Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 25 செப்டம்பர், 2014

அவனின்றி ஓர் அணுவும் அசையாது, அனைத்து இயக்கங்களுக்கும் காரணம் இறைவன்” என்கிறோம். அவ்வாறெனில், மனிதனின் தவறுகளுக்கு இறைவந்தானே காரணம் ? மனிதனை என் தண்டிக்க வேண்டும்?


மின் சக்தியால் இயங்கும் விசிறியோ, விளக்கோ பழுதடைந்துவிட்டால் மின்சாரத்தைக் குறை கூறமுடியாது பழுதடைந்த பொருளைத்தான் சீர் செய்ய வேண்டும்

அதேபோன்று, மனிதனானவன் இறையாற்றலால் இயங்கும் ஒரு கருவியே. இறைவனைக்கண்டுபிடித்து அவனையே தண்டிப்பது என்பது இயலாத காரியம்.

ஆனால், அந்த இறைவன் பரிணாமத்தில் எந்த உருவத்தில் வந்து செயல்களைச்செய்து அதே பதிவுகளை அதன் கருமையத்துள்ளே பதிவாகப்பெற்று திரும்ப அதே செயலைச்செய்கின்ற அளவுக்கு கூர்தலறமாக (செயலுக்கு-விளைவு) வந்திருக்கின்றதோ, அந்த கருவியைத்தான் திருத்த வேண்டும்.

திருத்தம் செய்து சீரமைக்கும் பேரறிவின் செயலையே ’தண்டனை’என்ற சொல் குறிக்கும்

எந்த இடத்தில் இயற்கையினுடைய ஆற்றலுக்கு முரணாக செயல்கள் உண்டாயிற்றோ , எந்த செயலில் அல்லது இடத்திலிருந்து தனக்கும் பிறருக்கும் துன்பம் வருகின்றதோ, அங்ககேயே அதை மாற்றி அமைப்பதற்கான திருத்தம் பெறுவதற்காக சிந்தனை மிக்க அறிஞர்களால் வகுக்கப்பட்ட சீர்திருத்தமுறையைத்தான் ‘தண்டனை’ என்ற பெயரால் திருந்த வேண்டிய மனிதனுக்கு கொடுக்கிறார்கள்

-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக