Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 29 மார்ச், 2013

பூரண பொருள்

Please find attached Mar-29 - Food for Thought - பூரணப் பொருள்கள்..
 

புதன், 27 மார்ச், 2013

வாழ்க்கைத் தத்துவம்



பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்டதே வாழ்க்கை. ஆறறிவு படைத்த நாம் பிறந்த உடனே நடப்பதில்லை. ஆனால் ஐந்தறிவு வரையுள்ள உயிரினங்கள் பிறந்த சிறிது நேரத்திலேயே நடக்கின்றன. நாம் வாழும் வாழ்க்கை இன்பமாகவே உள்ளது. ஆனால் நம்முடைய புலன்கள் வழி செல்வதாலும் பழக்கத்தாலும், சூழ்நிலைகளாலும் பெரும்பாலும் துன்பத்தை உண்டாக்கி கொள்கிறோம். கல்லூரிக்குச் செல்ல 12 வகுப்புகள் படிக்க வேண்டும் என்பது போல் வாழ்வில் முழுமைப்பேறும் குணநலப் பேறும் அடைய 12 வாழ்க்கைத் தத்துவப்படிகளை அளித்துள்ளார்.

தேவைகள் மூன்று : நம் உடலின் தேவைகளை மூன்றாகப் பிரித்துள்ளார். பசி, தாகம்,. முதல்படி. தட்பவெப்ப நிலையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளல் இரண்டாம்படி, உடலின் கழிவுகள் நீக்கம் மூன்றாம் படி.

காப்பு மூன்று : பிறஉயிர்களின் தாக்குதலில் இருந்து காத்தல், மழை, புயல், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றத்திலிருந்து காத்தல், தற்செயல் விபத்து நடக்காமல் (accident) காத்தல்.

அறநெறி மூன்று : தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரா வகையில் எண்ணம், சொல், செயல்களை அமைப்பது ஒழுக்கம். தான், குடும்பம், உறவினர், ஊர், உலகம் என்ற ஐந்து வகையான கடமை. எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தேவைப்படுவோர்க்கு, அந்த நேரத்தில் உதவுதல் ஈகை.

அறிவின் நிலை : அடிப்படைத் தேவையான நம்பிக்கை. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் பெறுமளவு அறிவு நிலையில் வாழ்தல். தன்னையறிந்த பின் முழுமை நிலையடைதல்.

நாம் ஒரு சிறு துரும்பாய் வாழ்க்கையெனும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் நிலையில் இந்த 12 படிகளும் நமக்கு படகாய் இருந்து நம்மை கரை சேர்க்க உதவும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார், வேதாத்திரி மகரிஷி.

நினைப்பது நடக்கும்:


வாழ்க வையகம்                                                         வாழ்க வளமுடன்



விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்காது. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அதுபோலவே, தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டுவிலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத்திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத்திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும்; எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும் அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை, "என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக்காலத்தில் எந்தச் சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.
முற்றறிவு (Total Consciousness) என்று சொல்லக்கூடிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய இதே அறிவு தான் எங்கேயும் இருக்கிறது. அது தொகுப்பறிவு (Collective Knowledge). அதனால், அந்த இடத்திலிருந்து நாம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும் வேகமும் வரும்போது அது தானாகவே மலர்ந்து செயலாகிறது.

அறிவை அறிய ஆர்வம் எழுந்து விட்டால்
அது தன்னை அறிந்து முடிக்கும் வரையில்
அமைதி பெறாது".
.
"அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி தெரிவதில்லை,
செயல் விளைவுத் தத்துவம் (Cause and Effect System) புரிவதில்லை; தவறு செய்தால் இன்றோ நாளையோ - அறிவிற்கோ உடலுக்கோ -துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை. இத்தகையஅறியாமையால் தவறு செய்து பின் கவலைப்படுகிறோம்".
.
"இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து
கொள்கிறோமோ, அவ்வளவுக்குத்தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே
செயல்திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப
வாழ்க்கையானது வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்; மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் - இயற்கையை 'அறியாமலும்' அல்லது அறிந்தும் அதனை 'மதியாமலும்' அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன."
.
அகத்தவப் பேறு (Simplified Kundalini Yoga) :
"அகத்தவத்தால் "ஆ" லயமாம் சிறந்த வழிபாடு
ஆராய்ச்சி அறிவுடையோர்க் கேற்ற உயிர்ப் பேறு
அகத்தவத்தால் தனையறிந்து பழிச்சுமைகள் போக்கி
அறநெறியில் பிறழாது ஆற்றி வாழலாகும்;
அகத்தவமோ தனையறிந்த ஞான ஆசானின்றி
அறிந்திடவோ பழகிடவோ முயல்வது கூடாது;
அகத்தவத்தை மெய்விளக்க மன்றங்கள் மூலம்
அறிந்தெளிதில் பயின்றுபயன் பெற்றுய்ய வாரீர்."


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 

புதன், 20 மார்ச், 2013

தவத்தின் பயன்கள் பத்து:


 வாழ்க வையகம்                                                வாழ்க வளமுடன்

 1) மனித வாழ்வின் பெருநிதியாகிய கருமையத்தை தூய்மையாகவும், வலுவுடையதாகவும், அமைதியும் இன்பமும் பெருக்கும் திறனுடையதாக்கவும் உதவுகிறது.

2) மனிதனின் இறையுணர்வும், உயிர் விளக்கவும், அறநெறி நின்று வாழும் தன்மையும் உண்டாக்கும்.

3) மனத்தின் விரியும் தன்மை பெருகுகிறது.

4) எண்ணம், சொல், செயல்களில் தவறு செய்யா விழிப்பு நிலை மேலோங்குகிறது.

5) அறிவின் திறன்கூடி அதன் கிரகிக்கும் சக்தி கூடுகிறது.

6) ஒத்துப் போதல், சகித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகள் மலர்கின்றன.

7) அவ்வப்போது செய்துவிடக் கூடிய தவறுகளையும், நம்மிடம் இருக்கக் கூடிய தீய குணங்களையும் களைந்து தூய்மையைப் பெருக்கிக் கொள்ள துணைபுரிகிறது.

8) ஆக்கப் பூர்வமான செயல்களை ஆற்றும் திறன் ஓங்குகிறது.

9) தன் அமைதி, குடும்ப அமைதி, சமுதாய அமைதி மூலம் உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.

10) நடக்கக் கூடியதையே நினைக்கச் செய்து நினைத்ததையே நடக்கச் செய்கிறது. 


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


 



ஞாயிறு, 17 மார்ச், 2013

Thoughts

You are not different from your thoughts. Thought is an illusionary object functioning with the four qualities of time, place, mass, functionality; transending beyond into the state of silence and often changing its state. If you understand the state of your thoughts, it means that you have understood yourself. Until then, keep analyzing the thoughts whenever you get the opportunity. Do n...ot try to cease the thoughts. It will waver more. If you try to understand it, then it will calm down gradually.

The functions of the thoughts forms our lives. It will keep functioning until there is blood circulation in the body, except when we are asleep. We should identify and practice ways to reform and utilise the thoughts. Do not attempt in vain to destroy the vast treasure. It ceases to exist automatically at the point of death. If thoughts cease then where does the 'You' separately exist?

Through our thought force, we can plan for monumental things in a moment, which will require the efforts of countless people over many years to achieve. When you possess such a potential force, don’t always keep planning for the future. You may forget your day-to-day duties. To synchronise our thoughts with our actions is a superior quality. To achieve and retain this, we need to practice it for a considerable amount of time. If you act considering only your bodily comforts and your family, it will result in weariness and miseries in your life.

Try to recollect often, the nature's laws and events, potential of the thoughts, society, world and the innumerable galaxies floating and roaming in the space. Match and see your knowledge and your experiences of pain and pleasure with these. As a result of this, the perennial fountain of bliss, which provides harmony both for the body and the mind together, will start to flow.

+ Vethathiri Maharishi

ஞாயிறு, 10 மார்ச், 2013

துரிய தவம்


நாம் மனித பிறவி எடுத்து இருக்கிறோம். பெறற்கரிய பேறு பெற்று இருக்கிறோம். இறைநிலையே தன்மாற்றம் அடைந்து பஞ்ச பூதங்களாக ஓரறிவு முதல் ஐந்தறிவு விலங்கினம் வரை வந்து ஆறறிவு கொண்ட மனிதனாக வந்து இருக்கிறோம். ஆறாவது அறிவு என்பது என்ன? பகுத்தறியும் திறன் தான். இத்திறன் கொண்டு தான் வியத்தகு விஞ்ஞான வளர்ச்சி அடைந்து இருக்கிறோம். ஐயமில்லை. ஆனால் அதையும் தாண்டி உள்ளது என்ன ? வாழ்வின் நோக்கம். வாழ்வின் நோக்கம் என்ன ? எங்கு இருந்து வந்தோமோ அங்கேயே திரும்பி போவது தான். எங்கு இருந்து வந்தோம்? இறைநிலையில் இருந்து தான். நாம் நம் அழகை கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல் இறைவன் தன அழகை தானே ரசிப்பதற்காக இவ்வாறு பலவிதமாக உருவெடுத்து வந்ததாக சொல்வதுண்டு . பொருள் வாங்கி வர கடைக்கு செல்கிறோம். மீண்டும் வீட்டுக்கு வருவதில்லையா அது போல் தான் இந்த மனித உடலோடு பூமிக்கு வந்தது தற்காலிகமாக தான் மீண்டும் நாம் வந்த இடத்துக்கே சென்றாக வேண்டும். அனைவரும் அப்படி தான் செல்வோம். ஆனால் அதற்கான கால அவகாசம் தான் வித்தியாசப்படும். சரி. அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன ? அழகான வழிமுறைகளை நம் ஆசான் அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்கள் அழகாக வகுத்து கொடுத்துள்ளார் அதன் வழி நடக்க வேண்டியதே.

நாம் பிறக்கும்போதே பெற்றோர்கள் வழியாக அதற்கும் முந்தைய மூதாதையர் வழியாக பதிவுகளோடு தான் பிறந்து இருக்கிறோம். போதாதற்கு நாம் பிறந்த முதற்கொண்டு இன்று வரை எத்தனையோ செயல்கள் புரிந்து அதனையும் பதிவு செய்து வைத்து இருக்கிறோம் இப்பதிவுகள் நல்லதோ தீயதோ அதனையும் கழித்தாக வேண்டும், தீய பதிவுகளாக நிறைய வைத்திருந்தால் கழுதை மாதிரி உதைகிறோம், குரங்கு மாதிரி நடந்து கொள்கிறோம், தேள் மாதிரி கொட்டுகிறோம் நாய் மாதிரி குரைக்கிறோம் எல்லா விலங்கின பதிவுகளும் சேர்ந்து தான் வைத்திருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான அனைத்து உயிரினங்களின் பதிவுகளும் கொண்டது தான் இந்த மனித பிறவி. இந்த பதிவுகள் அனைத்தும் சேர்ந்து தான் நாம் வந்த நோக்கத்தை மறந்தி புலன் வழி செயல்பட்டு மீண்டும் பதிவுகளை கூடிக் கொண்டே இருக்கிறோம். புலன் மயக்கத்தில் சிக்கிய மனம் கூடவே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் ஆகிய ஆறு குணங்களை வளர்த்து கொள்கிறது. அதன் தொடர்ச்சியாக ஐந்து பெரும் பழி செயல்களையும் அதாவது பொய் களவு, சூது, கொலை, கற்பழிப்பு முதலியவைக்கும் வழி வகுக்கிறது.
எனவே அறநெறியைப் பின்பற்றி வாழும்போது, இத்தகைய பழிசெயல்கள் நம்மை அணுகாது.

இதற்க்கு முதலில் நாம் நம் மனதை பழக்க வேண்டும் . அதற்காகவே இந்த தான முறைகள், தற்சோதனை உடல் பயிற்சி ஆகியவைகள் நமக்கு அருள் தந்தை அவர்களால் வழங்கப்பட்டுள்ளது எளிய முறை குண்டலினி யோகமாக. இதில் முதலில் உடலை சீராக வைத்துக்கோலா உடல் பயிற்சியும் உயிரை வலமாக வைத்துக் கொள்ள காய கல்ப பயிற்சியும் மனதை வளபடுத்த த்யானம் தற்சோதனையும்.
த்யானம் செய்வதற்கு தக்க ஆசானால் தீட்சை கொடுக்கபடுகிறது, இது முறையே ஸ்பரிச தீட்சை (கோழி தன முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிப்பது போல்)சச்சு தீட்சை அல்லது நயன தீட்சை (மீன் தன முட்டைகளை பார்வையாலேயே குஞ்சு பொரிப்பது போல்) கொடுக்க படுகிறது. ஸ்பரிச தீத்சை அகின்னை தீட்சையாகவும், நயன தீட்சை துரிய தீட்சையாகவும் கொடுக்கபடுகிறது. இதில் ஆசிரியர் தன கண்களில் ஆற்றலை வரவழைத்து தன அருட்ப பார்வையால் தீட்சை கொடுப்பார். ஐம்புலனாக விரித்தே பழகிய மனம் ஆகினை தீட்சையில் ஒரே புலனாக சுருங்கி நின்றது துரிய தவத்தில் அப்புலனும் மறைந்து மனம் மூல நிலையான உய்ராகவே நிற்கும். உயிர் உயிராக நின்றால் தனது அடக்கத்தில் பிரமம்மாக இரைநிலைஆக அமைதி பெறுவதற்கு துரியத்தில் தயாராகிறது . இந்த தவம் துரிய தவம் என்றும், சஹாஸ்ராதார யோகம் என்றும் அழைக்கப்படும். சகஸ்ரம் என்றால் ஆயிரம் அதாவது நமது மூலையிலே ஆயிரக்கணக்கான பணிச் சிற்றறை இயக்க மையங்கள் உள்ளன. ஒவொவொரு எண்ணம் தோன்றுவதற்கும் பல சிற்றறைகள் ஒன்று சேர்ந்து இயங்கும் .

மகரிஷி இது குறித்து கவி புனைந்துள்ளார்

உச்சியிலே நீ சென்றால் உடனே காணும்
ஒரு அதிசயம் வலமாம் சுற்று ஆகும்
அச்சமயம் அறிவிற்கோர் வியப்பு காணும்
அவ்விடத்தே நிலைத்திருக்கப் பழகிவிட்டால்
இச்சைஎல்லாம் பிறக்குமிடம் கண்டு கொள்வாய்.
எது வேண்டும் வேண்டாம் என்று இரண்டுங்கண்டு
நச்சுவிளை இச்சைஎல்லாம் அழித்துவிட்டு
நலம் ஈயும் எண்ணமே மீதங் கொள்வாய்

ஆக்கினை தவம் செய்துவிட்டு துரிய நிலை தவத்திற்கு உச்சியில் நினைவை செலுத்தும்போது உயிர் சக்தி மூலையில் உள்ள சிற்றரைகளுக்கெல்லாம் ஊடுருவி போகும். அந்த ஓட்டமானது இனிமையாக இருக்கும். ஒவொருவருக்கு ஒவொரு விதமாக இருக்கும். சாதாரணமாக மூலையில் இருக்கும் சிற்றறைகளில் மிக குறைந்த பகுதியையே நாம் பயன்படுத்துகிறோம். மற்றவை பயன்பாடிற்கு வராது. துரிய தவம் இயற்ற அவை ஒவ்வொன்றாக செயலுக்கு வரும். அப்படி விழிப்பு நிலை ஏற்படும்போது இறைநிலையோடு தொடர்பு கிடைத்து இன்டூஷன் எனும் உள்ளுணர்வு கிடைக்கும்.

துரிய தவம் புரிய புரிய

1)ஆன்மா பழி செயல் பதிவுகளில் இருந்து தூய்மை பெறும்.
2) நடுமனத்தை வெற்றி கொள்கிறது.
3)நாம் என்னும் உயரிய எண்ணம் பல பேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும்.
4)நாம் கொடுக்கும் சங்கல்பம் மற்றும் வாழ்த்துக்கள் நன்கு செயல்படும்.
5) மனதிருக்கு வேகமும், நுட்பமும் எளிதில் உணர்ச்சி வயபடாத நிலையம் கிடைக்கும் என்னத்தை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துணை புரியும்.
6) தன்வினையில் இருந்தும் விடுவிக்கபடுவோம். உள்ள களங்கமும், உடல் களங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது .

அறிவின் எல்லை:


 
வாழ்க வையகம்                                                     வாழ்க வளமுடன்


நாம் என்னென்ன நினைக்கிறோமோ அந்த அளவு அறிவிலே விரிந்து இருக்கின்றோம். விரிந்து அறிந்த நிலை ஒன்று, அந்த நிலையை ஒட்டி குறிப்பிட்ட அளவுக்கு இயக்கம் (Localising action) ; ஒரு பொருள் மீது தனியாக அதைப் பயன்படுத்தும் போது அப்போது விரிந்த நிலையிலே அறிவாலே எவ்வளவு விளக்கம் பெற்று இருக்கின்றோமோ அந்த விளக்கம் அத்தனையும் சிறு சிறு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளும்போதோ, அதன் மீது மனம் செலுத்தும்போதோ, விரும்பும் போதோ அத்தகைய விரிந்த அறிவினுடைய தன்மை அத்தனையும், அந்தச் சிறு இயக்கத்திலும் பயன்படும்.

இப்பொழுது ஒரு மாநிலத்தை (Province) ஆளக்கூடிய ஒரு பெரிய அதிகாரி இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குச் சாதாரண ஒரு ஊருக்கான திட்டம் ஒன்றை அவர் உருவாக்கும் போதோ, அதைக் கண்காணிக்கும் போதோ, மாநிலம் முழுமையும் நிர்வகிக்கக் கூடிய நிலையிலே அந்த ஒரு சிறு விஷயம் கூட சிந்திக்க முடியும். அந்த இடத்திலே இருந்து சிந்திக்கக் கூடிய ஒரு எழுத்தர் (Clerk) அல்லது மற்றவர்களுக்கு அந்த இடத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடிய மனம், அறிவு இருக்கும். அதுபோல நம்முடைய செயலுக்கும், தன்மைக்கும், இந்தப் பண்பாட்டுக்கும் தக்கவாறு, இந்த அறிவு எந்த எல்லையில் நிற்கிறது என்பதாக இருக்கிறது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
பெரியார்:
"அறிவு, சுகம், பொருள், அரசியல், விஞ்ஞானம்
ஐந்து தத்துவங்கள் அறிந்தவன் பெரியோன்".
.
"கதிரவன் காலத்தே காணாத விண்மீன் போல்
புதிர்போன்ற அறிவுநிலை புலன் இயங்குங்கால் தோன்றா".
.
மனம் செம்மையுற அகநோக்குப் பயிற்சி (Simplified Kundalini Yoga) :
"அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;
ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
 

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

சனி, 2 மார்ச், 2013

கேள்வி : சுவாமிஜி, பரிணாம வளர்ச்சியில் முதல் பாவப்பதிவு எவ்வாறு தோன்றியிருக்கும்?



மகரிஷியின் பதில்: முதல் பாவம் என்றால் முதல் மனிதனிடமிருந்து வந்தது தான். முதல் மனிதன் விலங்கினத்தின் வித்துவிலிருந்து வந்தவன். விலங்கினங்கள் உணவிற்காகப் பிற விலங்குகளைக் கொன்று வாழ்கின்றன. பிற உயிர்களினுடைய வாழும் உரிமையைப் பறித்தே வாழ்கின்றன. இவ்வாறே பிறர்வளம் பறித்து வாழ்தல் என்பது மனிதனிடமும் வந்திருக்கின்றது. அன்றிலிருந்து இன்று வரை மனிதகுலம் இக்குணத்தை மாற்றிக் கொள்ள சிந்திக்கவில்லை. 'நான் ஏன் பிறருடைய வாழ்க்கையைப் பறித்து வாழ்கிறேன்' என்ற எண்ணம் வந்தவர்களெல்லாம் ஞானியராகி விட்டனர். அவ்வாறு சிந்திக்காதவர்கள் எல்லோரும், ஒருவர் மற்றவரை வாழவிடாது செய்து கொண்டிருக்கிறார்கள். இது தான் இன்றைய உலகம். பாவம் என்பது விலங்கினத்திலிருந்தே வந்தது. மனித உருவம் விலங்கினத்தின் வித்துத் தொடரிலிருந்தே தோன்றியது. ஆதலால் அங்கேயே பாவத்துக்கான அடிப்படை ஆரம்பித்து விட்டது.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 1 மார்ச், 2013

மனக்குழப்பத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு

கேள்வி: இன்றைய கால மாணவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமான நிலையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் இதிலிருந்து தெளிவு பெறுவது அதாவது மனக் குழப்பத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மகரிஷி: மனதுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது இரண்டு விதத்தில் உடலுக்குப் பயிற்சி வேண்டும். இது வரையில் செய்த செயல்களினால், இந்த அணு அடுக்குகள் எல்லாம் சீர் குலைந்துபோய் நோய் பதிவாகியிருக்கும். அவையெல்லாம் போக்குவதற்கும், இனி நோய் வராமல் இருப்பதற்கும் தக்க பயிற்சி உடற்பயிற்சி அவசியம்.அதற்கும் மேலாக எல்லோருக்கும் கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அதைத் தூய்மை செய்வதற்கு காயகல்பப் பயிற்சி என்று இதிலேயே ஒரு பயிற்சி இருக்கிறது. வித்து சுத்தம் செய்யும், உயிர்ச்சக்தியை அதிகரிக்கும். அதே நேரத்தில் சீவ காந்த சக்தியையும் அதிரிக்கும். இந்த மூன்றையும் திருத்தி கருமையத்தையே தூய்மை செய்யக்கூடியது வளப்படுத்தக் கூடியது காயகல்பப் பயிற்சி. அதுவும் மனவளக்கலையில் சேர்ந்துதான். அதைச் செய்தால்தான் மாணவர்களினுடைய மனநிலை சரியாக, தெளிவாக இருக்கும். மேலும் மேலும், முயற்சி விடா முயற்சி நன்மை தரும்.