Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 11 மார்ச், 2015

நிஷ்காமியம்:-


 --------------------...
.
"பொருட்களினோடு தேவைப்படுகின்ற தொடர்பினது தன்மையை அறிந்து அளவோடு விழிப்போடு வைத்துக் கொள்ளும் உறவுதான் துறவு. அது அனுபோகத்தில் விழிப்புடன் கூடிய உறவு. இன்ப நுகர்ச்சியில் மனம் சிக்கிக் கொள்ளாத மனநிலை. வெறுத்து ஒதுக்குவது துறவாகாது. அறிந்து, உணர்ந்து, தொடர்பு மற்றும் உறவைச் சரியாகக் கணக்கிட்டு அனுபோகம் கொள்ளும் மனநிலை தான் 'துறவு'. எண்ணமோ அனுபோகத்தோடு ஒட்டாத துறவு நிலையில் இருக்க வேண்டும். எண்ணத்தால் பூணும் துறவாகிய உறவின் தெளிவுதான் வாழ்வினை உய்விக்கும். ஆசைகளை சீரமைத்துக் கொள்ளவும் உதவும். இதைத் தான் "நிஷ்காமியம்" என்று சொன்னார்கள். இந்த மன நிலையை மனம் ஏற்று நடத்தும் கடமைகள் தான் "நிஷ்காமிய கர்மம்". இது தான் உறவில் - துறவு [Detached attachment]. உண்மையான துறவு இதுதான். துறவு ஆன்மீகத்தின் அதாவது அருள் துறையின் உள்நாடி. விழிப்பு நிலையில் பொருட்களோடு - அளவோடும், முறையோடும் வைத்துக் கொள்ளும் உறவே துறவாகும்."
.

"பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கக்கூடிய மனதின் பழக்கத்தை முறையான உளப் பயிற்சியாகிய 'குண்டலினி யோகத்தை' (Simplified Kundalini Yoga) கற்று இப் பயிற்சியின் மூலம் நம் பழவினையை மாற்றி மேற்கொண்டு விளக்கத்தை 'நல் விளக்கமாக' பெற்று அதன் வழியே வாழ்க்கையை உயர்த்தி அமைத்துக் கொள்ள உதவும் உன்னதக் கலை தான் 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' 'மனவளக்கலை' பயிற்சி ஆகிய "குண்டலினி யோக" (Simplified Kundalini Yoga) பயிற்சி முறை ஆகும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

***************************************************
.

"அறியாமை (Innocence),
அலட்சியம் (Ignorance),
உணர்ச்சிவயம் (Emotional Moods) -
என்ற மூன்று வகையில் தான்
அறிவின் குறைபாடுகள் ஏற்படுகின்றன."
.

அளவு முறை :

"உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் -
இந்த ஐந்தையும் அலட்சியப்படுத்தக் கூடாது;
அதுபோல மிகையாக அனுபவிக்கவும் கூடாது;
முரண்பாடாகவும் அனுபவிக்கக்கூடாது. இந்த
மூன்று விதிகளைக் கடைப்பிடித்தால் நோய்த்
தடுப்பிற்கு அதைவிட ஒன்று வேண்டியதே இல்லை".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக