Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 23 நவம்பர், 2019

பிழைப்பு ஓர் சிந்தனை



அன்று ஒரு நாள் ஈரோடு மன்றத்திலே வாழ்க்கை தத்துவம் குறித்து மகரிஷி அவர்களின் அற்புத அருளுரை.

கேள்வி நேரத்தில் ஒரு அன்பரின் கேள்வி : வாழ்க்கையை ஏன் பிழைப்பு என்று கூறுகிறோம்?

நான் கூட நினைத்தேன், இது என்ன கேள்வி என்று. வெறும் வழக்கு சொல்தானே பிழைப்பு,,

ஆனால் ஸ்வாமிஜி அவர்கள் அழகாக விளக்கம் சொன்னார்கள் பாருங்கள் எல்லோரும் அசந்து விட்டோம்.

நீண்ட பதில். இங்கு எளிமையாக உட்கருத்தை மட்டும் பதிவிடுகிறேன்.

உலகம் சுழல்கின்ற வேகத்தால் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது. இதனால் உடலில் இருந்து கோடிக்கணக்கான நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டு தொடர்ந்து வெளிநடப்பு செய்கின்றன.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் முதிர்வுற்ற கோடிக்கணக்கான செல்களை தினமும் உடல் இழந்து கொண்டிருக்கிறது.

இந்த இழைப்பை ஈடு செய்ய புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும் காற்றிலிருந்தும் கோள்களிளருந்தும் நீரிலிருந்தும் பெறுவதால் உடலை நாம் புதுப்பித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கும், சேர்க்கைக்கும் இடையில் நாள்தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பி பிழைத்துக் கொண்டேயிருக்கிறான். இதனால் தான் வாழ்க்கைக்கு பிழைப்பு என்ற பெயர் வந்தது.

எங்கு தேடினாலும் கிடைக்காத
விளக்கம். அவர் ஒருஞானச் சுரங்கம்.

குருவே சரணம்,,
வாழ்க வளமுடன்,,

புதன், 20 நவம்பர், 2019

*Practice and Proficiency*

*Daily A Noble Thought - Nov 20*


Six temperaments (Greed, anger, miserliness, immoral sexual passion, vanity and vengeance) blossoming as sinful actions, just not only taints life and mind.  They taint the physical body too.

Streamlining six temperaments to six good qualities, is the important part of introspection, second stage of SKY Yoga. Just rate how were you when indulging in six temperaments?  Rate as well how have you improved after learning SKY Yoga now.  Try further. Succeed in it.

Practice Introspection regularly. Can do once a week, on Sunday. Can do once a month, on full moon day. Can do whenever convenient to you. Allocate atleast one hour then. Meditate for half an hour. Analyse well in Thuriyam stage.  Analyse the thoughts. Analyse six temperaments one by one. Find the deficiencies of you.  Analyse the ways to clear it. 

Take the strong auto-suggestions to clear the deficiencies. Mental strength obtained through meditation, Clarity obtained through introspection would help to you keep in awareness, protect by rescuing from the influence of six temperaments and sinful acts.

Analyse all the sinful acts committed in the past, one by one. If you can do any remedies for them now, plan to do it immediately.  If you cannot do any remedial action now, seek forgiveness in mind, from the affected. Bless them wholeheartedly that they come out of the sufferings created by you and lead good life.

Don't hold the guilty consciousness in mind. Guilty consciousness would spoil our life. Can correct the correctable mistakes. There is no use in fusing (worrying) that 'alas, I have committed mistake!'.  Do introspection.  Be proficient in maneuvering six temperaments.

*- Vethathiri Maharishi*

வெள்ளி, 15 நவம்பர், 2019

Spiritual Service

Daily A Noble Thought -Nov 14


Even while my physical body is operating, the consciousness emanated and expanded from it, functions worldwide as fountain of love. At some specific times, it spreads whole universe and overflows in great calmness.

Peace enjoying consciousness on expanding, after realizing all three layers of knowledge (attached knowledge, learnt knowledge and ultimate wisdom), while it is operating conditioned to any object or living, the evolving properties are compassion, love, morality, duty and sacrifice.

Same consciousness while expanded but before attaining peace, conditioned to objects, shapes as six temperaments and sinful acts causing miseries.  Thus considering the long term continuous history of consciousness, the responsibility increases in life and activities.

I’m overflown with your flood of love, along with the light of consciousness and special responsibility of experiences, penetrating in you.  All of you are joined in my spiritual service on this life link and oneness of consciousness. 

- Vethathiri Maharishi

Silence Period

*Daily A Noble Thought - Nov 15*

*Silence Period*

By practicing SILENCE only, we can win over the thoughts. Life would improve once we record and implement the good thoughts available in silence and the imprints of the previous good deeds.

You may notice all these in experience.  We are at emotional state when we speak. (During that state) We would get the thoughts of all those emotional people from universal magnetism.  They would mingle with our brain and come as our thoughts.

But, in silence once we reach calm state, quietly analyse, realize almighty and connect with it; all those saints who realized this, their powers and thoughts would come as our thoughts. We can experience all those things.  Ideal time to experience the same is silence period.

How long we can practice Silence?

You can be silent for a day.  There may be two days. But, record in mind all those benefits realized in silence period. Utilize all those in life.

Over a period, even one hour silence is fine.  But, even that one hour would be successful.  You can hold the mind instead of running here and there.

Let’s assume that we are used to do so.  Whatever we do, those things gets recorded as imprints and comes as thoughts at times, isn’t it?  Similarly, the silent imprints acquired in divine state during silence, would come even in normal period and take your mind to calm state. 

*- Vethathiri Maharishi*

செவ்வாய், 12 நவம்பர், 2019

People’s Intellectual Growth

The world is slowly changing in its habit of people considering someone as an Intellectual, Great Gentleman, Political leader, Saint, Laureate etc., who put the innocent people in more illusion and lead the life through it.
People’s intellect is growing day by day to compare and analyse on any thought whom-so-ever say it, with nature, mankind history, forefather thoughts, current trend in the world, one’s own knowledge and science.
The innocent darkness of spending useless time in praising one individual man or his thoughts and render himself as useless, is fading away from people on self-analysis.
Resultantly it is certain that in the short time frame, around the entire world, the environment would be setting-in for the man to understand his own value and lead life as a man.
- Vethathiri Maharishi

ஞாயிறு, 10 நவம்பர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! முக்கியமான காரியங்களைத் தொடங்கும்போது வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற பஞ்ச அங்கங்களையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்களே இது ஏன்?


 பதில்: மனிதன் எடுக்கின்ற காரியத்தை வெற்றிகரமாக முடிக்க இயற்கையின் துணையை நாடுதல் என்பது பழக்கத்திலிருந்து வருகிறது. தமக்கு ஏற்ற கோள்களின் நிலைகளிலிருந்து நன்மையே கிடைக்கின்ற காலத்தைக் கணிக்கவே வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம், என்ற ஐந்தையும் பார்க்கின்ற பழக்கத்தை வைத்துள்ளார்கள். இந்த விஞ்ஞான காலத்தில் இவ்வளவையும் பொருத்திப் பார்க்கவே முடியாது.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

காந்த தத்துவம் – PHILOSOPHY OF MAGNETISM



2. மனத்தூய்மை

பொருள், புகழ், செல்வாக்கு, புலன், இன்பம் நான்கிலே
புகுந்தழுத்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர்
இருள்நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன்
இறைநிலையே எங்கெதிலும் இருப்பாய் அமர்ந்தாற்றிடும்
அருள் நடனக் காட்சியை அகத்துணர்வாய்க் கொள்ளுவீர்,
அப்போதும் எப்போதும் அறிவு விரிவாகியே
மருள்நிலையில் ஏற்ற ஆசை மற்றும் பழிச் செயலெல்லாம்
மாறிவிடும் மெய்ஞ்ஞானம் மலரும் உள்ளொளி என.

விரிவுரை

உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திலும் உடல் அமைப்பாலும் ஆளும் அறிவு நிலையாலும் மனிதன்தான் சிறந்தவன். எனினும் மனிதப் பிறவியின் நோக்கத்திற்கே பொருந்தாத வினைப்பதிவுகள் அவனிடம் கரு அமைப்பு மூலம் அடங்கியுள்ளன.

மனித உருவம் தோன்றுவதற்கு முன்னம் ஈரறிவிலிருந்து ஐயறிவு வரையில் பிற உயிரைக் கொன்று அவற்றின் உடலையே உணவாகக் கொண்டு வாழ்ந்த பதிவுகள் பல்லாயிரம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்தன.

மனிதனாகப் பிறந்தும் ஆறாம் நிலையறிவு விரிவடைந்து சிந்தனையாற்றல் தோன்றிய வரையில் கரு அமைப்பு பதிவுகளாகிய சஞ்சித கர்மத் தொடராக விலங்கின வாழ்க்கை முறையிலே வாழ்ந்து விட்டான்.

பிற உயிரின் பிறப்புரிமையையும், சுதந்திரத்தையும் பறிப்பதாகிய, வருத்தியும் கொன்றும் வாழும் விலங்கினச் செயல் பதிவுகளிலிருந்து விடுதலை பெற மனத் தூய்மையும் வினைத்தூய்மையும் எங்கோ ஒருவர் விழிப்புணர்வால் பெற்று விட்டார். உலகில் பெரும்பாலான மக்களுக்கு இந்த அருள் விளக்கம் ஏற்படவில்லை.

இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக அறிவாலும் செயலாலும் மாற்றி, ஒருவருக்கொருவர் உதவியும் ஒத்தும் வாழவேண்டிய சமுதாய அன்புநெறிதான் மனிதனுக்கு அவசியம்.

இது மனித அறிவுக்கும் வாழ்வுக்கும் பொருத்தமான வாழ்க்கை முறை.

இதற்குப் பயிற்சியால் மனத்தூய்மையும் வினைத்தூய்மையும் பெற வேண்டும். அதன் பயனாக அறிவு விரிவடைந்து குறுகிய எண்ணங்களிலிருந்தும் செயல்களிலிருந்தும் மனிதன் விடுதலை பெற்று அறிவு விரிந்து இயற்கை நியதிகளோடும் இறைநிலையோடும் கலந்து அமைதியும் இன்பமும் பெறுவான்.

அறிவை இறைநிலையோடு இணைத்து அறவாழ்வில் பழகிக் கொள்ளாதவர்களுக்கு அவர்களுக்குள் சஞ்சித வினையாக அமைந்திருக்கும் விலங்கினப் பதிவுகளாகிய பறித்துண்டு வாழும் தன்மை பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவற்றைக் கவர்ந்து கொள்ளும் ஆசையாகப் பெருகி இந்த நாலும் எவ்வளவு இருந்தபோதிலும், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற பேராசையாகி அதற்கேற்ற செயல்களால் உடல் கெட்டு, உள்ளம் கெட்டு, மனித உறவில் இனிமை கெட்டு, தனது செயல்களைத் தொடரவும் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் தேக்கம் கொண்டு மனம் புண்ணாகி வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

மனம் புண்பட்டு இந்த நிலையிலே அமைதியிழந்து தவிப்போருக்கு நான் எனது அனுபவங்களைக் கொண்ட விளக்கம் கூறுகின்றேன்.

மறைபொருள் காந்தமானது பேரியக்க மண்டலம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. அதற்கு உட்பொருளாக இறைநிலை அமர்ந்து அழுத்தம் என்ற கவர்ச்சியாற்றலாக பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்தி வருகிறது. மனத்தால் விரிந்து அந்த இறைநிலையுணர்வோடு விழிப்பாய் இருங்கள்.

மேலும் அந்த இறைநிலையின் நுண்பகுதி விண்ணாகி விண்துகள்கள் இணைந்த பஞ்ச பூதங்களாகி சூரியன் முதலிய கோள்களாகி உலகமாகிய பரிணாம நியதியினை நினைந்து பாருங்கள். உலகில் ஓரறிவான தாவரங்களிலிருந்து ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐயறிவு என பலகோடி உயிரினங்கள் தோன்றி அவற்றின் தொடராக நாம் தோன்றி இப்போது இங்கே மனித உருவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை நினைத்துப் பாருங்கள். மனம் எவ்வளவு விரிவடைந்து எல்லை கட்டிய உணர்வுகளிலிருந்து விடுபட முடிகிறது என்ற அனுபவத்தில் காணுங்கள். மேலும் உயிர்கள் தோன்றுகின்றன, வாழ்கின்றன, முடிகின்றன. மனிதனும் இவ்வாறேதான் இயற்கை நியதி என்ற வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறான். பிறப்பதற்கு முன்னம் எப்படியிருந்தேன், இறந்த பின் எப்படியிருப்பேன், பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பத்திற்காக பிறர் வளம் பறித்து எவ்வளவு காலம் தான் வாழ முடியும்? இந்தச் செயல்களால் மனித குலத்தில் துன்பங்கள் அல்லவா பெருகிக் கொண்டிருக்கின்றன. இதே குற்றச் செயல்களையும் பழிச்செயல்களையும் நானும் செய்து கொண்டுதான் வாழ வேண்டுமா? என்று எண்ணி எண்ணி சிந்தியுங்கள். உலக ஆசைகளிலிருந்து எந்த அளவு அறிவு விடுபடுகிறதோ அந்த அளவிற்கு விரிந்த இறைநிலையோடு இணைந்து நிற்கும். மனம் அமைதி பெறும். வினைத்தூய்மையும் மனத்தூய்மையும் இயல்பாக உண்டாகும். இறையுணர்வு என்ற மனம் விரிந்த அகக்காட்சியால் பொருள், மக்கள் பற்றுக்கள் தேவைக்கு ஏற்ற அளவில் துய்க்கவும், கடமைக்கே வாழவும் ஏற்ற மனிதப் பண்பாடு ஓங்கும். மனதை விரிய விடுங்கள், விடுதலை பெறுங்கள். இந்த விடுதலைதான் பாவச் செயல்களிலிருந்து விடுதலை. இதுவே அறிவிற்கு முழுமைப் பேறாகிய முக்தி.

அன்புமிக்க அருள் விளக்கத் தொண்டன்
- வேதாத்திரி

சனி, 9 நவம்பர், 2019

திருக்குறள் உட்பொருள்

♨திருக்குறள் உட்பொருள்♨

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் "

இந்த குறளுக்கு விளக்கம் அளித்தவர்கள் எல்லோரும்;
பிற உயிர்களை கொல்லாமல்; உணவுக்கு புலால் வேண்டாம் என்று மறுத்தவர்களை மற்ற எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும் என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கம் :-

மற்ற உயிர்களைவிட மனிதனிடம் அமைந்துள்ள  ஆறாம் அறிவின் சிறப்பு யாதெனில்; மனம், உயிர், மெய் எனும் மூன்று மறை பொருட்களையும் அறியும் திறமே ஆறாம் அறிவு.இந்த நுண்ணறிவால் பிற உயிர் உணர்தலாக பெறும் இன்பத்தின் அல்லது  துன்பத்தின் அளவை யூகித்து உணர்ந்து கொள்கிறான்.துன்பம் கண்ட உயிர்களிடத்தில் இரக்கம் கொண்டு தக்க உதவி செய்து அவ்வுயிர் படும் துன்பத்தைப்
போக்குகிறான்.இது சிந்தனையாற்றல் உயர்ந்த நிலையில் ;பழக்கத்தை விளக்கத்தின் வழியில் வாழும்போது அந்த  முரண்பாடு நீங்கிவிடுகிறது.

இந்த நிலையில்  ஒரு நண்பர் இல்லத்திற்கு விருந்தினராக போகிறார்.அங்கு அவருக்கு மாமிச புலால் உணவை அன்போடு படைக்கும் போது; எனக்கு புலால் உணவு வேண்டாம் என்று கூறுகிறார். மீண்டும் விருந்து படைத்த அன்பரோ அன்பின் மிகுதியால் அவரை உண்ணும்படி வேண்டுகிறார்.உடனே விருந்தாளி இரு கைகளையும் கூப்பி புலாலை மறுத்து தனது உறுதிப் பாட்டை விளக்குகிறார்.
கைகூப்பி மறுத்த பிறகு மீண்டும் வற்புறுத்த மாட்டார்கள்.

கைகூப்பி மறுக்கும் செயல் புலால் உண்ணாமையில் அவன் கொண்டுள்ள உறுதிப்பாட்டை
விளக்குகிறது. அந்த  உறுதிப்பாடே உயிர்களிடத்தில் அவன் கொண்டுள்ள கருணயால்,அன்பால் விளைந்தது.அத்தகைய கருணை உள்ளம் கொண்டவரிடம் எல்லா உயிர்களும் அன்பு பாராட்டும்.தஞ்சமடையும்.

இந்த குறளில் சரியான கருத்து விளங்க வேண்டுமானால்;கைகூப்பி  என்ற சொல்லை மறுத்தானை என்ற சொல்லுக்கு முன் வைத்துப் பார்க்க வேண்டும்.

"கொல்லான் புலாலை கைகூப்பி மறுத்தானை
எல்லா உயிரும் தொழும்"

என்ற விளக்கம் கிடைக்கும்.

'கைகூப்பி எல்லா உயிரும் தொழும்' என்றால் கருத்து பொருந்தாது. 'கைகூப்பி மறுத்தானை எல்லா உயிரும் தொழும்' என்றால் அந்த அன்புள்ளத்திலிருந்து எழும் மன அலைச்சுழல் எல்லா உயிர்களையும் வசீகரிக்கிறது, நட்பு கொள்ளச் செய்கிறது என்று கொள்ள வேண்டும்.

-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

இந்த உட்கருத்தில்தான் திருவள்ளுவர் என்ற முனிவன் இந்த குறளை இயற்றியிருக்கிறார் என்பதை மகரிஷி அவர்கள்; திருவள்ளுவர் இந்தக் குறளை எழுதும் போது எந்த மன அலைச்சுழலில் இருந்து  எழுதினாரோ அதே அலைச்சுழலுக்கு சென்றுதான் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார்கள் என்பது புலானாகிறது.

குரு மகானின் அலைச்சுழலில் இணைவோம்!

ஓங்கி ஒலிப்போம்
வேதாத்திரியம்.

வாழ்க வளமுடன்

வெள்ளி, 8 நவம்பர், 2019

❓ கேள்வி: ஐயா, காந்தக் களத்தில் எவ்வாறு பதிவுகள் ஏற்படுகின்றன?

 பதில்: எந்தச் செயல் செய்தாலும் அது அலை வடிவத்தில் பதிவாகிறது. கையை இந்த நாற்காலியில் ஊன்றி வைத்தால் அங்கு அழுத்துகிறதல்லவா? அது தான் ஜீவனுடைய பதிவு.
நம் உடலில் உள்ள ஜீவகாந்த ஆற்றல் வெப்ப ஓட்டத்தில் சேரும் போது ஒளி உணர்வாக மாற்றம் பெறுகிறது. அதற்குரிய கருவியாகிய கண்கள் மூலம் வெளியில் ஒளி அலையாகச் சென்று கொண்டிருக்கிறது. நமக்கு முன்னால் ஒரு பசு நிற்கிறது என்று வைத்துக் கொள்வோம். 4 அடி நீளம் 2 அடி உயரமுள்ள பசு உருவத்தின் மீது நம் கண்களிலிருந்து வெளியேறும் ஒளி அலையானது மோதி, தடை ஏற்பட்டதால் அலையியக்கத் தத்துவத்தின்படி திரும்பவும் நமது கண்களுக்கு வந்து சேர்கிறது. இறையாற்றலின் தன்னிருக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலால் சுருங்கி நமது கண் கருவிழிகளில் படும்போது அவ்வளவு பெரிய பசு கொசுவை விடச் சிறிதாக ஆனால் உருவத்தில் எந்தக் குறையும் இன்றி பதிவாகி பார்வை நரம்புகள் வழியே மூளைக்குச் சென்று இதற்கு மேல் சுருங்க முடியாது என்ற நிலையில் உடல் முழுவதும் பரவுகின்ற ஜீவகாந்தக் களத்தில் பதிவாகிறது. காந்தக் களம் உடல் முழுவதும் சுழன்று கொண்டு இருப்பதால் இப்பதிவுகள் உடல் முழுவதும் அமைகிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

புதன், 6 நவம்பர், 2019

Acuity & Integrity

In this vast Universe, mankind’s evolution birth, growth, action all are nature’s ultimate unique things. Mankind is nature’s ultimate speciality. Human mind is the repository having such special treasures of nation. For long, nature’s every wonder is compressed and stored in man’s genetic center.

By understanding universal magnetism and bio-magnetism, one can know all truths of life and all secrets of Universe. In sixth sense, two higher order skills of Acuity and Integrity, is present. Acuity prevails as Science and Integrity as Philosophy. Knowledge as magnetism develops both these skills.

Spiritual knowledge the foundation of human mind, can enrich fully. In this way, if one gets to know the Unified force, Life force, Magnetism which are required to be intuitively learnt, the scientific knowledge would grow in him, the divine properties the love & compassion would blossom; his life would be calm and pleasant.

- Vethathiri Maharishi

செவ்வாய், 5 நவம்பர், 2019

"தான்" என்ற அதிகாரப் பற்றும், "தனது" என்ற பொருள்பற்றும் (EGO)

ஓர் விசித்திரமான தம்பதிகள் - "தான்" என்ற அதிகாரப் பற்றும், "தனது" என்ற பொருள்பற்றும் (EGO)
மனித உடலில் சீவகாந்தம் என்றும், பேரியக்க மண்டலத்தில் வான் காந்தம் என்றும் கூறப்படுவது எதுவோ, அதைப்பற்றி இன்னும் விஞ்ஞானம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
மனிதன் இறைநிலையை உணராததால் பேரியக்க மண்டலத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியையும் அதன் நிர்வாகத்தையும்
தெரிந்து கொள்ள முடியவில்லை.
அதனால் அவன் செய்யக் கூடியவை சிறு செயலாக இருந்தாலும்,
நான் அதைச் செய்தேன், அதைச் சாதித்தேன் என்றும்,
நான் எத்தனை பட்டம் வாங்கியிருக்கிறேன் என்றும்,
எவ்வளவு செல்வம் வைத்திருக்கிறேன் என்றும் பூரிப்பு அடையும் பொழுது மனிதனிடம் தன்முனைப்பு (Ego) உண்டாகிறது.
அந்தத் தன்முனைப்பிலிருந்து இரு எண்ணக் கோடுகள் உண்டாகின்றன.
அது -"தான்" (Possessiveness) என்ற அதிகாரப் பற்றும்,
"தனது" (Aggressiveness) என்ற பொருள்பற்றும் ஆகும்.
இவை இரண்டும் ஒரு விசித்திரமான தம்பதிகள்.
இவர்களுக்குப் பிறந்த துடுக்குத்தனமான பிள்ளைகள்தான்
ஆறு பேர்கள் அவர்கள்
பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறுகுணங்கள்.
இவற்றை, காம, குரோத, லோப மோக, மத, மாச்சரியம் என்று வடமொழியில் கூறுவார்கள்.
இந்த அறுகுண வயப்பட்டு ஒரு மனிதன் எந்தச் செயல் செய்தாலும்
அது நேர்மையாகவும் இருக்காது. நல்ல பயனையும் தராது.
இந்த ஆறுகுண வயப்பட்ட மனநிலையில் மனிதன் செயல்படும் பொழுது
ஐந்து பெரும் பழிச் செயல்களான பொய், சூது, கொலை, களவு, கற்புநெறி பிறழ்தல் ஆகிய செயல்களைச் செய்கிறான்.
உயிரை உணராததனால் உணர்ச்சி வயப்பட்ட (Emotional Mood) எண்ணங்களான சினம், பொறாமை, தோன்றி உயிராற்றலை ( Life Force ) மனிதன் இழக்கின்றான்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

திங்கள், 4 நவம்பர், 2019

அக உணர்வு மலர்த்தும் மகத்தான சீவகாந்தம்

வேதாத்திரிய மெய்விளக்கம் 04-11-2019 உலக அமைதி நாள் 04-11-0034
Image may contain: 1 person, smiling, beardஅக உணர்வு மலர்த்தும் மகத்தான சீவகாந்தம்
"சீவகாந்தம்" என்பது, இருப்புநிலை - இயக்க அலை என்ற இரண்டு தத்துவங்கள் கூட்டாகச் செயல்படும் பேராற்றலாகும்.
உடலுக்குள்ளாகக் காற்று இரத்தம் சீவகாந்தம் இவை எப்போதும் ஓடிக் கொண்டேயிருப்பதால் ஓரளவு உரசல்கள் இயற்கையாக ஏற்படுகின்றன.
இத்தகைய உரசல்கள் உடல் இயக்கம் மற்றும் மன இயக்கங்களுக்கு ஆக்க முறையில் அளவோடு இருக்கும்போது மனம் இந்த உணர்வுகளைச் சமநிலை உணர்வாக, அமைதி நிலையாக அனுபவிக்கின்றது.
எந்த விதமான உரசல் ஆனாலும் அந்த அளவிலே "சீவகாந்தம்" அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது.
"சீவகாந்தம்" அவ்வாறு மாற்றம் பெறுவதையும் அதனால் ஏற்படும் ஆற்றல் செலவையும் மனம் (Mind), உணர்வாகப் பெறுகின்றது என்பதை இயற்கையின் நியதியாக மனதில் கொள்ள வேண்டும்.
தினசரி வாழ்வின் நிகழ்ச்சிகளாக இந்த உண்மையினை மனித மனம் உணர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
எனினும், "ஆறாவது அறிவுநிலை" போதிய வளர்ச்சி பெற்றுப் புற உணர்வோடு - அக உணர்வும் மலரும் போதுதான், உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது தான் உணர்பவனையும் அறியமுடிகிறது.
அணுவே எல்லாம்
அற்புதம்! அற்புதம்! அணுதான் முதல்காந்த நிலையமாம்!
அகில தோற்றங்களும் அதனின் இயக்கமே; அகம் நோக்கி,
தற்பதங்கண்டபின் தான்ஒரே சக்தியாய் பெருவெளியாய்
தன்அசைவு அணுவானதன்மையும் உணர்கிறோம்., தத்துவமே.
(ஞானக்களஞ்சியம் கவி: 1026)
அணுவைவிடப் பெரியதுமில்லை, சிறியதுமில்லை
மனிதனே! அணுவதனை மிகச் சிறிதென்று உரைக்கின்றாய்.,
மறந்தனை நீ, அதனைவிடப் பெரிதுஎது? எனஅறிய!
(ஞானக்களஞ்சியம் கவி: 1025)
அறிவின் அளவு
அண்டமனைத்தும் ஓர் அடியால் அளக்கலாம்.,
அணுக்குள் அடக்கலாம், அவ் அறிவின் அளவையறி!
(ஞானக்களஞ்சியம் கவி: 1194)
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

ஞாயிறு, 3 நவம்பர், 2019

வேதாத்திரிய மெய்விளக்கம் ‌03-11-2019 ‌ உலக அமைதி நாள் 03-11-0034


அன்பர்களே.. நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள், கொஞ்ச நேரம் கண்ணை மூடிக் கொண்டிருந்தால் எத்தனை எண்ணங்கள் வருகின்றன? எங்கிருந்து வருகின்றன? அவ்வளவும் எங்கே அடங்கியிருக்கின்றன? எப்படி வருகின்றன?
மூன்று வயது முதல் இன்று வரையில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும் ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும்.
நாம் செய்வது எல்லாவற்றையும், இறைநிலை (Static State, Unified Force, The Source of all the Forces) கருமையத்தில் பதிய வைக்கிறது.
மனம் என்பது அலை. இறையாற்றல் என்பது நிலை. நிலை அசையும்போது படர்க்கை நிலையிலே மனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
நமக்குள்ளாக நாம் என்னென்ன செய்கிறோமோ, அவற்றை இறைநிலை கருமையத்தில் இருப்புக் கட்டி வைக்கிறது.
கருமையம் (Genetic Center) என்பது - இறைநிலை, வித்துக்குழம்பு, உயிர்ச்சக்தி என்ற மூன்றும் சேர்ந்து எந்த உயிருக்கும் அதன் உடலின் மையத்திலே ஓர் இடத்தை எடுத்துக்கொண்டு அங்கே இயங்கிக் கொண்டிருப்பது.
எந்தப் பொருள் சுழன்றாலும் மையத்தில் அழுத்தமான இடம் ஏற்படும். உடலில் ஜீவகாந்த சக்தி சுழலும் போது மையம் கொண்டு விடுகிறது. உயிர்களின் மையத்தில் அழுத்தம் உண்டாகிறது. அதைதான் கருமையம் என்று சொல்கிறோம்.
அந்த மையத்தில், நாம் பார்ப்பது, கேட்பது எல்லாவற்றையும் இறைநிலை இறுக்கி சுருக்கி இருப்புக் கட்டிக் கொள்கிறது. மீண்டும் அந்தந்த மன அலைச்சுழல் (mind frequency) வருகிற போது இருப்பில் இருக்கக்கூடியதை மூளையின் செல்கள் விரித்துக் காட்டுகின்றன.
அதுதான் எண்ணம். சுருங்கியது விரிந்து எண்ணமாக உண்டானது. எண்ணம் உண்டானதால் உடலில் உள்ள எல்லாச் செல்களும் சேர்ந்து அந்த எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்கு, செயலும் உண்டாகிறது.
செயலினால் இன்பமோ துன்பமோ அமைதியோ பேரின்பமோ உண்டாகிறது.
எண்ணம், செயல், விளைவு, இன்ப துன்ப உணர்வுகள் அத்தனையும் மீண்டும் நமக்குள்ளாக நமது தன்மைகளாகப் பதிவாகின்றன.
இப்படியே பதிந்து பதிந்து, எத்தனையோ கோடிப் பதிவுகளை நாம் வைத்திருக்கிறோம். அத்தனையும் சேர்ந்து நம் அறிவாட்சித்தரமாக (Personality) உள்ளது.


அறிவறியும் தவம்
இரு விழிகள் மூக்கு முனை குறிப்பாய்நிற்க
எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;
கருத்துக்கு இந் நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்;
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்கமாகும்.
(ஞானக் களஞ்சியம் கல்வி: 1466)


காந்த ஆற்றலின் பெருமை
அறிவே தான் "நான்" என்று ஐயமின்றி தேர்ந்தால்
அதுவேதான் படர்க்கையிலே அலைமனம் என்றறிவோம்!
அறிவதனின் இருப்பிடமோ, அடுத்த மறை பொருளாம்
‌ அதிநுண்ணிய பரம அணு; அதன்மையம் ஆகும்.
அறிவுக்கு மூலநிலை அகன்ற இறைவெளியே
அதனை வான்காந்த மென்றும், அப்பாலுக்காப்பால்
அறிவே தான் தெய்வமென்ற அகன்ற பரம்பொருளாம்;
‌ அறிவறிந்தால் அனைத்தறிவோம் அகம்தெய்வம் தானாம்.
(ஞானக்களஞ்சியம் கவி:1225)
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

வெள்ளி, 1 நவம்பர், 2019

கருமையத்தூய்மை


காந்த நிலையறியாமல் கடவுள்நிலை அறிவதோ,
கருமையம் அறியாமல் அறிவினை அறிவதோ,
மாந்தராக வாழுகின்ற மாண்புடைய எவருக்கும்
மாற்றுவழி தத்துவத்தில் விஞ்ஞானத்தில் இல்லையே!
காந்தஆற்றல் உட்பொருள், கருமையத்துட் பொருள்,
கடவுளெனும் இறைவெளியே! இயக்க ஆற்ற லும்இதே!
காந்தமெனும் நிழல்விண்கள் தன்மாத்திரை ஐந்துமாய்,
கடைநிலையில் மனமுமாய்க் கலந்துளது வெளியோடு.
(ஞானக்களஞ்சியம் கவி: 1806)
உண்மைப் பொருளாகி உணர்ந்து விளக்கினேன்
காந்த நிலை உணர்ந்திடில், கடவுள் மனம் அதனிலே,
கண்டிடலாம் அதன் மாயத் திருநடனக் காட்சியாய்.,
மாந்தருக்குள் ஊறு, ஓசை, மணம், ஒளி, சுவை, மனம்
மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்.
சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட,
சந்தேகம் சிக்கலின்றி, சாட்சி கூறும் உன்உளம்.
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொதுஇது.,
விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே!
(ஞானக்களஞ்சியம் கவி: 1658)
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!