Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 16 மார்ச், 2015

குடும்ப நலம் உயர்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு

"உடல் நலம் இல்லையானால் எந்த நேரமும் துன்பமாகத்தான் இருக்கும். எந்த வேலையையும் செய்ய முடியாது. ஆக்கம் இழந்த மனிதனாகத்தான் இருப்போம். மனவளம் இல்லையானால் ஒருவருக்கொருவர் விரோதம், கோபம், திட்டுவது, இவையெல்லாம் உண்டாகும். ...
.

உடல் நலமும் வேண்டும்; மனநலமும் வேண்டும் என்றால் திடீரென்று வந்துவிடாது. விலைக்குப் போய் வாங்க முடியாது. உடல் நலம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மருத்துவரிடம் போய் மாத்திரை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாத்திரை மட்டும் சாப்பிட்டால் உடல் நலமாகிவிடும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். உடல் நலம் என்பது மாத்திரையால் மட்டும் வந்துவிடாது. ஏதோ அந்தச் சமயத்தில் வைத்திய முறையானது சில நோய்களைப் போக்கிவிடும் என்பது சரிதான். அவரவர்களே உடலில், உள்ளத்தில் இருக்கக்கூடிய சக்தியை நல்ல முறையில் வெளிப்படுத்தி அந்த ஆற்றலைக் கொண்டே உடலில் உள்ள பெரும்பான்மையான வியாதிகளைப் போக்கிக் கொள்ளலாம் அல்லது வராமல் தடுத்துக்கொள்ளலாம். இளமைப் பருவத்திலேயே அதற்கான உளப் பயிற்சியையும், உடற் பயிற்சியையும் முறையாக கற்றுகொள்வது என்பது உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்தி தயார் படுத்திக்கொள்ள பெருந்துணையாக இருக்கும்.
.

உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவைகளை அளவோடும், முறையோடும் வைத்துக் கொண்டால் நோயே வராது. நோய் வந்தாலும் தடுத்துக் கொள்ளலாம். இவற்றையெல்லாம் தெரிந்து பழகிக் கொள்வதற்கு 'உடற்பயிற்சியும்' (Simplified Physical Exercises) வேண்டும். 'உளப்பயிற்சியும்' (Simplified Kundalini Yoga) வேண்டும். சத்சங்கமும் வேண்டும். அதற்கேற்ற பயிற்சியை கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலையம் தான் "அறிவுத்திருக்கோயில்" (Temple of Consciousness). குடும்பத்தில் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, 14, 15 வயது நிரம்பிய அனைவரும் இளமைப் பருவத்திலேயே மனதை வளப்படுத்திக் கொள்வதற்கு, உடல்நலத்தைப் பெறுவதற்கு, அதன்மூலமாக 'குடும்ப நலம்' உயர்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' மனவளக்கலை பயிற்சி முறை ஆகிய 'குண்டலினியோக பயிற்சி (Simplified Kundalini Yoga)' ஆகும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக