Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 28 மார்ச், 2015

மெய்விளக்கம் :

விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று விட்டால் மாத்திரம் மனித வாழ்வு நிறைவு பெற்று விடாது. மெய்யறிவு இல்லாத விண்ணறிவும், புலனறிவும், தன்முனைப்பிலிருந்து மனிதனை விடுவித்து அறிவின் முழுமையையும் அமைதியையும் அளிக்க முடியாது. புலனறிவால் விரிந்து காணும் உலகம், சிந்தனையால் சுருங்கிக் காணுகிறது என்பது தெளிவு. இயற்கையின் முழுமுதல் நிலையான பேராதார நிலையையும், அதையும் ஐயமின்றி உணரக் கூடிய அறிவையும், உணர்ந்து கொள்ளும் அறிவின் முழுமைப் பேறுதான் மெய்யறிவாகும். புலன் அறிவால் பல கோடி தோற்றங்களாகக் காணும் உலகம் சிந்தனை அறிவு எனும் விஞ்ஞானத்தால் வெளி-விண்-அறிவு என்ற மூன்று பொருட்களுக்குள் சுருங்கி விடுகிறது.
.
இவற்றில் வெளி, விண் எனும் இரண்டு பொருட்களுக்கிடையே உள்ள உறவும், இவ்விரண்டில் எது முந்தியது எது பிந்தியது என்ற விளக்கம் காணும் போது, விண் என்பது இருப்பு நிலையாகிய வெளியின் நுண்ணியக்கச் சுழலலையே என்று உணரும் போது வெளிவிண் இரண்டும் ஒன்றாகி விடுகிறது. அகத்தவத்தின் மூலம் அறிவு ஒடுங்கி அந்த முழுமுதற் பொருளான இருப்பு நிலையறியும் பேறுகிட்டும் போது அகக்காட்சியில் அப்பேராதாரப் பரம் பொருளில் அறிவு அடங்கி உறைந்து ஒன்றுபட்டு அதன் தனித்தியங்கும் செயலொழிந்து இருப்பு நிலையாகி விடுகிறது. இந்த அனுபவமே மெய் விளக்கமாகும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக இருக்கிறது -
என்று விளக்கிக் காட்டுவது தான்
அகத்தவப்பயிற்சி (Simplified Kundalini Yoga)."
.
"அறிவு என்பது அறியப்படுவது.
ஞானம் என்பது உணரப்படுவது."
.
"அறிவை ஏடுகளில் பெறலாம்.
ஞானத்தை தவத்தால் பெறலாம்."
.
"ஆறாவது அறிவைக் கொண்ட
இந்த மனிதனின் வாழ்வின் நோக்கம்,
அறிவு முழுமை பெறவேண்டும் என்பதே."
.
"அறிவு என்பது - உண்மை மெய்ப்பொருள் நிலை".
.
"அண்டத்தில் கடவுளாய் அழைக்கப் படுபவன்
பிண்டத்தில் உயிரெனப் பேசப் படுகிறான்
கண்டத்தின் மேலே கருவில் நிலைத்தவன்
அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கின்றான்".
.
பழிச்சுமை கழி:
"ஐயுணர்வின் வயம் ஏற்ற
ஆன்மாவின் பழிச் சுமையை
மெய்யுணர்வு பெற்றாற்றி
மிக எளிதில் கழித்திடலாம்.
தெய்வ நிலையுடன் அறிவைச்
சேர்த்தொன்றும் தவம் பயின்று
உய்ய நினைந்தால்; உலகீர் !
உடனே என் தொடர்பு கொள்வீர்! "
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக