Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 26 மார்ச், 2015

தத்துவம்

இது(assumption) யூகம் என்றாலும் எந்த ஒரு  உண்மையையும் கண்ணால் பாராமலே யூகித்தாலும் அதை மற்ற இயக்கங்களுடன்   பொருத்திப் பார்க்கும்பொழுது முரண்படாது  இருக்குமானால் அந்த அனுமானம் தான் தத்துவம்.
.
..
ஏன் எனில் கண்ணால் காண்பது, புலன்களால் உணர்வது, கருவிகளால்
உணர்வது, காலம் , தூரம், பருமன், வேகம் என்ற அளவைகளால் அறிவது
எல்லாம் சிற்றெல்லைகளைக் கொண்டது. இதுதான் விஞ்ஞானம்
.
.
விண் என்ற அறிவை வைத்துக்கொண்டு  அதிலிருந்து வளர்ப்பது விஞ்ஞானம்.
விண் என்பது சுழல் இயக்கம் உடையது. அதுவே வேகம் என்பதாகும். அந்த சுழற்சிக்கு  ஒரு மையம் இருக்கிறது. அதன் இயக்கத்திற்கும்  மற்றொரு இயக்கத்திற்கும் இடையே  ஒரு தூரம் இருக்கிறது. அதன் இயக்க
தொடர் நீளமே காலம் ஆகும்.
.
.
ஆகவே இந்த காலம், தூரம், பருமன், வேகம் என்ற நான்கையும் வைத்துக்கொண்டு  பொருட்களை கணிப்பது விஞ்ஞானம். ஆனால்,
.
.
இந்த நான்கும் தோன்றுவதற்கு முன்னதாக  எது இருந்ததோ, எந்த மூலத்திலிருந்து இந்த  நான்கும் பிறந்தனவோ அதை அறிந்துகொள்வதுதான்
தத்துவ ஞானம். அந்த அறிவை அறிந்தால்தான்  மனிதன் மனிதனாக வாழமுடியும்.
.
.
சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தை எடுத்துக்கொண்டால் சுமார் 9 கோடிமைல். பூமி, சூரியனைச் சுற்றி வரும் பாதையில்   ஒருநாளைக்கு ஓடும் தூரம் பதினைந்து   லட்சத்து ஐம்பதாயிரம் மைல்.

நாம் 10 நிமிடத்தில் ஐந்து மைல் ஓடிவிட்டால்  தன்முனைப்பு வந்துவிடுகிறது. இந்தச் சூரிய  மண்டலம் அதன் உடம்பை தூக்கிக்கொண்டு  அந்த மாதிரி ஓடுவதற்கு சக்தியையும்  கொடுத்துக்கொண்டு தன்னைக் காட்டிக்கொள்ளாது
இருக்கின்றதே அதுதான் இறைநிலை.
.
.
இத்தகைய கணிப்புக்கெட்டாத  ஆற்றலுடைய இறைநிலையைத்தான்
நான் “இறைவெளியென்றும், சுத்தவெளியென்றும்” கூறிவருகிறேன்
.
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக