Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 5 மார்ச், 2015

சீரமைப்பு (Streamline) :

"மனம் நிற்க வேண்டும் என்று அதாவது மற்ற எண்ணங்கள் எழாமல் நிற்க வேண்டும் என்று பலர் நினைப்பது போல் மனம் சும்மா நிற்கவே நிற்காது. நிற்கவே முடியாது. எப்போது நிற்கும் என்றால், இந்த உயிர்ச்சக்தி ஓட முடியாமல் திணறி அதிலிருந்து இயங்காமல் உடல் என்ற இயந்திரமே கெட்டுப் போய்விட்டது என்றால் மன இயக்க அலையே நின்று போய்விடுகிறது. அதோடு மரணம் தான். அல்லது உயிர்ச்சக்தி பலகீனமாக இருக்கிறபோது அதற்குப் போதிய அளவுக்கு ஆற்றலைப் புதுப்பிப்பதற்காக ஓய்வு எடுத்துக் கொள்கிறபோது தூக்கம் வருகிறது. தூக்கம், அல்லது மரணம், இந்த இரண்டு சூழ்நிலைகளில் தான் மனம் (Mind) செயல்படாது நிற்கும்.
.
எண்ணமே வரக்கூடாது.. மனம் நிற்க வேண்டும்.. என்று அடிக்கடி பலர் நினைக்கிறீர்கள். உதாரணமாக - உங்களது ஸ்டோர் ரூமில் நூறு பொருட்களை வைத்திருக்கிறீர்கள். ஒரு பொருள் தேவையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த ஒரு பொருளைத் தேடி எடுக்கப் போகும்போதும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மற்ற நூறு பொருட்களும் கண்ணுக்குப்படுகிறது. நாம் தேடி எடுக்கப் போகும் பொருள் போக மீதி எல்லாமும் சேர்ந்து தென்படுகிறதே என்று ஏன் சிரமப்படுகிறீர்கள் ?. உங்களுக்கு வேண்டிய பொருளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மிச்சப் பொருட்களை விட்டுவிடுங்கள். தேடும் பொருள் போக மற்றப்பொருள் எல்லாம் என் கண்ணுக்குத் தெரியவே கூடாது என்று சொல்கிற மாதிரி - அப்படி மற்ற எண்ணமெல்லாம் வரவே கூடாது என்று நீங்கள் நினைத்தால், அப்போது எந்த எண்ணம் வரும்? இன்றைக்கு நான் எண்ணுகிற எண்ணம் மட்டும் தான் வர வேண்டும் என்றால் எப்படி வரும்? ஏற்கனவே எண்ணி இருப்பு வைத்த எண்ணங்களும் சேர்ந்தே தான் வரும். ஏனென்றால் அது கருமையத்தில் இருப்பாகி உள்ளது. அதனால் எண்ணமே அடியோடு நின்று போக வேண்டும் என்று நினைப்பதே தவறு.
.
நீங்கள் உங்களது எண்ணம் நிற்க வேண்டும் என்று நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் கடைசியாக அது ஒரு நாளைக்கு உடலைவிட்டு உயிர் பிரியும் போது எண்ணம் நிற்கத்தான் போகிறது !. இன்று மனதில் எழும் மற்ற எண்ணமெல்லாம் நின்றுவிட வேண்டும் என்று நாமாக ஏன் நினைக்க வேண்டும் ? அப்படி நினைப்பதும் தவறு. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?.
.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் எண்ண ஓட்டத்தைச் சீர்படுத்த வேண்டியது தான் (You have to Streamline) நாம் செய்ய வேண்டிய வேலை. முறையான அகநோக்குப் பயிற்சியும் (Simplified Kundalini Yoga), அகத்தாய்வு (Introspection) பயிற்சியில் எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைப்பு, சினம் தவிர்த்தல், தத்துவ விளக்கங்கள் போன்ற சிந்தனையை தூண்டும் பயிற்சிகளின் மூலம் மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டால் எண்ணத்தின் ஆற்றல் வளரும். மனோபலம் உண்டாகும். அதோடு மட்டுமல்லாது, அதனுடைய பயன் வாழ்நாள் முழுவதும் நம்மை எல்லாத் துறைகளிலும் சிறப்படையச் செய்யும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
***************************************************************
.
"எந்த இடத்தில் மனம் விரிகிறதோ அங்கு ஆராய்ச்சிவயமாகும்.
மனதை விரிவிலேயே வைத்துக் கொண்டு இருக்கும்போது
ஆசை பேராசையாக மாறாது. சினம் வராது. ஏனென்றால்,
மனவிரிவில்தான் எல்லாம் விளங்கிக் கொள்கிறது."
.
"எண்ணத்தை எண்ணத்தால் ஆராய்ந்தால்
எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் தோன்றும்
எழும் எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்."
.
"எண்ணம் எழும் இடமோ ஓர் புள்ளியாகும்
இயங்கி முடியும் அளவோ அகண்டாகாரம்."
.
"எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்."
.
"அறிவை அடக்க நினைத்தால் அலையும்
அறிவை அறிய நினைந்தால் அடங்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக