Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 13 மார்ச், 2015

அறியாப்பருவத்திலே வளரும் குழந்தைகளிடம் சினம் வராமல் காப்பாற்றி வளர்ப்பது எப்படி ? முடியுமா? அவசியமா?

குழந்தைகளிடம் மிக்க எச்சரிக்கையாக விழிப்போடுதான் நடந்துகொள்ள வேண்டும். இந்த உலகின் மீது வாழும் ஒவ்வொரு உயிர்க்கும், செடி, கொடி உட்பட அனைத்துக்கும், இந்த உலகை விட்டு வெளியேறும் வேகம் உள்ளது.
....
.
அதை velocity என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு உண்டு. தென்னை மரத்துக்கு 60அடி என்று வைத்துக்கொள்ளலாம். சாதாரண செடிக்கு ஒரு அடி என்று வைத்துக்கொள்ளலாம்..

விடுதலை வேகம் மனித இனத்துக்கு ஆறு அடி. அந்த அளவான ஆறு அடி வளர்ந்த பிறகு அது தணிந்து விடுகிறது.எனவே தான் அதன் பிற்கு மனிதனுக்கு வளர்ச்சியில்லை.
..
.
ஆனால் இந்த ஆறு அடி வேகம், ஒருமாத குழந்தையாக இருக்கும்போதே அந்தக்குழந்தையிடம் உள்ளது; ஊக்கிவிடுகிறது; எப்போதும் புடைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் எந்தக்காரியத்தை செய்தாலும் துடுக்காகத்தான் செய்யும்.. நீங்கள் ஏதேனும் தடுத்தாலும் அதைக் குழந்தையால் ஒப்புக்கொள்ளமுடியாது.
.
நாம் என்ன செய்யவேண்டும்?
அந்த வேகத்தை பயன்படுத்தும் முறையிலே அவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.
.
ஏதோ ஒரு பொருளை குழந்தை எடுத்துவிட்டது. அதை கீழே போட்டு உடைத்துவிடுமென்று எண்ணுவீர்களானால், அதைவிட கவர்ச்சியான பொருளை உடனடியாக எடுத்து அதனிடம் நீட்டி, இதோ பார் , இது நல்ல பொருள், எவ்வளவு அழகாக இருக்கிறது என்று காட்டினீர்களேயானால், அதை வாங்கிக்கொள்ள தயாராக இருக்கும் அந்த அளவிலே குழந்தைகளிடம் அன்புகாட்டி விழிப்போடுதான் நடந்துகொள்ளவேண்டும்.
.
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக