Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 19 மார்ச், 2015

அன்பு

"ஆராய்ச்சி அறிவின் எல்லையிலே, உயிர் நிலையை அறிந்த உயர்விலே, பேதங்கடந்த பேரறிவின் பெருங்கருணையிலே, ஜீவ இனங்களின் இன்ப துன்ப இயல்பறிந்த சிறப்பான ஞாபகத்திலே, கருத்துக்கு எட்டிய துன்பங்களைக் குறைக்க வழி காண வேண்டும் என்ற கணிவிலே ஏற்படும் பற்றுதலை 'அன்பு' என்று சொல்லுகிறோம்.
.
சமுதாயத்திற்கு நான் தொண்டு செய்வேன் என்று என்னும் போது அது 'அன்பு' நிலையாகும். என் மனைவியை என் குழந்தைகளைப் பாதுகாக்க நான் முயற்சிப்பேன் என்று என்னும் போது அது 'பாசம்' என்னும் நிலையாகும். மனிதர்களுக்கு... நிழல் கொடுக்க மரம் வைக்கிறேன் என்றால் அது 'அன்பின்' செயலாகும். எனது கிராமவாசிகளின் சவுகரியத்திற்காக மரம் நடுகிறேன் என்றால் அது 'பாசம்' என்று சொல்லப்படும். ஆகவே எல்லைக்குட்பட்ட அறிவின் குறுகிய நிலையே 'பாசம்' எனப்படும். அறிவு என்ற தத்துவத்தையும் அதன் இன்ப துன்ப அனுபோக அனுபவங்களையும் அறிந்து பரந்த ஞாபகத்தில் செயல்புரிய எழும் ஆர்வமே 'அன்பு' எனப்படும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
அன்பின் பெரு மதிப்பு :
"இறைநிலை தெளிந்த இன்பத்தில் உயிர்கள் பால்
எழும் நட்பே அன்பாகும். ஈகை ஒழுக்கம் இயல்பாம்;
நிறைவோடு மக்கள் நேர்மையில் மகிழ்ச்சியில்
நிலைத்து இன்பம் துய்க்கும் நேர்வழி அன்புதான்."
.
நல்லோர் தந்த பரிசு :
"வாழ்வை வளப்படுத்தும்
வழக்க பழக்கங்கள் எனும்
ஒழுக்கங்கள் எல்லாம்
ஆழ்ந்த சிந்தனையாளர்
அன்பினால் உலகுக்கு
அளித்த பரிசு ஆகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக