Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 5 மே, 2015

"மனவளக்கலை" பயிற்சி தான் உலகுக்கு அமைதி ஊட்டவல்லது :

 "முதலில் மனதை அறிய வேண்டும். மனதின் மதிப்பை அறிய வேண்டும். அதன் பலஹீனத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். மனம் இழந்துவிட்ட அதனது பெருமையை மீட்கின்ற முயற்சியும் வேண்டும். அதற்கு வழி வகுத்து உறுதுணையாக நிற்பதுதான் இந்த 'மனவளக்கலை' பயிற்சிமுறையாகிய எளிமைப்படுத்தப்பட்ட 'குண்டலினியோகம்' (Simplified Kundalini Yoga) ஆகும்.
.

மனதிற்கு தூய்மை ஊட்டுவது, மனதின் ஆற்றலையும் பெருக்குவது தான் இந்த "மனவளக்கலை" பயிற்சி முறை. மனதின் குறைகளைப் போக்கவும் நல்வழியில் தீர்மானமாக நிற்கின்ற சுயபலத்தை மனதிற்கு ஊட்ட ஒரு பயிற்சித்திட்டம் வேண்டும். மனம் தன்னைத்தானே உணர்ந்து, உயர்த்திக் கொள்ள வேண்டும். அது மனதின் கையில்தான் உள்ளது. மனம் தன் மூலமான இறைநிலையை எய்தினால் அறிவாகிறது. அந்நிலையைப் பெற்ற மனதினைக் கொண்ட மனிதனும் தெய்வமும் தரத்தில் ஒன்றே. இதைத் தான் "மனவளக்கலை" பயிற்சியின் மூலம் போதிக்கிறோம்.
.

மனமானது உயிர், உடல் இவற்றோடு எந்த அளவுக்கு ஒற்றுமையாக இயங்குகின்றதோ அந்த அளவுக்குத்தான் மனிதனின் அமைதி நிர்ணயிக்கப்படுகிறது. மனதின் இயக்கம் உடலையும் உயிரையும் பாதிக்கிறது. உயிரோட்டத்தில் ஏற்படுகின்ற குழப்பம் உடலையும், மனத்தையும் பாதிக்கிறது. இந்தச் சீர்கேடான நிலையை மாற்றி மனம், உயிர், உடல், இம்மூன்றிலும் ஒற்றுமையான இயக்கத்தைப் பாதுகாக்க ஏற்ற ஒரு சாதனம் "மனவளக்கலை" பயிற்சி ஆகும்.
.

மனதை அறிந்து கொண்ட பின், அதன் மூலத்தையும் நன்கு விளங்கிக் கொண்டு வேண்டாத பழக்கத்தையும், தேவையில்லாதவற்றையும் ஒதுக்குவதற்கு மனதினால் முடிகிறது. நல்லதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றைச் செயலில் கொண்டு வரவேண்டும். சிந்திக்கவும், செயல்படுத்தவும் அறிவுக்கூர்மை வேண்டும். வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ள நல்லறிவும் மனிதன் மனிதனாக வாழவும் மூலகாரணமாக உள்ள மனதைப் பற்றிய அறிவு வேண்டும். எனவே, மனதைப் போற்றி, அதன் தூய்மையைக் காத்து ஆற்றலைப்பெருக்கி அதன் நுட்பத்தை அறிய ஆர்வம் கொள்ளுங்கள். "மனவளக்கலை" பயிற்சி தான் உலகுக்கு அமைதி ஊட்டவல்லது.
.

மனித குலத்தில் காணுகின்ற கேடுகள் அத்தனைக்கும் இது ஒன்றே மருந்து. எனவே உலகம் முழுவதும் பரப்புவதற்கு அகத்தவம் பயின்று, தத்துவ விளக்கத்தின் மூலம் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தவம் (Simplified Kundalini Yoga), தற்சோதனை (Introspection) மற்றும் குணநலப்பேறு பெற்று முழுமைப்பேறு (Perfection) அடையத் தகுதியாக்கிக் கொள்ளச் சிறந்த "மனவளக்கலை" பயிற்சியை மேற்கொண்டு சிறப்பாக வாழுங்கள்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
மனிதனும் தெய்வமே:

"மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ
மனதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே
மனதை உயர்த்திட மட்டிலா இன்பமே
மனதிலே உளஎலாம் மற்றெங்கே தேடுவீர்;
மனம் புலன் உணர்வில் மயங்கிட மாயையாம்
மனம் உயர் வெளியினில் மருவித் தோய்ந்திட
மனம் விரிந்தறிவெனும் மாபதம் எய்திடும்
மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே."
.

"ஒன்றி ஒன்றி நின்று அறிவைப் பழக்க
உறுதி, நுட்பம், சக்தி இவை அதிகமாகும்
அன்று அன்று அடையும் அனுபவங்கள் எல்லாம்
அறிவினிலே நிலைத்துவிடும் ஆழ்ந்து ஆய்ந்து
நன்று என்று கண்டபடி - செயல்கள் ஆற்றும்
நற்பண்பு புலன்களுக்கு அமைந்து போகும்.
என்றென்றும் கருவிடத்தே அறிவை ஒன்றும்
இயற்கைமுறைச் சிறப்புடைத்து ஈதே தவமாம்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக