Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 18 செப்டம்பர், 2014

சீவகாந்தம்

காந்தநிலை அறியாமல் கடவுள் நிலை அறிவதோ ,
கருமையம் அறியாமல் அறிவினை அறிவதோ ."

பிரபஞ்ச காந்தம் என்று சொல்லப்படுகிற வான்காந்தம் . இதே காந்தம் உயிரினங்கலாகிய சிறு எல்லைக்குள் இயங்கும் போது சீவகாந்தம் என்று சொல்லப்படுகிறது.
...
சீவகாந்தம் என்பதையும் , கருமையம் என்பதையும் ஒருவர் நன்றாக விளங்கி கொண்டால் அவரால் ஆழ்ந்த மெய்யுணர்வு நிலைக்குச் செல்ல முடியும். அத்தகைய அறிவு விளக்கம் ஒருவருக்கு கிட்டிவிடுமானால் , வாழ்க்கைக்கு அடிப்படை நியதிகளாக உள்ள உள்ளுணர்வு பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல், உயிர்சக்தியின் ஆற்றல் , காந்த ஆற்றல் இவற்றைப் பற்றித் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் .

சீவகாந்தத்தை நாம் அழுத்தம்,ஒலி , ஒளி, சுவை, மணமாக செலவு செய்து கொண்டு இருக்கின்றோம் . சீவகாந்ததின் பெருமையை உணர்ந்து அதனை அளவு முறையோடு செலவு செய்யும் போது மனம் நல்ல முறையில் இயங்கும் . சீவகாந்ததின் திணிவை பொறுத்தே மனத்தின் இயக்கம்.

மனம் நல்லமுறையில் இருந்தால் தான் அறிவு செயலுக்கு வரும் . சீவகாந்தம் திணிவு பெற்ற இடமே கருமையமாக விளங்குகிறது. கருமையமே பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தும் அடங்கிய பொக்கிஷம். கருமையத்திற்குள்ளாக இறைநிலை அறிவாக உள்ளது.

அதனை அறிவதற்கு சீவகாந்தம் திணிவோடு இருக்கவேண்டும் .சீவகாந்தத்தை கூட்டிக்கொள்ள தவமும் , அறமும் அவசியம் .

--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக