Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 21 மார்ச், 2015

"கருமையம்"

"கருமையம்" இறைநிலையின் பிரபஞ்ச பரிணாமச் சரித்திரம் முழுமையாக அடக்கம் பெற்றுள்ள தெய்வீகப் பெட்டகம். காந்த ஆற்றலின் திணிவு பெற்ற பிரபஞ்சப் பிரதிபலிப்பு கண்ணாடி. 'கருமையம்' தான் சீவ இனங்களில் 'ஆன்மா' எனப்படுகிறது. கல்வியறிவு பெறாதவர்களும், சிந்திக்கும் திறம் குறைந்தவர்களும் கூடக் கருமையத் தூய்மை பெறுவதற்கு எளியவழி உண்டு. உலக நலம் நாடி, மக்கள் குலம் உய்ய வேண்டும் என்ற பெரு நோக்கத்தில், அத்தகைய வாழ்க்கை நெறி எளியமுறை என்னவெனில்,
.
1] "எவருக்கும் மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ
மனதுக்கும...் உடலுக்கும் துன்பம் இழைக்கக் கூடாது".
.

2] "தேவை உள்ளவர்களுக்கும் துன்பத்தினால் வருந்துபவர்களுக்கும் உடல் ஆற்றல், அறிவுஆற்றல், பொருட்கள் இவற்றைக் கொண்டு இயன்றவரை உதவி செய்ய வேண்டும்."
.
என்ற இந்த இரண்டு செயல்களும் ஆழமான கருத்தில், விரிவான மனித சமுதாயத்திற்கு அளப்பரிய நலன்களை விளைவிக்கும்.
.
"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!"
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக