Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 15 செப்டம்பர், 2014

அகம் பிரம்மாஷ்மி

கடலிலிருந்து நீர் ஆவியாக மாறி , மேகமாகி, மழையாகி, வெள்ளமாகி , பூமியில் ஓடும்நீர் முடிவில் கடலையே நாடி ஓடுகிறது . கடலை அடைந்த பின்னர் தான் அதன் வேகம் தணிந்து அமைதி நிலை பெறுகிறது . அதே போன்று இறைநிலையில் இருந்து தோன்றி பற்பல நிகழ்ச்சிகளாகி , அறிவாகி இயங்கும் ஆற்றலானது அதன் மூல நிலையை நாடுகிறது. அதையறிந்து அதனை அடைந்த பின்னரே அமைதி பெறுகிறது .


அறிவை அறிய அறிவு திருப்பம் பெரும் போது தான் , தனது இயக்கக் களமான உயிரை உணர்ந்து தனது மூலநிலையை உணர்ந்து கொள்ள முடியும். அப்போது தான் "நான் யார்?" என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.இறைநிலையே நானாக என்னுள்ளே அறிவாக இயங்கிக் கொண்டிருப்பதை உணர முடியும் . இதுவே "அகம் பிரம்மாஷ்மி " .


இறைநிலை என்னிடத்தில் அறிவாக இருப்பது போல எல்லா உயிர்களிடத்திலும் இறைநிலையே உள்ளது என்று உணரும் போது எந்த உயிருக்கு துன்பம் கொடுக்கமலும் துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வாழ்வோம் .

தனக்கும் , மற்ற உயிர்களுக்கு துன்பம் கொடுப்பது அந்த இறைவனுக்கே கொடுக்கும் துன்பமாக நினைப்போம் . அவ்வாறு இறைநிலையே எல்லாமாக உள்ளது என்று உணர்ந்து கொள்ளும் போது "எல்லா உயிர்களிடத்தும் அன்பும் , கருணையும் தோன்றும்.

--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக