Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

அறிவின் வழியே வாழவேண்டிய காலம் விஞ்ஞான யுகம்

அறிவின் தெளிவில்லாத ஒரு முரடன் கொலை என்னும் ஒரு கொடிய குற்றத்தை செய்துவிடுகிறான். ஆனால் திருத்தவேண்டிய கடமையில் உள்ள சமுதாயம் அவனுக்கு உரிய தண்டனையைக் கொடுத்து, சீர்திருத்துவதற்கு ஒரு அறிஞரை நீதிபதியாக அமைத்துக் கொடுத்திருக்கிறது.

இத்தகைய நீதிபதிகளில் சிலர் இயற்கையின் நீதிநெறியை அவர்கள் கல்வியாக கற்காத காரணத்தினால், தொடர்ந்து வரும் மனித இனப்பண்பாட்டின் தொடர் நிகழ்ச்சிகளின் காரணமாக, தனி மனிதனை திருத்தவேண்டிய அவர்கள், அவனுக்கு மரணதண்டனைக் கொடுத்து அழித்துவிடுகிறார்கள்.

மேலோடு பார்த்தால், கொலைக்குற்றத்திற்குத் தக்க தண்டனை மரணம் தான் என்பது நீதியாகத்தோன்றும்.

கொலை தண்டனை பெற்றவனுக்கோ பெற்றோர், மக்கள், மனைவி மற்றும் உறவினர்கள் இருக்கின்றார்கள். அவன் சட்டத்தின் மூலம் தண்டனை என்ற பெயரால் கொலையுண்ட நிகழ்ச்சி அத்தகையவர் வாழ்வில் குறுக்கீடு செய்து வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு துன்பம் அளிக்கவில்லையா?

அறிவின் வழியே வாழவேண்டிய காலம் விஞ்ஞான யுகம். அந்த யுகம் இப்போது மலர்ந்துவிட்டது.
இனி சிந்தனையும், சீர்திருத்தமும் தனிமனிதனின் வாழ்விலும், சமுதாய வாழ்விலும் எல்லா இடங்களிலும் பின்பற்ற வேண்டும்

-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக