Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 20 மார்ச், 2015

அறிவின் அகநோக்குப் பயணம்

ஆன்மீகத்துறை யென்ற அகல வழிப்பாதையிலே
அடிவைத்து மென்மேலும் முன்னேறிப்போகுங்கால்...
அறிவுபெறும் அனுபவங்கள் வியப்பாகும் இனிமையம்
ஆன்ம ஒளி சுடர்விட்டு உள்ளுணர்வு பேறாகும்
.
.
ஊன்உருவமான உடல் ஊர்தி இதன் ஊடே
உயிர் என்ற சூக்குமமே “நான்” என்ற உணர்வு வரும்
ஒடுங்க ஒடுங்க காணும் உண்மையோ அறிவதுவே
உயிரிலிருந்தோங்கி யெழுந்து உலகம் விரியும்.
.
.
”நான்” அதுவே இருப்புநிலை மெய்ப்பொருள் தெய்வமெனும்
நன்முடிவு விளக்கமாம் அந்த முழுமுதற்பொருளே
நல்ல ஒழுக்காற்றலாய் நன்னுணர்வாய் அறிவறியும்
நல் ஊற்றாய் திருவருளாய் நல்லின்ப வெள்ளமாய்
.
.
தேன்பொழியும் பேரின்பம் திகட்டாது சலிக்காது
திருத்தங்கள் எண்ணம் சொல் செயல்களிலே மலர்ந்துவரும்
செருக்கொழிந்து தான் அடங்கி தெய்வநிலை எங்கெதிலும்
திருவருளின் காட்சியாம். திரும்புங்கள் உட்புறமாய்.
.
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக