Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 28 மே, 2015

குண்டலினியோகம் யோகம் புரியும் அன்பர்களே!


"நீங்கள் தற்சோதனையில் இன்பத்தைப் பொருளாக வைத்து ஆராயுங்கள். அது எவ்வாறு அனுபவமாகின்றது என்று கண்டு கொள்வீர்கள். அப்போதுதான் புலனடக்கம், தெளிந்த முறையில் உண்டாகும். இன்பத்திற்கு விழைவது துன்பத்திற்கு போகும் பாதையாகும். துன்பத்தைக் குறைத்துக்கொண்டே இருந்தால் மீதி இருக்கும் ...இனிமையே இயற்கையான இன்பம். இந்த இன்பம் தான் அமைதி தரும். இதுவே நிறைவையும் தரும். தன்னளவில் இன்பத்திற்கு விழையாமல் இருந்தால் தன் துன்பம் மட்டுமல்ல பிறர் துன்பங்களையும் போக்க வல்லமை மிகும். திறமையும் உயரும், கருணை சுரக்கும். குடும்ப அளவில் முதலில் உங்கள் 'செயல் நல, குண நல" சீரமைப்பில் வெற்றி பெற்றுவிட்டால் அதுவே உங்கள் வாழ்வின் வெற்றியாகும். இந்த வெற்றியில் கிட்டும் நிறைவும் அமைதியும் மற்றவர்களுக்கும் வழி காட்டும், சமுதாயத்திலும் இவ் அமைதி பரவிக்கொண்டே போகும். இதுவே உலக அமைதிக்கும் ஏற்றதோர் வழி. மன அமைதிக்கு சரியான வழி "குண்டலினி யோகமெனும் மனவளக் கலையே" ஆகும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக