Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 4 மே, 2015

ஆறுகுணச் சீரமைப்புப் பயிற்சியால் கிடைக்கும் வெற்றியின் அளவிற்கு ஏற்ப உங்கள் உள்ளத்தில் அமைதி உண்டாகும்

  "செயலுக்கும், விளைவுக்கும் தொடர்பைத் தெளிவாகச் சிந்தித்து உணருகின்ற ஆற்றல் மக்களிடம் பெருகி வருகின்றது. விளைவறிந்து விழிப்போடு செயலாற்றி வாழுகின்ற இக்காலத்தில், சிந்திக்கின்ற ஆற்றல் பெற்ற எல்லோரும் தங்கள் உணர்ச்சிவயம் எனும் ஆறுவகை மனோநிலைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது இன்றியமையாததாகி விட்டது. ஆறுகுணச் சீரமைப்புப் பயிற்சியினை இன்றே தொடங்குங்கள். இதில் நீங்கள் பெறுகின்ற வெற்றியின் அளவிற்கு உங்கள் உள்ளத்தில் அமைதி உண்டாகும். அது உங்கள் குடும்ப அமைதியை காக்கும். மனிதனது ஆறாவது அறிவானது புலன்களால் காண முடியாத மெய்ப்பொருளை உணர்ந்து அதனோடு இணைந்து பிறவியொழிதற்கேயாம். மனிதன் இறைநிலையை அறிய முடியாமல் மறைக்கின்ற இந்த ஆறு மன மயக்கத் திரைகளே ஆறு குணங்கள். இவற்றை முறைப்படுத்திக் கொள்ளுகின்ற அளவிற்கு இறையருள் எளிதாகக் கிட்டும். மெய்ப்பொருள் அகக்காட்சியாகும். நாம் அறிவில் முழுமைப்பேறு பெற்று அமைதி என்கின்ற நல் வாழ்வை அடைந்து உய்யலாம்".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக