Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 4 ஏப்ரல், 2016

துவைதம், அத்துவைதம்

வாழ்க வளமுடன்.
எல்லாம் ஒரே இலக்கை நோக்கி செல்லும் வழியே. தேவையில்லை குழப்பம்.
மனிதன் பல்வேறுமுறைகளில் இறைவழிபாட்டினை செய்கிறான்.
1. உருவ வழிபாடாக
2. ஒரே உருவமாக
3. பல உருவங்களாக
4. உருவமற்றதாக
5. பஞ்ச பூதங்களாக
6. யாகம், ஹோமம் செய்வதன் மூலமாக
7. மந்திரங்கள், ஜபித்தல் மூலமாக
8. அவரவர்கள் மதங்கள் கூறிய வழியில்
9. சூரியனை, சந்திரனை, கோள்களை, நட்சத்திரங்களை வணங்குவதன் மூலம்
10. சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்வதன் மூலம்
இந்த முறைகளில் கடவுளை வணங்குவதை புறவழிபாடு என்கிறோம்.
இந்த முறைகளில் கடவுள் வேறாக மனிதன் வேறாக பார்க்கிறோம்.
இதை “துவைதம்” என்கிறோம்.
கடவுளை இன்னொரு முறையிலும் வழிபடலாம்.
அது “அத்துவைதம்”.
இந்தக் கோட்ப்பாட்டின்படி கடவுள் என்கிற மாபெரும் சக்தியே மனிதஉரு வரையிலும் தன்மாற்றம் பெற்று வந்துள்ளது. கடலும் அதிலிருந்து எடுத்த ஒரு குவளை நீரும் போல.
கடவுள் வேறல்ல மனிதன் வேறல்ல என்கிற கோட்பாட்டை கொண்டது அத்வைதம். கடவுளின் ஒரு துளியே மனித மனம். அது இயல்பாக அடி மனத்தில் ஆறு தீய குணங்களற்றது. மேல் மனமே ஆறு தீய குணங்களுடன் உள்ளது.
இந்தப்பிரபஞ்சதிலுள்ள கண்களால் பார்க்க முடிந்த, மேலும் பார்க்க முடியாத, உணர மட்டுமே முடிந்த அனைத்து தோற்றங்கள் மற்றும் இயக்கங்களும் கடவுளின் தன்மாற்றமே.
கட+ உள் = கடவுள். வினைச்சொல். அகவழிபாட்டின் மூலம் உனக்கு வேண்டியதைப்பெறலாம் என்கிறவிதமாக மனதை உள்முகமாக திருப்பி, ஆழ்ந்து செல்வதை அகத்தவம் என்றார்கள்.
சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் விரும்பும் முறையில் துவைதமாகவோ, அத்வைதமாகவோ கடவுள் வழிபாட்டை செய்ய உரிமை உள்ளது.
வேதாத்திரியம் அகத்தவம் தெய்வ வழிபாடுகள் அனைத்திலும் ஓர் சிறந்தவழிபாடு என்கிறது .
எனவே அகத்தவம் செய்கிறவர்கள் கடவுளை மற்றவழிகளில் வணங்கவில்லையே என்று பயப்படவோ, குறைபட்டுக்கொள்ளவோ தேவையில்லை. இதைப்புரிந்துகொண்டு தைரியமாக இவர்கள் மற்ற வழிபாட்டுமுறைகளில் இருந்து தானே விடுபடலாம்.
ஞானாசிரியர்கள் மற்ற வழிபாட்டு முறைகளை ஆதரிக்கவோ, குறைகாணவோ தேவையில்லை. நமது சங்கம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்வோம். மற்றவர்களிடம் முரண்படாமல் அதே சமயம் ஏற்ற்றுக்கொண்ட அத்வைத கொள்கையில் மாறாமல் மகரிஷி வழியில் நின்று சேவை செய்வோம்.
அத்வைதக்கொள்கை: 1. கடவுள் அரூபம். 2. கடவுள் ஒன்றுதான். 3. எங்கும் உள்ளது. எல்லாம் வல்லது. 3. மனிதனாக, எல்லை கட்டிய சக்தியாக தன்மாற்றம் பெற்றிருப்பதும் கடவுளே.
அகத்தவ வழிபாட்டு முறையினால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் நேரம், பொருள், ஆற்றல், ஒருவர் வழிபாட்டினால் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏற்படும் தொந்திரவுகள் அனைத்தும் மிச்சம்.
வாழ்க வளமுடன்.