Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 15 மே, 2015

இயற்கையை உணர்ந்து வாழ வேண்டும்

"ஆறாம் அறிவு முழுமையாகச் செயல்புரிவதற்கு உடலிலும், மனத்திலும் நல்வாய்ப்புகள் பலவற்றையும் தன்னிடத்தில் பெற்றிருக்கும் மனிதன், விலங்கினப் பதிவுகளிலிருந்து விடுபட்டு, தனது அறநெறி வாழ்வால் தான் முழுமைபெற முடியும். தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் ஐவகைக் கடமைகளையும் உணர்ந்து ஆற்றி மனிதனாக வாழ வேண்டும். இதற்காக மனதைச் சீராக இயங்கச் செய்ய தவம் என்ற சிறந்த உளப் பயிற்சியைச் செய்ய வேண்டும். மேலும் ஆறாவது அறிவை முழுமையாக இயக்கப் பழகிக் கொண்டு உடல், உயிர், தெய்வம் இம்மூன்று தத்துவங்களைப் பற்றியும் தெளிவாக உணர்வதற்கும் கூட அகத்தவம் (Simplified Kundalini Yoga) புரியவேண்டும்.
.

"ஒவ்வொருவருக்கும் - அறிவு இருக்கிறது; பொறுப்புணர்ச்சி இருக்கிறது; செயல்திறமை இருக்கிறது; வாழ்வின் அனுபவம் இருக்கிறது - இதை ஒத்துக் கொள். பிறரை மேய்ப்பதோ, அடக்கி ஆள்வதோ இன்ப ஊற்றைக் கெடுத்து விடும். நலம் செய்வதோடு விட்டுவிடு. அதற்குப் பதில் எதிர்பார்ப்பதை மறந்து விடு. .இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்குத்தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே செயல் திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையானது - வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்; மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் - இயற்கையை 'அறியாமலும்' அல்லது அறிந்தும் அதனை 'மதியாமலும்' அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக