Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : - " நான் யார் "

நான் யார் என்றே வினவ நல்லுடலும், உயிர், அறிவு
நல்லினைப்பியல்பாய்க் கூடியொரு நாட்டமுடனே ஒலிக்கும்
ஊன்உடலே வாகனமாம் உள்ளியங்கும் ஆற்றல் உயிர்
... வான்கடந்த மெய்ப்பொருளே வாலறிவாம் அதுவே நான்.
 
-வேதாத்திரி மகரிஷி

" நான் யார் ", மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இக்கேள்வி கேட்டு விடைகான வேண்டியது அவசியம். அப்போதுதான் பிறவியின்
நோக்கம் நிறைவுபெறும். ஆனால் நாம் " நீ யார் " என்ற கேள்வியையே
எழுப்பிக்கொண்டிருக்கிறோம். இதனால் நமக்கு ஒரு பலனும் இல்லை.
பஞ்சபூதங்களால்தான் எல்லா தோற்றங்களும் உயிர்களும் உருவாகி
இருக்கின்றன. அப்படியானால் நாம் (மனிதன்) பஞ்சபூதங்களால்
ஆக்கப்பட்டவர்களே. பஞ்சபூதங்களுக்கு மூலம் விண். விண்ணுக்கு
மூலம் சுத்தவெளி. வெளி என்பதுதான் அனைத்துக்கும் மூலம்.
இதுவே தெய்வம். கடவுள். அப்படியானால் நாம் அனைவருமே
கடவுள்தான். உண்மை. இறைநிலையே உடலாகவும், உயிராகவும்,
அறிவாகவும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இனைந்து
மனிதனாக வந்துள்ளது. உயிரை தாங்கும் வாகனமாக உடல்
செயல்படுகிறது. அனைத்தையும் இயக்கிகொண்டும், அறிந்துகொண்டும், வழிநடத்துவது அறிவு ஆகும். நமக்குள்
எல்லாமாக இறைநிலையே இருந்தாலும் அறிவே சிறப்பாக
இயங்குவதால் '' அறிவே நான் ''. எனவே அறிவே தெய்வம்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : - "தொழில்"

* தொழிலும் வருவாயும் உள்ளவர்களே கடமைகளை ஒழுங்காகச்
... செய்யமுடியும். அறவழியில் நடக்கமுடியும். ஆகவே உடல்
வலிவுள்ள யாவரும் தொழில் செய்தேயாகவேண்டும்.
செலவுக்கேற்ற வருவாய் தேடியே ஆகவேண்டும்.

* முற்றிலும் தனக்குத் தெரியாத ஒரு வாணிபத்தில் இறங்குவது
கூடாது. பெரிய அளவில் செல்வ முதல் உடையோர்கள் ஊதியத்தின்
மூலம் பலருடைய தொழில் நுட்பத் திறமைகளை ஒன்றுசேர்த்து
பயன்பெறலாம். மற்றவர்களுக்கு புதுத் துறை ஏற்றதல்ல.

* முறையாகச் செய்யும் தொழிலானது உடல், உள்ளம், குடும்பம்,
ஊர், நாடு, உலகு இவற்றிற்கு மேன்மை தரும். வசதியிருந்து
பொருள் ஈட்டாமல் உணவு கொண்டு வாழ்பவர்கள் பொருளாதாரச்
செழிப்பை அரிக்கும் கிருமி, சமுதாயாத்திற்கு ஒரு நோய்.



புதன், 11 ஏப்ரல், 2012

வாழ்வுக்கு ஆதாரமான அறநெறிகள்





 1. வாழ்வின் நோக்கம்,, தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமல் அமைத்துக்கொள்ள வேண்டும்.

2. தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும் வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.
...
3. இயற்கையின் ஒழுங்கமைப்பும், அதன் ஆற்றலின் விளைவான காரண காரிய விளைவு விதியைப் பற்றி உணர்ந்து கொண்டு மதித்து போற்றி நடக்க வேண்டும்.

4. வாழவேண்டிய முறைகளையும், ஆற்றவேண்டிய செயல்களையும் வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. இத்தகைய வாழ்வுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதற்கு உடல் வலிமையையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

6. விடாமுயற்சியோடும், எண்ணம், சொல், செயல் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

7. அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் தவறுகளைத் தற்சோதனை, செயல்திருத்தம் என்ற இரண்டு வழிகளிலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

இத்தகைய அறநெறிகளை வாழ்விலே பின்பற்றி செயல்பட்டால், வாழ்வு இனிமையாகவும், அமைதியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி