Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 8 செப்டம்பர், 2014

திருமணம் பற்றி அருள் தந்தை

கணவன் மனைவி நட்பு மதிப்பு மிக்கது. இருவருமே எல்லாத்துறைகளிலும் உயர்வடைய, இந்த நட்பின் பாதுகாப்பு அவசியம். வாழ்நாள் முழுவதும் உதவுவது கணவன் மனைவி நட்புத் தான் . திருமணத்திற்கு முந்தைய காலகட்டம் கூட இந்த நட்புக்காகவே தன்னைத் தயாரித்துக் கொள்ளும் பயிற்சிக் காலந்தான். ஒருவக்கொருவர் எல்லா தேவைகளையும் நிறைவு செய்து கொள்ளக் கணவன் மனைவியின் நட்பால் தான் முடியும். கணவன் மனைவி நட்பின் இனிமையைத்தான் காதல் என்று சொல்ல வேண்டும். இருவர் உள்ளம் ஒன்றுபட்டு உலகில் வாழ எண்ணத்தால் ஒப்புக்கொண்டு செயலில் ஒருவர் மற்றவருக்கு உடல் பொருள் ஆற்றலை அர்ப்பணித்து நிற்கும் நிலையே திருமணம் .

---அருள் தந்தை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக