Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 30 ஏப்ரல், 2014

வாழ்வும் - பொருளும் - பயனும் :



மனிதனுக்கு ஆக்க வாழ்வுக்காக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் இன்றியமையாத தேவைகள் நான்கு 1. அறம் 2. பொருள் 3. இன்பம் 4. வீடு பேறு. அறவழியில் பொருளீட்டி அதன் மூலம் இன்பம் துய்த்தால், தானாகவே அறிவு தடையற்ற வளர்ச்சி பெற்று முழுமைப்பேறாகிய வீடுபேறு கிட்டும். எனவே மனிதன் செய்யும் தொழில் இந்த நான்கில் ஒன்றைக் குறி வைத்துச் செயல்புரியும்போது மற்ற மூன்றும் சிறிதும் கெடாதவாறு காத்து விழிப்பு நிலையில் ஆற்ற வேண்டும்.... இந்த முறையில் தான் மனித வாழ்வு கெடாமலும் சீர்குலையாமலும் இனிமை காக்கப்படும்.
அறம் என்றால் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஒழுக்கம், கடமை, ஈகையெனும் மூன்றுறுப்புக்கள் ஒன்றிணைந்த எந்தச் செயலும் அறமேயாகும். இவ்வறவாழ்வில் பொருளீட்டி வாழ்வது மனிதனுக்குள்ள இயல்பான ஆற்றல்தான். இதனைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அறநெறி இயல்பாகவும் எளிதாகவும் அமைந்து விடும். அறவழியில் பொருளீட்டி வாழ்வை நடத்தி மிஞ்சிய பொருளைச் சேர்த்து வைப்பதும் மனித சமுதாயச் சூழ்நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட நீதியேயாகும்.
மரணம் நெருங்கும்போது அறவழியில் ஈட்டிப் பொருள் சேர்த்து வைப்பவரிடம் அறிவில் ஒரு தெளிவு பிறக்கிறது. அவன் சேர்த்து வைத்திருக்கும் பொருள் தனக்குப் பின்னால் நல்ல வழியில் மனித சமுதாயத்திற்கும் பயன்பட வழி வகுத்து விடுகிறான். பொருள்பற்று என்ற தளையிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்கிறான். அந்த அளவிற்கு அருள் பற்று மலர்ந்து விடுகிறது. மனம் இனிமையான அமைதியில் இணைகிறது. மரணம் நெருங்க நெருங்க அந்த இன்ப வெள்ளத்திலேயே மிதந்து கொண்டு இறைநிலையோடு கலந்து விடுகிறான். அறநெறி மறந்து பொருள் சேர்த்தவன் மரணம் நெருங்கும் போது அப்பொருளை எண்ணி வருந்துகிறான். இவ்வளவு பொருளையும் தவிர்க்க முடியாமல் விட்டு விட்டுப் போக வேண்டியிருக்கிறதே என்று மனம் கலக்கம் அடைகிறான். அறிவில் இருள் சூழ்ந்து கொள்கிறது. மரணம் நெருங்க நெருங்க நிமிடந்தோறும் அதிர்ச்சியோடு அச்சப்படுகிறான்.
இந்த அச்சத்தின் அதிர்ச்சியோடு அமைதியற்ற மரணம் அடைகிறான். பொருள்பற்று என்ற இருளிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அந்தோபரிதாபம் இவன் சேர்த்து வைத்த பொருளோ அறம் தெரியாத குருடர்களிடமே சேருகிறது. சூது, குடி, விபசாரம் என்னும் மூன்று வழியில் இந்தப் பொருள்கள் அனைத்தும் சூரை விடப்படுகிறது. சூரை விடுபவர்களும் அவர்கள் புரியும் பாவச் செயல்களால் தீவினைப் பதிவுகளை ஏற்றுத் தலைமுறை தலைமுறையாக உடல், மனநோய்களில் சிக்கித் தவிக்கிறார்கள் எனவே அன்பர்களே அறவழியில் பொருளீட்டுங்கள். பொருள் செழிப்பு நிச்சயமாக உண்டாகும். மீதமுள்ள பொருளில் ஈட்டும் போதே பிறர் நலத்துக்காக ஒரு சதவீதம் ஒதுக்கிச் செலவு செய்து பழகிக் கொண்டு எஞ்சிய பொருளை நல்ல முறையில் பங்கிட்டுக் கொடுங்கள். எப்போதும் மனம் பளுவற்றதாகவும் இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கும். நிலையான வாழ்வு பெறலாம். நீங்கள் விட்டுச் செல்லும் பொருள்கள் பலருக்கும் நலமளிக்கும் வழியில் செலவாகும் அதன் பயன் இன்பம் இன்பம் இன்பம்.
–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

சுவாமிஜி, இறைவனுக்கு படையல் படைப்பது எதற்காக?

மகரிஷியின் பதில் : மனித மனமானது இறைநிலையின் முடிவான பொருள். பிரபஞ்சத்தின் முதல் பொருள் இறைநிலை. அதுவே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால் திணிவு பெற்று மடிப்புற்று விண் தோன்றி அது இணைந்து பஞ்சபூதங்களாகி அதன் பதம் அடைந்த கூட்டால் ஓரறிவு உயிர்கள் தோன்றி அதிலிருந்து பரிணமித்து ஆறறிவு மனிதன் வரை அவனே தான் வந்துள்ளான்.
இறைநிலையிலிருந்து எழுந்து வந்த நிலையில் இயங்குகின்ற உயிர்களுக்குத்தான் பசி, தாகம், இன்பம், துன்பம் போன்ற உணர்ச்சிகள் உண்டு. ஆசைகள் தோன்றும். ஏன் எனில், உயிர்களுக்கு உடலும், குடலும் வந்துவிட்டது! ஆனால் அரூபியான இறைவனுக்கு உடலும், குடலும் உண்டா? அவனுக்கு பசிக்குமா? இந்த ஒரு கேள்வியை எழுப்பி மனிதன் சிந்தனையால் விரிந்து விடையைப் பெற்று விட்டால் தேங்காய், பழம் மற்றும் பட்டு நகை இன்னும் மற்ற மற்ற பொருட்கள் எல்லாம், அணு முதற் கொண்டு அண்டம் ஈராக இப்பிரபஞ்சத்தை தன்னகத்தே வைத்தும், காத்தும், இயக்கியும் வருகின்ற இறைவனுக்குத்(Almighty) தேவைதானா என்பது விளங்கிவிடும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி .

திங்கள், 28 ஏப்ரல், 2014

சித்தர்கள் என்று ஏன் அவர்களுக்கு பெயர் வந்தது?

வேதாத்திரி மகரிஷியின் விடை:"சத்து" என்பது மெய்ப்பொருளைக் குறிக்கும். "சித்து" என்பது உயிரைக் குறிக்கும். "ஆனந்தம்" என்பது மனம் பல்வேறு நிலைகளில் இயங்கிக் கொண்டிருப்பதைக் குறிக்கும். ஆக "மெய்ப்பொருள் - உயிர் - மனம்" இந்த மூன்று நிலைகளையும் "சத்து - சித்து - ஆனந்தம்" என்றும், அவற்றைச் சேர்த்து "சச்சிதானந்தம்" என்றும் வழங்குகிறோம். இதில் "சித்து" என்ற உயிரை முழுவதும் உணர்ந்தவர்கள் சித்தர்கள். உயிரின் இருப்பை, தன்மையை, இயக்கத்தை உணர்ந்ததோடு அதை நடத்தும் வல்லமையுடையவர்கள் சித்தர்கள்.ஆகவே, சித்தர்கள் என்றாலே உயிரை உணர்ந்தவர்கள் என்பதுதான் விளக்கம்.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

அகத்தவமும் அறநெறியும்

இயற்கையின் ஒழுங்கமைப்பால் மனிதனிடம் அமைந்த 'ஆறாவது அறிவு' சிறப்புற்று விளங்க மேலும் மேலும் உயர்ந்து, இயற்கையின் முழுமையை உணர்ந்து பிறவிப் பயனை எய்த மனிதனுக்கு "மன அமைதி" தேவை. துன்ப உணர்வுகள் அமைதியை குலைக்கின்றன. அறிவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. எனவே துன்பமற்ற முறையிலே மனிதன் வாழ வழிகாண வேண்டும். மனிதனிடம் தன்முனைப்பு, பழிச்செயல் பதிவுகள், மயக்கம் எனும் மூன்று களங்கங்கள் உள்ளன என்று முற்காலத்தியப் பேரறிஞர்கள் ஓர் உண்மையை உணர்ந்தார்கள். இயற்கையின் முழுத்தன்மையால் மனிதனிடம் எழுச்சி பெற்றுள்ள ஆறாம்நிலை அறிவானது தான் வளர்ச்சி பெற்று இயற்கையின் முழுநிலைமையை உணர்ந்து அமைதி பெற ஓங்கி எழும் விரைவினை தன்முனைப்பு தடை செய்கிறது. இம்மூன்று களங்கங்களைப் போக்கி மனித மனதைத் தூய்மை செய்வதற்கு அறிவிலே சிறந்த முன்னோர்கள் கண்டுபிடித்த எண்ணம், சொல், செயல் என்ற மூன்றையும் சீர்திருத்திக் கொள்ளும் பயிற்சி முறை அகத்தவமும் அறநெறியுமாகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

உலகம்

இறைநிலைக்கு எதுவுமாகும் சிறப்பாற்றல் இயல்பாக இருக்கிறது. அதற்குக் காரணம் இறைநிலை என்றால் சுத்தவெளியே அன்றி வேறு இல்லை. சுத்தவெளி என்பது ஒன்றுமில்லாத சூன்யம் என்று புலனளவில் மனித இனம் முதன் முதலில் கணித்துக் கொண்டது. ஆயினும் உண்மையில் அது நான்கு வளங்களையும் ஒன்றிணைத்த அருட்பேராற்றலாகும். அவ்வளங்கள் 1) வற்றாயிருப்பு 2) பேராற்றல், 3) பேரறிவு 4)காலம். இந்த நான்கு வளங்களையும் ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்கவும் முடியாது. இறைநிலையிலிருந்து வேறுபடுத்திக் காணவும் முடியாது.

ஒரு தண்ணீர் குழாய் அடியில் ஒரு தொட்டியை வைத்து குழாயைத் திறக்கிறோம். தண்ணீர் தொட்டியில் நிரம்புகிறது. தொட்டி நிரம்பி விட்டால், தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது. இங்கு தொட்டியின் கொள்ளளவு (capacity) தான் தண்ணீரை ஏற்றுக் கொள்வதற்கும் தள்ளிவிடுவதற்கும் காரணம். இதே போலத் தான் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல். அது போதிய செறிவு பெற்ற பின் தள்ளுவிசையாகிறது. அது அதனுடைய ஆற்றல் அழுத்தமாகத் தன்னையே நொறுக்கிக் கொண்டு இறைத்துகள்களாக மாற்றம் பெறுகின்றது. இறைநிலையின் இந்த தன்மாற்றம் நுண்ணிய துகள் பரமாணு என்ற பெயரால் வழகப்படுகின்றது. இதனை ஆங்கிலத்தில் ஈதர் (Ether) என்று கூறுகின்றார்கள்.

இதனால் பொதுவாக ஒரே ஆற்றல்தான் பேரியக்க மண்டலம் முழுவதும் ஈர்ப்பு விசையாகவும் தள்ளுவிசையாகவும் செயல்படுகின்றது. இந்த அழுத்தம் எனும் இறுக்கும் விசை எங்கும் எப்போதும் வேறுபடுவதில்லை. இறுக்கும் விசையான கூட்டு விசையும், விலக்கும் விசையான தள்ளு விசையும் பிறக்குமிடம் இறைவெளியே. தள்ளுவிசைதான் பலதரப்பட்ட ஏற்றத் தாழ்வுகளோடு செயல்படுகின்றது. வெளிச்சத்தைப் பல ஏற்றத் தாழ்வோடு பார்க்கிறோம். அங்கெல்லாம், இருட்டுக்கு ஏற்றத்தாழ்வு இல்லை. வெளிச்சத்தின் கனம் குறையக் குறைய இருட்டின் கனம் அதற்கேற்ற அளவில் அதிகமாக உணரப்படுகின்றது. இறைநிலையானது துகள்களாகி அவை இணைந்து அணுக்களாகி, அணுக்களின் செறிவு நிலைகளுக்கேற்ப பஞ்ச பூதங்களாகி, பஞ்ச பூதக் கலவையால் அண்டங்கள் பலவாகி வந்த தன்மாற்றத்தில் ஒன்றுதான் உலகம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

மனதிற்க்கான உளப்பயிற்சி


சரியானபடி மனம் என்பதை நாம் உணர வேண்டும். உயிரினுடைய படர்க்கைநிலை மனம் என்று அடிக்கடி சொல்கின்றோம். உயிர்த்துகளில் ஆதியெனும் பிரம்மம் அறிவாக ஒடுங்கி உள்ளது. அது உயிர்த்துகளிலிருந்து எழும் அலை மூலம் படர்க்கை நிலையில் மனமாக இயங்குகின்றது. உயிரினுடைய அலை இயக்கம் ஒரு அளவில் வந்து கொண்டே இருக்கிறது; ஒரு அளவில் போய்க்கொண்டேயும் இருக்கிறது. அது உயிர்த்துகளிலே தோன்றுகிறது. விரிந்து பரவி பிரம்மத்திலே லயமாகிக் கொண்டே இருக்கிறது. அலை புறப்படுகிறது. அது பரவி விரிந்து பரவெளியில் ஒடுங்கிப் போகின்றது. இவ்வாறு புறப்படுவதற்கும் ஒடுங்குவதற்கும் மத்தியிலே இருக்கக்கூடிய ஒரு இயக்கம்தான் அழுத்தமாக, அவ்வழுத்தம் ஒன்றோடு ஒன்று மோதும்போது ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாக, அதை உணர்ந்துகொள்ளக்கூடிய 'மனமாக' ஆறுவகையிலே இயங்கக்கூடிய உனனதமான வியத்தகு ஆற்றலாக உள்ளது. ஆகவே "மனம்" ஒரு நிரந்தரமான (Permanent) பொருள் இல்லை. "மனம்" என்பதை எடுத்துக் கொண்டோமானால் அது உயிரிலிருந்து வந்துகொண்டே இருக்கும் அலை இயக்கம் தான். மனம் நிற்க வேண்டுமென நினைத்தால் மட்டும் நின்றுவிடாது. பயிற்சியின் மூலமாக மனத்தைத் திருப்பி வளப்படுத்தி, முறைப்படுத்தி நம் விருப்பம்போல் எந்தெந்த முறையிலே செயல்படுத்த முடியுமோ அப்படிச் செய்ய வேண்டும். அதற்கான உளப்பயிற்சியைத்தான் "மனவளக்கலை" என்றும் "அகத்தவம்" என்றும், "அகநோக்குப்பயிற்சி" என்றும், "குண்டலினியோகம்" என்றும் "ராஜயோகம்" என்றும் பலவாறாக சொல்கிறோம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


 

வியாழன், 24 ஏப்ரல், 2014

கேள்வி : "சுவாமிஜி, செயல் செய்தால் அதற்கான விளைவை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் வினைப் பதிவுகளை தவத்தின் மூலம் போக்க முடியாதா"?


மகரிஷியின் பதில் : "அகநோக்குப் பயிற்சியின் மூலம் வினைப் பதிவுகளைப் போக்க முடியும். முதலில் மனதை உயிரில் ஒடுக்கி ஆன்ம உணர்வு பெற வேண்டும். பிறகு, உயிரை இறைநிலையில் ஒடுக்கித் தெய்வ உணர்வைப் பெற வேண்டும். இன்ப, துன்ப உணர்வுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மனிதன் இந்நிலையில் உண்மையுணர்வு பெற்றுப் பின் மனம் மற்றும் உடல் நிலைகளைக் கடந்து, உயிர் நிலையில் நிலைத்துப் பின் உயிர் நிலையையும் தாண்டித் தெய்வ நிலையில் லயித்து ஆற்றும் செயல்களெல்லாம் - கடமையுணர்வின் கீழ் எல்லோருக்கும் பயனாகும். அறிவோ, தூய்மையான மெய்ப்பொருளோடு ஒன்றி நிற்கும். இங்கு பதிவான பழிச்செயல்கள் செயலுக்கு வராதது மட்டுமல்ல, முன்பிருந்த பதிவுகள் யாவும் அடியோடு முறிந்தும் போகும்". இதனை வள்ளுவர்,
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"
என்று கூறியுள்ளார்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 23 ஏப்ரல், 2014

மனிதனுடைய வேறுபாடு

இந்த உலகத்திலே எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எங்கேயாகிலும் இரண்டு பேர் ஒரே மாதிரியாக இருக்கின்றார்களா என்று பார்த்தோமேயானால் இல்லை, இருக்க முடியாது என்றுதான் முடிவுக்கு வருவோம். என்னென்ன வகையிலே அந்த வேறுபாடுகள் மனிதர்களுக்குள்ளாக இருக்கின்றன என்று பார்த்தோமேயானால், அவற்றை ஏழு சம்பத்துகள் (Seven Values) என்று சொல்லலாம். அவை 1] உருவமைப்பும் 2] குணம், 3] அறிவின் உயர்வு, 4] கீர்த்தி, 5] உடல் வலிவு, 6] செல்வம், 7] சுகம் இந்த ஏழு சம்பத்துக்களில் தான் ஒருவருக்கொருவர் வேறுபட்டு இருப்பதை நாம் காணலாம். அப்படி ஏதேனும் இருப்பதாகத் தென்பட்டாலும் அது இந்த ஏழுக்குள் அடங்குவதாகவே இருக்கும். இந்த வேறுபாடுகள் எவ்வாறு உண்டாயின என்பதை தெரிந்து கொண்டோமானால் அந்தச் சிந்தனையிலே ஒரு அமைதி கிடைக்கும்.

ஒரு மனிதனுடைய தன்மை 16 காரணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றது. அந்த 16 காரணங்களில் எந்தெந்த அளவிலே கூடுதல் குறைதல் இருக்கின்றதோ, அதற்கு ஏற்றவாறு மேற்சொன்ன 'ஏழு விதமான' சம்பத்துக்களும் ஏற்படுகின்றன. 1] கருவமைப்பு, 2] உணவு வகை, 3] காலம், 4] தேசம், 5] கல்வி, 6] தொழில், 7] அரசாங்கம், 8] கலை, 9] முயற்சி, 10] பருவம், 11] நட்பு, 12] சந்தர்ப்பம், 13] பல ஆராய்ச்சி, 14] பழக்கம், 15] வழக்கம், 16] ஒழுக்கம். இந்தப் பதினாறு காரணங்களால் ஒவ்வொரு மனிதனும் பாதிக்கப்பட்டுள்ளான். ஒவ்வொருவருக்கும் இதில் பாதிப்புகள் சில காரணங்களினால் அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ இருக்கும். மனிதர்களுக்குள் இந்த பதினாறு அமைப்புகளும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அதனால் மனிதர்கள் மேற்சொன்ன ஏழு சம்பத்துகளில் வேறுபடுகிறார்கள். எந்த வேறுபாட்டைப் போக்க வேண்டும், எதைப் போக்க இயலாது, எப்படி நாம் மேன்மை அடையலாம் என்பதைத் தெரிந்து கொண்டு, நம் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள உதவும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

முழுமைப்பெறு

மனிதன் இறைநிலையை உணர்ந்து கொள்கிற போது தான் அறிவு முழுமை பெறுகிறது. என்றாலும் அந்த இறைநிலையே அறிவாக விளங்குகிறது என்பதை உணரும் போது தான் அறிவு முழுமையான முழுமைபெறு அடைகிறது.


இறைநிலையில் இருந்து தன்மாற்றம் பெற்று , இறைநிலை நொறுங்கி இறைதுகளாகி கூட்டு சேர்ந்து விண்ணாகி காற்று ,நெருப்பு , நீர் , நிலம் என்ற பெளதீகப் பிரிவுகளாகி , பின்னர் உயிரினங்களாகி தாவரம், புழு,எறும்பு, பாம்பு, சிங்கம் என்ற விலங்கினம் வரை ஐந்தறிவு உயிரினங்களாக வந்து, பின்னர் முதல் மனிதனாக வந்தான்.
...
முதல் மனிதனிலிருந்து கருத்தொடராக அனைத்து மனிதர்களும் வந்துள்ளனர் .எனவே இறைநிலையே தன்மாற்றமாகி எல்லா உயிர்களாகவும் வந்து எல்லா மனிதர்களாகவும் உள்ளது என்பதை உணரும் போது ஒருவருக்கொருவர் துன்பம் கொடுக்காமல் இருக்க முடியும். அப்படி துன்பம் கொடுத்தால் அது இறைநிலைக்கு துன்பம் கொடுத்ததாகும்.

எல்லா பொருட்களிலும் , உயிரினங்களிலும் இறைநிலையே உயிராகவும் , அறிவாகவும் இருக்கிறது என்பதை உணரும் போது தான் அறிந்தது சிவம் , மலர்ந்தது அன்பு அந்நிலையில் தான் கருணை பிறக்கும்.


--அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி,

திங்கள், 21 ஏப்ரல், 2014

தன்முனைப்பின் விளைவு

மனித உடலில் சீவகாந்தம் என்றும், பேரியக்க மண்டலத்தில் வான் காந்தம் என்றும் கூறப்படுவது எதுவோ, அதைப்பற்றி இன்னும் விஞ்ஞானம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. மனிதன் இறைநிலையை உணராததால் பேரியக்க மண்டலத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியையும் அதன் நிர்வாகத்தையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவன் செய்யக் கூடியவை சிறு செயலாக இருந்தாலும், நான் அதைச் செய்தேன், அதைச் சாதித்தேன் என்றும், நான் எத்தனை பட்டம் வாங்கியிருக்கிறேன் என்றும், எவ்வளவு செல்வம் வைத்திருக்கிறேன் என்றும் பூரிப்பு அடையும் பொழுது மனிதனிடம் தன்முனைப்பு உண்டாகிறது.
அந்தத் தன்முனைப்பிலிருந்து இரு எண்ணக் கோடுகள் உண்டாகின்றன.

அது, "தான்" என்ற அதிகாரப் பற்றும், "தனது" என்ற பொருள்பற்றும். இவை இரண்டும் ஒரு விசித்திரமான தம்பதிகள். இவர்களுக்குப் பிறந்த துடுக்குத்தனமான பிள்ளைகள்தான் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறுகுணங்கள். இவற்றை, காம, குரோத, லோப மோக, மத, மாச்சரியம் என்று வடமொழியில் கூறுவார்கள். இந்த அறுகுண வயப்பட்டு ஒரு மனிதன் எந்தச் செயல் செய்தாலும் அது நேர்மையாகவும் இருக்காது. நல்ல பயனையும் தராது. இந்த ஆறுகுண வயப்பட்ட மனநிலையில் மனிதன் செயல்படும் பொழுது ஐந்து பெரும் பழிச் செயல்களான பொய், சூது, கொலை, களவு, கற்புநெறி பிறழ்தல் ஆகிய செயல்களைச் செய்கிறான். உயிரை உணராததனால் உணர்ச்சி வயப்பட்ட (Emotional Mood) எண்ணங்களான சினம், பொறாமை, தோன்றி உயிராற்றலை மனிதன் இழக்கின்றான்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

 

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

விந்து, நாதம்

விந்து, நாதம் இவைகளை ஆதாரமாகக் கொண்டே இந்த உடல் உருவாகி, வளர்ச்சி பெற்று, இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதேபோல் அறிவும் உடலை ஆதாரமாகக் கொண்டு இயங்கினாலும் கருவையே மூலமாகக் கொண்டு இயங்குகிறது. திரியை மூலமாகக் கொண்டே விளக்கு எரிவது போல் - வெளிச்சம் தோன்றுவதுபோல் - வித்தை ஆதாரமாகக் கொண்டே உடலியக்கம் நடைபெறுகிறது. அறிவியக்கம் நடைபெறுகிறது. அறிவின் பிறப்பிடமாகிய கருவில் ஞாபகத்தை ஒருங்கச் செய்து அங்கேயே ஒன்றி ஒன்றிப் பழக்கம் செய்துகொள்ளும் முறையே தவம் எனப்படும்.

சம்பவக் கற்பனைகள், சம்பவ ஞாபகங்கள் என்னும் எண்ண அலைகளின் மூலம் உடலில் விளையும் உயர்தரமான காந்த சக்தி சூழ்நிலைக் கவர்ச்சியால் வீணாகிக் கொண்டே இருக்கிறது. எண்ணங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இந்தச் சக்தி உடலில் சேகரமாகி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. அதைத் தாங்கும் வன்மையும் உடலுக்கு ஏற்படுகிறது. அதனால் அறிவுக்கு நட்பும், உறுதி, ஆராய்ச்சி வேகம் கூடிக் கொண்டே இருக்கும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 19 ஏப்ரல், 2014

மனிதகுல வாழ்வைச் சீரமைக்க ஐவகைச் சிறப்புத் திருத்தங்கள்

உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று, உடம்பினையானிருந்து ஓம்புகின்றேனே" என்பது அறிஞர் திருமூலர் வாக்கு. பெரு மதிப்புடைய மனித உடல் இறையாற்றளால் மிகச் சீர்மையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையறிகிறோம். எனினும், ஓரறிவு முதல் ஆறறிவு வரையில் பலகோடி தலைமுறைகளில், அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் இவற்றால் உடலும் மனமும் அமைப்பிலும் இயக்கத்திலும் சிலபல சீர்கேடுகள் அடைந்துள்ளன. அதனால் மனிதனின் உடலிலும், மனதிலும் நோய்கள பெருகிக் கொண்டிருக்கின்றன. மனிதகுல வாழ்வைச் சீரமைக்க வேண்டுமானால் ஐவகைச் சிறப்புத் திருத்தங்கள் வேண்டியுள்ளன. அவை:
1) உடல் நலச் சீர்மை
2) மன வளச்சீர்மை
3) நட்புநலம் காக்கும் அறநெறி
4) கருமையத் தூய்மை (தீயவினைப்பதிவு தூய்மை)
5) இறையுணர்வு (பிரம்மஞானம்)
என்பனவாகும். இந்த ஐவகைச் சீரமைப்புப் பயிற்சிகள் ஒன்றிணைந்த வாழ்க்கைவள விஞ்ஞானம் தான் "மனவளக்கலை" பயிற்சி முறையாகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

அனாவசியமான கற்பனையும் எதிர்பார்ப்பும் வேண்டாம்



கடவுளிடம் போய், "ஐந்து தேங்காய்கள் உடைக்கிறேன். அந்த வேலையை முடித்துக் கொடு" என்று கேட்கிறோமே! இந்த வியாபார நுணுக்கம் எல்லாம் அவனுக்குத் தெரியாது. கடவுள் இறங்கி வருபவன் இல்லை. 'ஆயிரம் கோடி தேங்காய்களை உற்பத்தி பண்ணுபவன் நானாக இருக்கிறேன். ஒவ்வொரு தேங்காயிலும் அணுவாக இருப்பவன் நானாக இருக்கிறேன். ஐயோ பாவம்! இவர் எனக்குத் தேங்காய் கொடுக்கிறாராம்..!' ...என்று தான் எண்ணுவானே தவிர, ஒரு தேங்காயாக இருந்தாலும் ஆயிரம் தேங்காய்களாக இருந்தாலும் நமது வாய்க்குத்தான் தேங்காயே தவிர, கடவுளுக்கு 'அதைக் கொடுக்கிறேன். இதை கொடுக்கிறேன்' என்று பேரம் பேசுவது உதவாது. அனாவசியமான கற்பனைகள் ஏமாற்றத்தைத் தான் வாழ்க்கையில் உண்டாக்கும். அதை எல்லாம் விட்டு விட்டு, இன்றிலிருந்து செய்ய வேண்டியதைச் செய்தால் பெற வேண்டியதைச் சரியாகப் பெறலாம்.

'என் கணவரிடத்திலிருந்து நான் இன்னது பெற வேண்டும். அதற்கு நான் என்ன செய்து, அவர் மனம் திருப்தியடைந்து அவர் செய்வார்' என்பதை மனைவி தெரிந்து கொள்ள வேண்டும்.

'மனைவியிடத்திலிருந்து இந்தந்த முறையில் இன்னது வேண்டும், அதற்கு என்னென்ன கடமைகளைச் செய்தால் அது கிடைக்குமோ, அதைச் செய்ய வேண்டுமே தவிர, எதிர்பார்த்து பயமுறுத்தினால் ஒரு நாளைக்குத்தான் கிடைக்கும். அதற்கு மேல் விரோதத்தைத்தான் உண்டு பண்ணும்'.

நம் மனதை மாற்றிக் கொள்ளக்கூடிய வளம் பெற வேண்டும். மனப்பயிற்சி பெற தவத்தையும் (Kundalini Yoga), அகத்தாய்வுப் (Introspection) பயிற்சிகளையும் செய்து வந்தால் தெளிவு உண்டாகும். இதுவரைக்கும் தெரிந்து கொள்ளாத இயற்கை இரகசியங்களையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் மேலும் அறிவு உயர்ந்து, மனவளம் பெற்று, உடல் நலம் பெற்று, வாழ்க்கையில் மேம்பட்டு சிறப்பாக வாழ்வதற்கு "மனவளக்கலைப் பயிற்சி உதவும்".

குறை கூறுதல் (Comments), கட்டளையிடுதல் (Commands), வற்புறுத்துதல் (Demands) என்ற மூன்றையும் ஒழித்துவிட்டோம் என்று சொன்னால் நாம் எல்லோருக்கும் நல்லவர்களாக மாறி விடுகிறோம். உலகமே நமக்கு நட்பாக மாறி விடும். அந்த முறையில் நம்மை மாற்றியமைத்துக் கொண்டால்தான் அமைதி வரும். வேறு எந்த வகையிலும் பிறரைப் பயமுறுத்தி, வேண்டி, அமைதியைப் பெற முடியாது.

"ஆசை அறுமின்காள் ஆசை அறுமின்காள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்காள்"

என்று திருமூலர் சொல்கிறார். ஆசை என்றால் கற்பனையாக எதிர்பார்ப்பதாகும். அந்த எதிர்பார்ப்பு வேண்டாம். ஏன்? ஏதாவது வரவேண்டும் என்று சொன்னால், என்ன செயல் செய்திருக்கிறோமோ, அந்த வினைப்பயன் வழியாகத்தான் விளைவு வரவேண்டும். கேட்டுக் கேட்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் வராது.

வியாழன், 17 ஏப்ரல், 2014

ஐயா, நான் இதுவரை வாழ்வில் உண்மைக்கும், நேர்மைக்கும் மதிப்பளித்து வாழ்ந்து விட்டேன். ஆனால் நான் பெற்றதோ, துன்பமும் கஷ்டமுமே ஆகும். இப்போது நேர்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் என்ன செய்ய?

மகரிஷியின் பதில்:
அறநெறியில் நம்பிக்கையோடு தான் மனிதன் வாழ்ந்தாக வேண்டும். வினைப்பதிவுகள் தீரும் காலத்தில் துன்பம் தோன்றும். அதை அனுபவித்துத்தான் தீர்க்க முடியும். ஆன்மீகப் பயிற்சிகள் உங்களுக்கு இதை மாற்றும் மனவலிமையைக் கொடுக்கும். அதற்கு வேறு மாற்று வழியில்லை....

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் நேர்மையற்ற முறையில் சிறிது காலம் வாழ்ந்து பாருங்கள். பிறகு உண்மை புரியும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 16 ஏப்ரல், 2014

பகைவனுக்கருள்வாய்


நமக்கு தீங்கு செய்பவர்களிடம் சினம் கொள்ளாமல் இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஒருவர் நமக்குத் தீங்கு செய்தால் உண்மையிலே அவர்மீது இரக்கம் கொண்டு அவரை நாம் வாழ்த்த வேண்டும். அவருக்கு எந்த முறையிலே நலம் செய்ய வேண்டுமோ அந்த வகையிலே நலம் செய்யத் தான் வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு மனிதனிடத்தும் செயல் பதிவுகள் உள்ளடங்கியுள்ளன. என்றோ ஒரு காரியம் தவறாகச் செய்தாலும் அந்தத் தவறு பாவப் பதிவாகப் பதிந்து காலத்தால் அதற்குரிய துன்பத்தை ஒவ்வொ...ருவரும் அடையத்தான் வேண்டும். இது இயற்கை நியதி. அவ்வாறு காலம் வரும் போது ஒரு சிறு துன்பமோ, பெரும் துன்பமோ விளைந்தே அந்தப் பதிவு வெளியேறி விட வேண்டும். அதற்கு இயற்கை வேரொருவரையும், நம்மையும் இணைத்து நமக்கு அவர் மூலமாக வருத்தத்தை தருவதற்கு ஏற்ற செயல் விளையலாம். எனக்கு அந்த வருத்தமும் வந்தது என்றால் அது அவருடைய தவறன்று. ஏற்கனவே என்னிடம் உள்ள பாவப்பதிவு வெளியாகும் சந்தர்ப்பம், வெளியாக வேண்டிய காலம் வந்தது; அந்தக் காலத்திற்கு அவரை இயற்கை கருவியாகக் கொண்டது.
அது மாத்திரமின்றி, ஒன்றுமேயறியாத அவரை எனக்கு வருத்தம் ஏற்படச் செய்து நான் வருந்த அவர் பழியை ஏற்றுக் கொள்ளலாமா? இவ்வாறு இயற்கை ஒரு அப்பாவியை அதற்கு உபயோகிக்க முடியுமா என்றால் இயற்கையிலே எந்தத் தவறும் இருக்க முடியாது. ஏற்கனவே, அவர் ஒரு தவறு செய்ய எண்ணியிருப்பார். அதைச் செயலிலே கொண்டு வர முடியவில்லை. அது அப்படியே பதிவாகி இருக்கிறது. காலத்தால் எண்ணிய எண்ணம் எப்படியும் செயல்பட வேண்டும் - அவ்வாறு அவர் ஒருவருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணிவிட்டால், அதற்குரிய காலத்தில் அந்தத் தீமை செய்தே ஆக வேண்டும். எண்ணத்தை அழிக்கவில்லையென்றால், அவரது எண்ணம் செயலாக வேண்டும். இங்கே நம்மிடத்தே செயல் பதிவு நீங்கவும் வேண்டும். இரண்டையும் இணைத்து இயற்கை ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அவர் மூலம் நமக்கு ஒரு வருத்தத்தை தந்தது. இதை உணரும் போது நாம் அவரை வாழ்த்தவே வேண்டும். நாம் மகிழ்ச்சியடையவும் வேண்டும்.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

குண்டலிணி யோகத்தின் மகத்துவம்

உயிரை அறிய வேண்டுமாயின் படர்க்கை நிலையில் சென்று அலைந்து செயல்படும் மனதை உள் அடங்கச் செய்ய வேண்டும். மனம் எப்போதும் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். உடலில் இரத்தச் சுழல் உள்ளவரை மனமும் சுழன்று கொண்டுதான் இருக்கும். தூங்கும்போது மனம் ஒடுங்குகிறது என்கிறோம். அப்போதும் அது இயங்கிக் கொண்டு தான் இருக்கும். ஆனால் அது புலன்களைக் கடந்து சூக்குமத்தில் இயங்குகிறது. இதையே நடுமனம் (Sub-conscious) அடிமனம் (Super conscious) என்கிறோம். அலையும் மனதை வெளியில் அலைய ஓடாமல் தடுத்து உயிரிலேயே உள்ளொடுங்கும்படி செய்வது தான் அகத்தவம் - அக நோக்குப் பயிற்சியாகும். மனிதன் தான் பிற புறப் பொருள்களோடு தொடர்பு கொண்டு இன்ப துன்ப அனுபவங்களைப் பெறும்போது மனமாக விரிந்து, செயல்படுகிறான். தானே தான் உள்ளொடுங்கும் போது உயிரில் லயமாகி ஆன்மாவாக விளங்குகிறான். தானே தான் பரம்பொருளோடு கலந்து நிற்கும்போது - உயிரின் இருப்பு நிலையான மூல நிலையை அடையும் போது பரம்பொருளாகவும் இருக்கிறான். உயிர் வேறு, மனம் வேறு அல்ல என்ற பேருண்மையை உணர்ந்தும் ஒவ்வோர் உயிரிடத்தும் அன்பும் மதிப்பும் ஏற்பட்டு பிற உயிர்கள் மீது பெருங்கருணையும் தோன்றிவிடும்.

குண்டலினி யோகம் மனிதனை இந்த அளவிற்கு உயர்த்துகின்றது. இதைத் தான் மனவளக்கலை என்று சொல்கிறோம். ஓடித்திரியும் மனதை நம் விருப்பப்படி செயலாற்றும்படி செய்வதற்குத் தான் நமது எளியமுறைக் குண்டலினி யோகம் தேவைப்படுகிறது. ஓடும் மனதை உயிரில் லயிக்கும்படி செய்வது தான் (Apperceptive Meditation) மனதடக்கு முறைத்தவம், புறப்பொருட்களோடு நம் புலன்கள் மூலம் தொடர்பு கொள்ளும்போது நம் மனம் - நாமே - அதுவாக மாறிவிடுகிறோம். நாம் ஒரு பொருளைக் காண்கிறோம். அப்பொருளை நினைக்கும்போது அந்தக் காட்சியே ஒரு அச்சாக (Mould) அமைந்து அதை நினைக்கும்போதெல்லாம் அதையே நமது அகக் காட்சியாகக் காண்கிறோம். ஆகவே அவற்றை புலன்கள் மூலம் ஒலியாகவோ, ஒளியாகவோ, உணர்வாகவோ, ருசியாகவோ அனுபவிக்கும் போது உயிராற்றல் நம்மிடம் மிகுந்திருப்பின் இன்ப உணர்வாகவும், உயிராற்றல் குறைந்து உடல் தாங்க இயலாத போது துன்ப உணர்வாகவும் பெறப்படுகின்றது. இதைத்தான் போத அறிவு (conscious mind) என்கிறோம்.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி


 

திங்கள், 14 ஏப்ரல், 2014

ஆசை நிறைவேறும் :



ஆசை எழும்போது, அதாவது ஏதோ ஒரு பொருளை நாம் விரும்பும் போது அறிவிலே விழிப்போடு இருக்க வேண்டும். தவறி...
னால் பல தீய விளைவுகள் உண்டாகும். வாழ்க்கையில் எளிதில் தீர்க்க முடியாத பல சிக்கல்கள் தோன்றிவிடும். ஒரு பொருள் மீது ஆசை எழும்போது அதனோடு உறவு கொண்டு கண்ட முன் அனுபவம், தற்காலச் சூழ்நிலை, எதிர்கால விளைவு இம்மூன்றையும் ஒன்றிணைத்து நோக்க வேண்டும். அப்போது தான் அறிவு தனது நிலை பிறழாது, மயக்கமுறாது. நலம் என உணர்ந்தால் அளவோடு முறையோடு அப்பொருளை பெறவும், துய்க்கவும் முயலவேண்டும். அறிவில் விழிப்போடு இருக்கும் வரையில் மாணா மனநிலை என்பது ஏது?

ஒருவருக்குப் பல பொருட்கள் மீது விருப்பம் எழலாம். அவற்றை வரிசையாகக் குறித்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு பொருளின் தேவை இன்றியமையாததா, அதனை அடையத் தனது ஆற்றலும் சூழ்நிலைகளும் ஒத்து இருக்கின்றனவா, கணிக்கும் அல்லது எதிர்பார்க்கும் விளைவுகள் என்ன, இவற்றைக் கொண்டு சிந்தனை செய்யுங்கள். தேவையும், ஆற்றலும், சூழ்நிலையும், விளைவாகக் காணும் நலனும் ஒத்திருந்தால் அதனை அடைய முறையான முயற்சியை உருவாக்கிக் கொள்ளுங்கள். செயலாற்றி வெற்றி பெறுங்கள். இல்லையெனில் "இன்னின்ன நிலைமைகளால் இந்தப் பொருள் மீது ஆசைக் கொள்ளுதல் தவறு, எனவே இந்த ஆசையை நான் நீக்கிக் கொள்கிறேன்" என்று பலதடவை காலை மாலை அதற்கென உட்கார்ந்து தானே மனதிற்குள் உறுதி கூறிக்கொள்ள வேண்டும். சில குறிப்பிட்ட பொருட்களைப் பற்றி இவ்வாறு முடிவு செய்து கொண்டால் மீண்டும் பிற பொருள் மீது முறையற்ற அவா எழாது. நலம் தரும் பொருட்களைப் பெறத் தேவையான ஆற்றலும் நன்கு வளர்ச்சி பெறும். அடுத்தடுத்து வாழ்வில் வெற்றிகள் பல கிட்டும். வாழ்வில் முழு அமைதியும் பெறலாம். இவ்வழியில் ஆசையை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,
அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு".
.
"சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு"
.
அகத்தவப் பயன்கள் :
"அறிவதனைக் கருவினிலே இணைத்து தவம் ஆற்ற
ஐம்புலன்கள் அமைதி பெறும் ஆறுகுணமும் சீராம்
அறிவுதன் விழிப்புநிலை பிறழாத தெளிவில்
ஐந்து பெரும் பழிச் செயல்கள் விளைய வழியேது?
அறிவு உயிரில் அடங்கி அந்நிலையில் மேலும்
ஆழ்ந்து ஒடுங்கித் துரியம் நிற்க முன்வினைகள் போகுமே;
அறிவு துரியாதீத நிலை நிற்க நிற்க
ஆதியாம் மெய்ப்பொருளாம், அறும் பிறவித் தொடரே."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
-
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மனதின் பத்துப் படிகள் :



உடலை இயக்குவது உயிரின் வேலை. அதனைப் பாதுகாத்து, அணு அடுக்குச் சீர் குலையாமல் தடைவரும் போது, அதை உணரும் போது மனமாக விரியும் போது, உணர்ந்த தடையை நீக்க முயல்வது உயிரின் இரண்டாவது வேலையாகும். தடையால் உணர்ச்சி ஏற்படவே அதனைப் போக்கப் பொருள் அல்லது சூழ்நிலை அல்லது நட்பு வேண்டும். அப்போது தேவை உருவாகிறது. உணர்ச்சியாக மாறி நிற்பதும் ...
தேவையாக எழுந்து நிற்பதும் உயிர்தான். தேவை ஏற்படவே அதைச் சமன் செய்ய முயற்சி தோன்றுகிறது. முயற்சியின் காரணமாக செயல் மலர்கிறது. செயலானது இயற்கை ஒழுங்கமைப்பின் படி விளைவு தருகிறது. விளைவை உயிரானது அனுபோகம் ஆகப் பெறுகிறது. அனுபோகத்திலிருந்து இன்ன செயல் செய்தால் இன்ன விளைவு வரும். அதனால் இன்ன அனுபவத்தைப் பெறலாம் என்ற அனுபவத்தை உயிர் பெறுகிறது. உயிர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி, அதன்பின் இன்னவிதமான சூழ்நிலையில் இன்னவிதமான உணர்ச்சி தோன்றியதானால் இன்னவிதமாகச் செயல்பட வேண்டும் என்று ஒரு தெளிவினைப் பெறுகிறது. இறுதியாக எல்லாவற்றையும் தொகுத்து ஒரு முடிவினையும் உயிர் செய்து வைத்துக் கொள்கிறது. எனவே உயிரே உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல்விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற பத்து கட்டமாக உயர்ந்து படர்ந்து நிற்கிறது.

எனவே உயிரினது படர்க்கை நிலை ஆற்றல் தான் மனம். ஆங்கிலத்தில் (Psychic extension of the life energy is mind) எனலாம். உடல் வரையில் இன்ப துன்ப அனுபோகங்களில் குறுகி நில்லாமல் ஆன்மா பற்றியும், இறைவனைப் பற்றியும் ஆராய உயரும் நிலையில் இந்த மனத்தையே அறிவு என்கிறோம்.
*************************************************************
.
"அவரவர் வாழ்வைச் சீரமைக்கும்
அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே."
.
"ஒருவர் பெற்ற ஞானத்தைப்
பரிசோதிக்கக் கருவி ஒன்று இருக்குமேயானால்
அது அவரது குடும்பத்தின் அமைதி தான்."
.
"நீங்கள் கற்க வேண்டிய எல்லாப் பாடங்களையும்
குடும்பத்துக்குள்ளேயே கற்றுக் கொள்ளலாம்."
.
"முற்கால வாழ்க்கையில் கண்ட அனுபவம்,
இக்காலத்தேவை நிகழ்ச்சிகள், சூழ்நிலை,
பிற்கால விளைவுகளை யூகித்துக் கடமைசெய்,
முக்காலம் கண்டமுனிவன் நீயே அங்கே."
.
பிரம்மம் :
"நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன் அஃது
நினைவதனின் முடிவாகும், மூலமாகும்
சூனியமே! தோற்றமெலாம் அதிலிருந்தே!
சுத்த வெளி! மௌனமது! உவமை இல்லை!
ஊன் உருவில் ஓடும் உயிர்ச்சுழற்சி வேகம்
உற்பத்தி செய்கின்ற மின் சாரத்தில்
தோன்றுகின்ற அலை இயக்கம் அறிவு ஆகும்.
சுயநிலையில் தியானித்து அறிதல் வேண்டும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 12 ஏப்ரல், 2014

உலகை வாழ்த்துவோம்



 சாதாரணமாக இருக்கக் கூடியவர்களை வாழ்த்தும் போது நன்றி உணர்வு தான்! நமக்கு நன்மை செய்தவர்களை வாழ்த்தும் போதும் நன்றி உணர்வு தான். ஆனால் தீமை செய்யும் ஒருவனை வாழ்த்தும்போதோ அவன் நல்லவனாக மாறுகின்றான். கெடுதல் செய்பவன் ஒருவன் இந்த உலகத்தில் வளர வளர அவனிடமிருந்து வரக்கூடிய அலைகளினால் அவன் குடும்பம் அவனைச் சேர்ந்தவர்கள் அவ்வளவு பேரும் பாதிக்கப் படுகிறார்கள்....

அவனை நல்லவனாக மாற்றிவிட்டால், அவனைச் சூழ்ந்த அத்தனை பேருக்கும் அது பலன் தானே கொடுக்கும்? உங்கள் வாழ்த்தின் பலன் எந்த அளவு விரிந்து கொண்டே போகிறது பாருங்கள்! அப்படி இந்த உலக சமாதானம் வரவேண்டும் என்று சொன்னால், வாழ்த்தின் மூலமாகவே இந்த உலகம் முழுவதும் சேர்ந்து பலனை உணர்ந்து ஒருவருக் கொருவர் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

பிறகு தலைவர்களை வாழ்த்துவது அல்லது இன்னும் மற்ற எதிரிகளை வாழ்த்துவது என்று ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே உலக சமாதானம் வந்து விடும். அந்த அளவு ஒற்றுமை ஏற்பட்டு விடும். இதை மனம் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
உலக நல வாழ்த்து :

"உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்
கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும்
நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்".

.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

அறிவின் உண்மை நிலை

உடலோ பல அணுக்களால் கட்டப்பட்ட ஒரு தோற்றம். அணுவோ எல்லாம் வல்ல அருட்பேராற்றலின் நுண்ணிய சுழலலை. அணுவினால் கட்டப்பட்ட தோற்றம் இந்த உடல். உடலுக்குள் அந்த நுண்ணிய பொருளாக உள்ள அணுவோ உயிர். அணுதிரட்சியில் உடலாகவும் இருக்கிறது. உயிருக்கு மத்தியில் தொடங்கி பேரியக்க மண்டலம் முழுவதும் விரிந்து எல்லையற்ற விரிவு உடைய ஒரு அரூபநிலையே அறிவு....

நீ உன் உடலை நினைத்துப் பார். நீ புலன்கள் வரையில் உன்னை எல்லை கட்டிக் கொண்டு உடலே நான் என்று எண்ணுகிறாய். உடலில் உள்ள உயிரை நினைத்து பார். உலகிலுள்ள எல்லா உயிர்களோடும் பேரியக்க மண்டலத்தில் ஆற்றல் களமாக நிறைந்துள்ள பரமாணு மண்டலத்தோடு ஒன்றுபட்டிருக்கிறாய். இந்த நினைவில் நீ ஆன்மாவாய் பேரியக்க மண்டலம் முழுவதும் பரவியுள்ள சக்தியாக உணர்கிறாய்.
அதற்கும் மேலாக நுணுகி நின்று உன் அறிவை நோக்கு. உயிராற்றலின் மையத்தில் தொடங்கி, உடலிலே பரவி பேரியக்க மண்டலம் முழுவதும் பரவி அதற்கு அப்பாலும் உள்ள பிரம்ம நிலையாய், சுத்தவெளியாய் உள்ளதை உணர்வாய். உனது அறிவின் உண்மை நிலையை உணர்ந்த பின் உனது அறிவின் விரிவே அன்பாக மலர்ந்து உயிர்கட்கு உதவி செய்து, உயிர்த் துன்பம் போக்கவும், எந்த உயிருக்கும் துன்பம் தராமல் செயலை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும், என்ற விழிப்பு நிலையும் வந்துவிடும்.

இந்த அறிவு நிலையிலேயே உன்னை உடலாகவும், உயிராகவும், அறிவாகவும் உணர்வாய். உனது அறிவு எல்லையற்றது, விரிந்து அரூபமாக உணரும் நிலையில் அறிவேதான் பிரம்மம் என்ற உண்மையை உணர்வாய்.

இந்த உள்ளொளியில் தன் முனைப்பு என்ற இருள் மறைந்துவிடும். ஒரு தலைப்பட்சம், வெறுப்புணர்ச்சி, பொறாமை, கடும்சொல் நீக்கி நீ உன்னை உத்தமப் பொருளான இறைவனாகவே காண்பாய். உன் அறிவை அறிந்த பேரறிவால் எந்த ஒன்றையும் குறிப்பால் உணர்ந்து தக்கபடி கடமையாற்ற முடியும்.

உன்னுடைய நிலையை உனக்கு உட்பொருளாக உள்ள ஆன்மாவை உணர்ந்து கொண்டால் உடல், உயிர், மனம் என்ற மூன்றையும் அறிந்து கொள்ளும் அறிவு உண்டாகும். அந்த அறிவைக் கொண்டு எவருள்ளத்தும் எழும் எண்ணங்களையும் செயல்களையும் உணர்ந்து தக்கபடி வெற்றியோடு உன் கடமையாற்றலாம். அகம் என்பது ஆன்மாவைக் குறிப்பதாகும். அது மனிதனுடைய கருமையத்தில் இறைநிலையையும் அதன் அளவற்ற ஆற்றலையும் சுருக்கி வைத்திருக்கும் தெய்வீக நிலையம்.

ஆன்மாவை உணர்ந்தவர் ஆன்மாவில் இயங்கும் அறிவை தெய்வமாக உணர்வார். ஆகையால் ஆன்மாவை அதன் இருப்பு, இயக்கம், விளைவு இவைகளை சிறிது கூட சந்தேகமின்றி உணர்ந்து கொள்ள வல்லவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர்.


-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 10 ஏப்ரல், 2014

மனவளக்கலைப் பயிற்சி

பொருளியல் அறிவோடு 'உயிரியல் அறிவும்' வேண்டும். அப்போதுதான் மனிதனுடைய அறிவு சமநிலை ஆகும். இல்லையானால் ஒரு பக்கம் மட்டும் பளு சேர்ந்த மாதிரி (one sided load) பொருள் வயப்பட்ட அறிவிலே மாத்திரம் இருக்கும்போது உணர்ச்சி வயப்பட்ட செயல்களாகவே இருக்கும். ஆராய்ச்சி வயப்பட்ட செயல்களோ, விளக்கத்தின் வழியே செய்யும் செயல்களோ இருக்க முடியாது. எனவே, இந்தப் போக்கிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு ம...ுதலில் மனதைப் பழக்க வேண்டும். ஏனென்றால் வாழ்க்கையிலே புலன்கள் மூலமாகப் பொருட்களோடு தொடர்பு கொண்டு அது ஒரு வடிவம் ஆகின்றது; அதிலே ஒரு குணமாகின்றது (Taking of shape and Image) இப்படியே வடிவமும், குணமும் மனநிலையில் எடுத்துப் பழகிக் கொண்டு உள்ளோம். அதேதான் திருப்பித் திருப்பி வரும். அதிலிருந்து தன்னை மாற்றி, உயிர்வயப்பட்டு உயிராகவே நினைக்க வேண்டும் என்று சொன்னால், புலன் வயப்பட்ட அறிவிலிருந்து தன்னை விடுவித்து உயிருக்குக் கொண்டுவர வேண்டும்.
மனதை அவ்விதத்தில் 'மனவளக்கலை' பயிற்சியாகிய 'குண்டலினியோகத்தில் பழக்க வேண்டும். நமது மனவளக்கலை பயிற்சி நான்கு அங்கங்களைக் கொண்டது. தவம் (Meditation), தற்சோதனை அல்லது அகத்தாய்வு (Introspection), குணநலப் பேறு (Sublimation), முழுமைப்பேறு (Perfection) என்பதாகும். தவத்தினால் (Meditation) உயிரின் படர்கைநிலை கழிந்து அடக்கநிலை கிடைக்கிறது; உயிரிலேயே ஒன்றி நிற்கிறோம். விவகாரங்களிலிருந்து விடுபட்டு நிற்க மனத்திற்குத் திறமை கிடைக்கிறது; மன வலிமை (Will Power) கிடைக்கிறது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 9 ஏப்ரல், 2014

யோகம், லயம், சம்யம், தவம்,

யோகம், லயம், சம்யம், தவம், இவையெல்லாம் ஒரே பொருளைத் தான் குறிக்கும் :

நமது நாட்டிலே, இன்னும் மேல் நாட்டிலே கூட யோகம் என்ற சொல்லுக்குச் சரியான விளக்கம் பெற முடியவில்லை. பெரும்பாலோர் உடற்பயிற்சியைத்தான் யோகம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாகச் சிரசாசனம், சர்வாங்க ஆசனம் போன்ற பயிற்சிகளை யோகப் பயிற்சி என்றும், அதோடு இணைந்த உடற்பயிற்சிகளை யோகம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல.... "யோகம்" என்ற பயிற்சியில் இதெல்லாம் ஒரு கட்டம் தான். "உடலையும் - உள்ளத்தையும்" சரியாக வைத்துக் கொண்டு, பிறவியின் நோக்கத்தை முடிக்க வேண்டிய அளவுக்கு, மனிதன் அறிவிலே உயர்ந்து கொண்டு வருவது தான் 'யோகம்'.

யோகம், லயம், சம்யம் இவையெல்லாம் ஒரே பொருளைத் தான் குறிக்கும். 'இயற்கை இருக்கிறது. அறிவு இருக்கிறது'. மனித வாழ்க்கையில் இவ்விரண்டும் தெளிவுபட வேண்டும். இயற்கையை உணர்ந்து, இயற்கையோடு ஒன்றி, இயற்கைக்கு முரண்படாது, இயற்கையின் வளங்களை வாழ்வின் வளமாக மாற்றி துய்த்து, இயற்கை அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டு, இயற்கையோடு ஒன்றி, உறைந்து, உறவாகிவிடக்கூடிய ஒரு நெறி தான் "யோகம்"

யோகத்தை பற்றி திருமூலர் அருளியுள்ள கவியை இங்கு நினைவு கூர்வோம் :

திளைக்கும் வினைகடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்க இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும்அக் கேடில் முதல்வன்
விளைக்கும் தவம் அறம் மேற்றுணை யாமே !

"யோகம்" என்றால் இறையாற்றலின் இயக்க நியதியோடு மன ஆற்றலையும் உடல் ஆற்றலையும் இணைத்து, விளைவறிந்த விழிப்போடு செயலாற்றி வாழ்வதாகும். இவ்வாழ்வு தான் பெருமதிப்போடு "இறைவழிபாடு" என்று போற்றப்படுகின்றது.
================================

வாழ்க்கை நெறியே யோகம் :
தீயவினைப் பதிவுகளைத் திருத்திப் போக்கித்
தெளிந்த அறிவின் விழிப்பில் நிலைத்து என்றும்
தூயவினை, தேர்ந்தாற்றித் துன்பம் நீக்கும்
தொழில்களையே கடமையெனத் தேர்ந்து செய்து
மாயமெனும் மறைபொருளாம் அறிவறிந்து
மண்ணுலகில் உயிர்கட்குத் துன்பம் நீக்க
நேயமுடன் தொண்டாற்றி இன்பம் துய்க்கும்
நிறைவாழ்வாம் நெறியதுவே யோகமாகும்.

தெளிவுக்கு வழி :
தனையறியும் பெருநோக்கில் உயர்ந்தமக்கள்
தரணியில் ஆயிரமாயிரங்களாகும்
தனையறிய முயன்றோர்கள் அறிந்தபேர்கள்
தந்துள்ள விளக்கங்கள் எண்ணிறந்த;
தனையறிய துடிதுடிப்பும் விளக்கமில்லாத்
தன்மையிலும் எழுதிய நூல் பல படித்து
தனையறிய ஆர்வமுள்ளோர் மனம் குழம்பி
தத்தளிக்கும் நிலை தெளிய வழிதவம் ஆகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
See more

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தன்முனைப்பின் விளைவு

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அடிக்கடி தலைவலி வருகிறது என்று சொன்னால் அதுவும் திருமணம் ஆன பிறகு வருகிறது என்றால், கணவன் மனைவிக்கு இடையில் அவமதிப்பு மூலம் பிணக்கு (Conflict through insulting incidents) எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நாளைக்கு வருகின்றதோ அதுவெல்லாம் கட்டாயமாக நரம்பு சம்பத்தப்பட்ட நோயில் தான் கொண்டு வந்துவிடும். பக்கவாத நோயில் கூட (Paralytic Stroke) கொண்டு வந்து விடும். கணவன் மனைவி உறவிலே இரண்டு பேருக்கும் ஒற்றுமை இல்லாது ஒரு வித வெறுப்பு, இருவரை ஒருவர் சபித்துக் கொள்ளும் நிலை இருப்பின், அது நேரடியாக வியாதியை உண்டாக்கலாம். இன்னும் அழுத்தமாக வேதனை இருக்குமேயானால் பிரதிபலிப்பு விபத்துக்கள் (reflection-accident) உண்டாகலாம். ஆகையினால் நலமே எண்ணி நலமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, இன்னும் சமையல் ஆகவில்லை, மணியாகிவிட்டது, இதற்கு மேல் போனால் பஸ் கிடைக்காது. "அம்மா நான் இன்று காண்டீனில் சாப்பிட்டுக் கொள்கிறேன்; நீங்கள் சிரமப்பட வேண்டாம்" என்று மகிழ்ச்சியாகச் சொல்லிவிட்டுப் புறப்பட வேண்டும். அந்தப் பண்பாடு வர வர மறுநாள் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்து செய்ய வேண்டும் என்ற கருத்து அவர்களுக்கு வந்துவிடும். அதை விட்டுவிட்டு இங்கே சீறி விழ, அலுவலகம் போய் அங்கேயும் சிடுசிடுக்க, திரும்பி வந்தபோது குழந்தையையும் இந்தச் சச்சரவில் இழுத்துவிட இது எல்லாம் குடும்பத்தில் நடக்கின்ற தன்முனைப்பு (Ego) நாடகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன், கணவன், மனைவி உறவுக்கு இடையில் எத்தனை ஆயிரம் மகிழ்ச்சியை வைத்திருக்கிறான். அதைப் புரிந்து கொள்ளாததனால், உயிருக்கு மதிப்பு கொடுக்க தெரியாததனால், மகிழ்ச்சியை அனுபவிக்கத் தெரியாததனால், மனோதத்துவம் (Psychology) இன்னது என்று தெரியாமல், அதுனுடைய விளைவை அறியாததனால் துன்பச் சுழலில் வாழ்கின்றோம்.

சிந்தனையை ஊட்டி, அந்தச் சிந்தனையின் மூலமாக நான் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? தவறான செய்கையாலும், தவறான எண்ணத்தாலும் என்ன என்ன விளைவுகள் வருகின்றன என்று தெரிந்து கொண்டு பொதுவாக மனிதன் வாழத் தொடங்க வேண்டும். சிறப்பாக கணவன் மனைவி இருவரும் தெரிந்து கொண்டு வாழவேண்டும். இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தனக்கு இருக்கின்ற தகுதி, வாய்ப்பு, வசதி இவற்றைக் கொண்டு பிறருக்கு இயன்ற வரை உதவி செய்வது என்று ஆரம்பிப்பதாக இருந்தால் இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும் !

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி


 

சனி, 5 ஏப்ரல், 2014

கேள்வி : சுவாமிஜி, நல்ல முறையில் வாழும்போதே சில சமயம் சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம். இதற்குக் காரணம் என்ன? இதை மாற்ற இயலுமா?



மகரிஷியின் பதில் : வாழ்க்கைச் சிக்கல்கள் மூன்று காரணங்களால் ஏற்படுகின்றன.
1) ஆகாமியம்.
2) பிராரப்தம்.
3) சஞ்சிதம்.
சஞ்சிதம் என்பது முன்னோர்களின் செயல் பதிவுகள். தலைமுறை தலைமுறையாக கருவழியே தொடரும் பாவப் பதிவுகளாகும். அதை அனுபவித்து தீர்க்கவே உடல் எடுத்து வந்துள்ளோம். அவரவர் வாழ்வில் தவறு செய்திராவிட்டாலும் முன் வினையின் காரணமாக துன்பம் அனுபவிக்க வேண்டிவரும். "இப்பிறவி" என்பது உயிரின் பரிணாமத்தில் ஒரு சிறு பகுதியே. எதிர்பாராது வரும் சிக்கல்களுக்கு இம்முன் வினைகளே காரணம். தவமும் அறமும் இணைந்த அருள் வாழ்வு மூலம்தான் இதனை மாற்ற இயலும்.,
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

வாழ்க்கைத் தத்துவங்கள்



வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளவேண்டுமானால், வாழ்வாங்கு வாழ வேண்டுமானால், ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து துறைகளிலே அறிவு வேண்டும்.

 அவை
 (1) அறிவியல்,
 (2) சுகாதாரம்,
(3) பொருளாதாரம்,
 (4) அரசியல்,
 (5) விஞ்ஞானம்

 ஆகிய ஐந்தும் வாழ்க்கைத் தத்துவங்கள். வாழ்க்கைக்கு இந்த ஐந்தும் தேவை. ஒவ்வொரு மனிதனும் இந்த ஐந்து பிரிவுகளிலும் நிறைவு பெற வேண்டும். சிறு குழந்தை முதற்கொண்டு 15, 20 ஆண்டுகள் வரையிலே இந்த ஐந்து துறைகளிலும் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு வாழ்க்கையிலே புகுந்தால் தன்னிறைவாக இருக்கும். யாரிடமும் ஒன்றும் கேட்க வேண்டியதே இல்லை. எல்லாவற்றையும் அவரவரே உணர்ந்து திருந்தி அவர்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கும். மேலே விளக்கிய ஐவகை இணைப்பான வாழ்க்கை விஞ்ஞானம் குறைபட்டிருத்தலின் வெளிப்பாடுதான் பிறர் வளம் பறித்து வாழும் விலங்கினப் பண்பாடு.

ஆகையால்தான் நல்லாட்சி வரவேண்டுமென்று எல்லோரும் விரும்புகின்றோம். பாராளுமன்ற அடிப்படையிலான குடியரசு (Parliamentary Democracy) என்று சொல்லக்கூடிய சுதந்திர நாடுகளிலே ஓட்டுரிமை என்று ஒன்று கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஓட்டுரிமை என்றால் என்ன? எனக்கு இத்தகைய ஆட்சிதான் வேண்டும் என்று விரும்பி, அந்த ஆட்சியை வகுத்துக் கொடுப்பதற்கு உரிமையுடையவர்கள் தான் ஓட்டுரிமை பெற்றவர்கள். இவ்வாறு ஓட்டுரிமை பெற்றவர்கள் எல்லோரும் ஆட்சியைப் பற்றி, அரசியலைப் பற்றி, பொருளாதாரத்தைப் பற்றி, இன்னும் சமூக இயலைப் பற்றி, சுகாதாரத்தைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் எவ்வாறு நல்லதோர் பண்பாடு உடைய அரசியல் தலைவரைத் தேர்ந்து எடுக்க முடியும். குருடனும் குருடனும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழும்வாறுதான். இந்தக் குறைபாடு தான் இந்த நாட்டிலே இருக்கின்றது. இந்த நாட்டிலே வேறு ஏதேனும் வளம் குறைவா, அல்லது அறிவு குறைவா, நிபுணத்துவம் குறைவா? எல்லாம் நிறைவாகவே உள்ளன. நமது தேவைகளை நாம் நிறைவு செய்து கொள்ள முடியும்.

எனது சிந்தனைக்கு எட்டிய சிறியதொரு பண்பாட்டை நான் கூறுகின்றேன்; படித்தவர்கள் இருக்கின்றார்கள், இளைஞர்கள் இருக்கின்றார்கள், இவர்கள் மத்தியிலே எத்தனையோ இயக்கங்கள் வளர்ந்து கொண்டு வருகின்றன. இன்று பதவிகளில் எல்லாம் நம்மவர்களே இருக்கின்றார்கள்; அவர்கள் ஒரே ஒரு உறுதிமொழி, சிந்தித்து முடிவு காணும் உறுதிமொழி எடுத்துக் கொண்டால் போதும். என்னவென்றால், "நான் இங்கே இருக்கின்றேன், இவ்வாறு இருக்கின்றேன், என்னுடைய வலிமை இவ்வளவு, என்னுடைய அதிகார வரம்பு இவ்வளவு இருக்கின்றது, எனக்குக் கல்வி இவ்வளவு இருக்கின்றது, இதை வைத்துக் கொண்டு எந்த முறையிலே யாருக்கு என்ன நன்மை செய்ய முடியும்?" என்பதை சிந்தித்து, இவ்வாறு சிந்தித்த முடிவிலே தனக்குள்ள ஆற்றலை உணர்ந்து கொண்டு சமுதாயத்திற்கு எனது கடமையாற்ற, "நான் தயாராக இருக்கின்றேன். என்னால் முடிந்த வரையிலே என்னுடைய தொண்டினைச் சமுதாயத்திற்கு செய்யக் கடமைப்பட்டு இருக்கிறேன். பிறர் பொருளை அல்லது சுதந்திரத்தைப் பறிக்காமல் இதைச் செய்வேன்" என்ற அளவிலே எல்லோரும் முனைய வேண்டும்.

" வாழத் தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில்
ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்;
கோழை, கயவர், கொலைஞர், தடியர்கள்,
ஏழை, நோயிற்றோர் எங்குமே சாட்சியம்".

"சமூகத்தில் ஓர்உறுப்பே உலகில் உள்ள
தனிமனிதன் என்று எவரும் உணர்ந்துகொண்டால்
சமூகத்தின் கூட்டுறவில் இன்பம் துன்பம்
சரிசமமாய் அனுபவிக்கும் சகிப்புண்டாகும்
சமூகத்திற் கவசியமாம் செயல்கள் அல்லால்
சதிஏதும் எவருமே செய்யதவாறு
சமூகத்தின் சூழ்நிலைகள் அமைந்து விட்டால்
சன்மார்க்க நெறியினிலே மனிதர் வாழ்வார்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 2 ஏப்ரல், 2014

சுவாமிஜி, இன்றைய மனித வாழ்வின் சிக்கல்களுக்கும் துன்பத்திற்கும் முந்திய செயல்களின் விளைவுகளே காரணம் என்றால் சாதாரண மனிதன் ஒத்துக் கொள்ள மாட்டான் அவனுக்கு இதை எப்படி விளங்க வைப்பது ?


மகரிஷியின் விடை:

சினவயப்பட்ட ஒருவன் தன் மனைவியைக் காலால் ஓங்கி உதைத்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். உதைபட்ட அவள் வலியால் துடிக்கிறாள். அந்த வலியை, துன்பத்தை உணர்வது அந்த உயிரில் விளங்குகின்ற இறைவன் தானே. 'என்னை உதைத்த உன் காலில் கரு நாகம் தீண்ட' - அந்த உயிரின் துன்பம் சாப அலையாக அவள் கருமையத்திலிருந்து ஓலமிடுகிறது....

இந்தத் துன்ப அலை சாப அலையாக மாறி உதைத்தவன் கருமையத்தில் வினைப்பதிவாகிறது. சாபமிட்டவர் கருமையத்திலும் மீண்டும் பிரதிபலிக்கிறது. அத்தோடு ஒரு கருநாகத்தின் கருமையத்திலும் பதிவாகிறது.

வினைவிளைவாகும் காலம், இடம் கனிந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். அன்று உதைத்தவன் இருட்டில் நடந்து செல்கிறான். அவன் கால் வைத்த இடத்தில் அப்பதிவைப் பெற்ற கரு நாகம் அது தன் வினையை முடிக்க அவன் காலில் கடிக்கிறது. அவன் வலியால் அலறித் துடிக்கிறான்.

மனிதன் எப்பொழுதும் எல்லோருக்கும் கெட்டவனாக இருப்பதில்லையே! அதே மனிதன் ஒரு காலத்தில் செய்த நன்மையால் நெகிழ்ச்சியுற்ற ஒருவர், "நீ, மகராசனா இருக்கணும், உனக்கு வாழ்க்கையில் ஒரு குறையும் வரக்கூடாது" என்ற வாழ்த்துதலைப் பெற்ற பதிவும் அவன் கருமையத்தில் இருக்கிறது.

எப்படி கருநாகத்திற்கு அந்த சாப அலை பதிவானதோ அதே போன்ற 'இவருக்கு குறை வரக்கூடாது, வந்தால் நீங்க வேண்டும்' என்ற பதிவைப் பெற்ற ஒரு பச்சிலை மருத்துவர் அந்த வழியாக வந்து கொண்டு இருக்கிறார். பாம்புக்கடிபட்டவருக்கு உடனே வைத்தியம் செய்து அவரைக் குணப்படுத்துகிறார்.

இறைவனே மனிதனாக வந்துள்ளான் என்பதை இங்கு தான் மனிதன் உணர்ந்து கொள்கிறான். 'கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள்' என்று வாய்விட்டுச் சொல்கிறான். இவ்வாறு தீமையான செயலில் விளைவு துன்பமாக வர, மற்றோர் நன்மையான செயலின் விளைவு அந்தத் துன்பத்தைத் துடைக்க, இப்படி வாழ்கை முழுவதும் செயலின் விளைவுகள் பின்னிப் பிணைந்து இன்ப துன்பமாக விளைந்து கொண்டேயிருக்கிறது.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

ஆன்மீகக் கல்வி

பேரியக்க மண்டல இயக்கங்களில் :

1) இறைநிலை
2) உயிர்நிலை
3) காந்த நிலை
4) அறிவு
5) மனம்

ஆகிய ஐந்தும் மறைபொருட்கள். இவற்றையும் அவற்றின் ஆற்றல்களையும், இயங்கும் முறைகளையும், ஏற்படும் விளைவுகளையும் உணர்ந்து தெளியும் கல்வியே ஆன்மீகக் கல்வியாகும். இந்த ஐந்து மறைபொருட்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளாமல் மெய்ஞானமோ விஞ்ஞானமோ மனித வாழ்வோ நிறைவு பெறாது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி