Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 10 செப்டம்பர், 2014

வினை விதைத்தவருக்கு வினையே பலன்

இறைநிலை அவரவைகளுடைய வினைக்கு தகுந்தவாறு விளைவை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அவரவர் செயலாலேயே அவரவர்க்கு இன்பமோ , துன்பமோ, இலாபமோ, வெற்றியோ விளைகின்றன. இன்ப துன்ப விளைவுகள் என்ற வினை விளைவு நீதியை இறைநிலை எப்போதும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. இதனையே "வினை விதைத்தவன் வினையை அறுப்பான் " என்று கூறுகின்றனர்.

இயேசுநாதரைக் கைது செய்த போது , அவரது சீடர் பேதுரு என்பவர...் தனது வாளை உருவிக் கொண்டு கைது செய்தவர்களைத் தாக்கப் புறப்பட்டார் . அப்போது இயேசு அவரைக் கையமர்த்தி " நீ உன் உறையுள் இடு . ஏனெனில் வாளை வீசுகிற எல்லோரும் வாளினாலேயே மடிவார்கள் " என்றார் .

இறைநிலையின் பேரறிவினுடைய திறனை விளக்குகின்ற செயல் விளைவு என்னும் ஓர் அற்புத நாடகத்தை உணராமல் செயலாற்றினால், அதன் காரணமாக உடல் நோயோ , மன நோயோ உண்டாகின்றன . மனித வாழ்வில் அவரவர் விருப்பம் போல் செயல் புரியலாம் என்ற கருத்துக்கு இடம் இல்லை .

சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு காக்கப்படும் மனிதன் மற்றவர்களுடைய தேவைக்கும், விருப்பத்துக்கும், அறிவிற்கும், மதிப்பளித்து தனது வாழ்வை நடத்த வேண்டியது அவரவர் கடமை. அதற்காகத் தனது செயல்களைப் பிறருக்குத் தீமை தராத முறையில் செயலாற்ற வேண்டும் .

--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக