Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 14 மார்ச், 2015

அடிப்படைத் தேவைகள்:

உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க 'ஆகாரம்',
.

ரத்த ஓட்டத்தையும், ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க 'மிதமான உழைப்பு',
.

உள்ளம் அமைதியாகவும், உற்சாகமாகவும் இருக்க கடல் நதிகள், மலைகாடுகள் முதலான இயற்கைக்காட்சி, இவைகளைப் பார்க்க 'உலகத்தைச் சுற்றி வரும் வாய்ப்பு',
.

புலன்களையும் அறிவையும் ஒன்று படுத்தித் தனக்கும் பிறருக்கும் இன்பத்தை ஊட்டும் 'நடனம், பாட்டு, சிற்பம், ஓவியம்' முதலிய கலைகள்,
.

அறிவைப் பண்படுத்த வயதுக்கேற்ற 'தியான, தவ முறைகள்', இவையனைத்தும் மனிதனுக்கு - மனிதர் வாழ்வுக்கு அவசியமாகும்.
.

மற்றத் தேவையற்ற பொருட்களையும் செயல்களையும் விட்டு ஒழிக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள் எவை என்று அறிந்து அவைகளின் உற்பத்தியையே நிறுத்தி விட வேண்டும். இவ்விதம் வாழ்ந்தால் உலகில் துன்பம் செயற்கையால் தோன்றாமலும், பெருகாமலும் இருக்கும்.
.

மனித இனம் சுகமாக வாழ்வதற்குத் தேவையான அனுபோகங்களை மட்டும் அளவுடன் கொண்டு, தேவையற்றவைகளை விட்டுவிட வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

உலகமெனும் சத்திரம் :

"உலகம் ஒரு சத்திரமே. உயிர்கட் கெல்லாம்
ஒத்தபல வசதிகளையடைய ஒன்று.
தலைவரியோ கிடையாது, உள்நுழைவைத்
தடுப்பதற்கு யாருமில்லை; தேவையான
பலபொருளும் வசதிகளும் நிறைந்தகோட்டை.
பஞ்சமில்லை ஆற்றல் என்ற விலைகொடுத்தால்
நில உலகம் நேர்மதிப்பில் வாழ்வளிக்கும்
நிறை அறிவோர் அருள்வெள்ளம்-நேர்மை நல்கும்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக