Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 23 மார்ச், 2015

இறையுணர்வு பெறும் ஆற்றல் எல்லாருக்கும் உண்டு :

.
"அறிவு ஒரு மறை பொருள். அதைக் கொண்டு தான் பேரியக்க மண்டலப் பொதுவான மறைபொருள் தெய்வ நிலையை உணர முடியும். எந்த இயக்கமானாலும் இருப்பு நிலையில்தான் மோதவேண்டும். அதில்தான் முடியவும் வேண்டும். இங்கே உணர்ந்து கொள்வது எது? அலையாக இயங்கி மோதுவதா? அல்லது இருப்பாக இருந்து தாங்குவதா? இருப்புதான் உணர்கிறது. எல்லாத் தோற்றங்களிலுள்ள இயக்க அலையை எங்கும் நி...றைவாயுள்ள நிலைபொருள் இருப்பு நிலை - இறைவெளிதான் உணர்வாகப் பெறுகிறது. ஆகவே இறைவெளியான இருப்பு நிலை பேரறிவு - (Super Consciousness) எனவும் அகண்டாகாரமாக அது நிறைந்திருப்பதால் (Cosmic - consciousness) வாணறிவு எனவும் போற்றப்படுகிறது.
.

அறிவுதான் நான் என்னும் பொருளாக உள்ளது என்றும் அதுதான் இருப்பு நிலையாக தெய்வமாகவும் உள்ளது என்றும் உணரும் பெரும் பேறு மனிதனுக்குக் கிட்டிவிட்டால் அவன் தெய்வமாகவே திகழும் பெருமையுடையவனாகிறான். ஆதி முதல் அணுவரையில் அவனேயாகி அனைத்திலும் அவனே நிறைந்த பொருளாக இருப்பதால் அறிவே தான் நான் என்று உணர்ந்து அதுவே தெய்வமாகவும் இருக்கிறது என்ற பேரறிவில் அவன் எல்லாம் உணரும் ஆற்றல் பெற்றவனாகிறான். இதனை அறிவறிந்த பெரியார் 'வள்ளுவப்' பெருந்தகை
.
"ஐயப்படாது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்".
என்ற கவி மூலம் விளக்கியிருக்கிறார்.
.
இந்தப் பேரறிவில் விழிப்போடு இருப்பவர்களுக்கு எதைப் பற்றி நினைத்தாலும் அதிலிருந்து வரும் விளக்கம் இறைவனே பேசுவது போல இருக்கும். இந்த மனநிலையில்தான் முழுமையான அமைதி மனிதனுக்குக் கிட்டும். அறிவை அறியும் வரை அது குறையுடையதாகவே இருக்கும். அந்த நிலையில் பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் என்ற நான்கில் தன்னை இணைத்துக் கொண்டு இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற குறையுடையதாகவே, வறுமை மிஞ்சியதாகவே இருக்கும். அறிவையறியும் ஆற்றல் அனைவரிடமும் உண்டு. அதற்கு பயிற்சி வழி அகத்தவமும் (Simplified Kundalini Yoga), அறநெறி பற்றி வாழும் முறையும் ஆகும்.
.
அகத்தவமும் அற வாழ்வும்".
--------------------------------------------
"மறைபொருளாம் அறிவு சிவம் இரண்டும் ஒன்றாய் நானாய்
மனிதன் தெய்வமாய்த் திகழும் மாபதம் பேறானால்
இறையுணர்வால் தன்முனைப்புப் பேரறிவாய் மாறும்
எப்போதும் ஈசன் குரல் உள்ளுணர்வாய்க் கேட்கும்;
குறையறிவில் பொருட்கள் புகழ் புலன் இன்பம் இவற்றில்
கொடிய வறுமை பெருகும். நிறைவு கிட்டா வாழ்வில்
நிறைநிலையை எவரெனினும் முயற்சித்தால் பெறலாம்
நேர்வழியோ அகத்தவமும் நிறையற வாழ்வாகும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக