வோடு கூடிய செயல்கள் தாம் மனித குலத்திற்கு நல் வாழ்வு தருகின்றன. கடமைகளை எல்லாமக்களும் உணர்ந்து அவரவர் பணி செய்தால், எல்லோருடைய உரிமையும் நலன் களும் முழுமையாகக் காக்கப்படும்.

    * கடவுள் எல்லாமுமாக இருக்கிறார். நானுமாக இருக்கிறார். நீயுமாக இருக்கிறார். எனக்கும் கடவுளுக்கும் ஒரு சங்கிலிப் பிணைப்பு இருக்கிறது. ஒருமுனை நான், இன்னொரு முனை அவர் என்று இருக்கும் போது அவரைத் தேடி அலையவேண்டியதில்லை.

    * கடமையில் சிறந்து விளங்குபவன் கடவுளை நாடுபவன் ஆவான். கடவுளை உணர்ந்த மனிதன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பான். கடமையை உணர்ந்து செய்யும் போது நிச்சயம் தெய்வீகநிலையைப் பெற முடியும்.

    * மனோசக்தியையும், உயிர்ச்சக்தியையும் கணநேரத்தில் வெளியேற்றும் தன்மை கவலைக்கு உண்டு. அதனால், கவலையை ஒழித்து மகிழ்ச்சியோடு வாழும் வகையை அறிவது அவசியம்.

    புதன், 20 ஜூலை, 2011

    உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள்

    Chakras
    மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்த ஏழு சக்கரங்களும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்

    மூலாதாரம்

    முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

    சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை,முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது

    ஸ்வாதிஷ்டானம்

    இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை தாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    மணிபூரகம்

    சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

    அனாகதம்

    இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம்,இரக்கம்,சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.

    தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

    விசுத்தி

    இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

    ஆக்ஞா சக்கரம்

    இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

    பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

    சகஸ்ரஹாரம்

    இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது