Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 27 மே, 2015

ஓர்மை நிலை

"பிரபஞ்சத்தின் முதல் பொருள் இறைநிலை. "மனித மனமானது" இறைநிலையின் முடிவான பொருள். (Other End of the Mind is Almighty the God). 'உடலுக்கும் - மனதுக்கும்' இயக்க ஆற்றலாக இருப்பது ஜீவகாந்தம் ஆகும். ஜீவகாந்தம் என்பதோ இறைநிலையும் அதன் நுண்ணியக்க மூலமான 'விண்' மூலம் தோன்றிய அலையும் சேர்ந்த ஒரு கூட்டு ஆற்றல் தான். இந்தப் பேராற்றலானது 'கருமையம்' எனும் மூலாதாரத்தில் மையம் கொண்டு, உடல் முழுவதும் அலையலையாகப்பரவிப் புலன்கள் மூலம் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் மனமாக இயங்கிக் கொண்டும் இருக்கிறது. கருமையத்தில் திணிவு பெற்றுள்ள சீவகாந்தத்தைத் தான் "குண்டலினி சக்தி" என்று கூறுகிறோம். இதே மனதை அதன் இருப்பு நிலையான இறைநிலையை நோக்கக் கூடிய ஒர்மைநிலையே "அகத்தவம்"(Meditation) ஆகும்.

.
"ஸ்பரிச தீட்சை" முறையால் உடனே மூலாதாரத்திலிருந்து ஆக்கினைக்கு "மனவளக்கலை" ஆசான், மகரிஷியின் அருள்ஆற்றல் துணை கொண்டு வழங்கப்படும் தீட்சையின் வாயிலாக "குண்டலினி சக்தியை" (Life Force) முறைப்படி ஆக்கினைக்கு கொண்டு வந்துவிட இயலும் . பிறகு அந்த ஆற்றலின் அழுத்தத்தையும், அதன் சுழற்சியையும் மனதால் கூர்ந்து கவனித்துத் தவம் (Meditation) செய்ய வேண்டும். தியானத்தின் போது, ஆசான் நெற்றியில் உணர்த்திய உயிரின் அசைவையே அசையாமல் கவனிக்கவேண்டும்.

.
அப்போது புறமனமானது ஐந்து புலன்களில் நான்கை விட்டுவிட்டு, "ஊறுணர்ச்சி" என்று சொல்கிற "உயிர் ஆற்றலின்" (life force) அசைவை மட்டுமே உணர்கிற (ஆக்கினை சக்கரத்தில்) ஒரே புலனாக மட்டும் நிற்கும். அப்போதுதான் ஓர்மை நிலை (Concentration) சித்தியாகும். அப்போது நடுமனம் புறமனத்தின் இயக்கத்திற்கு ஒத்து நிற்க வேண்டும். இன்றேல் நடுமனம் தன் இயக்கத்தை நிறுத்தவில்லை என்றால், பலவித எண்ணங்கள் குறுக்கிட்டுத் தவத்தை கலைக்கும். இந்த இடத்தில் ஆயாசத்துக்கு இடங்கொடுக்காமல், ஊக்கத்துடன் முயன்று நடுமனத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அது 'புறமனத்தோடு' ஒத்துப் போகச் செய்ய வேண்டும்.

.
நாள் தோறும் பழகப் பழக.. மெய்ப்பொருள் பற்றிய; தன்னை அறியவேண்டும் என்கிற அறநெறியோடு கூடிய சிந்தனையுடன், தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆசான் அருளியபடி தியானம் செய்து காலை மாலை பழகப் பழக...போகப் போக எண்ணங்கள் குறுக்கிடாத, அசைவிலா ஒர்மைநிலை சித்தியாகிவிடும். தன்னை அறியவேண்டும் என்கிற, முழுமையை நோக்கிய உயிரின் விடுதலைக்கான ஆன்மீக வேட்கை கொண்ட ஓர் முயற்சியாக, நாம் தினமும் நம்மை 'தியானத்தில்' தவறாது சில நிமிடங்கள் ஈடுபடுத்திக்கொண்டால், தொடர்ந்து செய்து வரும் உளப் பயிற்சியின் பயனாக, . நாட்கள் ஆனாலும், ஓர்மைநிலை (Concentration) சித்தியாகிவிடும், நாள்தோறும் பழகிவரும் தியானத்தினால் தவ ஆற்றல் மிக மிக.. எல்லாம் வல்ல இறைநிலையே எவ்வாறு மனிதனிடத்தில் உயிராகவும், மனமாகவும், அறிவாகவும், இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற உள்ளுணர்வு உண்டாகும். இந்த உயிரானது முழுமையை நோக்கி இயங்குவதற்கு, இந்த உடல் ஓர் வாகனமாக உள்ளது என்ற உள்ளுணர்வும் (Intuition) உண்டாகிவிடும்".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக