Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

அண்டத்த்திலும் பிண்டத்த்திலும் அவனே

அண்டத்தில் கடவுளாய் அழைக்கப் படுபவன்
பிண்டத்தில் உயிரெனப் பேசப்படுகிறான் .
கண்டத்தின் மேலே கருத்தை நிறுத்தினோன்
அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கிறாய் ."
...
மனித மனத்தின் உட்பொருளாக , இருப்பு நிலையாக இருப்பதே இறைநிலையாகும். நிலைபொருள் நிலையில் அறிவாகவும், அலைபொருள் நிலையில் மனமாகவும் , இரண்டுமாகவும் இருப்பவன் மனிதன்.

அலையை நிறுத்தி அழைக்கு அடித்தளம் கண்டால் அதுவே நிலை. நிலை என்ற இருப்பு நிலைதான் தெய்வமாகவும், அறிவாகவும் இருக்கிறது . இதுவே அகண்டாகார பேரியக்க மண்டலத்தில் எங்கும் நீக்கமற நிலைத்து உள்ள சுத்தவெளியாக இருக்கிறது. அகண்டாகார பேரியக்க மண்டலத்தில் சுத்தவெளி அறிவும் மனமுமாக இயங்கும் சீவனில் உயிர்த்துகளாகிய விண்ணின் மையத்தில் இருப்பதுவும் அதே சுத்தவெளி தான் .

அதுவே பேரியக்க மண்டலம் அனைத்தையும் சூழ்ந்து அழுத்தி எல்லாவற்றையும் முறையாக இயங்கச் செய்கிறது . சீவனுக்குள்ளாக அமைந்த சுத்தவெளி அதன் படர்க்கை நிலையென்ற மனத்தால் தனது அலையாற்றலால் தோன்றி இயங்கும் அனைத்தையும் சீவன்களின் மூலமும் மனிதனின் சிந்தனையின் மூலமும் உணர்ந்து கொள்கிறது.

----அருள் தந்தை



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக