Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 9 மார்ச், 2015

உணர்வு, உறவு:

உணர்வு, உறவு, துறவு, இந்த மூன்று சொற்களையும் நாம் ஆன்மீகத் துறையில் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றோம். இப்பொழுது அந்த வார்த்தைகளிலே இன்னும் ஆழமாகச் செல்ல உள்ளோம். உணர்வுக்கும் உறவுக்கும் ஓரளவு வித்தியாசம் உண்டு. ஒரு எஜமான் இருக்கிறான்; அவர் கீழே ஒரு பணியாள் இருக்கிறான். எதற்காக அந்தப் பனியாள் அங்கே வேலைக்குச் சேர்ந்தான்? தனக்கு உணவு வேண்டும். அதற்கு ஊதியம் வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் தொழில் செய்கிறான், வேலையாளாக இருக்கிறான். இங்கே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது ; இது "உணர்வு" திட்டமிட்ட முறையில் தான் இந்தத் தொடர்பு அமைந்துள்ளது; எனவே தான் "உணர்வு" என்ற எல்லைக்குள் அதனை வைக்கிறோம்.
.

'உறவு' என்பது அத்தகையதல்ல. இவன் எஜமானனுக்காக வேலை செய்கிறான். வேலையாளுடைய பணிகளையெல்லாம், அவற்றின் பயன்களையெல்லாம் அந்த எஜமானன் அனுபவிக்கிறான். காலம் செல்லச் செல்ல எஜமானன் பணியாளுடைய உயிரோடு ஒன்றி விடுகிறான். அன்பு கொள்கிறான், அவனுடைய சுக துக்கங்களில் கலந்து பார்க்கிறான். அதற்கு மேலாகவும் அந்தச் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறான். இந்த இடத்திலே தான் "உறவு" என்பதாக அமைகிறது. அப்படிப் பகிர்ந்து கொள்ளக்கூடிய உறவு எஜமானனிடம் ஏற்பட்ட பிறகு ஆரம்பத்தில் "உணர்வு" மட்டும் இருந்த அந்தப் பணியாளிடம் என்ன ஏற்படும் என்றால் அவனுக்கும் அதே 'உறவு' ஏற்படும்.
.

'உறவு' என்பது உறைந்து போவது; "தோய்வு" என்றும் சொல்லலாம் அதனை. அந்தத் தோய்வானது இரண்டற இருக்க வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

அன்பின் செயல்:

"அனைத்துயிரும் ஒன்றென்று
அறிந்த அடிப்படையில்
ஆற்றும் கடமையெல்லாம்
அன்பின் செயலாகும்".
.

கடவுளும் கடமையும் :

" கடமையில் உயர்ந்தவர்
கடவுளை நாடுவார்.
கடவுளை அறிந்தவர்
கடமையில் வாழ்வார்".
.

உய்யும் வழி:

"தவமுறையும் அற நெறியும் பற்றப் பற்றத்
தறுக் கென்ற தன் முனைப்புக் குன்றிப்போகும்
பலவினைகள் புதிது எழா; முன்னம்செய்த
பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும்
சிவ நிலையை சீவனிலே உணர்ந்து கொண்டால்
சிறுமை தரும் மனமயக்க மாயை ஏது?
எவரெனினும் இவ்வழியாலன்றி உய்ய
ஏது வழி வேறுலகில் எண்ணிப்பாரீர்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக